Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றமடைந்துள்ள தமிழக மனப்போக்கு மத்தியிலும் செல்வாக்கு செலுத்துமா?

Featured Replies

அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இலங்கை - இந்திய உறவுகள் பற்றி பல இந்திய புத்திஜீவிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பில் சென்றிருந்தேன். இந்த மகாநாடு பெரு வெற்றியில் முடிவடைந்திருந்தது. ஏறத்தாழ 300 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, பங்களாதேஷின் மொஹமட் யூனுஸ் மற்றும் தலைவர்களான லெச்வலீசா, கென்னத் கௌண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்கு பற்றினர். இந்த மகாநாடானது சோனியா காந்தியினதும் காங்கிரஸ் கட்சியினதும் ஒரு தனிப்பட்ட ஏற்பாடாக இருந்தது. பல்வேறு முக்கிய தீர்மானங்கள் இந்த மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் முக்கியமானது உலகம் முழுவதிலும் காந்திய கோட்பாடுகள் பெறுமதிகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவாகும். மகாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இருந்து இந்த செயற்குழுவிற்காக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

காந்தியும் இந்திய உட்கிடையும்

இந்தியாவில் மகாத்மா காந்தியின் போதனைகள் காரணமான செல்வாக்கு இன்னமும் உயரளவில் இருப்பது கண்டு வியப்படைந்தேன். காந்தியக் கோட்பாடுகள் பாடசாலைகளில் போதிக்கப்படுவதுடன் நாளாந்த இந்திய வாழ்க்கையில் காந்திய கோட்பாடுகளின் பொருத்தப்பாடு பற்றிய `காந்தி' மற்றும் `பகத்சிங்' ஆகிய படங்கள் வெளிவந்திருக்கின்றன. காந்தியக் கோட்பாடுகள் அங்கே பெரிதும் வியாபித்திருப்பது பற்றியும் அவரது வாழ்க்கை மற்றும் உதாரணங்கள் மூலம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியங்களை நீடிப்பதற்காக பல்வேறு சக்திகளை அவரால் ஐக்கியப்படுத்த முடிந்தமை பற்றியும் வியக்காமல் இருக்க முடியாது. காந்தியின் செல்வாக்கு பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. உதாரணமாக, நெல்சன் மண்டேலாவும் டெஸ்மன் டுட்டுவும், தமது அரசியல் வாழ்க்கையிலான காந்தியின் செல்வாக்கை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மார்ட்டின் லூதர் கிங்கும் மகாத்மா காந்தியினால் பெரிதும் கவரப்பட்டார் என்பதும் அமெரிக்காவில் கறுப்பின மக்களை அகிம்சை போராட்டத்தின் ஊடாக வழிநடத்துவதற்கு இது உதவியது என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்று. இனவெறிக்கெதிராக அமெரிக்காவிலே கறுப்பின மக்கள் மத்தியிலே வன்முறை போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற மல்கொம் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதற்கு அப்பால் சென்று கிழக்கு ஐரோப்பாவின் வெல்வெட் புரட்சியை பார்ப்போமானால் லெச் வலேரா மற்றும் வக்லவ் ஹவெல் போன்ற அவர்களது தலைவர்கள் காந்தியின் தம் மீதான செல்வாக்கை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

டெல்லியில் நடைபெற்ற மகாநாட்டின் ஒரு பெறுபேறாக, இலங்கையில் ஒரு மகாத்மா காந்தி கண்காட்சியை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறோம். குறிப்பாக, மாகாண மட்டங்களில் இதனை நடத்துவதற்கு திட்டமிடப்படுகிறது. அகிம்சை கோட்பாடு பற்றிய ஒரு விவாதத்தை இது உருவாக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இலங்கையில் இந்தியாவின் வகிபாகம்

இலங்கை விவகாரத்தில் ஈடுபாடுடைய, இந்திய புத்திஜீவிகள் பலரை டெல்லி மகாநாட்டில் சந்தித்து கலந்துரையாடிய போது வெளிப்பட்ட கருத்து என்னவென்றால், இலங்கையின் நடப்புகள் காரணமாக இந்தியா பிரச்சினைப்படுகிறது என்பதாகும். அதேசமயம் இலங்கையுடனான இந்தியாவின் உறவு சிறப்பானதாக இருப்பதுடன் அரசாங்கத்தையும் ஆதரிப்பதாக இருக்கிறது. கவலைக்குரிய விடயங்கள் என்னவென்பது நன்கு அறியப்பட்டதே. இதே கவலைகள் தான் சர்வதேச சமூகத்திற்கும் இருக்கிறது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், இந்தியாவிற்கான அகதிகளின் வருகை, மனித உரிமை மீறல்கள், குறிப்பாக கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் என்று இந்த கவலைக்கான அம்சங்கள் வேறுபடுகின்றன. எவ்வாறெனினும், அவர்களது பிரதான வலியுறுத்தல் என்னவென்றால், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் தீர்வு திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதுதான்.

