Jump to content

இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்


Recommended Posts


இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்
 
 

article_1487144279-article_1479829797-auதமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 

அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. 

சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பிரதமர் ஆர்.பிரேமதாச உள்ளிட்ட சிலர், அதனை எதிர்த்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் ஆளும் கட்சிக்கு இருந்த போதிலும், அந்த ஒப்பந்தத்தின் படி, மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்கான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகள் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என, ஜனாதிபதி ஜயவர்தன சந்தேகித்தார். 

எனவே, அவர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி, கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை மரியாதையுடன் சிறைவைத்தார்.

இரண்டு சட்டங்களுக்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் வரை, அவர்கள் ஏனையவர்களின் துண்டுதல்களுக்கு உள்ளாவதைத் தடுப்பதும் அவர்கள் மனதில் பீதியைத் திணித்து, தமது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதும், ஜயவர்தனவின் நோக்கமாகியது. 

இன்று தமிழகத்தில் சசிகலா செய்திருப்பதும் அதுவே. முதலமைச்சராகத் தம்மை நியமிக்கும் சட்டமன்ற வாக்குப் பதிவு நடைபெறும் வரை, அவரும் சட்டமன்ற உறுப்பினர்களை ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்க (தடுப்புக் காவலில்) வைத்துள்ளார்.

மத்திய அரசாங்கம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ததை அடுத்து, மாநில மக்கள் பெரும் போராட்டம் நடத்தி அவ்விளையாட்டுக்கான அனுமதியைப் பெற்றனர். இப்போது மாநிலத்தில் அரசியல் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா, நோயுற்று கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி, அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதற்கு முன்னர் இரண்டு முறை அவருக்காகப் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றியிருந்த பன்னீர்ச்செல்வம் அவரது சிபார்சின் பேரில் மீண்டும் பதில் முதலமைச்சரானார். 

ஜனவரி ஐந்தாம் திகதி ஜெயலலிதா உயிரிழந்தார். அத்துடன் ஜெயலலிதாவினால் ஒதுக்கித் தள்ளிய தமது உறவினர்களுடன் அவரது நெருங்கிய தோழியான சசிகலா ஜெயலலிதாவின் உத்தியோகபூர்வ இல்லமான போயஸ் தோட்டத்தினைக் கைப்பற்றிக் கொண்டனர். 

அவரது செல்வாக்கு எவ்வளவு என்றால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜெயலலிதாவின் மறைவுக்கான தமது அனுதாபத்தைத் தமிழக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தலைவரான முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்துக்கு தெரிவிக்காது சசிகலாவுக்கே தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

கச்சத்தீவில் புதிய ஆலயக் கட்டடத் திறப்பு விழாவுக்குத் தமிழகத்தில் இருந்து 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த நிலையில் 100 பேருக்கு அனுமதி வழங்குமாறு ஒரு பதவியையும் வகிக்காத சசிகலா அனுப்பிய கடிதத்தை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால அந்த அனுமதியையும் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில்; சசிகலா பல வழிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைத் தம்பக்கம் வளைத்துக் கொண்டு கட்சியின் பலம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

 முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அப்போது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டார். பின்னர், கடந்த ஐந்தாம் திகதி பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் பதவியையும் இராஜினாமாச் செய்து, சசிகலாவுக்கு முதலமைச்சராவதற்கான வழியை திறந்துவிட்டார். 

தம்மை, முதலமைச்சராக்குமாறு சசிகலா மாநில ஆளுநரிடம் கேட்கவிருந்தார். ஆனால், ஆளுநர் மாநிலத்தில் இருக்கவில்லை.

 அதற்கிடையே “சசிகலாவின் ஆட்கள் வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தம்மை முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்தார்கள்” என்று, கடந்த ஐந்தாம் திகதி முதல் காபந்து முதல்வராகவிருக்கும் பன்னீர்ச்செல்வம் ஏழாம் திகதி கூறினார்.

அதையடுத்து, சசிகலா தமது முதலமைச்சர் கனவு நனவாகுமா என்று அச்சத்தில் உள்ளார். எனவே, அவரும் ஜயவர்தன பாணியில் சட்டமன்ற உறுப்பினர்களைச் சிறைப் பிடித்து அவர்களின் வாக்குப் பலத்தால் காரியம் சாதிக்க முனைந்துள்ளார். 

