Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார்

Featured Replies

மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் :
தமிழகம் முழுவதும் குவியுது புகார்
 
 
 

தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன.

 

Tamil_News_large_171020920170213230027_318_219.jpg

 

வீரமணி எங்கே?


வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

* வேளாண் மந்திரி கடத்தல்?


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம், மாவட்ட ஜெ., பேரவை அவை தலைவர் ரவிசங்கர், நேற்று மனு அளித்தார். அதில், '5ம் தேதி, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிற்கு சென்றேன்; அங்கு அவர் இல்லை. அவரை யாரோ கடத்தியிருப்பர் என்ற சந்தேகம் உள்ளது. போலீசாருக்கு உத்தரவிட்டு, கண்டுபிடித்து தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
 

சம்பத் வீட்டுக்கு பாதுகாப்பு:


கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, தொழில் துறை அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள், பண்ருட்டி - சத்யா, விருத்தாசலம் - கலைச்செல்வம்,


சிதம்பரம் - பாண்டியன், காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன் ஆகியோர், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும், எம்.எல்.ஏ.,க்கள் வீடு மற்றும் அலுவலகங்களை, அ.தி.மு.க.,வினரே முற்றுகையிட உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள அமைச்சர் சம்பத் வீட்டில், ஆயுதம் தாங்கிய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

கண்டுபிடியுங்க:


கடலுார்மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த லதா, 35, என்பவர் தலைமையில், 20 பெண்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார்:
அதில், 'எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு, முருகுமாறன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து மனு அளிக்க, அவரது அலுவலகத்திற்கு சென்றோம்; அங்கு அவர் இல்லை. காணாமல் போன எம்.எல்.ஏ., முருகுமாறனை கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
 

அடம் பிடித்தவர் கைது


கரூர் அடுத்த, தான்தோன்றிமலையை சேர்ந்தவர், லாரி ஓட்டுனர் அன்பழகன், 45. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, வீட்டருகில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறினார்.
சிறிது நேரத்தில், 'போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இங்கு வர வேண்டும்' என, போதையில் கூச்சலிட்டார்.ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் வாங்கல் போலீசார், 'மைக்' மூலம் அன்பழகனிடம் பேச்சு நடத்தியும் பலன் இல்லை.
தொடர்ந்து, அவரது நண்பர் சிவா, டவரில் ஏறி, அன்பழகனிடம் பேச்சு நடத்தினார். நீண்ட இழுபறிக்கு பின், நேற்று அதிகாலை, 12:30 மணியளவில், டவரில் இருந்து கீழே இறங்கினார். அவரை, பசுபதிபாளையம்போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

காமெடியை காணோம்


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை

 

சார்பில், அ.தி.மு.க., சின்னத்தில், நடிகர் கருணாஸ் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். சில வாரங்களாக இவர் தொகுதிக்கு வரவில்லை.இந்நிலையில், மாவூர் ஊராட்சி முன்னாள் தலைவர் காளிமுத்து, திருவாடானை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், 'திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், சில நாட்களாக தொகுதி பக்கம் வரவில்லை. கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, எம்.எல்.ஏ., கருணாசை கண்டுபிடித்து தரவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 

இன்ஸ்பெக்டர் அடாவடி


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர், ஜெயவேல், 65; அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி கவுன்சிலர்.இவர், 'சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. சசிகலா கும்பல் பிடியில் அவர் உள்ளதாக தெரிகிறது; உடனே அவரை மீட்டுத் தர வேண்டும்' என, சிதம்பரம் டவுன் போலீசில் நேற்று புகார் கொடுத்தார்.
பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மோகன், புகாரை வாங்கி படித்து விட்டு, ஜெயவேலை ஆபாசமாக திட்டி, சட்டையை கழற்றி தரையில் உட்கார வைத்துள்ளார். மேலும், 'ஏதாவது கேஸ் போட்டு சிறையில் தள்ளி விடுவேன்' என, மிரட்டியுள்ளர். இதையறிந்து, ஏராளமானோர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் மோகன், ஜெயவேல் கொடுத்த புகார் மனுவின் பின் பக்கத்தில், 'புகாரை திரும்ப பெற்றுக் கொண்டேன்' என எழுதி வாங்கிவிட்டு, அனுப்பியுள்ளார்.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710209

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2017 at 2:30 PM, நவீனன் said:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை

 

சார்பில், அ.தி.மு.க., சின்னத்தில், நடிகர் கருணாஸ் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். சில வாரங்களாக இவர் தொகுதிக்கு வரவில்லை.இந்நிலையில், மாவூர் ஊராட்சி முன்னாள் தலைவர் காளிமுத்து, திருவாடானை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், 'திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், சில நாட்களாக தொகுதி பக்கம் வரவில்லை. கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, எம்.எல்.ஏ., கருணாசை கண்டுபிடித்து தரவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 

 

:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.