Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம்

Featured Replies

2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம்

 
 

2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம்
 

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா – இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நல்லாட்சி, சட்டவாச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்றும் (13) இன்றும் (14) கொழும்பில் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.

இந்த குழுவினால் முன்வைக்கப்படுகின்ற மறுசீரமைப்புத் திட்டங்களை முன்னோக்கிச் செல்வதற்கு அரசியல் ரீதியாக அர்ப்பணிப்பு செய்வதாக இதன்போது பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உறுதியளித்துள்ளனர்.

அத்தோடு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதி அனுசரணையை வழங்குவதாக இதன்போது ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை கோரும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/03/2015-இல்-ஜெனீவா-மனித-உரிமைகள்/

  • தொடங்கியவர்

2015 பிரே­ர­ணையை நிறை­வேற்ற உறுதி

P9-16d149d674454e49e496d7a1085d2aab403e40fe.jpg

 

இலங்கை ஏற்­றுக்­கொண்­ட­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­விப்பு

(ரொபட் அன்­டனி)

இலங்­கை­யா­னது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மாயின் மனித உரிமை மற்றும் ஏனைய விட­யங்­களில் தனது சர்­வ­தேச அர்ப்­ப­ணிப்பில் உறு­தி­யான முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது முதன்­மை­யான விடயம் என்­பதை இலங்­கையும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் ஐரோப்­பிய ஒன்­றியம் குறிப்­பிட்­டுள்­ளது.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் இலங்­கைக்­கி­டை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழுவின் அமர்­வி­லேயே

 இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

இதன்­போது அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், என்­பன தொடர்­பாக விரி­வாக பேசப்­பட்­டது. நல்­லி­ணக்­கத்தில் மேலும் முன்­னேற்றம் தேவை என்­பதை இரண்டு தரப்பும் ஏற்­றுக்­கொண்­டன.

இது­தொ­டர்பில் கொழும்­பி­லுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தூது­வ­ரா­லயம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

இந்த சந்­திப்பில் இரண்டு தரப்­புக்­களும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன்­வைத்­துள்ள விண்­ணப்பம் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்­துள்­ளன.

இல்­ங­கையின் விண்­ணப்­ப­மா­னது தற்­போது ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்­திலும் ஐரோப்­பிய பேர­வை­யிலும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கி­றது. எதிர்­வரும் மே மாதத்தின் நடுப்­ப­கு­தி­வரை ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றமும் ஐரோப்­பிய பேர­வையும் இது தொடர்பில் மதிப்­பீடு செய்து தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்கும்.

எனவே இந்த சலு­கையைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மாயின் இலங்­கை­யா­னது மனித உரிமை விவ­கா­ரத்­திலும் தொழி­லாளர் உரி­மை­யிலும் சுற்­றாடல் பாது­காப்­பிலும் சர்­வ­தேச மட்­டத்­தி­லான தனது அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்டும்.

அண்­மையில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள் குழு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும், வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. இதன்­போது இரண்டு பேரும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமது அர­சியல் ரீதி­யான எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இலங்கை பல்­வேறு துறை­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை ஐரோப்­பிய ஒன்­றியம் அங்­கீ­க­ரிக்­கி­றது. குறிப்­பாக காணாமல் போனோர் தொடர்­பான சர்­வ­தேச சாச­னத்­திற்கு இணக்கம் தெரி­வித்­தமை, தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யமை, காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை அமைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளமை, நல்­லி­ணக்­கத்­திற்­கான முயற்­சிகள் ஆகி­ய­வற்றை குறிப்­பி­டலாம்.

இது இவ்­வா­றி­ருக்க கூட்டு ஆணைக்­கு­ழுவின் அமர்வின் போது அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், என்­பன தொடர்­பாக விரி­வாக பேசப்­பட்­டது. நல்­லி­ணக்­கத்தில் மேலும் முன்­னேற்றம் தேவை என்­பதை இரண்டு தரப்பும் ஏற்­றுக்­கொண்­டன.

அத்­துடன் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது முதன்­மை­யான விடயம் என்­பதை இலங்­கையும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன.

இதன்­போது இலங்­கையின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவை வழங்­கவும் நிதி உத­வியை வழங்­கவும் தயா­ராக உள்­ள­தாக அறி­வித்­தது.

ஊடக சுதந்­திரம் சிவில் சமூ­கத்தை பலப்­ப­டுத்­துதல் பெண்கள், மற்றும் சிறு­வர்­களின் உரி­மையைப் பலப்­ப­டுத்­துதல், சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துதல், காணி­களை மீள் வழங்­குதல், தொழி­லாளர் உரி­மைகள் தொடர்­பா­கவும் இந்த அமர்­வின்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யமும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

சித்திரவதைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், என்பன தொடர்பாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பான குழுவிற்கு ஆசியாவுக்கான பிரதிப்பணிப்பாளர் போலா பம்பலோனியும் இலங்கை குழுவிற்கு வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ. அஸீஸும் தலைமைதாங்கியிருந்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.