Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேட்டை ...! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்... 271 இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Featured Replies

சேட்டை ...!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்...
271 இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
 
 
 

புதுடில்லி, :டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிப ராக பதவியேற்றதும், அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.தற்போது,அங்கு பணியாற் றும், 271 இந்தியர்கள் சட்டவிரோதமாக பணி யாற்றுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்ப போவதாக, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tamil_News_large_1738119_318_219.jpg

அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமை யிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு எதிராக, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. பிப்ரவரியில், இந்தியாவைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப ஊழியர், சுட்டு கொல்லப் பட்டார். நேற்று முன்தினம்,ஆந்திராவை சேர்ந்த, தாயும், குழந்தையும், அமெரிக்காவில், மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

கட்டுப்பாடுகள்


அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப் படும், 'விசா'க்களுக்கு கடுமையான கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டன. இது தொடர்பான மசோதா வும், அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா வில் வசிக்கும் இந்தியர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தி னரை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்

நடவடிக்கையிலும், டிரம்ப் நிர்வாகம் இறங்கி யுள்ளது. இதன் முதல் கட்டமாக, அமெரிக்காவில் சட்ட விரோதமாக, 271 இந்தியர்கள் தங்கியுள்ளதாக வும், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நட வடிக்கை எடுத்து வருவதாகவும், மத்திய அரசுக்கு, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

அமைச்சர் தகவல்


அமெரிக்காவின் இந்த தகவலை, சமீபத்தில், பார்லி மென்டில் பேசிய,வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும் உறுதி செய்தார். ஆனாலும், இந்தியா வுக்கு திருப்பி அனுப் பப்படவுள்ள இந்தியர்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்கும்படி, அமெரிக்கா வுக்கு, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின், இந்தியர்களுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கை, அங்கு வசிக்கும் இந்தியர்களை கவலை அடைய வைத்துள்ளது.

தொடர்ந்து நீடிக்கும் மர்மம்!


ஆந்திராவைச் சேர்ந்த, நர்ரா அனுமந்த ராவும், அவர் மனைவி, சசிகலாவும், 38, அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு, 6 வயதில், அனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. சசிகலாவும், குழந்தையும், நேற்று முன்தினம், வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சசிகலாவும், குழந்தையும், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இருப்பினும், கொலையாளி யார்,கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பதற்கு, இதுவரை விடை தெரியாமல் மர்மம்நீடிக்கிறது.

அமெரிக்க அரசு கூறுவது என்ன?

* இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் எண்ணிக்கை, 2009 - 2014 ஆண்டுகளில், 1.3 லட்சம் அதிகரித்து, ஐந்து லட்சம் பேர் ஆகியுள்ளது
* இவர்களில் பெரும்பாலானோர், முறைப்படி

 

விசாவுடன் சென்று, விசா காலம் முடிந்தபின், அமெரிக்காவிலேயே தங்கியவர்கள்
* கடந்த, 2015ல் மட்டும், 13 ஆயிரம் இந்தியர் கள், விசா காலம் முடிந்த பின், அமெரிக்கா விலேயே சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்
* திறன் பெற்ற தொழிலாளர்களுக்காக வழங்கப் படும், 'எச் - 1 பி' விசா பெற்று, ஆண்டுதோறும், ஏராளமான இந்தியர்கள், அமெரிக்காவுக்கு வருகின்றனர்
* அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதாக, டொனால்டு டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.
 

சீக்கிய பெண்ணுக்கு மிரட்டல்


அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த, சீக்கிய பெண் ராஜ்பிரீத் என்பவர், மன்ஹாட்டன் நகரில் உள்ள, தன் தோழி வீட்டுக்கு, சுரங்க ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அந்த பெட்டியில், அவருக்கு அரு கில் பயணம் செய்த வெள்ளைக்காரர் ஒருவர், ராஜ்பிரீத்தை, லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் என, கருதினார். ''நீ, இந்த நாட்டுக்கு என்ன செய்தாய்? உங்களை போன்றவர்களால் தான், நாடு சீரழிந்துவிட்டது.இங்கிருந்து, லெபனானுக்கு சென்றுவிடு,'' என, மிரட்டினார்.

''நான் லெபனானைச் சேர்ந்தவள் இல்லை,'' என, ராஜ்பிரீத் கூறியும், அந்த நபர், தொடர்ந்து மிரட்டினார்; பின், அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி விட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1738119

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.