Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க, பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் அமளி

Featured Replies

சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க, பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் அமளி

2a_11210.jpg

சட்டப்பேரவையில் திமுக, அதிமுக மற்றும் பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த அமளிக்கிடையே முதல்வர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏயான செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, திமுக, பன்னீர் ஆதரவு எம்எல்ஏக்களும் முழக்கமிட்டனர்.

மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த அமளிக்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கு கோரினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளி நிலவி வருகிறது.

இந்நிலையில், மசூதுனால் கொறடாவாக நியமிக்கப்பட்ட, செம்மலையை பேச விட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், எம்.எல்.ஏக்கள் சிறை கைதிகள் போல் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81225-mlas-uproar-at-tn-assembly.html

  • தொடங்கியவர்

மேஜையில் ஏறி பூங்கோதை அமளி; சபாநாயகர் நாற்காலி, மைக் உடைப்பு- சட்டப்பேரவையில் பரபரப்பு

assembly_long_12513.jpg

சட்டப்பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி அமளியில் ஈடுப்பட்டார். சபாநாயகரின் நாற்காலி, மைக் உடைக்கப்பட்டது. இதனால் அவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பேசினர். முதல் பிளாக்கில் வாக்கெடுப்பு நடந்தபோது 38 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுக உறுப்பினர்கள், சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது, திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜையின் மீது அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்கள், சபாநாயகர் நாற்காலி மற்றும் மைக்கை சேதப்படுத்தினர். மேலும், பேப்பர்களை கிழித்தும் சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சபாநாயகர் தனபால் வெளியேறினார். இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை சட்டசபையில் சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/81231-speaker-dhanapal-lefted-assembly.html

  • தொடங்கியவர்

பேரவையில் மைக், இருக்கைகள் உடைப்பு: ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவினரின் ரகளை

 
Stalinjpg__1__3134833f.jpg
 
 
 

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் மைக், இருக்கைகளை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளி காரணமாக அவையை 1 மணி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர். ஓபிஎஸ் தரப்பைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் தரப்பிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அவையில் பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.நட்ராஜ் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறைக்கைதிகள் போல் அழைத்துவரப்பட்டுள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதே உண்மையான ஜனநாயகத்துக்கு வித்திடும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன. எனவே, வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்றார்.

ஆனால், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கூறினார். இதனால், அதிருப்தியடைந்த ஓபிஎஸ் அணியினர், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். திமுக எம்.எல்.ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார். சபாநாயகரின் இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட பொருட்கள் உடைத்தெறியப்பட்டன. இன்றைய அலுவல் நிரல் அடங்கிய காகிதங்களை கிழித்தெரிந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவையை 1 மணிவரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். அவரை அவை பாதுகாவலர்கள் பத்திரமாக அறைக்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வெளியேறிய பின்னரும் அவையில் திமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பேரவையில்-மைக்-இருக்கைகள்-உடைப்பு-ரகசிய-வாக்கெடுப்பு-கோரிய-திமுகவினரின்-ரகளை/article9549887.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

16832168_1831968640377300_51071554716766

  • தொடங்கியவர்

சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக அரசியல் முன்னிலையைக் கைப்பற்றியிருக்கிறது - ராம்

 
 

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடந்ததாகச் சொல்ல முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியிருக்கிறார்.

ராம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக அரசியல் முன்னிலையைக் கைப்பற்றியிருக்கிறது - ராம்

பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் , எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர்கூட, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படாமல், சென்னைக்கு அருகே உள்ள ஒரு உல்லாசவிடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிட்டார் ராம்.

சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ரகசியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது என்று பாஜக தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த ராம், அது சரியானதாக இருக்கலாம், ஆனால் இப்போதைய விநோதமான சூழ்நிலையில் இந்தக் கோரிக்கை எழுந்திருக்கிறது. அதை அரசால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை கட்டுமீறிப் போனது என்றார்.

 

ஆனால் திமுக இந்த வாக்கெடுப்பு நடந்தபோது நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய ராம், அது கண்டிக்கப்படவேண்டியதுதான், ஆனால் ஸ்டாலின் இந்த அசம்பாவிதம் குறித்து தானே பொறுப்பேற்றுக் கொண்டு, இதை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திருப்பியிருக்கிறார். மேலும், இந்த வாக்கெடுப்பிற்குப் பின் திமுக இந்த அரசியல் சூழ்நிலையில், இது வரை ஓ.பன்னீர்செல்வம் பெற்றிருந்த அரசியல் முன்னிலையை கைப்பற்றியிருக்கிறது , இந்த ஆரம்ப தருணங்களில் திமுக அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டது என்றார்.

http://www.bbc.com/tamil/india-39016855

  • தொடங்கியவர்

தி.மு.க.,வினரின் சட்டை கிழிப்பு; வேட்டி அவிழ்ப்பு :சட்டசபை அமளியில் அலங்கோலம்

 

 

சென்னை, : சட்டசபையில், தி.மு.க.,வினரை வெளியேற்றிய போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலரின் சட்டை கிழிந்தது; முன்னாள் அமைச்சரின் வேட்டி அவிழ்ந்தது.


தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சட்டசபையை, நேற்று பிற்பகல், 1:00 மணியளவில் ஒத்திவைத்த சபாநாயகர், மீண்டும், 3:00 மணிக்கு கூடும் என, அறிவித்தார்.


