Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கண்துடைப்பு

Featured Replies

சர்வதேச கண்துடைப்பு

 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆவ­லோடு எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையின் இலங்கை தொடர்­பான கூட்­டத்தில் அர­சுக்கு மேலும் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கும் தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தத் தீர்­மா­னத்தை ஏனைய சில நாடு­க­ளுடன் முன்­னின்று சமர்ப்­பித்த அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி அதற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­கவே 2019 ஆம் ஆண்டு வரை­யி­லான கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றன.  

இந்தத் தீர்­மா­னத்­திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் எந்­த­வொரு உறுப்பு நாடும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. திருத்­தங்­களை மேற்­கொள்ள முயற்­சிக்­கவும் இல்லை. தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இலங்­கைக்குக் கால அவ­காசம் வழங்­கப்­படக் கூடாது என்று எத்­த­னையோ வலு­வான கார­ணங்­களை முன்­வைத்து மனித உரிமை அமைப்­புக்கள், சிவில் அமைப்­புக்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பினர் கோரிக்கை விடுத்­தி­ருந்த போதிலும், அந்தக் கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்ற வலி­யு­றுத்­த­லுடன் இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்கை அர­சாங்கம் கடந்த 18 மாதங்­களில் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் எத்­த­னையோ விட­யங்­களைச் செய்­தி­ருக்க முடியும். செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் ­சரி, இலங்கை விவ­கா­ரத்தில் ஆர்வம் கொண்­டுள்ள ஏனைய நாடுகள் மற்றும் அமைப்­புக்­க­ளும் ­சரி திருப்­தி அடை­யத்­தக்க வகை­யி­லான முன்­னேற்­றத்தைக் காட்ட அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கின்­றது.

இந்த மனித உரிமைப் பேர­வையின் கூட்ட அமர்­வின்­போது பல நாட்டு பிர­தி­நி­தி­களும் அதனைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர். இந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­கா­சத்தைத் தகுந்த முறையில் அரசு பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்­பதும் இந்தக் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­பன இறு­திக்­கட்ட யுத்­தத்தின்­போது, தாரா­ள­மா­கவே இடம்­பெற்­றி­ருந்­தன என்­பது ஏற்­க­னவே பல்­வேறு தரப்­பி­ன­ராலும், பல்­வேறு தக­வல்கள், ஆதா­ரங்­களின் மூல­மாக பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர், கடந்த எட்டு ஆண்­டு­களில் இந்த உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்பு கூற­வில்லை. பொறுப்பு கூறு­வ­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வு­மில்லை. 

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்­தின்­படி கலப்பு நீதி­மன்ற விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்கி விசா­ர­ணை­களை நடத்தி, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­துடன், உரிய இழப்­பீட்டை அரசு வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத்­துடன், குற்­ற­மி­ழைத்­தவர்களைக் கண்­டு­பி­டித்து நீதியின் முன் நிறுத்­து­வதன் ஊடா­கவும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­பதன் ஊடா­கவும், மனித உரிமை மீறல்­கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன மீண்டும் நிக­ழாமல் உறுதி செய்­தி­ருக்க வேண்டும். அல்­லது அதற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு முன்­னேற்­ற­க­ர­மான ஒரு சூழ்­நி­லையை அர­சாங்கம் காட்­டி­யி­ருக்க வேண்டும். இரண்­டுமே நடக்­க­வில்லை. 

மாறாக 30/1 தீர்­மா­னத்தின் முக்­கிய அம்­சங்­களை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்று உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அரங்­கிலும் அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதற்கு அனு­ச­ரணை வழங்­கிய அரச தலை­வர்­களும் அரச தரப்புப் பிர­தி­நி­தி­களும், அதனை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தா­கவே உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

