Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐந்து மாணவர் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்தல் விவகாரம் இரு கடற்படை வீரர்கள் சி.ஐ.டி.யினரால் கைது

Featured Replies

ஐந்து மாணவர் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்தல் விவகாரம்

 

இரு கடற்படை வீரர்கள் சி.ஐ.டி.யினரால் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணா­மல்­போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட இரு கடற்­படை புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது­செய்­யப்­பட்­டனர்.

நேற்­று­முன்­தினம் இரவு முதல் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரியும் சிறப்பு விசா­ர­ணை­யா­ள­ரு­மான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணையை அடுத்து இவர்கள் இரு­வரும் நேற்று கைது­செய்­யப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

குறித்த கடத்­தல்கள் இடம்­பெறும் போது திரு­கோ­ண­ம­லையில் உள்ள நிலத்­தடி வதை முகா­மான கன்சைட் எனப்­படும் இடத்தின் பொறுப்­பா­ள­ராக இருந்த அப்­போ­தைய கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் லெப்­டினன் கொமாண்­டரும் தற்­போ­தைய கொமாண்டோ தர அதி­கா­ரி­யு­மான ரண­சிங்­கவும் கடத்­தல்­களில் ஈடு­பட்ட கடற்­படை சிப்­பா­யான உத­ய­கு­மா­ர­வுமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

கைதான இரு­வரும் நேற்று மாலை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில் எதிர்­வரும் 13 ஆம் திக­தி­வரை அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற­நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் இடம்­பெற்று வரு­கி­றது. சுமார் 9 வரு­டங்­க­ளாக சந்­தேக நபர்கள் கைது­செய்­யப்­ப­டாத இவ்­வ­ழக்கில் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டோரைக் கைது செய்ய கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்­டி­ருந்தார். இந் நிலை­யி­லேயே தற்­போது கைது நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­தி­ருந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இந்த ஐவரின் கடத்­தல்­க­ளுடன் உதய குமார என்ற கடற்­படை சிப்பாய் நேர­டி­யாக பங்­கேற்­றி­ருந்­தமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது. கடற்­படை புல­னாய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி என்­ப­வ­ருடன் சேர்ந்து அவ­ரது அணியில் ஒரு­வ­ராக இருந்து உத­ய­கு­மார இக்­க­டத்­தல்­களை செய்­த­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலையில் ஹெட்டி ஆராச்சி உள்­ளிட்ட மேலும் இக்­க­டத்­தல்­களில் பங்­கேற்ற ஏனைய கடற்­படை புல­னாய்­வா­ளர்­களை அடை­யாளம் கண்­டுள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­யா­ளர்கள் அவர்­க­ளையும் கைது­செய்ய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். இந் நிலையில் மேலும் சிலரை தற்­போதும் சி.ஐ.டி.யினர் விசா­ரணை வல­யத்­துக்குள் வைத்து விசா­ரணை செய்­கின்­றனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­னாய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், அந்த நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்­ட­ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள ரண­சிங்க என்­ப­வ­ரையும் குற்றப் புல­னாய்வுப் இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள ரணசிங்க என்பவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினார் கைது செய்தனர்.

 மேலும் சிலரைக் கைது செய்ய உள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந் நிலையிலேயே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நேரடியாக பொறுப்புக் கூறத்தக்கவர்களில் இருவரான மேற்படி இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.