Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் !

Featured Replies

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் !

 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, யுத்­த ­கா­லத்தில் இடம்­பெற்ற விட­யங்கள் சம்­பந்­த­மாக வகைப்­பொ­றுப்பு கூறு­வ­தற்கும் அத்­துடன் நல்­லி­ணக்­கத்தை தோற்­று­விப்­ப­தற்கும் ஏற்­பு­டைய பிரச்­சி­னை­களை இலங்­கைக்­குள்­ளேயே தீர்க்­கு­மாறு இலங்­கை­ உந்­தப்­பட்­டுள்­ளது. 2015 ஆம் ஆண்டு இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் கொண்­டு­வ­ரப்­பட்ட ஜெனிவா பிரே­ர­ணை­யா­னது உண்மை, நீதி, இழப்­பீடு செய்தல் மற்றும் மீள் நிக­ழாமை போன்­ற­வற்றை நோக்­கிய அர்த்­த­புஷ்­டி ­மிக்க முத­லா­வது படி­மு­றையை தோற்­று­வித்­தது.

இந்தப்பிரே­ர­ணையின் கீழ், உண்மை மற்றும் நல்­லி­ணக்கம் பற்­றிய ஆணைக்­குழு, காணாமற் போன ஆட்­களைப் பற்­றிய அலு­வ­லகம், இழப்­பீட்­டிற்­கான அலு­வ­லகம் மற்றும் விசேட வழக்­கு­ரை­ஞரைக் கொண்ட விசேட நீதி­மன்றம் ஆகி­யவற்றின் ஊடாக நிலை­மா­று­கால நீதியை நோக்­கிய பய­ண­மொன்­றிற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மெனும் உறு­தி­மொ­ழியை இலங்கை சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் தமது பிர­ஜை­க­ளுக்கும் வழங்­கி­யது.

நிலை­மா­று­கால நீதிப்பொறி­மு­றை­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சாட்­சி­களும் பங்­கு­பற்றும் போது அது நீதி­மன்ற நட­வ­டிக்­கைக­ளாக இருப்­பினும் நீதி­மன்­றங்கள் சாராத நட­வ­டிக்­கை­களாக இருப்­பினும் அவர்கள் அரச பணித்­து­றை­யுடன் மேற்­கொள்­ளு­கின்ற இடைச் ­செ­யற்­பாட்டின் போதும் அல்­லது வழக்கு விசா­ரணை செயன்­மு­றைக்­குள்ளே அவர்கள் நடத்­தப்­படும் விதத்­திலும் மீண்டும் அவர்­கள்­பா­திப்­புக்­குள்­ளா­க ­கூ­டிய இடர்­வ­ரு ­நி­லையை எதிர்­நோக்­கு­கின்­றனர்.

இலங்­கையின் அண்­மைக்­கால வர­லாற்­றினை நோக்­கு­கையில் பொலி­ஸாரும் பாது­காப்பு பிரி­வி­னரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் அனர்த்­தத்­திற்கு உள்­ளாக்­கி­யே­னும்­தங்­க­ளது நிரு­வாக வினைத்­தி­றனை முன்­னு­ரிமைப் படுத்­து­கின்­றனர் அல்­லது மற்­றைய சில சந்­தர்ப்­பங்­களில் சாட்­சி­க­ளையும் அவர்­க­ளது குடும்­பங்­க­ளையும் மனித உரிமை வழக்­கு­களை கைவி­டு­மாறு அல்­லது வழக்கு விசா­ர­ணை­களில் பங்­கேற்­­காமல் இருக்­கு­மாறு அச்­சு­றுத்­து­வதன் மூலம் அழுத்­தம் ­கொ­டுக்­கின்­றனர். இவ்­வா­றான மீறல்கள் விசேட நீதி­மன்­றங்கள், உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுக்கள் மற்றும் காணாமற் போன ஆட்­களைப் பற்­றிய அலு­வ­ல­கங்கள் போன்­ற­வற்றின் இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக இருக்­கு­மெனில் அவ்­வா­றான பொறி­மு­றைகள் வேறு எவ்­வா­றான சாத­க­மான இயல்­புகள் கொண்­டி­ருப்­பினும் அவை வெறு­மனே அர்த்­த­மற்­ற­தொரு நடை­மு­றை­யா­கவே மாற்­ற­ம­டையும்.

