Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நெடுவாசல்" போர்க்குரல்,  ஒவ்வொரு வீட்டு வாசலையும், தட்டட்டும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோள் ஏற்பு! :rolleyes:

?????

அமெரிக்காவில் ஹைட்ரோ கார்பனை படு பிஸியாக வியாபாரம் பண்ணும் மத்திய அமைச்சர்!

metro.jpg

 

ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகமே ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்று கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரோ அமெரிக்காவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதலீட்டார்களை கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார். ஹூஸ்டன் நகரில் பெட்ரோலியத் துறை முதலீட்டாளர்கள், அரசாங்க பிரதிநிதிகள், பெட்ரோலிய நிறுவனங்களுக்காக ஆண்டு தோறும் நடைபெறும் CERAWeek மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார்.

இந்தியாவில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் முதலீடு செய்ய வருமாறு அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொழிலுக்கு புதியவர்களுக்கும் அனுமதி.. மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பிரதான், இந்தியாவின் எரிவாயு, பெட்ரோலியத் துறையின் புதிய கொள்கைகளை விவரித்தார். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பிரதமரின் திட்டங்களையும் சொல்லத் தவறவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்றி ஒற்றைச் சாளர அனுமதிக்கு வழி வகை செய்துள்ளதாக குறிப்பிட்டார். உள் நாட்டு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் புதிய முதலீட்டார்களையும் நிறுவனங்களையும் இந்தியா வரவேற்பதாகவும் கூறினார். பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, உற்பத்தியையை பெருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

சிறிய அளவில் உற்பத்தி செய்யத் தகுந்த பல இடங்களை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றில் பல தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்( தமிழகத்தின் நெடுவாசலும் இதில் அடங்கும்). பல நிறுவனங்கள் எரிவாயு / பெட்ரோலியத் துறை தொழிலுக்கு புதியவர்கள் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார். இது வரையிலும் 34 திட்டங்களுக்கு 134 ஏலமுறையிலான விண்ணப்பங்களை 47 நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் கூறினார். அவற்றில் 31 திட்டங்களை செயல்படுத்த 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், முக்கியமாக 15 நிறுவனங்கள் பெட்ரோலியத்துறைக்கு முற்றிலும் புதியவை என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். எரிவாயு/பெட்ரோலியத் துறையில் முன் அனுபவம் இல்லாத 15 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றால் அவர்கள் செயல்படுத்தப் போகும் திட்டத்தின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுகிறது அல்லவா!

அமெரிக்காவில் அமைச்சர் கொடுத்த இந்த வாக்குமூலமே, நெடுவாசல் மக்களின் போராட்டத்திற்கு வலுவான காரணமாகி விடுகிறதே. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தொலைத்தொடர்பு துறையில் அனுபவமில்லாதவர்களுக்கு அனுமதி கொடுத்தார் என்று பாஜகவினர் குற்றம் சாட்டினார்கள் என்பதுவும் குறிப்பிடத் தக்கது. பணம்தான் முக்கியமா... ஏல முறையில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை.. எல்லா வகையான எரிபொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஷேல் முறையில் எடுக்கப்படும் எரிவாயும் அடங்கும். நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என ஏகப்பட்ட சலுகைகளை, அமெரிக்காவில் அமைச்சர் அள்ளி வழங்கியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மட்டுமே அரசு கவனம் செலுத்துமாம். இந்தியாவில் எரிசக்தித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏலமுறையில் அதிக பணம் கொடுத்து முதலீடு செய்ய வாருங்கள் என்பதுதான் அமைச்சருடைய பேச்சின் முக்கிய அம்சமாகும்.

மாநாட்டிற்கு வந்திருந்த சௌதி அரேபியா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோலியத் துறை அமைச்சர்களையும், டெக்சாஸ் கவர்னரையும் தர்மேந்திர பிரதான் சந்தித்துள்ளார். இலங்கை அமைச்சரையும் விட்டு வைக்கவில்லை. தமிழக மீனவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அமைச்சருடன் கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது என்று பிரதான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். CERAWeek மாநாடு தவிர வேறு சில முதலீட்டாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக பாஜக வினர் மக்கள் விருப்பப்பட்டால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், அதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய அவர்கள் கட்சியின் மத்திய அமைச்சரோ, அமெரிக்காவில் படு பிஸியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அந்நிய முதலீட்டை கொண்டுவர கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி :

சீன் - 1 - நரிமணம் இயற்கை எரிவாயு
சீன் - 2 - மீத்தேன்
சீன் - 3 - செல்கேஸ்
சீன் - 4 - ஹைட்ரொகார்பன்
சீன் - 5 - ??
சீன் - 6 - ??