பிரே­ர­ணையை நிறை­வேற்ற வேண்­டிய சந்­தர்ப்­பத்­தி­லேயே கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையை ஏற்க முடி­யாது என்று அர­சாங்கத் தரப்­பினர்  மறுப்பு தெரி­விக்கத் தொடங்­கி­யி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல் யுத்தம் முடி­வுக்கு வந்து நாட்டில் சமா­தானம் ஏற்­பட்­டுள்ள நிலையில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுக­ளையும் அர­சா­ங்கம் திருப்­தி­க­ர­மாக மேற்­கொள்­ள­வில்லை என்­பதை ஐ.நா.வின் மனித உரி­மைகள் தொடர்­ப­ிலான பல்­வேறு பிரி­வு­களைச் சேர்ந்­த­வர்­களும் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை உள்­ளது உள்­ள­படி அவ­தா­னித்­தி­ருந்­தார்கள். அவ்­வாறு நிலை­மை­களை நேரில் கண்­ட­றிந்­தி­ருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் உள்­ளிட்ட பலரும், மனித உரிமை நிலை­மை­களில் முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்றே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்த சிறிய அள­வி­லான நட­வ­டிக்­கை­களை அவர்கள் வர­வேற்று பாராட்­டு­­வ­தற்குத் தவ­ற­வில்லை. அதே­வேளை காரி­யங்கள் முறை­யாக நடை­பெ­ற­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டவும் அவர்கள் தயங்­க­வில்லை.

செயற்­பா­டுகள் உளப்­பூர்­வ­மாக மேற்­கொள்­ளப்­ப­டுமா?

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் முக்­கி­ய­மா­ன­தொரு கேள்வி எழு­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு இப்­போது வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­கா­சத்தை அர­சாங்கம் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி, பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­குமா? இலங்கை அர­சாங்­கத்தின் கடந்த 18 மாத காலச் செயற்­பா­டு­களை ஆதா­ர­மாகக் கொண்டு பார்க்­கும்­போது, வரப்­போ­கின்ற இரண்டு வருட காலத்தில் அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாகச் செயற்­படும் என்று நம்­ப­லாமா – எதிர்­பார்க்­க­லாமா என்ற கேள்வி எழு­கின்­றது. 

முன்­னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடும்­போக்கு நிலையில் காரி­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அவரை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மென்­போக்­கு­டை­யவர், தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­தி­கா­ரத்­திற்கு வந்­தி­ருப்­பவர், தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்து அறி­வு­பூர்­வ­மா­கவும், உணர்­வு­பூர்­வ­மா­கவும் செயற்­ப­டு­கின்ற ஒரு தலை­வ­ராகக் காட்­சி­ய­ளித்­தவர் என்ற கார­ணத்­திற்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள் அவர் மீது அதிக அளவில் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர். 

ஆயினும், அவ­ரு­டைய மென்­போக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் அவர் வெளிக்­காட்­டிய அனு­தாப நிலையும், அர­சியல் ரீதி­யாக பல­வீ­ன­மா­கவே உள்­ளது என்­பதை கடந்த இரண்டு வருட காலத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நன்கு கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர் உறு­தி­யற்­ற­வ­ரா­கவும், அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள், வலி­காமம் வடக்கு பிர­தே­சத்தில் ஆறு­மாத காலத்­திற்குள் இரா­ணு­வத்தின் வச­முள்ள காணிகள் விடு­விக்­கப்­பட்டு, இடம்­பெ­யர்ந்த மக்கள்  அங்கு மீள்­கு­டி­யேற்­றப்­படுவார்கள் என்று அவர் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யா­த­வ­ரா­க­வுமே அவர் இருக்­கின்றார் என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்கள் நன்கு தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். 

இந்த நிலையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டத்­தக்க வகையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ர­ணையை அவர் அடுத்த இரண்டு வருட காலத்தில் முழு­மை­யாக நிறை­வேற்­றுவார் என்­பதை அவர்கள் எதிர்­பார்க்க முடி­யாது. அது தொடர்பில் அவர் மீது நம்­பிக்கை கொள்­ளவும் முடி­யாது என்றே கூற வேண்டும். 

அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு

கலப்பு நீதி­மன்ற விசா­ரணைப்பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும் என்­பதே ஐ.நா. பிரே­ர­ணையின் முக்­கிய அம்­ச­மாகத் திகழ்­கின்­றது. ஆனால் அரசு கலப்பு நீதி­வி­சா­ரணைப் பொறி­மு­றையை ஒரு­போதும் உரு­வாக்க மாட்­டாது என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். குறிப்­பாக இரா­ணு­வத்தைக் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தப் போவ­தில்லை. அதற் இடமே கிடை­யாது. எந்தக் கார­ணத்தைக் கொண்டும் இரா­ணுவ அதி­கா­ரி­களைத் தண்­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று அவர் மிகவும் தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.  