இவ்­ வி­ட­யத்தில் மிகவும் முக்­கி­ய­மான தக­வல்­களை வெளிக்­கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஆற்­ற­லு­டைய இவ்­வா­றான பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சிகள் மிகவும் பீதி­ய­டைந்து தவ­று­ செய்­த­வர்­களை பகி­ரங்­க­மாக கூறாமல் விட்­டு ­வி­டு­வ­துடன் இதன் விளை­வாக தவ­றா­ளிகள் நீதிக்­கான நடை­மு­றை­யி­லி­ருந்து மீண்டும் தப்­பிக்­கொள்­கின்­றனர். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான நிக­ழ்ச்­சித்­திட்­டங்­களின் போதி­ய­ளவு சுயா­தீ­னத் ­தன்மை காணப்­ப­டாமை கடந்த காலத்தை சம்­ப­வங்­களை நேர்­மை­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் ஆராய்­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் மழுங்­க­டித்­து­ விடும்.

ஆகவே, இவ்­வா­றான நிறு­வ­னங்கள் வினைத்­தி­றன்­ மிக்க வகையில் இயங்க வேண்­டு­மாயின் இலங்கை பலம்­பொ­ருந்­தி­ய­வ­கையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காக்­கின்ற முறை­மை­யொன்­றை­ ஸ்தா­பிக்க வேண்­டு ­மென்­ப­துடன் இந்த முறைமை சுயா­தீ­னத்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, மற்றும் ஆற்றல் ஆகி­ய­வற்றை கொண்­டி­ருத்தல் வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காப்­ப­தற்­காக 2015 ஆம் ஆண்டில் கொண்­டு­வ­ரப்­பட்­ட ­சட்டம் அவ்­வா­றாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காப்­ப­தற்­காக இலங்­கையில் ஆக்­கப்­பட்­டுள்ள சட்­டங்­களின் முன்­னோடிச் சட்­ட­மாக இருப்­பினும் அது அன்று தொட்டே பெரும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது. அர­சாங்கம் மற்றும் பொலிஸ் உயர்­மட்­டங்­க­ளி­லி­ருந்து குறிப்­பா­க­ இந்த பாது­காப்பு சட்­ட­கத்­திற்கு கிடைத்­தி­ருக்கும் குறை­வான சுயா­தீ­னத்­தன்மை அவ்­வா­றான விமர்­ச­கர்­களின் விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யது. இந்­நி­லையில் யுத்­த­கா­லத்தில் புரி­யப்­பட்ட அட்­டூ­ழி­யங்­களைப் பற்­றிய சாட்­சி­ய­ளிக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தங்­களைப்பாது­காக்கும் பொறுப்­பினை பொலி­ஸா­ருக்கு கைய­ளிப்­பா­ளர்கள் என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­ன­தாக இருப்­ப­துடன் இதற்­கான காரணம் இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் யுத்­த­கா­லத்தில் பெரு­ம­ள­வி­லான துஷ்­பி­ர­யோ­கங்­களை புரிந்­த­வர்­க­ளா­கவும் யுத்தம் நிறை­வு ­பெற்­ற­தை­ய­டுத்து தொடர்ச்­சி­யாக அச்­சு­றுத்­த­லாக இருந்­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­த­னால்­ ஆகும். அநே­க­மா­ன­வர்கள் அச்­சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான மீறல்­க­ளா­கவும் இந்­ந­ிலையில் மேற்­படி பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் வரையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான தேசிய கட்­ட­மைப்பு போதி­ய­ளவு உறு­திப்­பாட்­டினை அல்­லது பாது­காப்­பினை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் சாட்­சி­க­ளுக்கு வழங்க முடி­யாது.