1998 இல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகள் முன்னேற்றமடைந்திருக்கின்றன. தற்போது இலங்கை ஏற்றுமதியில் 15 சதவீதத்தை இந்தியா பெறுகிறது. உண்மையில், இலங்கையின் இறக்குமதியின் ஒரு பெரும் மூலமாக இந்தியா வந்திருப்பதுடன், இலங்கைக்கான ஏற்றுமதி பொருட்களுக்கான 3 ஆவது பெரும் ஏற்றுமதி நாடாக இருக்கிறது.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழான பொருட்பட்டியலை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது விரிவுபடுத்தும் என்பதுடன், சேவைகள் துறை, முதலீடு மற்றும் வர்த்தக அனுசரணை என்பவற்றையும் இது மேம்படுத்தும். தற்போதுள்ள நிலையில், இலங்கையின் போக்குவரத்து துறையானது, இந்திய தயாரிப்புகளினால் நிறைந்திருக்கிறது என்று கூறமுடியும். அசோக்லேடன், டாட்டா பஸ்கள், எஸ்.யு.வி.க்கள் மற்றும் மாருதி கார்கள் என்பவை இலங்கையின் போக்குவரத்து துறையை வியாபித்துள்ளது. இலங்கையில் ஆகக் கூடுதலாக விற்பனை செய்யப்படும் காராக மாருதி காணப்படுகிறது. மாதம் ஒன்றில் 500 இற்கும் அதிகமான மாருதி கார்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய மருந்துகள், சவர்க்காரம், கிட்கட் சொக்கலேட்டுகள், உடு புடவை வகைகள் என்பன உள்ளூர் சந்தையை ஆக்கிரமித்திருக்கின்றன.

இந்திய - இலங்கை உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்ந்த நிகழ்வுகள் என்பவை ஒரு துரதிர்ஷ்டமான அனுபவம். ஆனால், அதன் பின்னர் உறவுகள் கணிசமானளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இது வரலாறு. அண்மையில் இந்தியாவின் என்.டி.ரி.வி. ஒரு செய்மதி மூல கலந்துரையாடலை நடத்தியிருந்தது. இதன் விடயம், அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பிரத்தியேக குழுக்கள் இதில் பங்குபற்றியிருந்தன. இதன்போது இலங்கை குழுவினர், இந்தியாவுடனான இலங்கையின் உறவு சிறந்த முறையில் வளர்ச்சியடைந்திருப்பதாக கருத்து வெளியிட்டனர்.

விடுதலைப் புலிகள் தொடர்பிலான இந்திய மனப்போக்கில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை நான் காணவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறார்கள். எவ்வாறெனினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்தும் சந்திப்புகளை நடத்துவதற்கு வாய்ப்பு உண்டு. அதேநேரம், இலங்கையில் இருந்து இந்தியா கூடுதலான விருந்தாளிகளை பெற்றுக் கொள்வதில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். அரசாங்க அதிகாரிகள், பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை கட்சி பிரதி நிதிகள் வரை இந்த எல்லை காணப்படுகிறது.

தமிழ்நாட்டு காரணி

விடுதலைப் புலிகள் தொடர்பிலான மனப்போக்கு தமிழ் நாட்டில் ஒரு அடிப்படையான வழியில் மாற்றமடைந்திருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களும் மக்களும் விடுதலைப் புலிகள் மீது பகைமை கொண்டிருந்தனர். ஆனால், தொடர்ந்த யுத்தம் அகதிகள் படையெடுப்பு மற்றும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் என்பவை விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஒரு மனமாற்றத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது. என்.டி.ரி.வி., ஜெயா ரி.வி., சண் ரி.வி. மற்றும் ஏனைய இந்திய தொலைக்காட்சிகள் யுத்தம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொது மக்கள் உயிரிழப்பு சேதாரங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் பாணுக்கான நீண்ட பொதுமக்கள் வரிசை என்பவற்றை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கும் இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகின்றன.

ஹொலிவூட் என்று அழைக்கப்படுகின்ற தமிழ்நாடு சினிமா துறையானது இந்தியாவின் இரண்டாவது பெரிய சினிமாத் துறையாகக் காணப்படுகிறது. தமது போராட்டம் பற்றிய விளக்கங்களுக்காக தமிழ்நாட்டு சினிமா துறையை பயன்படுத்துவதில் உள்ள அனுகூலத்தை புலிகள் நன்கு அறிவர். தமிழ்நாடு சினிமா கலைஞர்களினது அனுசரணையுடன் கடந்த வருட இறுதிப் பகுதியில் ஆணிவேர் என்ற ஒரு முழு நீளத் திரைப்படத்தை விடுதலைப் புலிகள் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திரையிட்டனர். தடை காரணமாக இந்தியா மற்றும் இலங்கையில் இது திரையிடப்படவில்லை. ஒரு தமிழ்நாட்டு இளம் பெண் பத்திரிகையாளர் இலங்கையின் யுத்த பகுதிகளில் சந்திக்கின்ற அனுபவங்கள், 1996இல் மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.