Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனத்தில் கொள்ளப்படாத பொறுப்புக்கூறல் கடப்பாடு

Featured Replies

கவனத்தில் கொள்ளப்படாத பொறுப்புக்கூறல் கடப்பாடு

kamalinimukherjeeactressstills115-224e3f7fb1cedcf76a213e4b014719e30a8ab59a.jpg

 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது அமர்வில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­றிய போது, பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என்­பது பற்றி எந்தத் தக­வ­லை­யுமே வெளி­யி­ட­வில்லை.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நிறை­வேற்­றப்­பட்ட அத்­தனை தீர்­மா­னங்­க­ளிலும், பிர­தான அம்சம் பொறுப்­புக்­கூறல் தான். ஆனாலும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் எத்­த­கைய முன்­னேற்­றத்தை எட்­டி­யுள்­ளது என்ற விளக்­கத்தை வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கொடுக்கத் தவ­றி­யுள்ளார். 

ஜெனீவா தீர்­மா­னத்தை நிறை­வேற்றும் அர்ப்­ப­ணிப்­புடன் அர­சாங்கம் இருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருந்­தாலும், எத்­த­கைய பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி, இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­போ­கி­றது என்ற கேள்­விக்கு எந்தப் பதி­லையும் அவர் அளித்­தி­ருக்­க­வில்லை.

தனியே உண்மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு பற்­றிய ஒர் பந்தி மாத்­திரம் அவ­ரது அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. உண்மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு என்­பது பொறுப்­புக்­கூ­றலின் ஒர் அங்­கமே தவிர, அதுவே இறு­தி­யான தீர்­வாக இருக்க முடி­யாது.

அதே­வேளை, அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட முக்­கி­ய­மான ஒரு நட­வ­டிக்­கை­யாக, நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்­கையை அவர் ஜெனீ­வாவில் நிகழ்த்­திய உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நாடெங்கும் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்கள், பொது­மக்­களின் சாட்­சி­யங்கள் மற்றும் 7000இற்கும் மேற்­பட்ட எழுத்து மூல சமர்ப்­பிப்­பு­களின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட இந்த அறிக்­கையை, ஜெனீவா அழுத்­தங்­களில் இருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­கான ஒரு கரு­வி­யாக அர­சாங்கம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதனை ஒரு வெற்­றி­க­ர­மான செயற்­பா­டாக அர­சாங்கம் முன்­மொ­ழிந்­தி­ருக்­கி­றது. உண்­மையைக் கண்­ட­றிதல், இழப்­பீடு வழங்­குதல், நீதி மற்றும் நல்­லி­ணக்க செயல்­மு­றைக்­கான பொருத்­த­மான பொறி­மு­றை­களை வடி­வ­மைக்கும் வகையில் இந்த அறிக்கை தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் மங்­கள சம­ர­வீர குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இது­த­விர, பொறுப்­புக்­கூறல் பற்­றிய எந்தக் கருத்­தையும் அவ­ரது உரையில் காண முடி­ய­வில்லை. நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­காக கலந்­தா­லோ­சனை செய­ல­ணியின் அறிக்­கை­யா­னது, கலப்பு விசா­ரணைப் பொறி­முறை ஒன்­றுக்­கான பரிந்­து­ரை­யுடன் கூடி­யது. 

நல்­லி­ணக்கப் பொறி­முறை எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை அது பிர­தி­ப­லித்­தி­ருந்­தது. இலங்­கையில் உள்­நாட்டு மட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட- ஒப்­பீட்­ட­ளவில் அதிகம் சுதந்­தி­ர­மான, மக்கள் கருத்தை அறியும் செயற்­பா­டாக இதனைக் குறிப்­பி­டலாம்.

இந்த செய­ல­ணியின் பெரும்­பா­லான பரிந்­து­ரை­களும், கருத்­துக்­களும் பல்­வேறு மட்­டங்­க­ளிலும் வர­வேற்பைப் பெற்­றி­ருப்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது. உள்­ளகப் பொறி­முறை ஒன்று சுதந்­தி­ர­மா­கவும் நம்­ப­க­மா­கவும் செயற்­பட முடியும் என்று உதா­ரணம் காட்­டக்­கூ­டிய அள­வுக்கு இந்தச் செய­ல­ணியின் அறிக்கை இருந்­தது. இதனை இந்தச் செய­ல­ணியின் வெற்றி என்று குறிப்­பி­டலாம்.  

