Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏலத்தின் தொகையை ஆளுநர் அர்ஜுனவுக்காக மாற்றியமைத்தோம்

Featured Replies

ஏலத்தின் தொகை­யை ஆ­ளுநர் அர்­ஜு­ன­வுக்­கா­க­ மாற்­றி­ய­மைத்தோம்

p16-99e662323e1d59b0e93363fa4f329fecf238e259.jpg

 

மத்­தி­ய­ வங்­கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேல­தி­க­ அத்­தி­யட்­ச­­ர் மொஹமட் ஹாசிம் சாட்சியம்

(பா.ருத்­ர­குமார்)

முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனின் மன­நி­லை­யை ­மாற்­ற­ மு­டி­யா­து­ என்­ப­து ­எ­மக்­கு­ தெ­ரியும். 2015 ஆம் ஆண்­டு ­பெப்­ர­வரி 27 ஆம் திக­தி­ செய்­யப்­பட்­ட ­ஏ­லத்­தின்­ வி­ப­ரங்­களில் 2.65 பில்­லியன் ரூபா­வை­ மட்­டு­மே ­தொ­டர்ந்­து­ பே­ண­மு­டியும். ஆனால் ஆளுநர் எங்­க­ளுக்கு 10 பில்­லி­ய­னுக்­கு­ மேற்­பட்­ட ­நி­தி­யை அவ் ஏலத்தில் பரா­ம­ரிக்­க­சொன்னார். 

நாம் ஏற்­க­ன­வே ­த­யா­ரித்­த­ தொ­கை­யை ­அ­வ­ருக்­கா­க ­மாற்­றி­ய­மைத்தோம் என்று ­மத்­தி­ய­ வங்­கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேல­தி­க­ அத்­தி­யட்­ச­க­ரா­க­ க­ட­மை­யாற்றும் மொஹமட் ஹாசிம் பிணை­ மு­றி­ தொ­டர்பில் விசா­ர­ணை­ செய்யும் ஜனா­தி­ப­தி­  ஆ­ணைக்­கு­ழு­விடம் சாட்சியமளித்தார். 

இது­தொ­டர்­பா­க­ ஆ­ளு­னரை ­அ­றி­வு­றுத்­த­மு­டி­யாது. அப்­போ­துள்ள சூழ்­நி­லையில் 10 பில்­லி­ய­னுக்­கு­ஏ­லத்­தை­மாற்­றி­ய­மைப்­பதால் மத்­தி­ய­வங்­கியின் நிதிச்­செ­யற்­பா­டு­களில் பாரி­ய­வீழ்ச்­சி­ஏற்­படும் என­மத்­தி­ய­வங்­கியில் உள்­ள­ அ­னைத்­து­ மு­கா­மை­யா­ளர்­களும் கருதியபோதும் அத­னை­முன்னாள் ஆளுனர் அர்­ஜூன மகேந்­திரன் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை இது தொடர்பில் விலை­ம­னுக்­கோரல் சபைக்கும் தெரி­வித்­தி­ருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்­தோ­டு­பி­ணை ­மு­றிகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் சுனில் ஹந்­து­னெத்­தி­த­லை­மை­யி­லா­ன­கு­ழுவில் மத்­தி­ய­வங்­கி­யின்­மே­ல­தி­க­அத்­தி­யட்­சகர் மொஹமட் ஹாசிம் தெரி­வித்­த­ப­தி­வு­க­ளுக்கும் மாறு­பா­டு­கா­ணப்­ப­டு­வ­தை­ இந்த விசாரணையின்போது சட்­டத்­த­ர­ணிகள் சுட்­டிக்­காட்­டினர்.

