Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள்

Featured Replies

பாதிக்கப்பட்டோரின் நீதிக்கான ஏக்கத்தை புரிந்துகொள்ளாத நகர்வுகள்

 

ரொபட் அன்­டனி

அர­சாங்கம் நல்­லி­ணக்க விட­யத்தில் அவ­ச­ர­மாக முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­ட­வேண்டும். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்கம் இருந்து அர­சாங்கம் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்தி அடை­யாத நல்­லி­ணக்க பொறி­மு­றையில் அர்த்­த­மில்லை என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அந்­த­வ­கையில் செய்ட் அல் ஹுசைன் அறிக்கை குறித்து அர­சாங்கம் ஆழ­மான முறையில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்

அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான எழுத்­து­மூல அறிக்கை கடந்­த­வாரம் வெளிவந்­தது. இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்கும் வகை­யிலும் இலங்­கைக்கு சாத­க­மா­க­வுமே அல் ஹுசைன் அறிக்கை அமையும் என்று தெரி­விக்­கப்­பட்டு வந்த போதிலும் அறிக்­கை­யா­னது குறிப்­பி­டத்­தக்க வகையில் பார­தூர­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.  

அதா­வது 2014 ஆம் ஆண்டு இலங்கை குறித்த விசா­ர­ணையை நடத்­தி­விட்டு செய்ட் அல் ஹுசைன் வெளியிட்ட அறிக்­கைக்கு சமாந்­தி­ர­மா­கவும் அதி­லி­ருந்து சற்றும் குறை­யாத வகை­யி­லு­மான அறிக்­கையே இம்­முறை வெளிவந்­துள்­ளது. அந்­த­வ­கையில் முதலில் அல் ஹுசைன் அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்ள முக்­கிய அம்­சங்­களை பார்ப்போம்.

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகத் கூறப்­படும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் ஊடாக சர்­வ­தேச நீதி­ப­திகள், விசா­ர­ணை­யாளர், வழக்­கு­ரை­ஞர்­களை உள்­ளீர்த்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். அதற்கு ஏற்­ற­வாறு சட்­ட­மூ­லங்­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்டும். நல்­லி­ணக்க செய­லணி முன்­வைத்த நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்­கான பரிந்­து­ரை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்று அல் ஹுசைன் பரிந்­துரை செய்­தி­ருக்­கின்றார்.

மேலும் "2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக கால அட்­ட­வ­ணையின் அடிப்­ப­டை­யி­லான பரந்­து­பட்ட திட்­ட­மொன்றை முன்­வைக்­க­வேண்டும். இலங்கை மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான அவ­சியம் தொடர்பில் அர­சாங்கம் பிர­சா­ர­மொன்றை முன்­னெ­டுக்­க­வேண்டும். கால அட்­ட­வ­ணைக்கு ஏற்­ப இந்த பிர­சார செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

அது­மட்­டு­மின்றி நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள், சிவில் சமூக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட அனைத்துத் துறை­யி­ன­ரு­டனும் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் அலு­வ­லகம் ஒன்றை இலங்­கையில் அமைத்து மனித உரிமை நிலை­மை­களை கண்­கா­ணிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் வழி­செய்­ய­வேண்டும். அது­மட்­டு­மன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்­கைக்கு பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­க­வேண்டும்.

உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி­வ­ழங்­குதல்,நட்­ட­ஈடு வழங்­குதல், மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­யவை தொடர்­பான ஐ.நா. விசேட நிபு­ணர்­களை இலங்கை அழைக்­க­வேண்டும். தொடர்­பு­பட்ட அனைத்து ஐ.நா. விசேட நிபு­ணர்­க­ளையும் ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிர­தி­நி­தி­க­ளையும் இலங்கை அர­சாங்கம் அழைக்­க­வேண்டும்.

காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக இயங்க செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்றை உட­ன­டி­யாக உரு­வாக்க வேண்டும். அர­சாங்கம் தேசிய நட்­ட­ஈடு வழங்கும் கொள்கைத் திட்டம் ஒன்றை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்டும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்­கையின் பொறுப்புக் கூறல் பொறி­மு­றைக்கு நிதி­யு­தவி வழங்க வேண்டும்"

