Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு

Featured Replies

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு

 

 
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் தயக்கம் தான் காட்டி வருகிறார்கள்.

 
 
 
 
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு
 
துபாய் :

2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி லாகூரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

இன்று நடைபெறும் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜல்மி அணிகள் இடையிலான இறுதி தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சந்திக்கும். 2009-ம் ஆண்டில் கராச்சியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டுக்கு சென்று விளையாட பெரும்பாலான அணிகள் மறுத்து வருகிறது.

BA88854B-7D1F-4105-B13B-0BE64B8A0C0C_L_s

எனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்தி காட்டினால் வெளிநாட்டு அணிகள் மீண்டும் பாகிஸ்தான் வந்து விளையாட வாய்ப்பு ஏற்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து தயக்கம் தான் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் குயட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர்கள் கெவின் பீட்டர்சன், லுக் ரைட், டைமல் மில்ஸ், நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரோசவ் ஆகியோர் பாகிஸ்தான் சென்று விளையாட முடியாத நிலையில் இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இன்னொரு அணியில் இடம் பெற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்களும் பாகிஸ்தான் சென்று விளையாடுவார்களா? என்பதில் சந்தேகமே நிலவுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/03093808/1071549/Pakistan-Super-League-Final-refusal-foreign-players.vpf

  • தொடங்கியவர்

கிரிக்கெட் மேகங்கள் சூழ் லாகூர்... ரன் மழையை எதிர்பார்த்து ரசிகர்கள்!

புதுப்பிக்கப்பட்ட லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தின் மொத்த இருக்கைகள் 27,000. இங்கிருக்கும்  ஒரு இடத்தைப் பிடிக்க மைதானத்துக்கு வெளியே கடந்த மூன்று நாள்களாக முண்டியடிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல். காரணம் கிரிக்கெட். ஆம், இந்த மைதானத்தில்தான் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) டி-20 ஃபைனல் நடக்க உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது 2009-ல் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின், வேறு எந்த அணியும் பாகிஸ்தானில் விளையாட முன்வரவில்லை. ‘வர்றது வரட்டும்...’ என, ஜிம்பாப்வே அணி துணிந்து 2015-ல், பாகிஸ்தானுக்கு ‘ட்ரிப்’ அடித்தது. உயிரைப் பணயம் வைத்து அங்கு விளையாடியதற்காகவே, ஜிம்பாப்வே வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். அதுதவிர்த்து, இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் வேறு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. ஏன்... பாகிஸ்தான் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளே ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில்தான் நடக்கின்றன.

ஐ.பி.எல் பாணியில் நடத்தப்படும்,  PSL தொடரின் லீக் போட்டிகள் ஷார்ஜா, துபாய் மைதானங்களில்தான் நடந்தன. ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் 20 லீக் போட்டிகள் முடிந்து, தற்போது League இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஏற்கெனவே ஃபைனலுக்கு தகுதிபெற்று விட்டது. கராச்சி கிங்ஸ், பெஷாவர் ஜல்மி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெல்லும் அணி ஃபைனலில் குவெட்டாவை சந்திக்கும். இதுவரை இந்த League எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. முதன்முறையாக பி.எஸ்.எல் தொடர், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. காரணம், அனல் பறக்கும் ஃபைனல் அல்ல. மைதானம். அந்த மைதானம் அமைந்திருப்பது லாகூரில்...

பாகிஸ்தான் கிரிக்கெட்

இதிலென்ன ஆச்சர்யம்? கேள்வி எழுகிறதா... லாகூரில் கடந்த மாதம், நர்ஸ்கள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸாரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானது 13 அப்பாவிகள். லாகூர் மட்டுமல்ல, கராச்சியில் பத்திரிகையாளர்கள் மீது, சிந்துவில் சுஃபி இனத்தவரின் வழிபாட்டுத் தலம் மீது (80 பேர் பலி) என கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள். குவெட்டா, தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டுவெடிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

இப்படி எங்கு பார்த்தாலும், பாகிஸ்தானில் பயங்கரவாத மேகங்கள் சூழ்ந்திருக்க, லாகூரில் பி.எஸ்.எல் ஃபைனலை நடத்தியே தீர்வோம் என அடம்பிடிக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. லாகூர் ஸ்டேடியத்துக்கு வெளியே டிக்கெட் வாங்கத் திரண்டிருப்பவர்களை ஒழுங்குபடுத்தும் போலீஸார் ஏ.கே-47 துப்பாக்கிகளை ஏந்தி இருக்கின்றனர். ஆனால், ‘இங்கு சர்வதேச வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான், இன்டர்நேஷனல் மேட்ச் நடத்த ஏற்ற இடம்’ என்பதை நிரூபிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதி. கூடவே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் கில்ஸ் கிளார்க்கை அழைத்துவந்து, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யச் சொல்கிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட்