இதற்­கு­பிட்­டி­பொ­ல­ ஆ­ணைக்­கு­ழுவின் விசா­ரணை, டியூ.குண­சே­க­ரவின் ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­மற்றும் பாரா­ளு­மன்­ற­ உ­றுப்­பினர் சுனில் ஹந்­து­னெத்­தி­ ஆ­கி­யோரின் விசா­ர­ணை­க­ளின்­போ­து­கேள்­விகள் பல­த­ரப்­பி­லி­ருந்தும் கேட்­கப்­பட்­ட­தா­கவும் முழு­மை­யா­க­ ஆ­ராய்ந்­து­ப­தி­ல­ளிக்­க­ மு­டி­ய­வில்­லை­ என்று தெரிவித்த முஹமட்காசிம், ஆனால் பிணை­மு­றி­தொ­டர்பில் விசா­ர­ணை­செய்யும் ஆணைக்­கு­ழுவில் தௌிவா­ன­ க­ருத்­தை­முன்­வைத்­தி­ருப்­ப­தா­கவும் கூறினார்.

2015 ஆம் ஆண்­டு­பெப்­ர­வரி 27 ஆம் திக­தி­செய்­யப்­பட்­ட­ஏ­லத்தின் போது­முன்னாள் மத்­தி­ய­வங்­கியின் ஆளுனர் அர்­ஜூன மகேந்­திரன் செயற்­பட்­ட­விதம் தொடர்பில் முதலில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போ­து­ ஏற்­க­ன­வே­ ஏ­லத்தின் நேரத்­தை­ நீ­டிக்­க­சொன்­ன­தாக கூறி­ய­மத்­தி­ய­வங்­கியின் மேல­தி­க­அத்­தி­யட்­ச­க­ரா­க­க­ட­மை­யாற்றும் மொஹமட் ஹாசிம்,அத­னைத்­தொ­டர்ந்­து­ஏ­லத்தின் பங்­கு­க­ளை­கை­யா­ளு­வ­திலும் நேர­டி­மு­த­லீட்­டா­ளர்­களின் மீதும் பங்­கு­ப­ரி­வர்த்­த­னையின் மீதும் அவர் செலுத்­தி­ய­செல்­வாக்­கு­தொ­டர்பில் விரி­வா­க­ விபரித்தார்.

மத்­தி­ய­வங்­கியின் புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­க­ளத்தின் மேல­தி­க­அத்­தி­யட்­ச­க­ரா­க­க­ட­மை­யாற்றும் மொஹமட் ஹாசிமின் சாட்­சிப்­ப­தி­வு­வோ­டு­பி­ணை­மு­றி­மோ­ச­டி­தொ­டர்பில் விசா­ர­ணை­க­ளை­செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்பட்­ட­வி­சா­ர­ணை­க்குழு நேற்­று­காலை 10 மணிக்­கு­ கூடியது.

பிணை­மு­றி­மோ­ச­டி­தொ­டர்பில் விசா­ர­ணை­க­ளை­செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்ப்ட்­ட­வி­சா­ர­ணை­ ஆ­ணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளா­ன­உயர் நீதி­மன்­ற­நீ­தி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி,பி.எஸ் ஜெய­வர்­த­ன­ மற்றும் ஓய்­வு­பெற்­ற ­உ­த­வி­க­ணக்­காய்­வாளர் நாயகம் கே. வேலுப்­பிள்­ளை­ ஆ­கியோர் முன்­னி­லையில் இந்­த­வி­சா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

கொழும்பு - புதுக்­க­டையில் உள்­ள­நீ­தி­ய­மைச்சின் கட்­டிடத் தொகு­தியில் அமைக்­கப்பட்­டுள்­ள­மேற்­ப­டி­வி­சா­ர­ணை­ஆணைக் குழுவின் விசா­ர­ணை ­அ­றையில் இந்­த­வி­சா­ர­ணை­க­ளை­ஆ­ரம்­பித்­து­மு­தலில் சிரேஷ்ட மேல­தி­க­ சொ­லி­சிட்டர் ஜெனரலும் ஜனா­தி­ப­தி­ சட்­டத்­த­ர­ணியுமான ­டப்­புல டி லிவே­ராவின் நெறிப்­ப­டுத்­த­லுடன் சாட்­சி­வி­சா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

கேள்வி: 2015 ஆம் ஆண்­டு­பெப்­ர­வரி 27 ஆம் திக­தி­ மேற்­கொள்­ளப்­பட்­ட­ ஏ­லத்தின் போது­பங்­கு­களின் அள­வீ­டு­தொ­டர்பில் ஆளுனர் என்ன கூறினார்.