நிலை­மாறு கால நீதி செயன்­மு­றைக்­குள்ளே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் இவ் ­வி­ட­யத்தில் கடந்த காலத்தில் இலங்கை முகம்­கொ­டுத்த தோல்­விகள் போன்­ற­தொ­ரு­ நி­லையை முகம்­கொ­டுப்­ப­தற்­கு­ வாய்ப்­ப­ளிக்­கக்­ கூ­டாது. இந்­நி­லை­யில்­ பா­ரி­ய­ள­வி­லான மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் அது­ சார்­ந்த சாட்­சி­க­ளையும் பாது­காக்கும் விட­யத்தில் எழும் தனித்­து­வ­மான சவால்­க­ளையும் தேவை­க­ளையும் சமா­ளிக்கும் பொருட்டு இலங்­கையின் நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களில் ஈடு­படும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு அல்­லது உதவி வழங்­கு­வ­தற்கு விசேடமா­ன­தொரு சட்­ட­க­மொன்றை ஈடு­ப­டுத்­திக் ­கொள்­வது அவ­சி­ய­மா­க­வி­ருக்­கின்­றது.

நிலை­மாறு கால நீதி­யா­னது உண்மை, நீதி, மற்றும் நிறு­வ­ன­ ரீ­தி­யி­லான மறு­சீ­ர­மைப்­புகள் போன்­ற­வற்றை நோக்­கிய பங்­கேற்­பு­ மு­றை­யி­லா­ன­தொரு பய­ண­மாகும். ஆகவே, வெற்­றி­க­ர­மான ஒவ்­வொரு நிலை­மா­று­ கால நீதி செயன்­மு­றையும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் சாட்­சி­க­ளுக்கும் வழங்­கப்­படும் உத­விகள், ஒத்­தா­சைகள் மற்றும் பாது­காப்பு ஆகி­யவை விட்­டுக்­கொ­டுக்­கப்­ப­டாமல் இருக்­கின்­ற­தென்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதன் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சாட்­சி­க­ளையும் உச்ச மட்­டத்தில் வைத்து பேணு­வ­தற்கு ஆவன செய்தல் வேண்டும். எவ்­வா­றா­யினும் மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு நிலை­மா­றுகால நீதி சூழ­மைவில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் சாட்­சி­க­ளுக்கும் பாது­காப்பு மற்றும் ஒத்­து­ழைப்பு வழங்கும் விடயம் தனித்­து­வ­மிக்க பல கரி­ச­னை­க­ளையும் சவால்­க­ளையும் கொண்­டுள்­ள­தென இதன்­மூலம் புல­னா­கின்­றது.

மனித உரி­மைகள் சட்­ட­க­மொன்றின் கீழ், அர­சுகள் தங்­களின் ஆளுகை பிர­தே­சத்­தி­லுள்­ள­வர்­களின் பாது­காப்­பிற்­காக நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு கடப்­பாட்­டினை கொண்­டுள்­ளது. இந்த கடப்­பாட்­டினை நிறை­வேற்­றுதல் ஒரு­பு­ற­மி­ருக்க சாதா­ரண குற்­றச் ­செ­யல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சாட்­சி­க­ளுக்கும் அவ்­வா­றான சாட்­சிகள் நீதி­மன்ற செயன்­மு­றைக்கு பெறு­ம­தி­ வாய்ந்­த­தாக அமை­வதால் விசேட பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது. நிலை­மா­று­கால நீதி செயன்­மு­றையை பொருத்­த­மட்டில், சாட்­சி­களை பாது­காத்தல் எனும் விடயம் மேல­திக கடப்­பா­டு­களை ஈடேற்றும் பொருட்டு வலு­வூட்­டப்­பட்­டுள்­ள­துடன் விரி­வான தேவை­க­ளுக்கு சேவை­யாற்­று­கின்­றது. சாட்­சி­களைப் பாது­காக்கும் பொறி­முறை குறிப்­பாக பரி­கா­ரத்­திற்­காக பாதிக்­கப்­பட்­டவர் கொண்­டுள்ள உரி­மையை நிலை ­நி­றுத்­தப்­ப­டு­வ­தற்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாக அமை­கின்­ற­தென மனித உரி­மைகள் குழு வலி­யு­றுத்­திக்­ கூ­று­கின்­றது.

