Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்ஷி!

Featured Replies

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது ஏன்? சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய சாக்‌ஷி!

 

 
dhoni_sakshi

 

மத்திய அரசின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கும், ரேஷன் கடைகளில் பொருள்கள் பெறுவதற்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரப்படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்குதல், புதிதாக பான் அட்டை பெற, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய எனப் பல்வேறு பணிகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது.

இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தோனி ஆதாருக்காக விண்ணப்பிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இதுதவிர மத்திய அரசின் ட்விட்டர் தளம் ஒன்றில் அதே புகைப்படம் மற்றும் தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பமும் வெளியானது. இதைக் கண்ட தோனியின் மனைவி சாக்‌ஷி அதிர்ச்சி அடைந்தார். தோனியின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததில் அவர் கடுப்பாகி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் ட்விட்டர் தளத்திலேயே கேள்விகளை எழுப்பினார். 

dhoni_aadhar1.jpg

இதில் ஏதாவது அந்தரங்கப் பாதுகாப்பு உள்ளதா? ஆதார் அட்டை குறித்த தகவல்களும் ஆதார் விண்ணப்பமும் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன என்று சட்ட அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

உடனே சட்ட அமைச்சரும், இல்லை. அத்தகவல்கள் பொதுவுக்கு உரித்தானது அல்ல. இந்த ட்வீட்டில் ஏதாவது தனிப்பட்ட தகவல்கள் வெளியானதா என்று சாக்‌ஷியிடம் ஒரு கேள்வி எழுப்பினார். 

பதிலுக்கு சாக்‌ஷி, தோனியின் ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் ட்விட்டரில் கசிந்துள்ளன என்றார். அதற்கு ஆதாரமாக மத்திய அரசின் ட்விட்டர் தளத்தில் வெளியான தோனியின் ஆதார் விண்ணப்பம் குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.  

உடனே சட்ட அமைச்சர், இதை என் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது சட்ட விரோதம். இச்சம்பவம் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாக்‌ஷிக்கு உறுதியளித்தார். அமைச்சரின் உடனடி பதில்களுக்கும் நடவடிக்கைக்கும் சாக்‌ஷி நன்றி தெரிவித்தார்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

தோனியின் ஆதார் அட்டை தகவல்களை வெளியிட்ட நிறுவனத்துக்கு 10 ஆண்டு தடை

  •  

பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஆதார் சேவை மையம் பத்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரி, சம்பந்தப்பட்ட ஆதார் அடையாள அட்டை மையத்தை பத்து ஆண்டுகளுக்கு தடை செய்ததுடன், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதார் அட்டை நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionஆதார் அட்டை நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு

ஆதார் அடையாள அட்டையை ஊக்குவிக்கும் விதமாக, தோனியின் குடும்பத்தினரின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் எதிர்ப்பு தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்திருந்தார்.

அதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார் -"சிறந்த கிரிக்கெட் வீர்ர் தோனியின் டிஜிட்டல் ஹூக் ஷாட்".

தோனி, சாக்ஷிபடத்தின் காப்புரிமைFACEBOOK/DHONI

இந்த ட்விட்டருக்கு பதிலளித்த சாக்ஷி, "இனி என்ன அந்தரங்கம் இருக்கிறது? ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களை பொதுச்சொத்தாக்கிவிட்டீர்கள். வருத்தமாக இருக்கிறது".

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய வெற்றி திடமானதா?

இதற்கு பதிலளித்த ரவிஷங்கர் பிரசாத், "இல்லை, இது பொதுச்சொத்து இல்லை. என்னுடைய ட்விட்டர் செய்தியால் அந்தரங்க செய்தி எதுவும் வெளியாகிவிட்டதா?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

தோனி, சாக்ஷிபடத்தின் காப்புரிமைTWITTER/DHONI

இதே தொனியில் சற்று நேரம் இருவரிடையே உரையாடல் நடைபெற்றது. இறுதியாக சாக்ஷி எழுதினார், "சார், நாங்கள் ஆதார் விண்ணப்பத்தில் கொடுத்திருந்த தகவல்கள் வெளியாகிவிட்டது".

மற்றொரு ட்வீட்டில் சாக்ஷி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சொன்னார், "சார் நான் @CSCegov ஹேண்டிலில் வெளியான இந்த ட்வீட்டின் இந்த புகைப்படம் குறித்து பேசுகிறேன்".

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் சாந்தா ரங்கசாமி புதிய யோசனை

அந்த புகைப்படம் பொது சேவை மையத்தின் ட்விட்டர் ஹேண்டில் @CSCegov-இல் இருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில், ஆதார் அட்டைக்காக தோனி பூர்த்தி செய்திருந்த விண்ணப்பமும் பகிரப்பட்டிருந்தது. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது.

சாக்ஷி - ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர் உரையாடல்படத்தின் காப்புரிமைALAMY

@CSCegov இன் தவறை ஒப்புக் கொண்ட ரவிஷங்கர் பிரசாத், தவறை ஒப்புக்கொண்டு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த விஷயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் பகிரப்படுவது சட்டவிரோதமானது. இந்த விஷயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER

அதற்கு பதிலளித்த சாக்ஷி, ரவிஷங்கர் பிரசாத்தின் துரித நடவடிக்கைகளுக்கும், ட்விட்டரில் பதிலளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

http://www.bbc.com/tamil/india-39431299

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.