பதில்: அவர் பங்­குகள் பதி­வுச்­செய்­யப்­பட்­டுள்­ள ­தா­ளை­கேட்டார். அத்­தோ­டு­ 2014 செப்­டெம்­ப­ருக்கு முன்­ன­ரா­ன­பங்­கு­ப­ரி­வர்­த­னை­தொ­டர்பில் வின­வினார்.

கேள்வி: பங்­குகள் பதி­வுச்­செய்­யப்­பட்­டுள்­ள­ தா­ளை ­நீங்கள் எங்­கு­வைத்­தி­ருந்­தீர்கள்?

பதில்: என­து ­கையில் வைத்­தி­ருந்தேன்

கேள்வி: அந்­த­ தா­ளை­ எவ்­வா­று­ வாங்­கினார்?

பதில்: என­து­கை­யி­லி­ருந்­து ­பறிப்­ப­து­போ­லதான் இருந்­தது.

கேள்வி: பின்னர் அந்­த­தா­ளை­ பார்த்­த­பின்­பு­என்­ன­ சொன்னார்?

பதில்: அவர் செப்­டெம்பர் மாதத்­துக்­கு­முன்னர் கொள்­வ­ன­வு­செய்­யப்­பட்­ட­பங்­கு­களின் மொத்­த­வி­ப­ரங்­க­ளை­கேட்டார். நாம் 11.75 புள்­ளி­க­ளாக இருந்­த­தாக கூறினோம். அந்­நே­ரத்தில் பங்­கு­களின் மூலம் 2.75 பில்­லி­யன்­க­ளே ­மத்­தி­ய­வங்­கிக்­கு ­அ­வ­சி­ய­மாக இருந்­தது. ஆனாலும் அந்­நே­ரத்தில் 10 பில்­லி­ய­னுக்­கு­ அ­தி­க­மா­ன­ தொ­கை ­ஏ­லத்தின் மூலம் பெற­மு­டி­யா­த­போதும் அந்­த­தொ­கை­பே­ணு­வ­தற்­கா­ன­அ­றி­வு­றுத்­த­லை­யே­அவர் எமக்­கு­ தந்தார்.

கேள்வி: அவர் உங்­க­ளோ­டு ­க­தைக்கும் போது யார் யாரெல்லாம் உடன் இருந்­தார்கள்?

பதில்: மத்­தி­ய­வங்­கியில் மேல­தி­க­ அத்­தி­யட்­ச­க­ரா­க­ க­ட­மை­யாற்­றும்­முத்­து­கல,பெர்­னான்­டோ­ மற்றும் மத்­தி­ய­வங்­கியின் இரண்­டு­து­ணை­ஆ­ளு­னர்­களும் உட­னி­ருந்­தனர்.

கேள்வி:இரண்­டு­து­ணை­ஆ­ளு­னர்­க­ளி­டையில் மத்­தி­ய­வங்­கி­ஆ­ளுனர் என்ன கூறினார்?

பதில்: நாங்கள் பங்­கு­ப­ரி­வர்த்­த­னையின் போது­ஏற்­பட்­ட­வி­ப­ரங்­களை கூறினோம். அந்­நே­ரத்தில் எனக்­கு­ஒ­ரு­கேள்­வி­எ­ழுந்­தது. அத­னை ­து­ணை­ ஆ­ளு­ன­ரிடம் கேட்டேன்.

கேள்வி: என்­ன­ கேள்­வி­கேட்­டீர்கள்?

பதில்: ஏலத்­தின்­போ­து­தொ­டர்ந்­து­ கா­ணப்­பட்­ட­பங்­கு­க­ளையும் அதன் தொடர் புள்­ளிகள் தொடர்­பிலும் கேள்­வி­ எ­ழுப்­பினேன்.

கேள்வி: அதற்­கு­அ­வர்கள் என்­ன­பதில் சொன்­னார்கள்?