மேலும், நிலை­மாறு கால நீதி செயன்­மு­றைக்­குள்ளே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­ன­தும்­ சாட்­சி­களின் பாது­காப்­பா­ன­து ­பா­திக்­கப்­பட்­டவர்­க­ளி­னாலும் சாட்­சி­க­ளி­னாலும் வழங்­கப்­படும் சாட்­சி­களின் பெறு­மதி எவ்­வா­றாக இருப்­பினும் அவர்­களை பங்­கேற்க செய்­வதை ஊக்­கு­விப்­ப­தாக வலு­வூட்­டப்­பட்­டி­ருத்தல் வேண்டும். உண்­மை­யி­லேயே, எந்­த­வொரு நிலை­மா­று­கால நீதி செயன்­மு­றை­யிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பங்­கேற்பு, பாது­காப்பு மற்றும் மாண்பு ஆகி­ய­வற்றின் முக்­கி­யத்­து­வத்தை ஐக்­கிய நாடுகள் வலி­யு­றுத்­து­கின்­றது.

இரண்­டா­வ­தாக, நிலை­மா­று­ கால நீதியின் கீழ்­வரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சாட்­சி­களும் ஏனைய சட்­டப்­ப­டி­யான அல்­லது திட்­ட­மி­டப்­பட்ட குற்­ற­வியல் குற்­றங்­களின் சாட்­சி­களை வித்­தி­யா­ச­மான தேவை­க­ளையும் எளிதில் பாதிப்­ப­டை­யக்­ கூ­டிய நிலை­க­ளையும் கொண்­டுள்­ளனர். உதா­ர­ண­மாக, நிலை­மாறு கால நீதி சூழ­மை­வு­களில் உள்­ள­டங்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சாட்­சி­களும் பொது­வாக கொடூ­ர­மா­னதும் திட்­ட­மி­டப்­பட்­டதும் தாப­னப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மான வடி­வங்­களைக் கொண்ட வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளா­குவ­துடன் சில சமயம் அவை பல பரம்­பரை காலம் வரை நீடிக்­க ­மு­டியும். இந்­நி­லைமை ஏனைய சாதா­ரண அல்­லது திட்­ட­மி­டப்­பட்ட குற்­றச்­செ­யல்­க­ளிலும் காணக்­கூ­டி­ய­தாக இருப்­பினும் அப்­ப­டி­யாக காணப்­படும் வாய்ப்­பா­னது மிகவும் அரி­தா­ன­தா­கவே இருக்­கின்­ற­தென்­ப­துடன் அது அவ்­வா­றான குற்­றச்­செ­யல்­களின் பொது­வான தன்­மை­யாக அல்­லாமல் விதி­வி­லக்­கா­ன­தொரு நிலை­யா­கவே இருக்­கின்­றது. ஆகவே, நிலை­மாறு கால நீதி எனும் விட­யத்தில் சாட்­சி­க­ளுக்­கான பாது­காப்பு முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைப் போலவே சாட்­சி­க­ளுக்­கான உதவி வழி­மு­றை­களும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­டுதல் அவ­சி­ய­மா­ன­தாகும். மேலும், சாட்­சி­க­ளுக்­கான உத­விகள் கடந்த காலத்­தையும் சம்­பந்­தப்­பட்ட மோத­லுக்­கான மூல­கா­ர­ணங்­க­ளையும் பற்­றிய சிறந்த புரிந்­து­ணர்­வு­டன்­ கூ­டிய உள­ச­மூக உத­வி­களை ஒருங்­கி­ணைப்­பதன் மூலம் பல்­து­றை­சார்ந்த அணு­கு ­மு­றை­யினை கொண்­டி­ருத்தல் வேண்டும்.

