Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்

Featured Replies

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: ஐவர் பலி; 40 பேர் காயம்

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடததியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது.

மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதன் துணை மருத்துவ அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

 
 

இத்தாக்குதலை பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் கண்டித்துள்ளது.

லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாநகர காவல்துறையும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தை "பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

பன்னாட்டுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு தமது ஆதரவை தெரிவிததுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றவும் அவர்கள் சூளுரை.

http://www.bbc.com/tamil/global-39356554

  • தொடங்கியவர்

வெஸ்ட்மினிஸ்டர் தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள காவல்துறை..!

Published by Selva Loges on 2017-03-23 11:50:15

 

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 40 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும், குறித்த தாக்குதலானது சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் தாக்கத்திற்குட்டபட்டவரால் ஏற்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

_95278144_map_update.png

பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதியியல், இஸ்லாமிய  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுபவரால், நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகி 5 உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் வரையில் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

மேலும் குறித்த சந்தேக நபர், பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன், தான் ஓட்டி வந்த வாகனத்தின் மூலம் பலரை மோதியுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் பலத்திற்கருகில், ஓர் பெண்ணை தோமஸ் நதியில் விழ செய்து கொன்றுள்ளதோடு, துப்பாக்கிச் சத்தம் கேட்பதற்கு முன்பு, பாராளுமன்ற உச்ச பாதுகாப்பு பிராந்தியத்தில் கடமையில் இருந்த பதுகாப்பு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்தே தாக்குதல்தாரி தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

_95277236_9ca22fa1-1a50-4044-898b-abf74f

அத்தோடு குறித்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட, ஒரு தீவிரவாத தாக்குதலுக்கான சதி என கருதுவதோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடய சந்தேக நபர்கள் மற்றும் தூண்டுதல் அளித்த இயக்கம் பற்றிய தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவர்களின் பெயர்களை வெளியிடமுடியாதென அந்நாட்டு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் குறித்த தாக்குதல் பகுதியிலிருந்து பிரிட்டன் பிரதமர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் அவசர பாதுகாப்பு படையினர் மூலம் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

_95272337_floor_pa.jpg

இந்நிலையில் தாக்குதல்தாரி குறித்த தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் மற்றும், தாக்குதல் சதித்திட்டதாரிகளை பிடிப்பதற்கான தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/18151

  • தொடங்கியவர்

லண்டன் தாக்குதல்: 7 பேர் கைது; 6 வீடுகளில் சோதனை; 7 பேர் கவலைக்கிடம்

 
 
சோதனை நடந்த பகுதியில் காவல்துறையினர்படத்தின் காப்புரிமைPA Image captionசோதனை நடந்த பகுதியில் காவல்துறையினர்

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து புதனன்று இரவு முதல் ஆறு வீடுகளில் சோதனை நடத்திய லண்டன் காவல்துறை சந்தேகத்தின்பேரில் ஏழு பேரை கைது செய்திருப்பதாக பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் உயரதிகாரி மார்க் ராவ்லி தெரிவித்துள்ளார்.

லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பொறுப்பு துணை ஆணையராகவும் பதவி வகிக்கும் இவர் இதுபற்றி மேலும் கூறுகையில் லண்டன், பர்மிங்ஹாம் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் நேற்றிரவு தொடங்கி தொடர்ந்து புலனாய்வு செய்துவருவதாக தெரிவித்தார்.

தாக்குதலாளி சர்வதேச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 29 பேரில் ஏழு பேரில் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-39363976

  • தொடங்கியவர்

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: அணைக்கப்படும் ஈஃபிள் டவர் மின்விளக்குகள்!

இங்கிலாந்து நாடாளுமன்றம் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தருகே நேற்றிரவு நடந்த தீவிரவாதத் தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக, பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படுகிறது.

Eiffel tower goes dark
 

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், நாடாளுமன்றத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, 'இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள்  அணைக்கப்படும்' என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.

Eiffel tower
 

முன்னதாக, பாதிக்கப்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்ததுடன், 'தீவிரவாதத்துக்கு எதிராக இங்கிலாந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா ஆதரவளிக்கும்' என்று தெரிவித்திருந்தார்.

http://www.vikatan.com/news/world/84405-london-terror-attack-eiffel-tower-goes-dark.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.