அவரை அடி­யொற்றி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை. உள்­ளக விசா­ர­ணை­களே நடத்­தப்­படும். வேண்­டு­மானால் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் ஆலோ­ச­னை­களை நாங்கள் பெற்­றுக்­கொள்­ளலாம் என கூறி­யி­ருக்­கின்றார். நாட்டின் பொறுப்பு வாய்ந்த அதி­யுச்ச அரச தலை­வர்­க­ளா­கிய அவர்கள் இரு­வ­ருமே, இரா­ணு­வத்­தினர் மனித உரிமை மீறல்­க­ளிலோ அல்­லது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளிலோ ஈடு­ப­ட­வில்லை. அவர்கள் குற்­ற­மி­ழைக்­க­வில்லை என்ற நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றார்கள். 

நாட்டின் வடக்­கிலும் தெற்­கிலும் முரண்­பா­டா­னதோர் அர­சியல் நிலைப்­பாடும், முரண்­பட்­டதோர் அர­சியல் போக்கும் நில­வு­கின்ற நிலையில் இது அவர்­க­ளு­டைய அர­சியல் ரீதி­யான நிலைப்­பா­டாக இருக்­கலாம். 

ஆனால் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்புக்கூற வேண்டும் என்று, நாட்டு மக்கள் அனை­வ­ருக்­குமே அவர்கள் இரு­வரும் முக்­கிய அர­சியல் தலை­வர்கள் என்ற ரீதியில் மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானம் சார்ந்து நீதியை நிலை­நாட்டி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர்கள் உறு­தி­யற்­ற­வர்­க­ளா­கவும் செயல் மந்தம் கொண்­ட­வர்­க­ளா­க­வுமே காணப்­ப­டு­கின்­றார்கள். 

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற மனி­தா­பி­மானம் நிறைந்த அர­சியல் நிலைப்­பாட்­டிலும் பார்க்க, இன­வாத அர­சியல் போக்கில் குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தா­லும்­கூட, பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சியல் இலாப நோக்கில் சித்­த­ிரிக்­கப்­பட்­டுள்ள விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாக வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தி­னரைத் தண்­ட­னைகள் பெறு­வதில் இருந்து காப்­பாற்­று­வதன் மூலம், ஆட்சி அதி­கா­ரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன­வாதம் தோய்ந்த சுய அர­சியல் இலாப நிலைப்­பாட்டில் அவர்கள் மிகவும் பற்­று­றுதி கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்த நிலைப்­பாட்டில் இருந்து அவர்கள் வெளி­வ­ரு­வது என்­பது இலங்­கையின் இது­கால வரை­யி­லான ஆட்­சி­முறை சார்ந்த அர­சியல் போக்கில் சாத்­தி­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பல்­லின மக்­களும், பல்­மதம் சார்ந்த மக்­களும் வாழ்­கின்ற ஒரு நாடாக இலங்­கையைப் பார்ப்­ப­திலும் பார்க்க, பௌத்த சிங்­கள மக்­க­ளுக்கே உரிய ஒரு நாடாக நோக்­கு­கின்ற இன­வாதப் போக்­கி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் இது­வ­ரையில் செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். 

முப்­பது வருட கால யுத்­தத்தை வெற்­றி­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்த வெற்றிப் பெரு­மி­தத்தில் ஏதேச்­ச­தி­காரப் போக்கில் காலடி எடுத்து வைத்­த­தை­ய­டுத்து, அவரைத் தோற்­க­டிப்­ப­தற்­காக முதன் முறை­யாக இந்த நாட்டின் இரண்டு சிங்­கள தேசிய கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஓர் ஆட்­சியை அமைத்­தி­ருக்­கின்­றன. முரண்­பட்ட போக்­கு­டைய இரண்டு தேசிய கட்­சி­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் குடும்ப ஆதிக்க ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கா­கவும் நாட்டில் ஜன­நா­ய­கத்தை (ஓர­ள­வுக்கு) கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­க­வுமே ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி என்ற பெயரில் இந்த அர­சாங்­கத்தை அமைத்து நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. 