இனி அடுத்த சீன் ..! - 5

நிருபர் :  அதென்னங்க "மெட்ரோ" கார்பன் திட்டம் ..?

இந்திமியுசிக்:  நமது பெட்ரோலியதுறை விஞ்ஞானிகளின் சிரீ(றி)ய முயற்சியினால் கெடும்வாசலில் இது கண்டுபிடிக்கபட்டுள்ளது  .!!  இதை அறி(ரி)ந்த மாத்திரத்தில் நான் மாண்புமிகு பிரதமரை தொடர்பு கொண்டு .கெடும்வாசலில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள மக்களை தரம் உயர்த்துவதற்காக கண்டுபிடிக்கபட்ட வாயுவை எடுப்பதற்கான திட்டதிற்கு மெட்ரோ கார்பன் என்று பெயர்சூட்ட வேண்டினேன் .ஏனென்றால் கெடும்வாசலை ஒரு மெட்ரொ சிட்டி லெவலுக்கு தரம் வேண்டி உள்ளது.மாண்புமிகு பிரதமர் கனிவோடு ஏற்று கொண்டார்.!!

நிருபர்:  இதனால் விவசாயிகளுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?  இதை எப்படி எடுக்கபோகிறீர்கள் ..?

இந்திமியுசிக்:  நிச்சயமாக சொல்கிறேன் விவசாயிகளுக்கு எந்தபாதிப்பும் வராது!! ஏனென்றால் நிலத்தடி நீரின் அடிப்பாகத்தில் இந்த வாயுவானது எங்கே போவது? என்று அட்ரஸ் தெரியாமல் அலைந்து கொண்டுள்ளது.. tw_angry: நாம ரெற்ஸ்ட் ரெக்னாலஜி பிளாஸீடிக் வாளியை கொண்டு கடலில் கலந்த எண்ணையை எடுத்தோம் அல்லவா ..? அதை போல மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பாக எடுக்கும் புகைபோட்டு எடுக்கும் ரெக்னாலஜியை பயன்படுத்த உள்ளோம்..! :cool:

அதாவது நாம தேன் கூட்டிற்கு புகைபோட்டால் தேனீக்கள் அந்த இடத்தை விட்டுவெளியவருவதில்லையா ..? தமிழ்நாட்டில் தேவை இல்லாமல் வீணாக வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்ட ரெண்டர் அறிவிக்க உள்ளோம் !!அதன் மூலம் இங்கே 5 பேருக்கு வேலைவாய்ப்புகிடைக்கும்!  வெட்டிய மரங்களை எரித்து அதன் மூலம் கிடைக்கும் டெட்டுகேசை அதிக அழுத்ததோடு  ஏற்கனவே போடபட்ட ஆழ்துளை கிணறு மூலமாக இறக்கும் போது நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மேலே கொண்டுவந்துவிடும்..  !!tw_astonished:

நிருபர் : வேலைவாய்ப்பு ?

இந்திமியுசிக் : ஏற்கனவே 5 பேர் ..இன்னும் இந்த திட்டம் செயல்படுத்தும் போது 25 பேர் ..மொத்தம் 30 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்! கூடுதலாக 20 பேருக்கு வேலை வழங்கிட  தமிழக பாஜக மூலம் பிரதமரிடம் வலி உருத்தபடும்.. அதன் மூலம் இப்பகுதி செழுமை அடையும் !!.....tw_blush:

....

Quote

தங்கறதுகும் திங்கறதிற்கும் எங்க ராசா போவீங்க ..? - கெடும் வாசலில் சீமான் சீற்றம்!!

 

Quote

ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களாகவே பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்டாலும் பரவாயில்லை.. ( கொ ) இல .கணேசன் பேட்டி!

Quote

 

மெட்ரோ கார்பன் பாதிப்பு குறித்து மே17 உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் - விளக்கம்!!