மூன்­றா­வதும் மிகவும் முக்­கி­ய­மா­னதும் விடயம் யாதெனில் நிலை­மா­று ­கால நீதி முறைக்­கான ஏற்­பாட்டின் கீழ் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் சாட்­சி­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் அல்­லது வன்­மு­றைக்­கான அச்­சு­றுத்­தல்கள் தனி­ந­பர்கள் அல்­லது ஒழுங்­க­மைந்த தனியார் தரப்­பு­க­ளி­ட­மி­ருந்து அல்­லாமல் அரச மட்­டத்­தி­லி­ருந்து அல்­லது முன்னாள் அரச மட்ட அமைப்­பு­க­ளி­லி­ருந்து தோற்றம் பெறு­கின்­றது. இதற்­கான காரணம் நிலை­மாறு கால நீதி ஏற்­பாட்டில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சாட்­சி­களும் அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில் அரச மட்ட அமைப்­பு­க­ளினால் புரி­யப்­பட்ட குற்­றச் ­செ­யல்கள் தொடர்­பா­கவே சாட்­சி­ய­ம­ளிக்­கின்­றனர். மேலும், அரச சட்ட அமு­லாக்கல் பொறி­மு­றைக்­குள்­ளி­ருப்­ப­வர்கள் சாட்­சியம் வழங்கும் போதும் அவர்கள் அரச மட்­டத்­தி­லான வன்­மு­றைக்கு உள்­ளா­க்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களை கொண்­டி­ருக்­கின்­றனர் இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் நிலை­மாறு கால நீதி ஏற்­பாட்­டிற்­குட்­பட்ட சாட்­சி­களை பாது­காக்கும் அல­குகள் அரச அதி­கா­ரத்தை கொண்­டுள்ள அமைப்­பு­க­ளி­லி­ருந்து தோற்­றம்­ பெறும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு பிர­தா­ன­மான கவ­னத்தை செலுத்­துதல் வேண்டும். இந்­நிலை இலங்கை சூழ­மை­வுக்கு மிகவும் பொருந்­தக்­கூ­டி­ய­தாக அமை­கின்­ற­தற்­கான காரணம் யுத்த காலத்தில் இடம்­பெற்ற கொலைகள், சித்­தி­ர­வ­தைகள், காணாமல் ஆக்­கப்­ப­டுதல் போன்­றவை பற்­றிய குற்­றச்­சாட்­டுகள் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்கள் மற்றும் பாது­காப்பு படை­யினர் மீது சுமத்­தப்­பட்­டி­ருப்­பதே ஆகும். ஆகவே, காணாமற் போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம், எதிர்­கால விசேட நீதி­மன்றம் மற்றும் உண்­மையைக்கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­குழு ஆகி­யவற்றின் முன்னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சாட்­சி­களும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் மற்றும் பாது­காப்பு சார்ந்த அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. ஆகவே, ஐக்­கிய அமெ­ரிக்கா, கனடா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக பெரு­ம­ளவு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அமைப்­புகள் மீது தங்­கி­யி­ருப்­பதைப் போன்­ற­தொரு முறை கண்­மூ­டித்­த­ன­மாக இலங்­கையில் பின்­பற்­று­மாயின் அது இச்­சூ­ழ­மைவில் தவ­றா­ன­தொரு விட­ய­மாக அமைந்­து ­வி­டக்­கூடும்.

மேலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள குறித்த சவால்கள் மற்றும் தேவை­களை கருத்­திற் ­கொள்ளும் போது சாட்­சி­களை பாது­காப்­ப­தற்­காக தேசிய ரீதியில் காணப்­படும் குறை­பா­டு­க­ளு­டன் ­கூ­டிய முறை­மையில் தங்கியிருப்பதைப் பார்க்கிலும் சுயாதீனமானதும் தன் நிறைவும் கொண்ட வகையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்கக்கூடிய பொறிமுறையொன்றை தனக்குள்ளேயே தாபித்துக்கொள்ளுதல் இலங்கையின் எதிர்கால நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு அணுகுமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைவதுடன் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை நோக்கி இலங்கை பயணிக்கும் விடயத்தில் அவர்களின் செயலூக்க மிகு பங்களிப்பினை இது வெகுவாக உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட காணாமற் போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்திற்கான சட்டம் இந்த அலுவலகத்துடன் தொடர்புபடுகின்ற பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்குவதற்கும் வழிசமைக்கும் வகையில் தன்னாளுகையும் தன்னிறைவும் கொண்டவாறான பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவொன்றினை தோற்றுவிக்கக் கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இது கடந்த காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் பற்றி விசாரணை செய்யும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கு எந்தவித ஆற்றலையும் கொண்டிருக்காமல் அல்லது அடிப்படையில் பல குறைபாடுகளைக் கொண்ட பாதுகாப்பு முறைமைகளைக் கொண்டிருந்ததாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுடன் ஒப்புநோக்குகையில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம் என கூற முடியும். ஆகவே, இந்த நிலைமாறு கால நீதிப் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான பிரிவுகளை உருவாக்குமெனவும் அந்தந்த பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்பாணையை ஈடேற்றுவதற்கு வசதியளிக்கும் பொருட்டு அவற்றை உறுதியான முறையில் தாபிக்குமெனவும் நம்பிக்கை கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-08#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.