Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம் அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு

Featured Replies

இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம் அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு

02-27-2017-715076-39aac8b18b904eb0880739f052a425666aa9ec00.jpg

 

னீ­வாவில் தற்­போது நடந்து கொண்­டி­ருக்கும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான தீர்­மா­னங்­களை சமர்ப்­பிப்­ப­தற்­கான காலக்­கெடு எதிர்­வரும் மார்ச் 16ஆம் திக­தி­யுடன் முடி­யப்­போ­கி­றது.

இந்தக் காலக்­கெ­டு­வுக்குள் இலங்கை தொடர்­பான மற்­றொரு தீர்­மான வரைவை பேர­வையில் சமர்ப்­பிப்­ப­தற்­கான தீவிர முயற்­சிகள் ஜெனீ­வாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

2012ஆம் ஆண்டு, முதல்­மு­றை­யாக இலங்கை தொடர்­பான தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டு, விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போதும் சரி, அதற்குப் பின்னர், 2013, 2014, 2015ஆம் ஆண்­டுகள் வரையில், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் அனைத்தின் போதும், ஆரம்­பத்தில் முன்­வைக்­கப்­பட்ட வரை­வு­களை விடவும் காத்­திரம் குறைந்த தீர்­மா­னங்­களே பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டமை வர­லாறு.

தீர்­மான வரைவு வாச­கங்­களை நீர்த்துப் போகச் செய்­வதில்- இந்­தியா போன்ற நாடு­களின் பங்கு கணி­ச­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

கடந்த காலங்­களை விடவும் இம்­முறை முன்­வைக்­கப்­பட்­டுள்ள தீர்­மான வரைவு மிகச் சிறி­ய­தா­கவும், பெரி­ய­ளவில் அழுத்­தங்­களைக் கொடுக்­கா­த­தா­கவும் அமைந்­தி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது.

வரும் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது, தீர்­மான வரைவு ஒன்று முன்­வைக்­கப்­பட்டு, நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது.

இறு­தி­யாக முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்­கான தீர்­மான வரைவு இன்­னமும் தயா­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­ப­டாத போதிலும், ஆரம்­பக்­கட்ட வரைவு ஒன்றை முன்­னி­றுத்­திய கலந்­து­ரை­யா­டல்கள் ஜெனீ­வாவில் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மார்ச், 7ஆம் திகதி, இணை அனு­ச­ரணை நாடு­களின் ஏற்­பாட்டில் ஜெனீ­வாவில் நடத்­தப்­பட்ட ஓர் உப மாநாட்டில், இந்த தீர்­மான வரைவு வெளி­யி­டப்­பட்­ட­தா­யினும், அதற்கு முன்­பாக, கடந்த மார்ச் 3ஆம் திக­தியே இந்த வரைவின் பிரதி கசிந்து விட்­டது.

இந்த ஆரம்ப வரைவு, ஒன்­றரைப் பக்­கங்­களை விடக் குறை­வா­னது. 30/1தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்த எடுக்­கப்­பட்­டுள்ள முயற்­சி­களை இது வர­வேற்­கி­றது, பாராட்­டு­கி­றது. அதை­விட, இன்னும் நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பா­டுகள் இருப்­பதை நினை­வூட்­டு­கி­றது. அத்­துடன், 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சுக்கு இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்­தையும் அளிக்­கி­றது.

அது எப்­ப­டி­யென்றால், 30/1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக, பேர­வையின் 40 ஆவது கூட்­டத்­தொ­ட­ரி­லேயே ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர், விரி­வான எழுத்­து­மூல அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும் என்ற ஆணையின் ஊடா­கவே இந்தக் கால­அ­வ­காசம் அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 40 ஆவது அமர்வு, எதிர்­வரும் 2019 மார்ச் மாதமே இடம்­பெறும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதற்கு முன்­ன­தாக, 37ஆவது கூட்­டத்­தொ­டரில், வாய்­மொழி அறிக்­கையை ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 37ஆவது கூட்­டத்­தொடர், 2018 மார்ச் மாதம் நடை­பெறும்.

இது தவிர, கலப்பு விசா­ரணை பற்­றிய வெளிப்­ப­டை­யான உள்­ள­டக்­கங்­களோ, அல்­லது, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்த, நல்­லி­ணக்கச் செயல்­மு­றை­களைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் முழு அள­வி­லான செய­லகம் ஒன்றை இலங்­கையில் அமைக்க வேண்டும் என்ற பரிந்­துரை குறித்தோ இந்த வரைவில் எந்த விட­யங்­களும் இருக்­க­வில்லை.