இவ்­வாறு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி. 21 பக்க நீண்ட அறிக்­கையை வெ ளியிட்­டி­ருந்தார். செய்ட் அல் ஹுசைன் அறிக்கை தொடர்பில் பல்­வேறு ஊகங்கள் வெ ளியி­டப்­பட்டு வந்­தன. ஆனால் அவை எல்­லா­வற்­றையும் தவி­டு­பொ­டி­யாக்கி தனது ஓர­ளவு கார­சா­ர­மான அறிக்­கையை ஹுசைன் வெ ளியிட்­டி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் பத­வியில் இருக்­கின்­றவர் எவ்­வா­றான அறிக்­கை­யையும் நாடுகள் தொடர்பில் வெளி­யி­டலாம். எனினும் அதனை சம்­பந்­தப்­பட்ட நாடு ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற அவ­சியம் இல்லை. இந்த விட­யத்தை பிரதி வெ ளிவி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி. சில்­வாவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆனால் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையை பின்­பற்றி தொடர்ச்­சி­யாக மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­படும் பிரே­ர­ணையில் உள்ள விட­யங்­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்­து­வரும் செயற்­பா­டு­களில் திருப்தி இல்லை என்றும் கவ­லைக்­கு­ரிய தாமதம் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் நில­வு­வ­தா­கவும் செய்ட் அல் ஹுசைன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அந்­த­வ­கையில் தற்­போ­தைய நிலை­மையில் இலங்கை தொடர்பில் பிரே­ர­ணையை தயா­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் பிரிட்டன் மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு அல் ஹுசைன் விட­யங்­களை எடுத்­துக்­கூ­றி­யுள்ளார் என்று கூறலாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் கொண்டு வந்து நிறை­வேற்­றின. அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் யாரும் எதிர்­பார்க்­காத வகையில் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதில் பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்கம் தொடர்­பாக பல்­வேறு விட­யங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளைக்­கொண்டு விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என அதில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அந்­த­வ­கையில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்­போது பிரே­ர­ணையை முழு­மை­யாக அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். ஆனால் அவ்­வாறு நடக்­கா­ததன் கார­ண­மா­கவே தற்­போது மேலும் கால அவ­கா­சத்தை கோரி­யுள்­ளது. அந்­த­வ­கையில் 24 மாத கால, கால அவ­காசம் இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் ஒரு­சில விட­யங்கள் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. குறிப்­பாக காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அதில் தற்­போது திருத்தம் செய்­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டுள்­ளமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. எதிர்­வரும் ஏப்ரல் மாதம் அதில் திருத்தம் செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் காணாமல் போனோர் குறித்த சர்­வ­தேச சாச­னத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்­திட்­டது. இது­வொரு முக்­கிய கட்­ட­மாக பார்க்­கப்­பட்­டது. தொடர்ந்து நல்­லி­ணக்க பொறி­முறை எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம் குறித்தும் மக்­களின் கருத்­துக்­களை அறியும் நோக்கில் நல்­லி­ணக்க செய­லணி நிய­மிக்­கப்­பட்­டது.

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பாக ஆராயும் நல்­லி­ணக்க செய­ல­ணி­யா­னது மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் நடத்­தி­விட்டு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது. அந்தப் பரிந்­து­ரை­களில் கலப்பு நீதி­மன்ற பொறி­முறை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அதனை அர­சாங்கம் நிரா­க­ரித்­து­விட்­டது. அந்­த­வ­கையில் நல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்கை குறித்து தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­வ­துடன் விரைவில் அர­சாங்கம் அது­தொ­டர்பில் தமது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வி­ருக்­கி­றது.

மேலும் 2016 ஆம் ஆண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. அந்த நிர்­ணய சபை­யா­னது பிர­தான வழி­ந­டத்தல் குழுவை நிய­மித்­த­துடன் அதன்கீழ் ஆறு உப­கு­ழுக்­களும் நிறு­வப்­பட்­டன. தொடர்ந்து பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது அர­சியல் தீர்வு, தேர்தல் முறை­மாற்றம், ஜனா­தி­பதி முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து வந்­துள்ள நிலையில் ஏனைய ஆறு உப நிறை­வேற்­றுக்­கு­ழுக்­களும் ஏனைய விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்­கையை முன்­வைத்­துள்­ளன.

எனினும் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது முக்­கிய மூன்று விட­யங்கள் தொடர்பில் இது­வரை எந்­த­வி­மான முடி­வுக்கும் வர­வில்லை. இவ்­வா­றான இழு­பறி நிலை­யி­லேயே நாட்டின் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன.

விசே­ட­மாக அர­சாங்கம் நான்கு கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்கு பிர­வே­சிக்க விரும்­பு­கி­றது. அதா­வது உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் போன்ற நான்கு அம்­சங்­களின் அடிப்­ப­டையில் அர­சாங்கம் இதனை முன்­னெ­டுக்­கின்­றது.

அதில் உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டின் கீழேயே காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் இதன் கீழ் உண்­மையைக்­கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்றும் அமைக்­கப்­படும் என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது.