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியருகே 45 நிமிடங்கள் தியானத்தில் இருந்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே பன்னீர்ச்செல்வம் முதல் முறையாகத் தாம் வற்புறுத்தலினாலேயே இராஜினாமாச் செய்ததாகக் கூறினார். 

இது பெரும்பாலும் உண்மையாக இருக்கக்கூடிய கருத்தாகும். அதனை அடுத்து, சசிகலா ஓரிருவரைத் தவிர்ந்த அ.தி.மு.க எம்எல்ஏக்கள் சகலரையும் கூவத்தூரில் கோல்டன் பே ஹோட்டலில் தங்கவைத்து (அடைத்து வைத்து) அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளார். 

தமிழகச் செய்திகளின்படி, அவர்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. பத்திரிகை வாசிக்கவோ, தொலைக்காட்சியைப் பார்க்வோ அனுமதியில்லை. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

நிலைமை எவ்வளவு பாரதூரமாகவும் கேவலமானதுமாக இருக்கிறது என்றால் ஐந்து 
அ.தி.மு.க எம்எல்ஏக்களுக்காக அவர்களது குடும்பத்தினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்து, அதன் பிரகாரம் அவர்களைத் தேடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தன எம்.பிக்களை அடைத்து வைத்து, அவர்களது வாக்குகளைப் பெறத் திட்டமிட்டபோது, இங்கு பலர் கேட்டதைப் போல் இது என்ன கேவலமான அரசியல் என்று இப்போது தமிழகத்தைப் பார்த்து கேட்க வேண்டியுள்ளது. 

சசிகலா இந்த எம்எல்ஏக்களை குண்டர்கள் மூலம் பிடித்து அடைக்கவில்லை. அவர்கள் தாமாகவே சசிகலாவின் கட்டளைக்கு பணிந்துள்ளனர். அவர்கள் ஏன் அடிமைகளைப் போல் அவ்வாறு கீழ்ப்பட வேண்டும்?

ஒரோயொரு பதில்தான் அதற்கு இருக்கிறது. பதவிஆசை என்பதே அப்பதிலாகும். பன்னீர்ச்செல்வம் தொடர்ந்தும் விடடுக் கொடுத்துக் கொண்டே போனதால், சசிகலாவின் கையோங்கும் என்று நினைத்த எம்எல்ஏக்கள் தாமாகவே அவருக்கு அடிமையாகியுள்ளனர்.

இங்கும் மஹிந்த ராஜபக்ஷவோடு இணைந்து, மைத்திரியைப் புலிகளின் ஏஜன்டு எனக் கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர், தேர்தலின் பின்னர் மைத்திரியுடன் சேர்ந்து இருப்பதும் பதவி ஆசைக்கே.

 2015 ஆம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரி பிரதமராக நியமிக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வராமல் இருந்ததும் பதவி ஆசையினாலும் பயத்தினாலுமேயாகும்.

பன்னீர்ச்செல்வமும் ஒரு கோழை என்றே கூற வேண்டும். ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அவர் அதனை அறிந்தே ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்.அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. வெறும் தேநீர்க் கடை நடத்தி வந்த பன்னீர்ச்செல்வத்தை செல்வந்தராக்கி, முதலமைச்சராக்கியவர் ஜெயலலிதாவே. 

ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறும் அரசியல்வாதிகளிடம் செல்வம் வருவது எவ்வாறு என்பது உலகம் அறிந்த இரகசியம். 
இலங்கையிலும் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள், இன்று கொடி கட்டி பறக்கிறார்கள். 

ஒரு கட்சித் தலைவருக்கு சாரதியாக வந்த ஒருவர், தாமும் அரசியலில் குதித்து, இன்று யானைகளையும் வைத்திருக்கிறார். எனவே, பன்னீர்ச்செல்வம் தம்மை வளர்த்துவிட்ட  ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். 

