Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை

Featured Replies

மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை

 

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கு செல்லும் மாணவியர்

தகவல் அறிந்ததும், மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சிங், சந்திரஜித் யாதவ்வின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்தார்.

மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சில ஆசிரியர்களின் சதியினால் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சுரேகா தோமர் கூறுகிறார்.

 

இந்த மாதம் 29 ஆம் தேதி கஸ்தூரிபாய் காந்தி உறைவிடப் பள்ளியில் துப்புரவு பணி மேற்கொள்வது குறித்த விவகாரத்தில் விடுதி கண்காணிப்பாளரின் தலைமையில் மாணவிகளிடம் மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டபோது அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதாக, கதெளலி காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சி.குப்த், பி.பி.சியிடம் தெரிவித்தார்.

"மாணவிகளை நிர்வாணப்படுத்தி, சோதனையிட்ட தகவல் கிடைத்தவுடனே, நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு, இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உறைவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பை கேட்டுக்கொண்டோம்"என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோரின் புகார்

சம்பவம் பற்றி மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து, நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். சுமார் 70 மாணவிகள் இப்படி சோதனையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு பிறகு கல்வி அதிகாரியின் தலைமையில் ஏழு உறுப்பினர் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் விடுதி கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகத்தினரின் தூண்டுதலால் தான் மாணவிகள் இவ்வாறு தவறான புகாரை அளிப்பதாக சொல்கிறார்.

விடுதி கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகிறார், "இது ஒரு சதி. நான் இங்கு இருக்க்க்கூடாது என்று இங்கே பணிபுரிபவர்கள் விரும்புகின்றனர்".

http://www.bbc.com/tamil/india-39457243

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  ஒரு செய்தி படித்தேன் இன்று எக்ஸ் ரே எடுப்பதற்கு  நிர்வாணப்படுத்திய தாக  இப்படியான சிலதுகள் இருக்கு இன்னும் இருக்கு 

  • தொடங்கியவர்

ம்ம் நானும் இன்று பார்த்தேன் உந்த செய்தியை.. MRI ஸ்கேன் எடுப்பதுக்கு நிர்வாணப்படுத்தி பின்பு படம் எடுத்ததாக.

3 minutes ago, முனிவர் ஜீ said:

இலங்கையில்  ஒரு செய்தி படித்தேன் இன்று எக்ஸ் ரே எடுப்பதற்கு  நிர்வாணப்படுத்திய தாக  இப்படியான சிலதுகள் இருக்கு இன்னும் இருக்கு 

 

  • தொடங்கியவர்

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

 
 

பெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையற்று இருப்பார்கள், அதனால் அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது என்று எண்ணுபவரா நீங்கள்? ந்த கருத்தைத் தெரிவித்த கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம். எம். ஹாசன் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

பல பெண்களின் குடும்பங்களில் மாதவிலக்கின் போது வழிபாட்டுதலங்களுக்கு செல்வது தடுக்கப்படுகிறதுபடத்தின் காப்புரிமைAFP Image captionபல பெண்களின் குடும்பங்களில் மாதவிலக்கின் போது வழிபாட்டுதலங்களுக்கு செல்வது தடுக்கப்படுகிறது

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்வில் அவர் இந்த கருத்தை தெரிவித்தவுடன் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இது தன்னுடைய சுயகருத்து இல்லை என்றும் சமூகத்தில் உள்ள கருத்தை தான் கூறியதாகவும் ஹாசன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பெண்களிடம் பேசியபோது, பலர் தங்களது அனுபவத்தை பிபிசிதமிழுடன்பகிர்ந்து கொண்டனர்.

ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாக இருந்திருந்தால் தூய்மை பற்றி பேசுவார்களா? ருக்குமினி கிருஷ்ணா , பட்டதாரி மாணவி

கேரளாவின் கொச்சி மாவட்டத்தை சேர்ந்த ருக்குமினி கிருஷ்ணா, மாதவிடாய் இயற்கையான ஒன்று என்பதை புரிந்துகொள்ளவதற்கு பதிலாக ஓர் அரசியல் தலைவர் தூய்மையற்றது என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

''நாம் நவீன தொழில்நுட்பம் வேண்டும் என்கிறோம், உடை, உணவு, வாழ்க்கைமுறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். மாதவிலக்கு பற்றி மட்டும் ஏன் பழங்கால கதையை மாற்றவேண்டாம் என்று எண்ணுகிறோம்,''என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

''ஒரு வேளை ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாக இருந்திருந்தால் இதுபோல ஹாசன் பேசவாய்ப்பில்லை என்று நினைக்கிறன். மாதவிலக்கின் போது வழிபாட்டு தலங்களுக்கு போகலாம், போகவேண்டாம் என்பதில், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்றவாறு தேர்வை செய்துகொள்ளுவது தான் சிறந்தது,'' என்று கூறினார் ருக்குமினி கிருஷ்ணா.

மாதவிலக்கின் போது பயன்படுத்தப்படும் நேப்கின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமாதவிலக்கின் போது பயன்படுத்தப்படும் நேப்கின்

திருச்சூரில் வசிக்கும் ஜெனிஃபர் டி சில்வா, மத்திய அரசின் உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். ஹாசனின் கருத்தை சில பெண்களும் கூறகேட்டிருப்பதாக தெரிவித்தார்.

''என்னுடைய தோழிகள் சிலர் மாதவிடாய் காலங்களின் போது தூய்மையற்று இருப்பதாக தங்களது குடும்பத்தினர் கூறியதாக சொல்வதுண்டு. கடவுள் எல்லா இடங்களிலும், எப்போதும் இருப்பதாக நம்பும் பலர், மாதவிலக்கின் போது வழிபாடு செய்யக்கூடாது என்று எண்ணுவது முரணானது. இயற்கையை படைத்த கடவுள் இயற்கையான மாதவிலக்கை ஏற்றுக்கொள்வார்,'' என்கிறார் ஜெனிஃபர்.

 

தேவாலயங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜெனிஃபர், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்றார்.

மாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை Image captionமாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை மணிமேகலை

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுரிகளில் பெண்களின் உடல்நலம் மற்றும் மாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை, ''சிறுவயதில் மாதவிலக்கு தூய்மையற்றது என்று கூறினால் வளர்ந்தபிறகு, அறிவியல் ரீதியாக அந்த கருத்து தவறு என்று தெரிந்தாலும் அதை ஏற்பதில் பெண்களுக்கு மனச்சிக்கல் இருக்கும்.'' என்றார்.

 

தன்னுடைய கருத்தரங்கத்திற்கு வந்த பல கல்லூரி பெண்கள் தற்போது கோயில் திருவிழாக்களில் மாதவிலக்கின்போது பங்கேற்கிறார்கள் என்று மணிமேகலை தெரிவித்தார்.

''பொதுவெளியில் பேசுபவர்கள் பெண்களின் உடல்நலத்தில் அக்கறையுடன் பேசவேண்டும். சமூகத்தின் பிற்போக்கான கருத்தை மாற்றவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை. அவர்களே பிற்போக்குத்தனத்தை திணிக்கக்கூடாது ,'' என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/india-39444227

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.