தங்­க­ளுக்குள் அர­சியல் ரீதி­யான முரண்­பா­டு­க­ளையும் மாற்று வழி போக்­கு­க­ளையும் கொண்­டி­ருந்­தாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகளை வழங்­கு­வ­தற்கும், அவர்­க­ளையும் சிங்­கள, பௌத்த மக்­க­ளுடன் சரி­ச­ம­னான அர­சியல் உரிமை கொண்­ட­வர்­க­ளாக வாழச் செய்­வ­தற்கும் இந்த இரண்டு கட்­சி­க­ளையும் சேர்ந்த அர­சியல் தலை­வர்கள் தயா­ராக இல்லை. அந்த விட­யத்தில் அவர்கள் ஒற்­று­மை­யா­கவே இருக்­கின்­றார்கள். ஏதா­வது ஒரு கட்சி சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் தொடர்பில் சற்று மென்­போக்கைக் காட்­டி­னாலும், அதனை மற்ற கட்சி சகித்துக் கொள்­வ­தில்லை. உட­ன­டி­யா­கவே அர­சியல் ரீதி­யாக வெகுண்­டெ­ழுந்து இன­வா­தத்தைக் கக்கி, அந்த அர­சியல் மென்­போக்கை மொட்­டி­லேயே கருகச் செய்­து­வி­டு­வார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரா­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் மனித உரிமை மீறல்­க­ளினால், பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கு­ரிய கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையை முழு­மை­யாக எதிர்த்து நிற்­கின்­றார்கள். 

இத்­த­கைய அர­சியல் கடும் போக்கைக் கொண்ட அர­சாங்­கத்­திற்கே ஐ.நா.வின் 30/1 தீர்மானத்தை முழு­மை­யாக நிறை வேற்ற வேண்டும் என்­ப­தற்­காக மனித உரிமைப் பேர­வை­யினால் இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் நிலைப்­பாடு

இலங்­கைக்கு எதி­ராக இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஒப்­பீட்­ட­ளவில், மிகவும் சிறிய அள­வி­லான முன்­னேற்­றத்­தையே அரசு காட்­டி­யி­ருக்­கின்­றது. அதனைக் கவ­னத்தில் கொண்­டுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள், அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழங்­கு­வதன் ஊடாக பிரே­ர­ணையை முழு­மை­யாக அல்­லது முடிந்த அளவில் நிறை­வேற்­றி­வி­டலாம் என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.

அர­சாங்­கத்தின் மந்த கதி­யான செயற்­பா­டு­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் முக்­கி­ய­மான அம்­சங்கள் என்­னென்ன என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. அதில் இ­ரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பதில் கூடிய கவ­னமும் அக்­க­றையும் செலுத்தி வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சுக்கு இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­காக அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் இணைந்து கொண்டு வந்­துள்ள பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எந்­த­வி­த­மான நிபந்­த­னை­களும் விதிக்­க­வில்லை. இது அந்தப் பிரே­ர­ணையின் வலு­வற்ற தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளாகப் போதிய அளவில் அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை என (குற்­றம்­சாட்டும் தொனியில் என்­று­கூட கரு­தலாம்) வலு­வாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள போதிலும், அந்தப் பிரே­ர­ணையில் அடுத்த இரண்டு வருட காலத்­திலும் கட்­ட­ய­மாக சில நட­வ­டிக்­கை­க­ளை­யா­வது தவ­றாமல் முன்­னெ­டுக்க வேண்டும் என்று கூறப்­ப­ட­வில்லை. 

நிபந்­த­னைகள் எது­வுமே அற்ற நிலையில் கொண்டு வரப்­பட்­டுள்ள இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தை பொறுப்புக்கூறும் விட­யத்­திலும் - நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­திலும் - எந்த வகையில் ஊக்­கு­விக்கப் போகின்­றது அல்­லது செயற்­ப­டு­வ­தற்குத் தூண்டப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

 ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த இண்டு வருட கால அவகாசத்தை, 'அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற கால அவகாசம்' என்று குறிப்பிடுவதற்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை. 

'ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். 

'இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும். 

'இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக, சர்வதேச பொறிமுறைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்' என அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்ற ஐ.நா. அலுவலகம் இலங்கையில் நிறுவப்படுமா, என்பதற்குரிய விளக்கம் ஐ.நா.மனித உரிமைப் பேரவையினால் அரசுக்கு இரண்டு வருட கால அவகாச நீடிப்புப் பிரேரணையில் காணப்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளவாறு, இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்லது அவருடைய அலுவலகம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் மேற்பார்வை செய்யுமா என்பதும் தெளிவில்லை. 

மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கால நீடிப்புப் பிரேரணையானது, பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரையில், ஒரு சர்வதேச கண்துடைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.