இது ஒருபுறம் நடக்க, பி.எஸ்.எல். தொடரில் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், தென் ஆப்ரிக்காவின் ரிலி ரூசெள, லூக் ரைட், டைமல் மில்ஸ் உள்ளிட்டவர்கள், துபாயில் இருந்து நேரடியாக தங்கள் நாடுகளுக்கு ஃப்ளைட் ஏறி விட்டனர். ஃபைனலைப் புறக்கணித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல...’  அதோடு, மொத்தம் இந்த லீக்கில் பங்கேற்றுள்ள 60 வெளிநாட்டு வீரர்களில் இன்னும் சிலர், இந்த ஃபைனலில் இருந்து விலகலாம் என்றும் தெரிகிறது. 

ஆனாலும், கடாஃபி மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு 7,000 பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளது மாகாண அரசு. பிரதமரும், ராணுவத் தலைமை அதிகாரியும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். மைதானத்தை முற்றுகையிடும் சாலைகள் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது; டிக்கெட் வாங்க ஒருபுறம் கூட்டம் அலைமோதுகிறது; துப்பாக்கி ஏந்திய போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்த முனைகிறது; டிக்கெட் வாங்கியவர்கள் மூன்று மணி நேரத்துக்கு முன்பே ஸ்டேடியம் வந்து விட வேண்டும் என உத்தரவு பறக்கிறது; சோசியல் மீடியாவில் இந்த மேட்ச் குறித்து விளம்பரங்கள் பரவுகிறது. இப்படி லாகூரைச் சுற்றிலும் கிரிக்கெட் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

http://www.vikatan.com/news/sports/82619-lahore-cricket-fans-eagerly-waiting-for-pakistan-super-league-final.html

  • தொடங்கியவர்

லாகூர் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம்: அக்தர்

பதிவு: மார்ச் 03, 2017 21:37

 
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
 
 
 
லாகூர் வந்து விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம்: அக்தர்
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியை லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கு அணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தான் வரவழைத்து விளையாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், லாகூரில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பின்னடைவை ஏற்படுத்தியது.

இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. முதல் குவாலிபையரில் பெஷாவர் ஷல்மி - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் குவெட்டா 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குவெட்டா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்போது அந்த அணியில் லூக் ரைட், கெவின் பீட்டர்சன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இன்று நடைபெறும் போட்டியில் கராச்சி - பெஷாவர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

கராச்சி அணியில் போபரா, கெய்ல், ஜெயவர்தனே, மெக்லாரன், பொல்லார்டு, சங்ககரா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்.

பெஷாவர் அணியில் ஜோர்டான், மோர்கன், சமி, சாமுவேல்ஸ் போன்ற வெளிநாட்டு வீர்ரகள் இருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் அணியின் வெளிநாட்டு வீரர்கள் லாகூர் செல்ல வேண்டியிருக்கும்.

CE958721-7A81-4D2F-A903-DF4DE16089D8_L_s

லாகூர் சென்று விளையாட வெளிநாட்டு வீரர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லூக் ரைட் முதல் வீரராக பாகிஸ்தான் செல்ல முடியாது என்று அறிவித்துள்ளார். இப்படி தயக்கம் காட்டும் வீரர்களை விமர்சிக்கக் கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தோழர்களே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு வீரர்களை விமர்சிக்கக்கூடாது. பி.எஸ்.எல். தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு வெளிநாட்டு வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வருடம் லாகூரில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. 2018-ல் பி.எஸ்.எல். தொடரின் தொடக்க விழாவை லாகூரிலும், இறுதிப் போட்டியை கராச்சி அல்லது ராவல்பிண்டியில் நாம் நடத்தலாம், யாருக்குத் தெரியும்?’’ என்று பதிவு செய்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/03213722/1071722/Let-not-criticise-foreign-players-for-opting-out-of.vpf

Peshawar Zalmi 181/3 (20/20 ov)
Karachi Kings 157/7 (20/20 ov)

Peshwar will face Quetta in the final in Lahore

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.