ஆனால், நல்­லி­ணக்கம், நீதி, உண்மை, பொறுப்­புக்­கூறல் ஆகி­யன தொடர்­பான 30/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்குத் தேவை­யான தொழில்­நுட்ப மற்றும் ஆலோ­சனை உத­வி­களை வழங்கி ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று மாத்­திரம் தீர்­மான வரைவில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது,

30/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு என்ற வாச­கத்தின் ஊடாக, மாத்­தி­ரமே மறை­மு­க­மான வகையில் கலப்பு விசா­ரணைப் பொறி­முறை பற்­றிய கருத்து வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதே தவிர, நேர­டி­யாக அதனைச் செய்­ய­வில்லை.

இலங்கை அர­சுடன் இணைந்தே இந்த வரைவு தயா­ரிக்­கப்­பட்­டது என்­ப­தாலும், இலங்கை அரசு இணை அனு­ச­ரணை வழங்கப் போவ­தாக அறி­வித்­தி­ருப்­ப­தாலும், கலப்பு விசா­ரணைப் பொறி­முறை பற்­றிய வாச­கங்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்­றதே.

கடந்த 7ஆம் திகதி இணை அனு­ச­ரணை நாடு­க­ளான அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, மொன்­ர­னிக்ரோ, மசி­டோ­னியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனீ­வாவில் நடத்­திய உப மாநாட்டில், கலப்பு விசா­ரணை என்­பதை உள்­ள­டக்­கி­ய­தாக தீர்­மான வரைவு இடம்­பெற வேண்டும் என்­பதை, ஐரோப்­பிய ஒன்­றியம், சுவிற்­சர்­லாந்து, அவுஸ்­ரே­லியா ஆகிய நாடு­களின் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நீதிப்­பொ­றி­மு­றை­களில் வெளி­நாட்டுப் பங்­க­ளிப்பு அவ­சியம் இடம்­பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் வகையில் தீர்­மான வரைவு இருக்க வேண்டும் என்று இந்த நாடுகள் கோரி­யி­ருந்­தன.

எனினும், வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றைக்கு மீண்டும் வலி­யு­றுத்தும் வகையில் இறு­தி­யான தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தி­யங்கள் மிகக் குறை­வா­கவே இருக்­கின்­றன.

ஏற்­க­னவே, வெளி­நாட்டு நீதி­ப­திகள் என்ற விட­யத்தை நீர்த்துப் போகச் செய்­வ­தற்­கான முயற்­சி­களை எடுப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

2015 தீர்­மா­னத்தில் இடம்­பெற்­றுள்ள கலப்பு விசா­ரணைப் பொறி­முறை பற்­றிய பரிந்­து­ரையை இனிமேல் நீக்க முடி­யாது. ஆனால், இம்­முறை தீர்­மா­னத்தில் அதற்­கான நேர­டி­யான வலி­யு­றுத்­தலைத் தவிர்த்துக் கொள்­வதில் இது­வ­ரையில் இலங்கை அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது. அதனால் தான், தீர்­மான வரைவு குறித்த உப­குழுக் கூட்­டத்தில் திருத்­தங்கள் எதையும் அர­ச­த­ரப்பு பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க முன்­மொ­ழி­ய­வில்லை.

இந்த உப­குழுக் கூட்­டத்தில் சுவிற்­சர்­லாந்து முன்­வைத்த ஒரு யோச­னையும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்­வைத்த பரிந்­து­ரையும் இறுதி வரைவில் உள்­ள­டக்­கப்­ப­டுமா என்ற கேள்வி இருக்­கி­றது.

ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு கால­அ­வ­காசம் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை உப குழுக் கூட்­டத்தில் ஆத­ரித்­தி­ருந்த சுவிற்­சர்­லாந்து, தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தெளி­வான கால­வ­ரை­ய­றை­க­ளுடன், கூடிய பாதை வரைவு அல்­லது செயற்­திட்டம் ஒன்றை முன்­வைக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

அதே­வேளை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் கால­வ­ரம்­புடன் கூடிய செயற்­திட்டம் தொடர்­பாக தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் முதல்­நிலை வரைவில் இது­பற்­றிய எந்த அம்­சங்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

கால­வ­ரம்­புடன் கூடிய செயற்­றிட்­டத்தை இலங்கை அர­சாங்கம் எதிர்க்­குமா என்று தெரி­ய­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் கூட இதனை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. 