 

 

Quote

போராட்டகளத்தில் சமூக விரோத சக்திகள் ,தேசவிரோதசக்திகள், நக்சலைட்டுகள் ஊடுறுவி உள்ளனர் - எச்(!) ராஜா காட்டம்

Quote

 

மெட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தாத வரை போராட்டத்தை  கைவிடுவதில்லை  - இளைஞ்சர்கள், மாணவர்கள், விவசாயிகள் அறிவிப்பு!!

 

 

Quote

தமிழ்நாட்டில் உள்ள பொறுக்கிகள் காண்டாமிருகத்தின் தோலோடும் கழுதையின் மூளையோடும் செயல் படுகிறார்கள் - பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சூனா பானா - சிம்னி சிவீப்பர்(ல்) கண்டனம்

....

சீன்  - 6

நிருபர் : அது என்னங்க..  தட்றா கார்பன் திட்டம்..?

இந்திமியுசிக் : நாம நம் குழந்தைகளை தூங்க வைப்பதற்காக மெல்லியதாக தாலாட்டு பாடி தட்டி தூங்கவைப்பது இல்லையா ?" துளியிலே ஆட வந்த "...!!அது போல நிலத்தடியின் கீழ் இருக்கும் பாறைகளை (ஆமா ஜேசுதாஸ் ரெடி!!), மெல்லியதாக தட்டினால் உள்ளே இருக்கும் வாயு வெளியில் வரும் அதுதான் தட்றா கார்பன் திட்டம்!!

அதென்னோமோ போங்கப்பா ..!!

ஆனா இப்போ..!

time.jpg

கவுண்டமணி : ஒருத்தன் ரைமுங்குறான் .. ஒருத்தன் மணிங்குங்கறான் ...என்ன ..எழவுன்னே.. தெரியலேயெ..!

ஆனந்த்பாபு :  சார் ரைம் என்னாச்சு..?

கவுண்டமணி : சூரியன் உதயமான காலைனு  நினைச்சுக்க ..! உச்சி வெயில் வந்தா மதியம்னு நினைச்சுக்க ..! மறைந்து போச்சுன்னா ராத்திரினு நினைச்சுக்க..! இடைப்பட்ட நேரத்துல தோராயமா ஒரு கணிப்பு கணிச்சுக்ககூடாதா..?

செந்தில்:அண்ணே !! இந்த வளையலை என்னனெண்ண செய்ய போறீங்க..?

கவுண்டமணி :அடேய் ..! இது வளையலாடா?

செந்தில்: இது வட்டமா இருக்கு..!

கவுண்டமணி: வண்டி சக்கரம் கூட வட்டமாத்தான் இருக்கு ..!! அது வளையலாடா..?

செந்தில் : நான் ஒத்துகொள்ளமாட்டன்..!!

கவுண்டமணி : நான் வேணாம் ..வேணாம்... என்று சொன்னன் .!! என் மாமியா இதை என் கையில் சேர்த்து போச்சு..! இவனுங்க இம்சை தாங்க முடியலடா..!

இனி ..

petrol2.jpg

வடிவேலு : நீ !..துபாயில எங்க வேலைபார்த்த சொல்லு..?

பார்த்தீபன் : ம்ம் ...மன்னார் அன்ட் கம்பெனி..! நீ எங்க வேலை பார்த்த..?

வடிவேலு: நான் "நிக்றான் நடக்றான்"..!

பார்த்தீபன்:  ஓ .. "நிக்றான் நடக்றான்" ..அங்க என்ன இவன் வேலை பார்த்திருக்க போறான் .. ! அங்க பெட்ரோல் இஞ்சினியர் வேலை தான செய்த.?

வடிவேலு : அதென்னப்பா இப்படி பொசுகுனு சொல்லிபோட்ட..?

இவனுங்க.. நம்மளை பெட்ரோலிய பொருட்கள் குறித்து விளக்கத்திற்காக  கூகுளாண்டவரை தேட வைத்தும் .. வாட்ஸப்பு மற்றும் முகநூலில் அது குறித்து பகிர வைத்தும் ...விஞ்ஞானி அல்ல... குறைந்த பட்சம் பொறியாளராக ஆக்காமல் விட மாட்டார்கள் போல கிடக்கு ..!! :cool:

graphics_laughing.gif

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.