Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

Featured Replies

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

 
ICC Champions Trophy Ambassador
singer-league-2017-728.jpg

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது.  

எதிர்வரும் ஜூன் மாதம்  1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு  இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து சார்பாக இயன் பெல்லும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா சார்பாக முறையே ஷேன் போண்ட், மைக் ஹஸ்ஸி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் விஷேட தூதுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான சம்பியன் கிண்ணத்தின் முதலாவது போட்டி நடைபெற சரியாக 50 தினங்களுக்கு முன்னர் முன்னணி வீரர்கள் அடங்கிய இந்த பெயர் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இத்தொடரிற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் தம்மிடையே 1774 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு, 48 சதங்களுடன் தம்மிடையே மொத்தமாக 51,906 ஓட்டங்களினையும் குவித்து 838 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டேவிட் றிச்சர்ட்சன் தூதுவர்கள் தொடர்பாக பேசும் போது,

சம்பியன் கிண்ணத்தொடர் ஆரம்பாக 50 நாட்களின் முன்னர் தலைசிறந்த வீரர்கள் குழாமொன்றினை சம்பியன் கிண்ணத்திற்கான விஷேட தூதுவர்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எமது இந்த நிகழ்ச்சித்திட்டம் மூலம் முன்னோடி வீரர்களான இவர்கள் இடையிலும் புதிய தலைமுறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையில் இணைப்பு பாலம் ஒன்று உருவாகும் என நம்புகின்றோம். இன்னும் கிரிக்கெட்டினை மேலும் சிறந்ததாக மாற்றக்கூடிய வாய்ப்பும் உருவாகும்  என்றார்.

அத்துடன்,

தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குழாம், ஐ.சி.சி இன் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக சம்பியன் கிண்ணத்தில் நடைபெற இருக்கும் 15 போட்டிகள் பற்றிய தமது கருத்துக்களையும், போட்டிகள் பற்றிய தமது அனுபவ ரீதியிலான கண்ணோட்டங்களினையும் வழங்கும். இவை அனைத்தையும் நிச்சயமாக  நாம் விரும்பி வாசிப்போம் என்றும் றிச்சர்ட்சன் தெரிவித்திருந்தார்.  

சம்பியன் கிண்ணத் தொடரில், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் பங்கேற்றிருக்கும் குமார் சங்கக்கார தனது கருத்தினை வெளியிட்டிருந்த போது,

இத்தொடரின் விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதையும், போட்டிகள் பற்றிய ஆய்வாளராய் செயற்படப்போவதையும் கெளரவமாகக் கருதுகின்றேன். அத்துடன் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டியமைக்காக சந்தோசமும் அடைகின்றேன். நான் பங்கேற்று ரசித்து விளையாடியிருந்த தொடரொன்றிற்காக நெருங்கி வேலை செய்வதிலும் மகிழ்ச்சி கொள்கின்றேன். அத்துடன் இத்தொடரிற்காக எனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன்என்றார்.

மேலும்,இலங்கை இத்தொடரில்  எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் இளம் அணி. இத்தொடரினை இதே நிலமைகளுடன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து 2019இல் நடைபெற இருக்கும் ஐ.சி.சி உலகக் கிண்ணத்திற்காக சரியான வாய்ப்பாக எம் நாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் உறுதியோடு இருக்கின்றேன். “  

என்று குமார் சங்கக்கார சம்பியன் கிண்ணத்தில்  இலங்கை அணி பற்றிய தனது கருத்தினை  தெரிவித்திருந்தார்.

http://www.thepapare.com

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Baseball und Text

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

 
Kumar Sangakkara
singer-league-2017-728.jpg

எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

அதேநேரம், நேரடி ஒளிபரப்பிற்கான வரைபு திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் சபை முதல் தடவையாக வெளியிட்டுள்ள நிலையில், வீரர்களை கண்காணிக்கும் புகைப்படக் கருவி (Camera) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது.

முன்னாள் அணித் தலைவர்களான, அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், இலங்கை அணியை வழிநடத்தியிருந்த குமார் சங்கக்கார மற்றும் தென்னாபிரிக்காவின் கிரகம் ஸ்மித் ஆகியோர் முதல் தடவையாக ICC தொலைகாட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக தோன்றவுள்ளனர்.  

ஏனைய பிரசித்தி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி, ஷேன் வோர்ன், மைக்கல் ஸ்லேட்டர், நசார் ஹுசைன், மைக்கல் ஆர்த்தடன், ஷோன் பொல்லொக், சஞ்சய் மஞ்ஞேக்கர், இயன் பிஷொப்,  ரமிஸ் ராஜா, சைமன் டூல் மற்றும் அத்தர் அலி கான் ஆகியோரும் நேரடி வர்ணனை செய்யவுள்ளனர்.  