ஆனால், இதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் இது­வ­ரையில் நட­வ­டிக்கை எடுக்­கா­த­மையை, உள்­ளக பொறி­முறை எத்­த­னங்­க­ளுக்­கான தோல்­வி­யாகத் தான் பார்க்க வேண்டும். நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்­கையை, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்ட, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச நிபு­ணர்­களைக் கொண்ட குழுவும், கூட வர­வேற்­றி­ருக்­கி­றது. 

கடந்­த­வாரம் மங்­கள சம­ர­வீர ஜெனீ­வாவில் உரை­யாற்­றிய பின்னர் இலங்­கையின் பொறுப்­புக்­கூ­றலைக் கண்­கா­ணிக்கும் நிபுணர் குழு, தமது அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தது. கடந்த 2015ஆம் ஆண்டு, 30/1 தீர்­மானம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்தத் தீர்­மா­னத்தை இலங்கை எந்­த­ள­வுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றது என்று கண்­கா­ணிப்­ப­தற்­காக இந்த நிபுணர் குழு அமைக்­கப்­பட்­டது. 

“இறுதி அறிக்­கையை வெளி­யிட்­டுள்ள கலந்­தா­லோ­சனை செய­ல­ணியை, அதன் எல்லாப் பரிந்­து­ரை­க­ளையும் ஒப்­புக்­கொள்­ளா­ம­லேயே பாராட்­டு­வ­தாக” இந்தக் குழுவின் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. அத்­துடன் “கலந்­தா­லோ­சனை செய­ல­ணியின் இறுதி அறிக்­கையை நீதிக்­கான ஒத்­தி­சைந்த முழு­நி­றை­வான வழித்­த­ட­மாக ஏற்­கும்­ப­டியும், அதி­ல­டங்­கிய பல்­வேறு பரிந்­து­ரை­க­ளையும் உண்­மை­யா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் கருதிப் பார்க்க முற்­படும் படியும், இலங்கை அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­வ­தா­கவும் இதில் கூறப்­பட்­டுள்­ளது. 

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றை­யையே, நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான கலந்­தா­லோ­சனை செய­லணி தமது பரிந்­து­ரை­யாக முன்­வைத்­தி­ருந்­தது. ஆனால், அதனை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாது என்று அமைச்­சர்கள் பலரும் கூறி­யி­ருந்­தமை பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  

இலங்கை அர­சாங்­கமே அமைத்த நல்­லி­ணக்கப் பொறி­மு­றைகள் தொடர்­பான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் இறுதி அறிக்கை குறித்து அர­சாங்­கத்தின் ஆரம்ப எதிர்­வி­னையே, மக்கள் எடுத்­து­ரைத்த விருப்­பங்­களை அலட்­சி­ய­மா­கவும் கண்­மூ­டித்­த­ன­மா­கவும் மறு­த­லிப்­ப­தாக உள்­ளது என்று சுதந்­தி­ர­மான நிபு­ணர்கள் குழு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

அமைச்­சர்கள் மாத்­தி­ர­மன்றி, அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்­டுள்ள, தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்கப் பணி­ய­கத்தின் தலை­வ­ராக உள்ள முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவும் கூட, அந்தப் பரிந்­துரை குறித்து விசனம் வெளி­யிட்­டி­ருந்தார்.

