Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Featured Replies

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

IMG_4635.jpg

கிளிநொச்சியில்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிறு 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை  காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
IMG_4605.jpg
இதன்போது முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள் தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவரின் காலில் விழுந்தும் கூம்பிட்டும் கதறி அழுதுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் தங்களின் போராட்டம் நியாயமானது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயம் தொடர்பில் நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும்  விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஜங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  ப.அரியரட்னம், பசுபதிபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்

IMG_4608.jpgIMG_4613.jpgIMG_4622.jpgIMG_4623.jpg

http://globaltamilnews.net/archives/21535

  • தொடங்கியவர்

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

 

 

 

CV--missing-persons-realtives.jpg

கிளிநொச்சியில்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத்தனர்.

28 ஆவது நாளாக தொடர்ச்சியாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை  காலை 7.45 மணியளவில் சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

இதன்போது முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள், தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரின் காலில் விழுந்து  கதறி அழுதுள்ளனர்.

 

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், தங்களின் போராட்டம் நியாயமானது. காணாமல் ஆக்கப்ட்டவர்களின்  விடயம் தொடர்பில் நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/17964

  • தொடங்கியவர்

வன்முறையில்லாத நெருக்குதல் மூலம் இலக்கை அடைவோம்! கேப்பாபுலவில் வடக்கு முதல்வர் :

vikki.jpg
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று கேப்பாபுலவிற்கு  சென்றுள்ளார். ஒரு தாயை பறித்துக் கொண்டு இன்னொரு பெண்ணை தருகிறேன், அதை தாயாக வைத்துக்கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியாதோ அப்படித்தான் உங்கள் காணிகளை பறித்துவிட்டு வேறு காணிகளை வழங்க முடியாது என வடக்கு முதல்வர்  மக்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

அத்துடன் உங்களின் போராட்டம் நியாயமானது என்றும் அதனை நிறுத்தச் சொல்ல மாட்டேன் என்றும் கூறிய அவர் வன்முறையற்ற  நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும் என்றும் தொடர்ந்து மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு இராணுவத்தை வெளியேற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த அவர், போராட்டத்தின் மூலமே காணிகளை பெற முடியும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அனைத்து தரப்பினருடனும் இது குறித்து பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை விமானப்படையின் தென்மேற்குப் பக்கத்தில் இரண்டாயிரம் ஏக்கர் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை அரசுக்கு தெரியப்படுத்திய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/archives/21563

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.