ரிக்கி பொண்டிங்:ஒரு கிரிக்கெட் வீரராக நான் எப்பொழுதும் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை எதிர்பார்த்திருப்பேன். இரண்டு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியது என்னை சிலிர்ப்பூட்டுகின்றது. இம்முறை வர்ணனையாளர் குழுவுடன் இணைந்து வர்ணனையாளராக திறமைகளை வெளிப்படுத்தவுள்ளேன். இறுதிப் போட்டிக்கு பெட் கம்மிங்ஸ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோருடன் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்று எதிர்பார்கின்றேன். “  

பிரண்டன் மெக்கலம் : “ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் என்று சொல்லும் பொழுது பல பழைய இனிய நினைவுகள் மலர்கின்றன. அத்துடன், அனைத்து அணிகளும்,கிண்ணத்தை வெல்ல முயற்சிக்கும். இந்த 50 ஓவர் போட்டிகளில் முத்திரை பதிக்க சகல அணிகளும் ஆர்வத்துடன் விளையாடும். பெருமை மிக்க இந்த பெரும் நிகழ்வில் வர்ணனை செய்ய காத்திருக்கின்றேன். அத்துடன், பொண்டிங், கங்குலி மற்றும் ஸ்மித் போன்றவர்களுடன் வேலை செய்வது மிகவும் குதூகலமாக இருக்கப் போகின்றது. அத்துடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனித்தன்மை மற்றும் விரிவான களநிலவரங்களை வழங்கவிருக்கின்றோம்

கிரகம் ஸ்மித் : “இவ்வருடத்துக்கான சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு வர்ணனை செய்ய கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டவில்லை. இந்த மாபெரும் போட்டியில் எல்லா அணிகளுக்கும் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன . நிச்சியமாக  பல ஆச்சரியங்கள் மற்றும் புதுமைகள் காத்திருகின்றன. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்

குமார் சங்கக்கார : “சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் முக்கியம் வாய்ந்த போட்டியாகும். நான் மிகவும் நேசித்த மற்றும் இந்த போட்டிகளில் நான் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினேன். அத்துடன், கிடைத்த வெற்றிகளை கௌரவத்துடன் ருசித்தேன். இப்போது ஒரு வர்ணனையாளராக பங்குபற்றுகின்றேன். இந்த மாபெரும் போட்டியில் பங்குபற்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன். அத்துடன் சிறந்த வீரர்களுக்கு மத்தியில் அணிகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. அதனால் நிறைய அணிகளுக்கு கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருகின்றது. அதனால் மூன்று வாரத்துக்கான விறுவிறுப்பான போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.“

ICC தொலைக்காட்சியானது, தயாரிப்பு நிறுவனங்களான சன்செட் மற்றும் வைன் (Sunset + Vine) என்ற நிறுவனங்களின் உதவியுடனும் இலத்திரனியல் உபகரண உதவி நிறுவனமான NEP Broadcast Solutions நிறுவனத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.ICC TV commentary

எட்டு அணிகள் பங்குபற்றும் இந்தத்  தொடரில் முதலாவது போட்டியாக சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியுடன் பங்களாதேஷ் அணி ஜூன் மாதம் 1ஆம் திகதி ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றது.

இப்போட்டி அதி நவீன தொழிநுட்பத்துடன் நேரலையாக ரசிகர்களை சென்றடைய உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 34 கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.  

ஒவ்வொரு  போட்டியிலும் 6 வீரர்களுக்கான கண்காணிப்பு கெமெராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், ஜூன் 18ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சிறப்பு ஒளிபரப்புக்காக ட்ரோன் (Drone) கெமராக்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

இவை தவிர ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பில், சில நுணுக்கமான தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ள அதேவேளை, கிரபிக் உலகில் முன்னணி நிறுவனமான சிரோன் ஹீகோ (Chyron Hego)  நிறுவனத்தின் உதவியுடன் வீரர்களின் புள்ளிவிபரவியல் மற்றும் கிரிக்கெட் புள்ளிவிபரவியல் ஆய்வு போன்றன துல்லியமாக வழங்கப்படவுள்ளன.

போட்டிகளின் போது நேரடி ஒளிபரப்பில் முக்கியமான புள்ளி விபரங்கள் பற்றிய விடயங்களை விளையாட்டு கிரபிக் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான Alston Elliott என்ற நிறுவனம் வழங்கவுள்ளதோடு,  அப்புள்ளி விபரம் DixonBaxi என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட புதிய வகையில் உருவாக்கப்பட்ட கிரபிக் வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

போட்டி ஆரம்பிபதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக நாணய சுழற்சி மற்றும் துடுப்பாட்ட களத்தின் நிலவரம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட புள்ளி விபரங்களும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.   

அத்துடன், இன்னிங்ஸ் இடைவேளையின்போது கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் போட்டியின் முக்கிய விடயங்கள் குறித்து மீள்பார்வை செய்யப்படும். அத்துடன், வெற்றி இலக்கு குறித்து முன்னோட்டம், பழைய சாதனைகள் என்பன ICC சம்பியன்ஸ் கிண்ண முன்னாள் நட்சத்திர வீரர்களினால் ஆய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அத்துடன் ICC தொலைக்காட்சியானது போட்டி குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, உத்தியோகபூர்வ ஒளிபரப்பு மற்றும் உத்தியோகபூர்வ ஊடக பங்குதாரர்களுக்கும் ICC இன் விபரங்கள் பகிர்ந்தளிக்கும் சேவையினூடாக வழங்கப்படவுள்ளது. இந்த உள்ளடக்க கோவையில் வீரர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அணிகளை பற்றிய விரிவான செய்திகளும் அடங்கும்.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.