பதில்: நேர­டி­மு­த­லீட்­டா­ளர்­க­ளை­கொண்­டு­ஏலம் நடை­பெ­று­வதால் அத­னை­தொ­டர்ந்­து­கொண்­டு­செல்­லலாம் என்­றனர். செப்­டெம்பர் 2014க்கு பின்னர் சந்­தையில் காணப்­படும் பங்­கு­களின் பரி­மாற்றம் மாற்­ற­ம­டைந்­தது. 2.6 பில்­லியன் பரி­மாற்றம் மட்­டு­மே ­தே­வை­என்­ப­த­னை­ தெ­ரி­வித்தேன். ஆனால் 10 பில்­லி­ய­னுக்­கு­மேற்பபட்­ட­தொ­கை­யை­கொண்­டு­செல்­லு­மா­று­என்­னுடன் இருந்த இரு அத்­தி­யட்­ச­கர்­க­ளுக்கும் ஆளுனர் உத்­த­ர­விட்டார்.

கேள்வி: உங்­க­ள­து­ப­ரிந்­து­ரை­யை­ஆ­ளுனர் ஏற்­றுக்­கொண்­டாரா?

பதில்:இல்லை. அதன்­பின்னர் எங்­க­ள­து­கோ­ரிக்­கை­யை­ மத்­தி­ய­வங்­கியின் ஆளுனர் ஏற்­றுக்­கொள்­ளா­மையால் எம­து­கோ­ரிக்­கை­யை­ வி­லை­ம­னுக்­கோரல் சபைக்­கு­கொண்­டு­செல்­ல­ வி­ரும்­பினோம். ஆனால் ஆளு­னரின் உத்­தி­ர­வினால் ஏற்­கன­வே­ த­யா­ரிக்­கப்­பட்­ட­ வி­லை­ம­னுக்­கோரல் மற்றும் ஏலத்தின் பங்­கு­களின் விப­ரங்­க­ளை­ மீ­ள­த­யா­ரித்­து­பு­தி­ய­ஆ­வ­ணத்­தை­ஆ­ளு­ன­ரி­டத்தில் வழங்­கினோம்.

கேள்வி: ஏற்­க­ன­வே­த­யா­ரிக்­கப்­பட்­ட­ஏ­லத்தின் புள்­ளி­வி­ப­ரங்­க­ளை­மாற்­றி­னீர்­களா?

பதில்: ஆம். ஏற்­க­ன­வே நாம் 2.6 பில்­லி­ய­னுக்­கு­மட்­டு­மே­ ஏ­லத்தின் விப­ரங்­க­ளை­த­யா­ரித்தோம். ஆனால் 10 பில்­லி­ய­னுக்­கு­த­யா­ரித்­த­வி­ப­ரங்­க­ளை­மு­ழு­மை­யா­க­மாற்­றினோம்.

கேள்வி: நீங்கள் சொன்­ன­ஆ­லோ­ச­னையை ஏனைய இரு துணை­ஆ­ளு­னர்­களும் ஏற்­றுக்­கொண்­டார்­களா?

பதில்: நிச்­ச­ய­மா­க­ அ­வர்­களும் என­து­ம­ன­நி­லை­யி­லேயே இருந்­தனர்.

கேள்வி: அந்­த­ ஆ­வ­ணங்கள் கோப்­பி­லி­டப்­பட்­ட­வற்றில் எங்­கு ­உள்­ளது.

பதில்: சி. 39 பி. எஸ் (ஏ) என்­ற­நி­ரலில் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­பி­ற­கு­ஏற்­க­னவே 2014 ஆம் ஆண்­டு­செய்­யப்­பட்ட இரண்­டா­வ­து ­ஏ­லத்தில் விப­ரங்­களும் 2015 பெப்­ர­வரி 27 ஆம் திக­தி­ செய்­யப்­பட்­ட ­த­ர­வு­களும் முழு­மை­யா­க­மாற்­றி­ய­மைத்தோம். 

கேள்வி: விலை­ம­னுக்­கோரல் சபைக்­கு­ எந்­த­ ஆ­வ­ணத்­தை­ கொண்­டு­சென்­றீர்கள்?

பதில்: ஆளு­னரின் உத்­த­ர­வின்­ப­டி­ த­யா­ரிக்­கப்­பட்ட இரண்­டா­வ­து­ அ­றிக்­கை­யைத்தான் கொண்­டு­சென்றோம். அதன்­பின்னர் மத்­தி­ய­வங்­கியின் பிர­தா­னி­க­ளுக்­கி­டையில் முக்­கி­ய­சந்­திப்­பொன்­று­மத்­தி­ய­வங்­கியின் 25 ஆவ­து­மா­டியில் ஏற்­பா­டு­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி: அதில் யார் கலந்­துக்­கொண்­டார்கள்?

