Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!

Featured Replies

சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு!

leterrrr_11202.jpg

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்த தீபா இன்னும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னம் கேட்டு சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். நேற்று இரண்டு தரப்பினர் வழக்கறிஞர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை இரண்டு அணியினருக்கும் தர முடியாது என்றும், அ.தி.மு.க பெயரை பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. மேலும், நாளைக்குள் (இன்று) கட்சியின் பெயர், சின்னங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, சசிகலா அணியினர், 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், தொப்பி, கிரிக்கெட் மட்டை, கத்தரிக்கோல், ஆட்டோ போன்ற சின்னங்களை பரிந்துரை செய்தனர். இதேபோல், பன்னீர்செல்வம் அணியினர் 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா ' என்ற பெயரையும், 'இரட்டை மின்கம்பம்' சின்னம் கேட்டு பரிந்துரை செய்தனர்.

இதனிடையே, சசிகலா அணிக்கு 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா' என்ற கட்சிப் பெயரையும், 'தொப்பி' சின்னமும், பன்னீர்செல்வம் அணிக்கு 'அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரும், 'இரட்டை மின்கம்பம்' என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84376-party-symbols-allotted-for-sasikala-and-opanneerselvamss-team.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

1989... 2017... இரு சமயம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது... என்ன வித்தியாசம்?

இரட்டை இலை சின்னம்: பன்னீர்செல்வம், சசிகலா

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக பேசப்படும் தேர்தலாக அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தரப்பினர் ஒரு பிரிவாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பிரிவாகவும் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. சசிகலா ஆதரவு வேட்பாளராக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்த இரண்டு அணிகளுமே அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடிய நிலையில், தேர்தல் ஆணையத்தின் முன் இரு தரப்பிலும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.இரு அணிகளும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பதாகத் தெரிவித்தன. இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் இரு தரப்பினருமே உறுதியாக இருந்த நிலையில் அந்த சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. 

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அ.தி.மு.க-வின் இரண்டு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் முன்பு சசிகலா தரப்பினரும், ஓ.பி.எஸ் தரப்பினரும் நேற்று (22.3.2017) டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர். அப்போது, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு கோரிக்கையை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். எனினும், நேற்றிரவு தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் ஒதுக்காமல் முடக்கம் செய்து அறிவித்தது. அ.தி.மு.க என்ற பெயரையும் இரு கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சசிகலா அணி, அ.தி.மு.க அம்மா என்ற பெயரிலும், ஓ.பி.எஸ் அணி, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னமும், சசிகலா அணிக்கு 'தொப்பி' சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் முன், ஓ.பி.எஸ் அணி 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தை மட்டுமே கோரியது. டி.டி.வி. தினகரன் தரப்பிலோ ஆட்டோ, கிரிக்கெட் பேட் போன்ற சின்னங்களில் ஏதாவது ஒன்று ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. முடிவில் 
தினகரன் தரப்பிற்கு 'தொப்பி' சின்னம் ஒதுக்கப்பட்டது.

டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க-வில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவது முதல்முறையல்ல. அந்தக் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்ததும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க பிளவை எதிர்கொண்டது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், முதல்வராகப் பொறுப்பேற்ற ஜானகி தலைமையிலான அரசு, 1988-ம் ஆண்டு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இந்த வாக்கெடுப்பின்போது, ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும், ஜானகி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கடும் அமளி ஏற்பட்டது. என்றாலும் ஜானகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. என்றாலும், ஜானகி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபையில் ஏற்பட்ட மோதல்களைக் காரணம் காட்டி, அவரது அரசு கலைக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அ.தி.மு.க ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரு அணிகளாக அந்தத் தேர்தலில் களம் இறங்கியது. ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டன. 28 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது அ.தி.மு.க மீண்டும் இரண்டு அணிகளாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தற்போதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. 

1989-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 27 இடங்களில் வெற்றிபெற்றது. படுதோல்வி அடைந்த ஜானகி, கட்சியை ஜெயலலிதாவிடமே ஒப்படைக்க ஒப்புக் கொண்டு சமரசம் செய்து கொண்டார். இதனால், அ.தி.மு.க-வுக்கு தலைமை ஏற்ற ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து மீண்டும் பெற்றார். ஆனால், இப்போது நிலைமை அதுபோல் இல்லை.

தீபா

டி.டி.வி. தினகரனுக்கு எந்த அளவு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை, நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் முடிவு தெளிவாக்கி விடும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அவரது அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் வெற்றி பெற்றால், அ.தி.மு.க தொண்டர்கள் அவர் பக்கம் உள்ளனர் என்பது தெளிவாகும். என்றாலும், இந்த இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த சின்னம் வாக்காளர்கள் மனதில் பதிவதற்கே சில நாட்கள் ஆகிவிடும். ஓ.பி.எஸ் அணிக்கு செல்வாக்கு இருந்தாலும், சசிகலா தரப்பில் இருந்து, ஜெயலலிதாவுக்கு ஜானகி விட்டுக் கொடுத்தது போன்று, அ.தி.மு.க-வை ஓ.பி.எஸ் தரப்பிற்கு விட்டுக் கொடுப்பார்களா என்பது சந்தேகமே. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். அவரும் அ.தி.மு.க தொண்டர்கள் தன்னை ஆதரிப்பதாகக் கூறிக் கொண்டு, வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். தி.மு.க சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். 

ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க இரு அணிகள், தீபாவின் பேரவை என அந்தக் கட்சியின் ஓட்டுகளை மூன்றுபேர் பிரிக்கும் நிலையில், தி.மு.க-வுக்கு சாதகமாக இடைத்தேர்தல் முடிவு அமையுமா என்று ஒருதரப்பினர் எதிர்நோக்கியுள்ளனர். அதே நேரத்தில் குழம்பிய குட்டையில் எப்படியும் மீன் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க-வும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தி, தேர்தல் வலை விரித்துள்ளது. எந்த கட்சிக்கு மக்கள் வெற்றியை அளிக்கப்போகிறார்கள் என்பது, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஏப்ரல் 15-ம் தேதி அன்றுதான் தெரியவரும். அதுவரை நாமும் பொறுத்திருப்போம்!

http://www.vikatan.com/news/tamilnadu/84414-history-repeats-why-was-two-leaves-symbol-frozen-in-the-year-1989.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.