Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive

Featured Replies

“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive

ஆர் கே நகர்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற  காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக உள்ளது.

ஜோதிஇதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனை 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் தொகுதி இந்த இடைத் தேர்தலை சந்திக்கப் போகிறது. இதுகுறித்து அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி, இல்லத்தரசி  

"அ.தி.மு.க-தான் இந்தத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்று வந்தது. இனி யார் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. தீபா, சுஜாதாதினகரன் இவர்கள் எல்லாம் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு இவர்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியலில் குதித்துள்ளார்கள். ஏற்கெனவே பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முன்னிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். எனவே அவருடைய தலைமை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்."

சுஜாதா, இல்லத்தரசி

"அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் வருகிற தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. ஏற்கெனவே ஜெயலலிதா முன்னிறுத்தி விட்டுச் சென்றவருடைய சார்பில் நிறுத்தப்படுகிற ஷமீம்வேட்பாளர்களை விரும்புகிறோம். அதாவது பன்னீர்செல்வம் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்." என்றார்.

ஷமீம், (தனியார் நிறுவன  ஊழியர்)

"மக்கள் நலத்திட்டம் தொடர்பாக எந்த அரசு அதிகாரியை அணுகினாலும் பொதுமக்களுக்கு மரியாதை தருவதில்லை. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. ஜெயலலிதா இறந்தபிறகு, இந்தத் தொகுதியில்லட்சுமி எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவே இல்லை. முதியோர் பென்ஷன் தொகை மற்றும் விதவை பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா இடத்தில் உட்கார்ந்துகொண்டால் மட்டும் போதுமா? பொதுமக்களின் நலனை பார்க்க வேண்டாமா?" என்று கொதித்தார்

லட்சுமி, (வியாபாரி)

''தேர்தல் வந்து என்ன எங்களுக்கு நல்லது நடக்கப் போகுது.? இந்த இடைத்தேர்தல் எங்களுக்குத் தேவையில்லை. அசோக்அம்மா இருந்தபோது இந்த தொகுதிக்கு சில நலத்திட்டங்களை செய்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் இல்லாதபோது இந்த தொகுதியில் இனி என்ன நடக்கப்  போகிறது.? சசிகலாவோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ வந்தால் ரவுடியிசம்தான் அதிகரிக்கும். அம்மா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் வந்துள்ளனர். அ.தி.மு.க-விலிருந்தே மற்றொருவரும் வந்துள்ளார். அவருடைய பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது." எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

அசோக்,  (தொழிலாளர்)

''அ.தி.மு.க என்ற கட்சியே சிதறு தேங்காய் போன்று மூன்றாக சிதறிக் கிடக்கிறது. அதனால், ஜெயலலிதா பிரபாகரன்இறந்தபோதே அ.தி.மு.க என்ற 'சாம்ராஜ்யம்' சரிந்துவிட்டது. புதிதாக வந்துள்ளவர்களை மக்கள் ஏற்கமட்டார்கள். தி.மு.க-வை  தற்போது பலமுள்ள கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள். இந்தத் தொகுதியில், தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது." என்றார்.

பிரபாகரன், (தொகுதிவாசி)

ஜெயந்தி"இடைத்தேர்தலை மக்கள் மிகுந்த வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு அந்தக் கட்சி அழிவை நோக்கிச் செல்கிறது. தி.மு.க-வில் கடந்தமுறை நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனே இந்தமுறையும் நிறுத்தப்படலாம் என்று தகவல் வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணத்தை அள்ளி இறைப்பார்கள். அதுதான் இந்தத் தேர்தலில் நடக்கப்போகிறது'' என்றார் ஆதங்கமாக.   

ஜெயந்தி, (மாணவி)

''நாங்கள் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை. இரண்டு கட்சிகளுமே பிடிக்கவில்லை. யார் தலைமையாக இருக்கிறார்கள் போன்ற எந்த விவரமும் இல்லை. குழப்பமாக உள்ளது. எனவே இந்ததேர்தலை நாங்கள் விரும்பவில்லை." என்றார் விரக்தியாக

கோகிலா, (மாணவி)

''பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில், நமது சமூகம் சீரழிந்துள்ளது. குழந்தைகள், பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கோகிலாபாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. வரக்கூடியவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வருகிறார்களே தவிர, இந்த சமூக நலன் கருதி ஆட்சிக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. இந்தத் தேர்தலில் எங்களுடைய வாக்கை செலுத்த விரும்பவில்லை." என்றார் கோபமாக.

வழக்கமான அ.தி.மு.க - தி.மு.க மோதலாக இல்லாமல், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் அடுத்த அதிகாரம் யார்? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாடே உற்றுப்பார்க்கும் இந்தத் தேர்தலில், தொகுதி மக்கள் யாரைத் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

http://www.vikatan.com/news/coverstory/83542-rk-nagar-byelection-is-nearing-parties-are-yet-to-decide-its-candidate-here-is-the-people-unaware-of-the-candidates.html

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அதிகமாக திட்டுவார்கள். அப்பதான் வாக்குக்கு அதிக பணம் கொடுப்பார்கள். tw_blush: ஏற்கனவே தினகரன் தரப்பு வாக்குக்கு 10,000 அளவில் கொடுக்கிறார்களாம்.. tw_astonished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.