Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் செயிட் அல்ஹுசைன் மீண்டும் ஆணித்தரம்

Featured Replies

சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் செயிட் அல்ஹுசைன் மீண்டும் ஆணித்தரம்

p10-b9a5bd039c316c7b48d59847970dcd55ab965daa.jpg

 

ஐ.நா.கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை

  (ரொபட் அன்­டனி)

 

  • நீதி வழங்கும் விடயத்தில் கவலைக்குரிய தாமதம் 
  • நீதி வழங்கும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை 
  • நல்லிணக்க செயலணி முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் 
  • ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் 
  • ஐ.நா. விசேட நிபுணர்களை அழைக்கவேண்டும் 
  • செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும்   
  • சித்திரவதைகள் பழிவாங்கல்கள் நிறுத்தப்படவேண்டும் 
  • தனியார் காணிகளை விடுவிக்கவேண்டும் 
  • இராணுவம் சிவில் நடவடிக்கைகளிலிருந்துவிலகவேண்டும்
  • பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்  
  • தடுப்பில் உள்ளவர்களை விடுவியுங்கள் அல்லது விசாரியுங்கள் 
  • காணாமல் போனோர் அலுவலகம் இயங்கவேண்டும் 
  • உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அவசியம்  
  • நட்டஈடு வழங்கும் கொள்கை அவசியம்

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் ஊடாக சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யாளர், வழக்­கு­ரை­ஞர்­களை உள்­ளீர்த்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். அதற்கு ஏற்­ற­வாறு சட்­ட­மூ­லங்­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்டும் என்று ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு மீண்டும் ஒரு­முறை பரிந்­துரை செய்­தி­ருக்­கின்றார்.   

அத்­துடன் ஐ.நா.மனித உரிமை பேர­வையின் அலு­வ­லகம் ஒன்றை இலங்­கையில் அமைத்து இலங்­கையின் மனித உரிமை  நிலை­மை­களை கண்­கா­ணிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் அழைப்பு விடுக்­க­வேண்டும் என்றும் செயிட் அல் ஹூசைன் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பரிந்­துரை செய்­தி­ருக்­கின்றார்.    

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த எழுத்து மூல அறிக்­கையை சமர்ப்­பித்­துள்ள மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இந்த பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார்.  

ஐந்து கட்­ட­மைப்­புக்­களின் கீழ் பல்­வேறு பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்­கத்­திற்கும் ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கும் உறுப்­பு­நா­டு­க­ளுக்கும் செயிட் அல் ஹூசைன் முன்­வைத்­தி­ருக்­கின்றார். அவர் அந்தப் பரிந்­து­ரை­களில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:- இலங்­கையின் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் நல்­லி­ணக்க விட­யத்தில் சில பய­னுள்ள வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதை பாராட்­டு­கின்றேன். அத்­துடன் புதிய அர­சாங்கம் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்­துடன் பய­னுள்ள ஈடு­பாட்டை கொண்­டுள்­ளமை தொடர்­பா­கவும் பாராட்­டு­கின்றேன். குறிப்­பாக மனித உரிமை மீறல்கள் விட­யத்தை ஆராயும் விட­யத்தில் இலங்கை ஒரு மாற்­றுப்­போக்கை கடைப்­பி­டிக்­கி­றது.   

சில ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­றங்­களை மனித உரிமை விட­யத்தில் அர­சாங்கம் காட்­டி­யி­ருக்­கி­றது. எவ்­வா­றெ­னினும் நிலை­மா­று­கால நீதி விட­யத்தில் கவ­லைக்­கு­ரி­ய­வ­கை­யி­லான தாம­த­நி­லைமை தொடர்­கின்­றதை இங்கு சுட்­டிக்­காட்­ட­வேண்டும். அது­மட்­டு­மன்றி விசா­ரணை பொறி­முறை விட­யத்தில் அண்­மைக்­கா­லத்தில் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் போது­மா­ன­தாக இல்லை என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யுள்­ளது.

அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட ஐ.நா. பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யதை உலக நாடுகள் பாராட்­டி­யி­ருந்­தன. அந்த வகையில் உண்­மையைக் கண்­ட­றியும் விட­யத்தில் உண­ரக்­கூ­டிய வகை­யி­லான முன்­னேற்­றங்­களை விரை­வாக அர­சாங்கம் தாம­த­மின்றி ஏற்­ப­டுத்­த­வேண்­டி­யுள்­ளது.

நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதும் இந்த விட­யத்தில் அவ­சி­ய­மா­ன­தாகும். நல்­லி­ணக்க பொறி­மு­றையை வடி­வ­மைப்­ப­தற்­கான ஆலோ­சனை செயற்­பா­டுகள் வர­வேற்­கத்­தக்­க­ன­வை­யாகும். அது அனைத்தும் உள்­ள­டங்­கி­ய­தாக உரு­வாக்­கப்­பட்­டது. அதன் பங்­க­ளிப்புத் தன்மை மற்றும் செயற்­பாட்டுத் தன்மை என்­பன வர­வேற்­கத்­தக்­கன. அதில் உரு­வாக்­கப்­பட்ட விட­யங்­களை அர­சாங்கம் தழு­விக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

குறிப்­பாக நிலை­மாறு கால நீதிக்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் இந்த நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை வடி­வ­மைக்கும் செயற்­பாடு தாம­த­மா­க­வுள்­ளது. எனவே இந்த விட­யத்தில் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் தெளி­வான முன்­னேற்­றங்­களை விரை­வாக வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கையில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவை இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் நெருக்­க­மான வகி­பா­கத்தை வகிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்­த­வ­கையில் இலங்கை விட­யத்தில் மிகவும் நெருக்­க­மான ஈடு­பாட்­டு­டனும் தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்­பு­டனும் ஐ.நா. மனித உரிமை பேரவை செயற்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்றோம்.

அர­சாங்­கத்­திற்­கான பரிந்­து­ரைகள்

நல்­லி­ணக்க செய­லணி முன்­வைத்த நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான பரிந்­து­ரை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.   2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக கால அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டை­யி­லான பரந்­து­பட்ட திட்­ட­மொன்றை முன்­வைக்­க­வேண்டும்.    

இலங்கை மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான அவ­சியம் தொடர்பில் அர­சாங்கம் பிர­சா­ர­மொன்றை முன்­னெ­டுக்­க­வேண்டும். கால அட்­ட­வ­ணைக்கு ஏற்­பட இந்த பிர­சார செயற்­பாடு முன்­னெ­டுக்­க­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பாதிக்­கப்­பட்ட மக்கள் சிவில் சமூக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட அனைத்துத் துறை­யி­ன­ரு­டனும் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் அலு­வ­லகம் ஒன்றை இலங்­கையில் அமைத்து மனித உரிமை நிலை­மை­களை கண்­கா­ணிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் வழி­செய்­ய­வேண்டும். அது­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்­கைக்கு பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­க­வேண்டும்.

உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி­வ­ழங்­குதல்,நட்­ட­ஈடு வழங்­குதல், மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­யவை தொடர்­பான ஐ.நா. விசேட நிபு­ணர்­களை இலங்கை அழைக்­க­வேண்டும். மேலும் தொடர்­பு­பட்ட அனைத்து ஐ.நா. விசேட நிபு­ணர்­க­ளையும் ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிர­தி­நி­தி­க­ளையும் இலங்கை அர­சாங்கம் அழைக்­க­வேண்டும்.    

நிறு­வ­ன­ரீ­தி­யான மறு­சீ­ர­மைப்பு

முப்­ப­டை­களின் அனைத்துக் கிளைகள், உள­வுத்­துறை, மற்றும் பொலிஸ் ஆகி­யோ­ருக்கு இலங்கை அர­சாங்கம் தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை வழங்­க­வேண்டும். அதா­வது சித்­தி­ர­வதை, பாலியல் வல்­லு­றவு, மனித உரிமை மீறல்கள் என்­பன தடை­செய்­யப்­பட்­டள்­ள­தா­கவும் அவை முன்­னெ­டுக்­கப்­பட்டால் விசா­ரணை நடத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் அறி­வு­றுத்தல் விடுக்­க­வேண்டும்.

மனித உரிமை காப்­பா­ளர்கள், பாதிக்­கப்ட்டோர், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஆகியோர் மீதும் பாது­காப்பு தரப்­பினர் முன்­னெ­டுக்கும் அனைத்து வகை­யி­லான கண்­கா­ணிப்­புக்கள் சித்­தி­ர­வ­தைகள் பழி­வாங்­குதல் என்­ப­வற்றை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­ப­ட­வேண்டும்.