எனவே, இந்த விடயம் இறுதி வரைவில் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இருந்தால் அது ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க விட­ய­மல்ல.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் முன்­வைத்த, தீர்­மானப் பரிந்­து­ரைகள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான ஐ.நா. செய­ல­கத்தை அமைக்கும் விடயம் குறித்து முதல்­நிலை வரைவில் எது­வுமே இடம்­பெ­ற­வில்லை.

இது முக்­கி­ய­மா­ன­தொரு பரிந்­துரை. ஏற்­க­னவே 18 மாதங்­களை இழுத்­த­டித்து விட்ட அர­சாங்­கத்­துக்கு கால­அ­வ­காசம் வழங்கும் போது அது­பற்­றிய சர்­வ­தேச கண்­கா­ணிப்பு ஒன்று அவ­சி­ய­மா­கி­றது.

ஏற்­க­னவே, 2015ஆம் ஆண்டில் கூட இத்­த­கை­ய­தொரு கண்­கா­ணிப்பு பணி­ய­கத்தை அமைக்கும் யோசனை முன்­வைக்­கப்­பட்ட போது அதற்கு இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான எதிர்ப்பைத் தெரி­வித்­தி­ருந்­தது. ஐ.நா. அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­வதை இறை­மை­யுடன் தொடர்­பு­டைய விவ­கா­ர­மா­கவே அர­சாங்கம் வெளிப்­ப­டுத்தி தடுத்­தது.

இப்­போது மீண்டும் இதே கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில், இதனைச் செயற்­ப­டுத்­து­வது எந்­த­ள­வுக்குச் சாத்­தியம் என்­பது கேள்­விக்­குறி. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்தக் கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தாலும், இதற்கு ஆத­ரவு திரட்­டு­வ­தற்கு கூட்­ட­மைப்பு எந்­த­ள­வுக்கு செயற்­பட்­டது என்ற கேள்வி இருக்­கின்­றது.

கடந்த 7ஆம் திகதி நடந்த உப மாநாட்டில், பேர­வையின் 36ஆவது கூட்­டத்­தொ­டரில், அதா­வது இன்னும் ஆறு மாதங்­களில் ( 2017 செப்­டெம்பர்) ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் வாய்­மொழி அறிக்கை, சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என்று கனடா தரப்பில் ஒரு யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

அந்த யோச­னைக்கும் அவ்­வ­ள­வாக ஆத­ரவு கிடைத்­த­தாகத் தெரி­ய­வில்லை.

முன்­ன­தாக, இம்­முறை தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா முன்­மொ­ழி­யுமா என்ற சந்­தே­கங்கள் நில­வி­யி­ருந்­தன. ஆனால், பிரித்­தா­னியா, மசி­டோ­னியா, மொன்­ர­னிக்­ரோ­வுடன் இணைந்து தீர்­மா­னத்தை முன்­வைப்­பதை அமெ­ரிக்கா உறு­திப்­ப­டுத்தி விட்­டது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இந்தக் கூட்­டத்­தொடர் ஆரம்­பித்­ததில் இருந்தே, அமெ­ரிக்­காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர், எரின் பார்க்லே, ஜெனீவாவில் முகாமிட்டுள்ளார்.

அவர் இணை அனுசரணை நாடுகள், உறுப்பு நாடுகள் மற்றும் இலங் கையுடன் பல்வேறு பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கடந்த 7ஆம் திகதி நடந்த உப மாநாட்டிற்கும், ஏனைய இணை அனுசரணை நாடுகளின் பிரதி நிதிகளுடன் இணைந்து இவரே தலைமை வகித்திருந்தார்.

இந்த உப மாநாட்டில், எரின் பார்க்லே சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதில் ஒன்று, 30/1 தீர்மானத்தின் எந்த அம்சமும் மாற்றப்படவில்லை என்பதாகும்.

அதன்படி பார்த்தால், கலப்பு விசாரணைப் பொறிமுறைப் பரிந்துரை அப்படியே தான் இருக்கப் போகிறது.

இந்த முறையில் விசாரணை நடக்குமோ இல்லையோ, கலப்பு விசாரணைப் பரிந்துரையை நீக்குவதற்கான யோசனை புதிய தீர்மான வரைவில் இடம் பெறுவதற்கான அறிகுறி இல்லை.

புதிய தீர்மானம் மூலம் இலங்கைக்குக் கடிவாளம் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்புப் பொய்யாகிப் போகும் வாய்ப் புகளே இருந்தாலும், தாம் நினைத்தவாறு இலங்கையைச் செயற்பட விடுவதற்கும் சர்வதேச சமூகம் தயாராக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.