ஆனால் ஜெயலலிதாவின் மரணததின் பின்னர் அவர் ஏன் சசிகலாவுக்கு பணிந்து நடக்க வேண்டும்? ஜெயலலிதா மரணிக்கும் போது, அவர்தான் முதலமைச்சர். அவர் மாநிலத்தில் எவருக்கும் பணிந்து நடக்கத் தேவையில்லை.  

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, சசிகலா எப்போதும் அவருடன் இருந்தார். எனவே, அப்போது சசிகலாவுக்குப் பணிந்து ஜெயலலிதாவின் விசுவாசத்தை மேலும் பெற, பன்னீர்ச்செல்வம் செயற்பட்டு இருக்கலாம். 

ஜெயலலிதா மரணித்தபோது, உடனடியாகச் சசிகலாவுக்குப் பணிந்து நடப்பதை அவரால் நிறுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது போலும். இறுதியில் இந்தக் கோழைத்தனத்தால் அவர் அவரது கழுத்திலேயே சுருக்கிட்டுக் கொண்டார். 

கட்சியில் பெரும் அதிகாரமுள்ள பொதுச் செயலாளர் பதவியை முதலில் பறிகொடுத்தார். அவரே சசிகலாவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்துள்ளார். 

அதனை அடுத்து முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டுப் பின்னர் திடீரென விழித்துக் கொள்கிறார். 
இப்போது, அவர் காட்டும் துணிவை ஜெயலலிதா மரணித்தவுடன் காட்டியிருந்தால் சசிகலாவால் எதனையும் செய்துவிட முடியாது.

தமக்குப் பதவி ஆசையில்லை எனப் பன்னீர்ச்செல்வம் கூறினாலும், அது உண்மையல்ல; கோழைத்தனத்தில் சசிகலாவுக்கு பிடி கொடுத்துவிட்டு, பின்னர் வருவது வரட்டும் என இப்போது துணிவை வரவழைத்துக் கொண்டுள்ளார். 

அவரது கோழைத் தனத்தினாலேயே ஜெயலலிதா அவரை மூன்று முறை தமக்காக பதில் முதலமைச்சராகக் கடமையாற்ற இடமளித்தார். ஏனென்றால் இவரிடம் கொடுத்தால் பதவி பறிபோகாது என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார். 

இதைத்தான் இலங்கையில் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாசவும் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தனர். 

இலங்கையில் சில சமயங்களில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்ற வேண்டி வரும். எனவே, பிரேமதாசவும் மஹிந்தவும் தமக்கு எந்த வகையிலும் சவால் விடும் ஆற்றலோ தைரியமோ இல்லாதவர்களையே பிரதமர்களாக நியமித்தனர். பிரேமதாச, டி.பி. விஜேதுங்கவை நியமித்தார். மஹிந்த, ரத்னசிறி விக்கிரமநாயக்கவையும் 
டி.எம். ஜயரத்னவையும் நியமித்தார்.

விஜேதுங்க எந்தளவு பிரேமதாசவுக்கு பணிவானவர் என்றால், இரண்டும் இருண்டும் எத்தனை எனப் பிரேமதாச கேட்டால், “ஐயா சொல்லுற கணக்குத் தான்” என விஜேதுங்க கூறுவார் என்பார்கள். 

ஜெயலலிதாவுக்கு பன்னீர்ச்செல்வமும் அவ்வாறுதான். அவரும் வேறு பலரைப் போல் ஜெயலலிதாவின் காலைத் தொட்டு கும்பிட்டவர்.இப்போது, சசிகலா தம்மை முதலமைச்சராக நியமிக்குமாறு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் ஆளுநர் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. 

அதேவேளை அவர் பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பதாகவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் நிச்சமாக யாரோ ஒருவர் பக்கம் இருக்கிறார். அனேகமாக அது பன்னீர்ச்செல்வம் பக்கமாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமது சட்டமன்றத் தலைவியாகச் சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். 

சட்டப்படி அதற்கு எவரும் சவால் விடுக்காத பட்சத்தில், அவரை முதலமைச்சராக நியமிப்பது ஆளுநரின் கடமையாகும். ஆனால், தமிழக மக்கள் அதனை ஆதரிக்கவில்லை என்று ஆளுநருக்குத் தெரியும். 