பாது­காப்­புத்­து­றையில் ஏனைய மறு­சீ­ர­மைப்­புக்­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் முறையைப் பலப்­ப­டுத்­தவும் இதனை முன்­னெ­டுக்­க­வேண்டும். அது­மட்­டு­மன்றி ஐ.நா. அமை­திப்­படை செயற்­பா­டு­க­ளுக்­காக விண்­ணப்­பிக்கும் தனிப்­பட்­ட­வர்­களை முழு­மை­யாக சோத­னைக்­குட்­ப­டுத்­த­வேண்டும்.

இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தனியார் காணி­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­னு­ரிமை அளிக்­க­வேண்டும். அது­மட்­டு­மன்றி இரா­ணு­வத்­தினர் வர்த்­தக மற்றும் சிவில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதில் வில­க­வேண்டும். இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­விற்கு அனைத்து வளங்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்து அதன் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வேண்டும்.  

சட்டம் மற்றும் நீதித்­துறை மறு­சீ­ர­மைப்பு

சுயா­தீன நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் தொடர்­பான ஐ.நா. விசேட ஆணை­யா­ளரின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும். சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் சட்­டத்தை மீளாய்வு செய்­ய­வேண்டும். ஜெனிவா பிர­க­ட­னங்கள் மற்றும் ரோம் பிர­க­ட­னங்­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.   

யுத்­தக்­குற்­றங்கள் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், மனித படு­கொ­லைகள், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் போன்ற விட­யங்­களை அர­சாங்கம் குற்­ற­வியல் சட்­டத்தில் உள்­ளீர்க்­க­வேண்டும்.

நிலை­மாறு கால நீதிப்­பொ­றி­மு­றையை உரு­வாக்­கும்­போது அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் கருத்தில் கொள்­ள­வேண்டும். இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் ஊடாக சர்­வ­தேச நீதி­ப­திகள் விசா­ர­ணை­யாளர், வழக்­கு­ரை­ஞர்­களை உள்­ளீர்த்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும்.

அதற்கு ஏற்­ற­வாறு சட்­ட­மூ­லங்­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்டும். டி.என். ஏ. பரி­சோ­தனை, தடை­ய­வியல் பரி­சோ­தனை என்­ப­வற்றைப் பலப்­ப­டுத்­த­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமைய வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறவர்கள் விடுவிக்க வேண்டும் அல்லது விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல்போனோர் அலுவலகத்தை உடனடியாக இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும்.  

அரசாங்கம் தேசிய நட்டஈடு வழங்கும் கொள்கைத் திட்டம் ஒன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை சர்வதேச தரத்திற்கு அமைய இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் மனித உரிமை விடயத்தில் மனித உரிமைப் பேரவை கண்காணிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

அத்துடன் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றை சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் விசாரிப்பது குறித்து ஆராய வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-04#page-1

  • தொடங்கியவர்

பொறுப்பு கூறுதல் முனைப்புக்கள் மந்த கதியில் தொடா்கின்றது – ஐ.நா அறிக்கையில் அல் ஹூசெய்ன் குற்றச்சாட்டு

UN-Human-Rights.jpg

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

இலங்கையில் பொறுப்பு கூறுதல் முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கால மாறு நீதிப்பொறிமுறைமை மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்படுகின்றது, நிலையான சமாதானத்தை எட்டும் நோக்கில் கடந்த கால குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் முழு அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படவில்லை.

மனித உரிமை விவகாரம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை, அது வரவேற்கப்பட வேண்டியதாகும். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் சாதகமான முனைப்பை வெளிப்படுத்தியுள்ளது.  எனினும் காலமாறு நீதிப்பொறிமறைமை அமுலாக்கம் மிகுந்த மந்தகதியில் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐ.நா தீர்மானத்திற்கு அமைய பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், மெய்யான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் நிலைமைகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புக்களுடன் இலங்கை காத்திரமான உறவுகளைப் பேணி வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியதாகும்.  அரசியல் சாசனத் திருத்தம், காணி மீளளிப்பு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலணி ஒன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

எவ்வாறெனினும்,; நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறுதல் தொடர்பிலல் இதுவரை காலமும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையல்ல. நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்பு கிடையாத நிலை தொடர்கின்றது.

கட்சி அரசியல், அதிகார முரண்பாட்டு நிலைமை போன்றவற்றினால் பொறுப்பு கூறுதல் விவகாத்தில் நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன. காலமாறு நீதிப் பொறிமுறைமை தொடர்பில் ஆளும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பல வழிகளில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்பு காட்டி வருகின்றது என சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். எனினும் மிகக் கடினமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகள் உரிய திட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அனைத்து வெற்றிகளும் வீணாகிவிடும்.

பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கமும் இலங்கை மக்களும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சில முக்கியமான விடயங்கள் குறித்து இலங்கை  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றமொன்றை நிறுவி விசாரணைகளை நடத்துதல், தனியார் காணிகளை இராணுவத்தினர் வெளியேறுதல் உள்ளிட்டனவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்தும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. மனித உரிமை பாதுகாவலர்கள் கண்காணிக்கப்படுதல், பின்தொடர்தல், காவல்துறையினர் அதிக பலத்தைப் பயன்படுத்துதல், சித்திரவதைகளில் ஈடுபடுதல் போன்றன இடம்பெறுகின்றன. தடுத்து வைத்தல்கள் விசாரணைகளின் போது காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதனை தொடர்ந்தும் தமது வாடிக்கையாக கொண்டுள்ள நிலைமை தொடர்கின்றது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை தொடர்ந்தும் நாட்டில் நீடித்து வருகின்றது. இராணுவம், காவல்துறை, புலனாய்வுப் பிரிவு ஆகிய அனைத்து தரப்பினதும் குற்றச் செயல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவற்றுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரிகள் கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி முழு அளவில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றறச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத கலாச்சாரம் பல்வேறு நம்பிக்கையீனங்களை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சயிட் அல் ஹூசெய்ன் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
தமிழில்: GTN

http://globaltamilnews.net/archives/19836

  • தொடங்கியவர்
உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கு த.தே.கூ வரவேற்பு
 
04-03-2017 03:19 PM
Comments - 0       Views - 62

article_1486195384-1.jpg“தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 2015ம் ஆண்டின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் வகையிலான, மனித உரிமை பேரவை உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது.

இவ்வறிக்கையானது அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் போன்ற கருமங்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அரசாங்கம் செய்யத் தவறிய பல  முக்கியமான விடயங்கள் தொடர்பில் விமர்சனத்தையும் கொண்டுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு, இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அறிக்கை தொடர்பில் அக்கறை செலுத்துவதோடு, நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயங்களான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபையை மறுசீரமைத்தல் வர்த்தக மற்றும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றன தொடர்பிலான  அரசாங்கத்தின்  நடவடிக்கைகள்  திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

உண்மையில் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடற்ற நிலைமையானது, எம்மக்கள் கொண்டுள்ள  நம்பிக்கையை நேர்த்தியாக குறைந்து வருகின்றது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் நாம் தொடர்ந்து எமது கரிசனையை வெளிக்காட்டி வந்துள்ளதோடு, தனது பொருத்தனைகளை நிறைவேற்றும்படியான கால வரையுடன் கூடிய ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பிக்கவும் வேண்டும் என  அரசாங்கத்திடம்  கேட்டிருந்தோம்.

வழமையான நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட சில  அடையாளபூர்வமான வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு அமைப்பு ரீதியில் காணப்பட்ட தவறுகளானது, அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன்படி சர்வதேச பங்களிப்புடனான விசேட நீதிமன்றத்தின் தேவையை வலியுறுத்தி காட்டுகின்றது.

உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளில் இந்த காரியமானது எதிரொலிப்பதை நாம் வரவேற்கிறோம். மேலும் காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும்  நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறோம். இந்த விடயம் தொடர்பில் காரணமற்றதும் நேர்மையற்றதுமான  தாமதமானது, காணாமற்போனோரின் குடும்பங்கள் அனுபவிக்கும் அவஸ்த்தையை மேலும் அதிகரிக்க செய்கிறது.

ஆகவே, இலங்கை அரசாங்கத்தோடு மனித உரிமைகள் பேரவையானது  நெருங்கிய ஈடுபாட்டை கொண்டிருந்து இந்நாட்டின் முன்னேற்றங்களை கண்காணிக்கும்படிக்கான  உயர் ஸ்தானிகரின் அழைப்பை நாம் வரவேற்கிறோம்.

உயர் ஸ்தானிகரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்புமுனையாக மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் செயற்பட்டு சிறந்த நம்பிக்கையை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்திடம் நாம்  கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/192594/உயர-ஸ-த-ன-கர-ன-அற-க-க-க-க-த-த-க-வரவ-ற-ப-#sthash.e88oaPQH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.