Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானது!

Featured Replies

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு –

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.

இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும்.

வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதி தொடர்பாக கடப்பாடுகளை கால வரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.

அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.

உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைக்க வேண்டும்.

சித்திரவதை, பாலியல் வன்முறைக, ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும்,

மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.

http://www.tamilwin.com/politics/01/137591?ref=recommended6

வெளியானது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – சிறிலங்காவுக்கான பரிந்துரைகள்

 

zeid-colombo-press (1)

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில்  சற்று முன்னர் வெளியாகியுள்ளது.  2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்காவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு –

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு  விடுக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும். வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய,  நிலைமாறுகால நீதி தொடர்பாக கடப்பாடுகளை காலவரம்புடன்  நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை  வகுக்க வேண்டும்.  அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள்  மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.

உண்மை, நீதி,  இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும். சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு  சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கு அழைக்க வேண்டும்.

சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான  எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று  இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.

முழு அளவிலான ஆய்வு செயல்முறையை உருவாக்கி , மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க வேண்டும். பொறுப்புக்கூறலை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறையில் ஏனைய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படு்த வேண்டும். ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க விண்ணப்பிக்கும் படைப்பிரிவுகள், மற்றும் தனிநபர்கள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2016 ஏப்ரல் மே மாத காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர், சுதந்திரமான நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் சமர்ப்பித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அனைத்துலக தர நியமங்களுக்கு எற்ப பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

ஜெனிவா பிரகடனங்கள், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த றோம் பிரகடனம் ஆகியவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட கட்டளை அல்லது பொறுப்பான உயர்நிலையினர் எந்த தடைகளும் இல்லாமல் பொறுப்புக் கூறத்தக்க வகையில், போர்க்குற்றங்கள்,  மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள், இனப்படுகொலை, மற்றும் காணாமலாக்கப்படுவதுதொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைச் சட்ட மற்றும் அனைத்துலக மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதன் பொறுப்பை திறம்பட செயற்படுத்துவதற்குத் தேவையான வளங்களை வழங்க வேண்டும்.

மரபணுப் பரிசோதனை, தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை உறுதிப்படுத்தியதாக, காவல்துறை மற்றும் நீதித்துறையின் தடயவியல் திறனை வலுப்படுத்த வேண்டும்.

சிறந்த அனைத்துலக நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளும் மீளாய்வு செய்யப்பட்டு, அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

போதிய வளங்கள் மற்றும் ஆணையை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் கூடிய உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை வடிவமைத்து, உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவை வலுப்படுத்தும் வகையில், தேசிய இழப்பீட்டுக் கொள்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விருத்தி செய்ய வேண்டும்.

http://www.puthinappalakai.net/2017/03/03/news/21735

  • தொடங்கியவர்

சிறிலங்காவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்- ஐ.நா, உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரை

zeid-colombo

 

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், ஐ.நாவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பேரவைக்கு அறிக்கை  சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கையின் முதல்நிலைப் பிரதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறிலங்கா அரசுக்கான பரிந்துரைகள், ஐ.நா முறைமைக்கான பரிந்துரைகள், உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகள் என்று தனித்தனியாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில், ஐ.நாவுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில்,

நிலைமாறுகால நீதி பொறிமுறைகளை அபிவிருத்தி செய்வதற்கு, தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை சிறிலங்காவுக்கு வழங்க வேண்டும். அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, நிலைமாறு கால நீதி தொடர்பான ஆதரவை தொடர்ந்து ஒருக்கிணைக்க வேண்டும்.

சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அமைதிகாப்பு, இராணுவ பரிமாற்றங்கள், மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, கடுமையான ஆய்வு செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உறுப்பு நாடுகளுக்கான முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில்,

சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்புகளை பேணுவதுடன், நாட்டின் முன்னேற்றங்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும்.

சித்திரவதை,  காணாமலாக்குதல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்  போன்ற மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்கள், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், உலகளாவிய அதிகார வரம்புக்குட்பட்ட வகையில். விசாரிக்கப்பட்டு, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் வகையில், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்க முறைமைகளை உருவாக்கும் சிறிலங்கா மக்களின் முயற்சிகளுடன், தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/03/03/news/21750

  • தொடங்கியவர்

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Zeid Raad Al Hussein

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், அக்கறை காண்பிக்கப்படவில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும், மார்ச் 22ஆம் நாள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக தயாரித்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்  நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில்  இடம்பெறுகின்றன.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறைகளோ அல்லது சமாதான செயற்பாடுகளுக்கான உறுதியான நிலை ஏற்படுவதற்கான வேகமான சாத்தியங்களோ  தென்படவில்லை.

சிறிலங்காவில் மனித உரிமைகள் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த விவகாரங்களில் சாதகமான முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கக்கூடியது. புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், போரில் மீண்டோருக்கான நல்லிணக்க செயற்பாடுகள், இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீளளித்தல், காணாமல் போனோருக்கான தனியான ஆணையம் அமைத்தல் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் போர்க்குற்றம் குறித்த உண்மையை நிலைநாட்டுவது போன்ற செயற்பாடுகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படுகிறது. இன முறுகலுக்கான நீண்டகால சமாதான செயற்பாடுகள் வகுக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு 17 மாதங்களுக்கு முன்னர்  முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை. போர்க்குற்ற விசாரணைகளை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை காண முடியவில்லை.

போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளில் சிறிலங்காவின் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. சிறிலங்கா வகுத்ததாக கூறப்படும் திட்டங்கள் முழுமைப்படாத நிலையை உணர்த்துகிறது.

ஒழுங்குப்படுத்தப்பட்ட நல்லிணக்க ஏற்பாடுகள் மற்றும் உண்மையை நிலைநாட்டுவதற்கான உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாத நிலையில் இதுவரை காலமும் பெற்றுக்கொண்ட வெற்றிகள் வீண்விரயமாகி விடும்” என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2017/03/04/news/21757

  • தொடங்கியவர்

இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

HRW

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவில் நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு வாக்குறுதிகள் உண்மையாவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர், சிறிலங்கா அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரையில் அனைத்துலக கண்காணிப்பு தொடருவதை உறுதிப்படுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், உறுதியான- காத்திரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/03/04/news/21759

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.