அடுத்­த­தாக நீதியை நிலை­நாட்டும் பிரிவின் கீழேயே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் விசா­ரணைப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இது தொடர்பில் அர­சாங்கம் இது­வரை இறுதி முடிவு எடுக்­காமல் உள்­ளது. இந்த நீதியை நிலை­நாட்டும் விட­ய­தா­னத்தின் கீழேயே சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்த பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அர­சாங்கம் சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்த பரிந்­து­ரையை நிரா­க­ரித்­துள்­ளது.

மூன்­றா­வ­தாக நட்­ட­ஈடு வழங்கும் பிரிவின் கீழ் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு தொடர்பில் அர­சாங்கம் விரைவில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக நட்­ட­ஈடு வழங்­கு­வது குறித்த இறுதி அலு­வ­லகம் அமைக்­கப்­படுவதற்கு முன்னர் தற்­கா­லிக அலு­வ­ல­கத்தை அமைத்து பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

நான்­கா­வ­தாக மீள் நிக­ழாமை என்ற பிரிவின் கீழேயே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் இடம்­பெ­று­கின்­றது. அதா­வது மீண்டும் இவ்­வா­றான மோதல்கள் இடம்­பெ­றாமல் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கும்­வ­கை­யி­லான ஏற்­பா­டு­க­ளுடன் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் அர­சாங்கம் ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் குறிப்­பி­டத்­தக்க ஒரு­சில நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்­துள்­ளது என்­ப­தனை ஏற்­க­வேண்டும். ஆனால் அவை எந்­த­வ­கை­யிலும் போது­மா­ன­தாக அமை­ய­வில்லை.

அத­னா­லேயே செய்ட் அல் ஹுசைன் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க அர­சாங்கம் போது­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யென்றும் இந்த செயற்­பாட்டில் கவ­லைக்­கு­ரிய தாமதம் நில­வு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். எனவே அர­சாங்கம் விரைந்து இந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

விசே­ட­மாக நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் விரைந்து நிறு­வப்­ப­ட­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­ச­ர­மான தேவை­யாக உள்­ளது. அத்­துடன் உண்­மையைக் கண்­ட­றியும் பிரிவின் கீழ் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பான உண்மை விரைவில் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும்.

இந்த விட­யத்தில் அர­சாங்கம் பாரிய தாமத நிலையை பின்­பற்­று­கி­றது. காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்தக் கோரி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தில் தொடர்ந்தும் தாம­தித்­துக்­கொண்­டி­ருக்­காமல் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து தீர்வை வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அடுத்­த­தாக நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் விரைந்து ஒரு முடி­வுக்கு வர­வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் வெளி­யிட்ட அறிக்­கை­யிலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்கை தொடர்­பாக 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­யிலும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நல்­லி­ணக்க பொறி­மு­றையை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பதை ஆராய்ந்த நல்­லி­ணக்க செய­ல­ணியும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பொறி­மு­றையை முன்­வைத்­தி­ருக்­கி­றது. எனவே அர­சாங்கம் இந்­த­வி­ட­யத்தில் விரைந்து ஒரு முடி­வுக்கு வர­வேண்டும்.

அந்த முடிவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜெனி­வா­விற்கு அறி­விக்­க­வேண்டும். எந்­த­வ­கை­யிலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என ஜனா­தி­ப­தியும் பிரதமரும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அப்படி பார்க்கும்போது சர்வதே நீதிபதிகள் என்ற விடயமானது சாத்தியமற்றதாகவே தெரிகின்றது. ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இருந்து சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.

நம்பகரமான நீதிப்பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற காரணத்திற்காகவே பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச நீதிபதிகளை கோருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கை குறித்து சிந்திக்கவேண்டும். மேலும் இந்த விடயத்தில் தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் விரைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

தொடர்ந்து பொறுப்புக்கூறல் முறையில் முக்கிய அம்சமாக மீள் நிகழாமையின் கீழ் புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகூடிய அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வை வழங்கவேண்டியது அவசியமாகும். இந்த விடயத்திலும் தமிழ் மக்களின் கோரிக்கையை தாண்டி அரசாங்கம் அடம்பிடித்துக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. இதன் மூலம் பிரச்சினைகள் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனவே தவிர அவை தீர்க்கப்படும் சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது.

எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவசரமாக முன்னேற்றங்களை வெளிக்காட்டவேண்டும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் இருந்து அரசாங்கம் செயற்படவேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி அடையாத நல்லிணக்க பொறிமுறையில் அர்த்தமில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை குறித்து அரசாங்கம் ஆழமான முறையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-11#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.