கலந்­தா­லோ­சனைச் செய­லணி தமது ஆணையை மீறி செயற்­பட்டு விட்­ட­தா­கவும், அவர்­க­ளுக்கு மக்­களின் கருத்­துக்­களை அறியும் ஆணையே வழங்­கப்­பட்­ட­தா­கவும், அவர்கள் அதற்கு அப்பால் சென்று தமது கருத்­துக்­க­ளையும் முன்­வைத்­தி­ருப்­ப­தா­கவும் சந்­தி­ரிகா குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அதை­விட, கலந்­தா­லோ­சனை செய­ல­ணியின் எல்லா பரிந்­து­ரை­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்று, நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் விட­யத்தில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் எதனைக் கூறி­யதோ அது­போ­லவே சந்­தி­ரி­காவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் அமைத்த சுதந்­தி­ர­மான நிபு­ணர்­களைக் கொண்ட கண்­கா­ணிப்பு குழுவின் அறிக்­கை­யிலும் கூட, கலப்பு விசா­ர­ணைக்­கான பரிந்­து­ரையே முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்க விடயம். இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் குறித்து, நியா­ய­மான உள்­நாட்டு விசா­ரணை நடத்­தப்­பட வாய்ப்­பில்லை என்­பதே தமிழர் தரப்பின் ஒரு­மித்த நிலைப்­பாடு. அதனால் தான் சர்­வ­தேச விசா­ரணை என்ற கோரிக்கை வலுப்­பெற்­றது. சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை, 2009ஆம் ஆண்டு தொடக்கம் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. நாடு கடத்த தமி­ழீழ அரசும் அதே நிலைப்­பாட்டில் தான் இருந்­தது. எனினும், 2015ஆம் ஆண்டு கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை முன்­மொ­ழிந்த பின்னர், சர்­வ­தேச விசா­ரணைக் கோரிக்கை வலு­வி­ழந்­துள்­ளது அல்­லது வலு­வி­ழக்கச் செய்­யப்­பட்­டுள்­ளது. கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ளா­வி­டினும், நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் நிய­மித்த, சர்­வ­தேச நிபு­ணர்­களைக் கொண்ட கண்­கா­ணிப்­புக்­குழு கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றை­யையே உரு­வாக்கும் படி கோரி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச நீதி­ப­தி­களும் வழக்­குத்­தொ­டு­னர்­களும் பங்­கேற்கும் கலப்புப் போர்க்­குற்ற நீதி­மன்­றத்தை அமைப்­ப­தற்­கான பொருள்­பொ­திந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி பொறுப்­புக்­கூறல் கண்­கா­ணிப்புக் குழு அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­கி­றது என்று அதன் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

எனினும், இந்தக் கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் பரிந்­து­ரை­களை அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு நடை­மு­றைப்­ப­டுத்தப் போகி­றது என்ற கேள்­விக்­கான விடை இன்­னமும் அர­சாங்­கத்­திடம் இருந்து கிடைக்­க­வில்லை.ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்தக் கேள்­விக்­கான பதிலை அளிப்பார் என்றே எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும், அவர் வெறும் அறி­மு­கத்­துடன் முடித்துக் கொண்­டி­ருக்­கிறார்.

எனினும், கடந்த மார்ச் 1ஆம் திகதி ஜெனீ­வாவில் இலங்கை அர­சாங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட உப மாநாடு ஒன்றில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்த மங்­கள சம­ர­வீர, பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நீதிப் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கு­வ­தற்­கான சட்­டங்­களை அர­சாங்கம் இயற்­ற­வில்லை என்று பதி­ல­ளித்­தி­ருந்தார்.

அதே­வேளை, வெளி­நாட்டு நீதி­ப­திகள் பங்­கேற்­றாலும் சரி, பங்­கேற்­கா­வி­டினும் சரி, நீதிப்­பொறி முறை நம்­ப­க­மா­ன­தாக இருக்கும் என்றும் அவர் கூறி­யுள்ளார். இங்கு கூட, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய எந்தத் தெளிவான கருத்தையும் கூற முடியவில்லை. 

கலந்தாலோசனை செயலணியின் அறிக்கை ஒன்றும் பைபிள் கிடை யாது, அதனை முழுமையாக நடை முறைப் படுத்துவதற்கு என்ற அமைச் சர்களின் கருத்துக்களுக்கு மத்தியில், அந்த அறிக் கையை அரசாங்கம் எந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்து பொறுப்புக் கூறலுக்கான கருவியாகப் பயன்படுத்தப் போகிறது என்ற சந்தேகம் இருக்கிறது.

எவ்வாறாயினும், பொறுப்புக் கூற லுக்கான பொறிமுறை பற்றிய எந்த முன்மொழிவையும் அரசாங்கம் ஜெனீவா வில் முன்வைக்காவிடினும், கலந்தா லோசனை செயலணியின் அறிக் கையை ஒரு தப்பிக்கும் உத்தியாகவே பயன்படுத்தியிருந்தாலும், அதுவே எதிர்காலத்தில் ஒரு பொறியாக மாறலாம்.

உள்ளகப் பொறிமுறையை மாத்திரமே வலியுறுத்தும் அரசாங்கம், அத்தகைய உள்ளகப் பொறிமுறை ஒன்றின் பரிந்துரை யைக் கூட செயற்படுத்த முடியாது என்று அறிவிக்குமேயானால், அதனை சர்வதேச சமூகம் உள்ளகப் பொறிமுறைகளின் தோல்வியின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கும். அத்தகையதொரு நிலையை உருவாக்கத்தான் அரசாங்கம் இப்போது முயற்சிக்கிறதா?

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.