Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா மனித உரிமை பேரவை ; இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் கடுமையான சர்ச்சை (வீடியோ இணைப்பு)

Featured Replies

ஜெனிவா மனித உரிமை பேரவை ; இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் கடுமையான சர்ச்சை (வீடியோ இணைப்பு)

 

 

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழு கூட்டத்தில் இலங்கையிலிருந்து சென்றிருந்த பிரதிநிதி சரத் வீரகேசரவுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.

 

இதனையடுத்து முன்னாள் எம்.பி. சரத் வீரகேசர ஒரு யுத்த குற்றவாளி என்றும் சுவிஸ் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை பிரதிநிதி மணிவன்னன் பத்மநாதன் தெரிவித்ததையடுத்து சர்ச்சை நிலை ஏற்பட்டது. இலங்கை தொடர்பான ஜெனிவா பிரரேணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்பாட்டு பந்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே வலியுறுத்தி இந்த உப குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான நிரஞ்சலா, மற்றும் தர்சா ஜெகதீஸ்வரன் பாதிரியார் செபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

http://www.virakesari.lk/article/18018

  • தொடங்கியவர்

சரத் வீர­சே­க­ரவை கைதுசெய்யுமாறு சுவிஸ் அரசிடம் பகிரங்க கோரிக்கை

Page-01-fdc22a97d5f1d6601c3044ba2853a3ed28fe6e72.jpg

 

இலங்கை தொடர்பான ஜெனிவா உப ­குழுக் கூட்­டத்தில் மூண்டது கடும் சர்ச்சை
(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விசேட உப குழுக் கூட்­டத்தில் இலங்­கை­யி­லி­ருந்து சென்­றி­ருந்த பிர­தி­நிதி சரத் வீர­சேக­ர­வுக்கும் நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது.

இதன்போது முன்னாள் எம்.பி. சரத் வீர­சேகர ஒரு யுத்தக் குற்­ற­வாளி என்றும் சுவிஸ் அர­சாங்கம் அவரை கைதுசெய்ய வேண் டும் என்றும் நாடு கடந்த

 தமி­ழீழ அர­சாங்­கத்தின் மனித உரிமை பிர­தி­நிதி மணி­வன்னன் பத்­ம­நாதன் தெரி­வித்­த­தை­ய­டுத்து சர்ச்சை நிலை ஏற்­பட்­டது.

இலங்கை தொடர்­பான ஜெனிவா பிர­ரே­ணையின் ஆறு மற்றும் எட்டு ஆகிய செயற்­பாட்டு பந்­தி­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதே வலி­யு­றுத்தி இந்த உப குழு கூட்டம் நடை­பெற்­றது.

இதில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளான நிரஞ்­சலா, மற்றும் தர்சா ஜெக­தீஸ்­வரன் பாதி­ரியார் செப­மாலை உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டனர்.

செப­மாலை  முதலில் பாதி­ரியார் செப­மாலை உரை­யாற்­று­கையில், 

வடக்கு கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்க வேண்­டிய தில்லை என்று கரு­து­கின்­றனர். இந்த விட­யத்தில் மக்கள் பாரிய கவ­லை­யுடன் இருக்­கின்­றனர்.

தற்­போதும் வடக்கு கிழக்கின் பல்­வேறு இடங்­களில் மக்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அர­சாங்கம் எத­னையும் செய்­யா­ம­லேயே இருக்­கின்­றது. எனவே எமது பிரச்­சி­னை­யா­னது ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு கொண்டு வந்து சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். சர்­வ­தேச நீதி­ப­தி­களின் ஊடாக மட்­டுமே எமது பிரச்­சி­னைக்கு தீர்வை காண­வேண்டும் என்றார்.

இத­னை­ய­டுத்து உரை­யாற்­றிய தர்­சிகா ஜெக­தீஸ்­வரன் மற்றும் நிரஞ்­சலா ஆகியோர் இலங்­கையின் நீதித்­து­றையில் நம்­பிக்கை இல்­லை­யென்றும் குமா­ர­புரம் மிரு­சுவில் படு­கொலை சம்­ப­வங்கள் நீதி நிலை­நாட்­டப்­பட வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் சர்­வ­தேச விசா­ரணை வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டினர்.