அவரும் அதனை ஆதரிக்கவில்லைப் போல்தான் தெரிகிறது. இது அவருக்குன திரிசங்கு நிலையை உருவாக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும். இது போன்றதோர் நிலைமை 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண ஆளுநர் ஒருவருக்கு ஏற்பட்டது. 

அந்த ஆண்டு நடைபெற்ற தென் மாகாண தேர்தலில், அதுவரை பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசன வித்தியாசத்தால் தோல்வியடைந்தது. அப்போது தென் மாகாண சபையின் ஆளுநராக எம்.ஏ. பாக்கீர் மாக்காரே இருந்தார்.

அவர் ஐதேககாரர். வித்தியாசாகர்ராவைப் போலவே அவரும் தாம் விரும்பாதததைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அவர் ஒருவருக்கும் தெரியாமல் மாகாணத்தில் இருந்து வெளியேறி ஒரிரு நாட்கள் தலைமறைவானார். பின்னர் அவர் ஸ்ரீலயசுக உறுப்பினர் அமரசிறி தொடங்கொடவை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சசிகலா, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த போதிலும், இதற்கு முன்னர் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாகவோ கட்சியின் கிளையொன்றில் கடமையாற்றியதாகவோ தெரியவில்லை. 

இது இலங்கையில் மற்றொரு சம்பவத்தை, அதாவது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவை அடுத்து, அவரது மனைவி கட்சித் தலைவியாவதற்கு எடுத்த முயற்சியை ஞாபகப்படுத்துகிறது. 

அஷ்ரபின் மனைவியாக பெய்ரியல் இருந்த போதும் மு.காவின் உறுப்பினராக ஒருபோதும் இருக்கவில்லை. 
ஆனால், 2000 ஆவது ஆண்டு செப்டெம்பர் மாதம் ஹெலிகொப்டர் விபத்தொன்றில அஷ்ரப் கொல்லப்பட்டவுடன் அவர் கட்சித் தலைவியாக முயற்சித்தார். 

அதனால் மு.கா பிளவுபட்டது. அ.தி.மு.கவும் அது போன்றதோர் பிளவை நோக்கி நகர்வதாகவே பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

சசிகலாதான் முதலமைச்சராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய அரசியல்வாதி சுப்பிரமணியம் சுவாமி கூறுகிறார். 

அவர், அதற்காக ஆளுநர் மீது நெருக்குவாரத்தைப் பாவிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. சுவாமி வேறு கட்சியைச் சேர்ந்வராக இருந்த போதிலும், சாதாரண பிரஜை என்ற வகையில் தம்மை ஆள வேண்டியவர் யார் என்ற விடயத்தில் கருத்துத் தெரிவிக்க அவருக்கும் உரிமை இருப்பது உண்மைதான். 

ஆனால், ஓர் அரசியல்வாதி என்பதால் அவர் ஒரு வகையில் மற்றொரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையை இழக்கிறார். 

இதனையும் இலங்கையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு கொண்டு வர முயற்சிப்பதைப் போன்ற அரசியல் நோக்கம் கொண்ட செய்லாகும். அதில் இருப்பதே சுயநலம் தான்.

 இங்கு தனித்துப் போட்டியிட்டால் ஓர் ஆசனத்தையேனும் பெற முடியாத தமது கட்சியின் இருப்பைப் மஹிந்தவின் மீது தொற்றி பாதுகாத்துக் கொள்வதே விமல் போன்றோர்களின் நோக்கமாக இருக்கிறது.  

அங்கு சசிகலாவுக்காக பரிந்து பேசி அதி.மு.க உட்கட்சிப் பூசலை மேலும் வளர்த்து அக்கட்சியைப் பிளவுபடச் செய்தால் பா.ஜ.கவுக்கே சாதகமாக அமையும். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசியல், மக்கள் நலன் சார்ந்தது அல்ல என்பதையே தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் மேலும் வலியுறுத்துகின்றன. 

குறிப்பு: நேற்று (14.02.2017), இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஊழல்களுக்கு எதிரான தீர்ப்புக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது.

- See more at: http://www.tamilmirror.lk/191588/இலங-க-ய-ப-ரத-பண-ண-ம-தம-ழகம-#sthash.6eX28R3h.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.