ஆனால், சபையில் இருந்து வெளியேறினால், மீண்டும் அனுமதிக்க மாட்டர் என நினைத்த, தி.மு.க.,வினர், சபைக்குள்ளேயே இருந்தனர். இதற்கிடையில் சிலர், சபை வளாகத்தில் இருந்த கழிப்பறைக்கு சென்றனர். அப்படி சென்ற சேகர்பாபு, நந்தகுமார், மா.சுப்பிரமணியன் ஆகியோர், மீண்டும் திரும்பிய போது, சபைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை.
அதனால், துரைமுருகன், சவுந்தரபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, தி.மு.க.,வினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; கடும் அமளி ஏற்பட்டது. இந்த களேபரத்தில், மா.சுப்பிரமணியனை மட்டும், சபைக் காவலர்கள் இழுத்துக் கொண்டு போய் வெளியே விட்டனர். அப்போது, சேகர்பாபு மற்றும் நந்தகுமாரை, அங்கிருந்த, தி.மு.க.,வினர் உள்ளே இழுத்து வந்து விட்டனர்.
கபடி போட்டி போல்...


பிற்பகல், 2:05 மணி அளவில், சபைக் காவலர்கள் அதிகளவில் சட்டசபைக்குள் நுழைந்தனர். சட்டசபை மார்ஷல் சீனிவாசன், ஸ்டாலின் அருகில் சென்று, சட்டசபையில் இருந்து வெளியேறும்படி கூறினார்; அதற்கு, ஸ்டாலின் உடன்படவில்லை. அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த ஸ்டாலின், சபையின் மையப் பகுதிக்குச் சென்று அமர்ந்தார்.
உடனே, சபைக் காவலர்கள், தனித்தனியாக நின்றிருந்த, முன்னாள் அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோரை, குண்டுக்கட்டாக துாக்கிச் சென்றனர். அவர்களை காப்பாற்றச் சென்ற உறுப்பினர்களையும், கடும் வேகத்துடன், தரதரவென இழுத்து வெளியேற்றினர். புகழேந்தி, ரவிச்சந்திரன், டி.ஆர்.பி.ராஜா, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஸ்டாலினை சுற்றி, அரண் போல் அமர்ந்தனர்.
அப்போது, சபைக் காவலர்கள், இடது மற்றும் வலது புற நுழைவாயிலில், இரு பிரிவாக பிரிந்து, லாவகமாக, கபடி வீரர்கள் போல், தி.மு.க.,வினரை இழுத்து வீசினர்.


வேட்டி அவிழ்ப்பு
அதற்கு, ராஜா, ரவிச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு காட்டினர். பின்வரிசையில் இருந்த, ஐ.பெரியசாமியை, அவரது மகன் செந்தில்குமார் கண் முன்னே, காவலர்கள் தரதரவென இழுத்தனர். அப்போது, ஐ.பெரியசாமியின் வேட்டி அவிழ்ந்தது. அப்படியே, அவரை வெளியேற்றினர்.


பின், சபைக் காவலர்களின் வேகம் அதிகரித்தது. ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க.,வினரை துாக்கி, சபைக்கு வெளியே வீசினர் என்றே கூறலாம். உடல்நிலை பாதிக்கப்பட்ட துரைமுருகனும், பெண் உறுப்பினர்களும், காவலர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. சட்டசபையில் நடந்த, 45 நிமிட மோதலால், சபை அமளிக்காடானது.


'ஷேம் ஆன் யு'
முன்னாள் அமைச்சர்
பூங்கோதை, தங்களை வெளியேற்ற வந்த சபை காவலர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, திரும்பிச் செல்லும்படி கோரினார். எனினும், அவரையும், கீதா ஜீவன் உள்ளிட்ட பெண் உறுப்பினர்களையும், பெண் காவலர்கள் வெளியேற்றினர். அப்போது, மார்ஷல் சீனிவாசனிடம் சென்ற பூங்கோதை, 'இப்படி ஒரு அராஜக செயலில் ஈடுபடுகிறீர்கள். ஷேம் ஆன் யு' என, ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினார்.

சபை காவலர்களுடன்கலந்த 'காக்கி' காவலர்

சட்டசபை காவலர்கள், வெள்ளை சீருடை, வெள்ளை தொப்பி அணிந்திருப்பர். ஆனால், நேற்று வெள்ளை சீருடை அணிந்த சபைக் காவலர்களுடன், சட்டம் - ஒழுங்கு போலீசார் மற்றும் உயரதிகாரிகளும், அதே வெள்ளை சீருடையில் வந்திருந்ததாக, தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். 'வடிவேலு, ஒரு படத்தில், கொண்டையை மறைக்காமல் வரும் காட்சி போல், அந்த போலீசாரின் தொப்பி காட்டிக் கொடுத்து விட்டது' என, குற்றஞ்சாட்டினர்.
தற்கொலை செய்வோம் ஸ்டாலின் எச்சரிக்கை!
சபைக் காவலர்கள் நெருங்கிய போது, அவர்களிடம் ஸ்டாலின், ''நாங்கள், பினாமி ஆட்சியை எதிர்த்து, தமிழக நலனுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கும் சேர்த்து தான் இப்போராட்டம். பிற்பகல், 3:00 மணிக்கு, சபை நிகழ்ச்சி துவங்கவுள்ளது. அதுவரை, எங்களை அமர அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்,'' என்றார்.
அப்போது துரைமுருகன், ''நாங்கள் ஆளுக்கு ஒரு, 'பிளேடு வைத்திருக்கிறோம். நீங்கள் தவறாக நடந்தால், அறுத்துக் கொள்வோம்,'' என்றார்.
அதை சட்டை செய்யாமல், அவர்களை சபைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். ஸ்டாலினை வெளியேற்றிய போது, அவர் இரு கைகளினால், தன் தலையில், மாறி மாறி அடித்துக் கொண்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713573

  • தொடங்கியவர்

 

ஸ்டாலினும், முதல்வர் பழனிச்சாமியும் என்ன செய்தார்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.