சரத் வீர­சே­கர

இத­னை­ய­டுத்து உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர குறிப்­பி­டு­கையில்,

புலிகள் மக்­களை பணயக் கைதி­யாக வைத்­தி­ருந்­த­போது, படை­யி­னரே அவர்­களை மீட்­டெ­டுத்­தனர். ஆனால், தற்­போது யுத்தக் குற்ற விசா­ரணை நடத்­து­மாறு கோரு­கின்­றனர். இலங்­கையில் சக­ல­ருக்கும் நீதி சம­ம­தா­ன­தாகும். சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்டு வந்து விசா­ரணை நடத்த இங்கு இட­மில்லை. இரா­ணு­வத்தை மட்டும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்டு விசா­ரணை நடத்த முடி­யாது. தற்­போது நீதி உரிய முறையில் நிலை நாட்­டப்­ப­ட­வில்லை எனக் கூறப்­பட்­டது. ஆனால், கிரு­ஷாந்தி வழக்கில் உரிய முறையில் நீதி வழங்­கப்­பட்­டது.

மணி­வண்ணன் பதில்

இவ்­வாறு சரத் வீர­கே­சர உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது, குறுக்­கீடு செய்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் மனித உரி­மைகள் பிர­தி­நிதி மணி­வன்னன் பத்­ம­நாதன் சரத் வீர­கே­ச­ரவே ஒரு ?யுத்த குற்­ற­வாளி என்றும் அவரை இங்கு பேச அனு­ம­தித்­ததே தவறு என்றும் குறிப்­பிட்டார். அத்­துடன் போர்க் குற்­ற­வா­ளி­யான சரத் வீர­கே­ச­ரவை சுவிஸ் அராங்கம் உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என்றும் யுத்த குற்­றங்­களை செய்து விட்டு அவர் இங்கு பேச முடி­யாது. யுத்­தத்தின் பின்னர் கைது செய்­யப்­பட்ட நீதி­மன்­றத்­துக்கு அழைத்து செல்­லப்­பட்­டி­ருக்க வேண்டும். மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் இடம்­பெற்­றன. முதி­யோர்­களும் சிறு­வர்­களும் கொல்­லப்­பட்­டனர். என்றும் மணி வன்னன் பத்­ம­நாதன் சுட்­டிக்­காட்­டினார்.

சிங்­கள மக்­களும் கொல்­லப்­பட்­ட­தாக சரத் வீர­சே­கர கூறி­னாலும் 2000 ஆயிரம் சிங்­கள மக்­களே கொல்­லப்­பட்­டனர். ஆனால், 3 இலட்சம் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டனர். இதற்கு என்ன தீர்வு, எனவே சரத் வீர­சே­க­ரவை இங்கு பேச அனு­ம­தித்­தி­ருக்கக் கூடாது. என்று கூறினார். இத­னை­ய­டுத்து உப குழு கூட்­டத்தில் சர்ச்சை நிலை­தோன்­றி­யது.

சரத் வீர­சே­கர ஆவேசம்

இத­னை­ய­டுத்து மீண்டும் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர 2009ஆம் ஆண்டு மக்கள் பாதிக்­கப்­பட்­ட­போது பாதி­ரியார் செப­மாலை எங்­கி­ருந்தார்?295000 பொது மக்கள் இடம்­பெ­யர்ந்த போது இந்த பாதி­ரியார் எங்­கி­ருந்தார். அவர் என்ன இங்கு பேசிக் கொண்­டி­ருக்­கிறார். யுத்­தத்தில் 7ஆயிரம் பேருக்கு மேல் உயி­ரி­ழக்­க­வில்­லை­யேன ஐ.நா. விசேட ஆணை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார். ஆனால், இவர் இங்கு பொய் கூறிக்­கொண்­டி­ருக்­கிறார். அவர்கள் இன்று பேசு­கின்­றார்கள். ஆனால், தமி­ழர்­களை நாங்­களே பாது­காத்தோம். தொடர்ந்து வழ­மைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து

முன்­ன­தாக பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வண முத்து இலங்கை பிரச்­சி­னையை ஐ.நா. பொதுச் சபைக்கு கொண்டு சென்றால் அது எவ்­வாறு அமையும். என்று கேள்வி எழுப்­பினார்.

செப­மாலை

அதற்கு பதி­ல­ளித்து பேசிய பாதி­ரியார் செப­மாலை ஐ.நா. பொதுச் சபைக்கும் பாது­காப்பு சபைக்கும் இலங்கை விவ­கா­ரத்தை கொண்டு செல்­வ­திலும் சவால்கள் உள்­ளன. ஆனால், அதனை தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் சொல்லுவதை ஒரு போதும் அமுல்படுத்துவதில்லை. 2009ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கை ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஆனால், இன்று வரை அந்த பிரேரணையின் பரிந்துரைகளும் நிறைவேற்றப்படவில்லை. இது தான் இலங்கையின் நிலைமை. பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதே அவர்களின் பணியாகக் கொண்டுள்ளனர். அதனால், தான் இந்த விடயத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லுமாறு வழியுறுத்துகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.