Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசேட கூட்டத்தை ஜெனிவாவில் ஏற்பாடு செய்துள்ள அமெரிக்கா பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து பிரேரணையை தாக்கல் செய்யும் சாத்தியம்

Featured Replies

விசேட கூட்­டத்தை ஜெனி­வாவில் ஏற்­பாடு செய்­துள்ள அமெ­ரிக்கா

 

பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் இணைந்து பிரே­ர­ணையை தாக்கல் செய்யும் சாத்­தியம்

(ரொபட் அன்­டனி)

ஜெனி­வாவில் நடை­பெற்று வரும் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக கொண்­டு ­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ரணை குறித்து ஆராயும் உப­கு­ழுக்­கூட்­டங்­களை அடுத்­த­வாரம் அமெ­ரிக்­காவும் பிரான்ஸும், ஜெனிவா வளா­கத்தில் நடத்­த­வுள்­ளன.

எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை ஜெனிவா வளா­கத்தில் குழு அறை 24 இல் அமெ­ரிக்கா ஏற்­பாடு செய்­ய­துள்ள இலங்கை பிரே­ரணை குறித்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. அதே­போன்று அதே­தினம் மாலை ஜெனிவா வளா­கத்தில் 26 ஆவது குழு அறையில் பிரான்ஸ் ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

விசே­ட­மாக இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் வரைபை தயா­ரித்தல் மற்றும் அதற்கு அனு­ச­ரணை வழங்­கு­வது தொடர்­பா­கவே இதன்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

அமெ­ரிக்கா

அமெ­ரிக்கா ஏற்­பாடு செய்­துள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­ட­மா­னது இலங்கை தொடர்­பாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கு­வது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நடத்­தப்­ப­டு­கி­றது. இதன்­போது மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இதில் கலந்­து­கொண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கு­வது குறித்து ஆரா­ய­வுள்­ளன.   

இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுப்­ப­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ர­ணையை பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள நிலையில் அமெ­ரிக்­காவும் அதற்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது அமெ­ரிக்கா இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்து உப­கு­ழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்ள நிலையில் அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் இணைந்து இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முன்­வைக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது.

கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மான ஜெனிவா மனித உரிமை பேர­வையின் புதன் கிழமை அமைர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமெ­ரிக்­காவின் பிரதி உதவி இரா­ஜாங்க செயலர் ஹெரின் பார்க்லே இலங்கை தொடர்­பாக ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவை முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் குறித்து அமெ­ரிக்கா அவ­தானம் செலுத்­தி­யி­ருந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

எவ்­வா­றெ­னினும் நல்­லி­ணக்­கத்­திலும் பொறுப்­புக்­கூ­ற­லிலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தமக்கு மேலும் கால அவ­காசம் தேவை­யென இலங்கை அர­சாங்கம் ஜெனி­வாவில் கூறி­யுள்ள நிலையில் அதற்கு கால அவ­காசம் வழங்கும் வகை­யி­லேயே அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் இணைந்து பிரே­ர­ணையை கொண்­டு­வரும் என நம்­பப்­ப­டு­கி­றது.

பிரான்ஸ்

இது இவ்­வா­றி­ருக்க எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை குழு அறை 26 இல் இலங்­கையின் மனித உரிமை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு பிரான்ஸ் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்­தக்­கூட்­டத்­திலும் இலங்கை உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அத்­துடன் மனித உரி­மை­பே­ர­வையின் உறுப்­பு­நா­டு­களும் பிரான்ஸ் ஏற்­பாடு செய்­துள்ள இந்­தக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு இலங்­கையின் மனித உரிமை தொடர்­பான தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன.

மேலும் புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். இதில் இலங்­கையின் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது குறித்து புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் கருத்­துக்­களை வெளி­யி­டு­வார்கள்.

அந்­த­வ­கையில் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை இலங்கை விவ­காரம் தொடர்பில் இரண்டு உபக்­கு­ழுக்­கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும். கடந்த புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்­ட­மொன்று ஜெனி­வாவில் நடை­பெற்­றது. இதனை இலங்கை தூதுக்­கு­ழு­வினர் ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

இதில் கலந்­து­கொண்­டி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள விசா­ர­ணைப்­பொ­றி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெற்­றாலும் இடம்­பொ­றா­வி­டினும் நம்­ப­க­ர­மான பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென கூறி­யி­ருந்தார்.

இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் கொழும்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் எந்­த­வொரு சூழ­லிலும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

அதா­வது சர்வதேச நீதிபதிகள் தொடர்பான கோரிக்கையை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையளார் செயிட் அல் ஹூசைன் முன்வைத்து 24 மணி நேரத்திற்குள் தான் அதனை நிராகரித்ததாகவும் வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறெனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்த நிலையில் அதில் விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறவேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.