பதில்: அன்­று­ ஆ­ளுனர் இருக்­கின்­றா­ரா­ எ­ன­பார்ப்­ப­தற்­கு­பி­ர­தி­ அத்­தி­யட்­சகர் ஒருவர் உத்­த­ர­விட்டார். ஆனாலும் ஆளுனர் அங்கு இல்­லா­மையால் நாம் கூட்­டத்­தை­ ஆ­ரம்­பித்­தி­ருந்தோம்.

கேள்வி: அந்த கூட்­டத்தில் என்­னென்­ன­வி­ட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னீர்கள்?

பதில்: நான் ஏற்­க­னவே கூறி­ய­தன்­படி 2.6 பில்­லியன் ஏலத்தின் தொகையை 10 பில்­லி­ய­னுக்­கு­மாற்ற கூடாது என்ற நிலைப்பாட்டில் அனைவரும் இருந்தமையால் அதனை மத்திய வங்கிஆளுனருக்குதெரிவிக்கவேண்டும் என்பதுதொடர்பிலும் இல்லாவிட்டால் விலைமனுக்கோரல் சபைக்கு இது தொடர்பில் அறிவிக்கவேண்டும் என்பதுதொடர்பில் கலந்துரையாடினோம்.

கேள்வி: அந்தஅறையில் குரலைபதிவுசெய்வதற்கானவசதிகள் உண்டா?

பதில்:இல்லை

கேள்வி: பின்னர் என்னநடந்தது?

பதில்: கூட்டத்தின்போதுமத்தியவங்கியின் துயைஆளுனர் ரட்னாயக்கமுன்னாள் மத்தியவங்கிஆளுனர் அர்ஜூன மகேந்த்திரனிடம் கதைப்பதாக கூறிஅறையிலிருந்துவௌியேசென்றார்.

கேள்வி: மீண்டும் திரும்பவும் எவ்வளவுநேரத்துக்குபின்னர் அவ்வறைக்கு அவர் வந்தார்.

பதில்: 45 நிமிடங்களுக்குமேலாவதுசென்றிருக்கும்.

கேள்வி: எப்படி மத்தியவங்கி ஆளுனரோடு கதைத்தார்?

பதில்: தொலைபேசியில்.

கேள்வி: பின்னர் அவர் வந்தபின்னர் என்ன கூறினார்?

பதில்: நாம் மத்தியவங்கியின் ஆளுனரின் தீர்மானத்தைமாற்றிசெயற்படமுடியாது. எனவேஅவரின் ஆலோசனைக்கமைய 10 பில்லியனுக்குமேற்பட்டநிதிகையாளுகையேபொருத்தமானது எனதீர்மானிக்கப்பட்டது.

கேள்வி:இதற்குமுன்னர் பிணைமுறிதொடர்பில் ஏற்படுத்தப்பட்டபாராளுமன்றவிசாரணைகளில் கலந்துக்கொண்டீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: அவ்வறிக்கையில் ஏலம் நடந்தபெப்ரவரி மாதத்தின் இறுதி வௌ்ளிக்கிழமை அன்று பெறப்பட்ட 10 பில்லியனுக்கு மேற்பட்டநிதியைதிரும்ப மீள் நிரப்ப 7.2 பில்லியன் நிதிநேரடிமுதலீட்டாளர்களினால் பெறப்பட்டது. அந்நிதியை அடுத்ததிங்கட்கிழமைக்குள் செலுத்தப்படாமைக்கான சான்றுகள் தொடர்பில் ஏன் கருத்துதெரிவிக்கவில்லை?

பதில்: நான் இது தொடர்பில் தௌிவாக கருத்துதெரிவித்துவிட்டேன். ஆனால் என்னால் சுனில் ஹந்துனெத்தி தலைமையிலான குழுவின் விசாரணையை பொதுமைப்படுத்தி கூற முடியாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.