Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

Featured Replies

‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

 

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 
 
'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், கழகமும் நம் கையைவிட்டுப் போய்விடும்' என விவாதித்துள்ளனர். முதல்வரின் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பகமாக உள்ளது' என்றார். இந்தக் கருத்தை எதிர்பார்த்த தினகரனும், 'எம்.எல்.ஏக்கள் அனைவரும் என் பின்னால்தான் உள்ளனர்' எனப் பேட்டியளித்தார். தற்போது தினகரனுக்கு ஆதரவாக, வெற்றிவேல், சுப்ரமணியம், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதித்தனர். அதில், ‘முதல்வர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்துக்கே வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். கூடவே, மா.ஃபா.பாண்டியராஜன் உள்பட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுகுறித்து, தங்களுக்குள் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த விவாதத்தில், ‘முதல்வர் பதவியில் சமசரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்ற கருத்தையே கொங்கு மண்டல அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவி மட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. அமைச்சர்களின் ஒருமித்த கருத்தாகவும் இது உள்ளது. இதற்குக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா எதிர்ப்பு என்பது தீபா பக்கம் சென்றது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா எதிர்ப்பு அவர் பக்கம் சென்றது. மக்களும் அவர் பக்கம் நின்றார்கள். இந்த இடத்தில்தான் பன்னீர்செல்வம் தவறு செய்தார் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 

பன்னீர்செல்வம்

‘சசிகலா குடும்பத்தின் நிர்பந்தத்தை ஏற்று பன்னீர்செல்வம் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் பாலபாடம் என்பது, உறுதியான உத்தரவாதம் இல்லாமல் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதுதான். பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில், 'மீண்டும் அமைச்சரவையில் அவரை சேர்க்கக் கூடாது' என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். இந்த ஏமாற்றத்தில்தான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். 'தற்போது நிலைமை அப்படி இல்லை. மிகக் குறைந்த மெஜாரிட்டியில்தான் இந்த அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அப்படியே தொடரும். இன்னொரு மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்தச் சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பன்னீர்செல்வத்தை மீறித்தான் இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்ததுபோல, இந்தப் பதவி நமக்கு வந்து சேரவில்லை. அமைச்சரவையில் நம்பர் டூ இடத்தில் இருந்ததால்தான் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. இதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து அரசை செலுத்துவேன். நான் பொம்மை முதல்வர் என்று யாரும் சொல்ல முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போதும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிரடியை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இரு தரப்பும் ஏற்கும்விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்க உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் விவகாரம் முடிவுக்கு வரும்" என்றார் விரிவாக. 

"பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதிலும், கொங்கு மண்டல லாபியை வளர்த்துவிடுவதான் பா.ஜ.கவின் முக்கிய நோக்கம். கொங்கு மண்டலத்தின் சில தொகுதிகளில் பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுவதன் மூலம், அந்த வாக்குகளையும் பா.ஜ.கவை நோக்கித் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. அதையொட்டியே, 'எடப்பாடி பழனிசாமியே பதவியில் தொடரட்டும். கட்சிப் பதவியை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடலாம்' என சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

தினகரனால் வளர்த்துவிடப்பட்ட பன்னீர்செல்வமும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துவிட்டனர். இந்தக் கோட்டை அழிக்கும் வித்தை தெரியாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், 'துரோகம் தொடர்ந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?' எனப் புலம்பி வருகிறாராம் தினகரன்.

http://www.vikatan.com/news/tamilnadu/86890-no-compromise-on-giving-up-cm-post---eps-to-ops.html

http://www.vikatan.com/news/

  • தொடங்கியவர்

கழட்டிவிடப்படுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்? - எடப்பாடி பழனிசாமி முகாம் பரபர

 
 

பன்னீர்செல்வம்

.தி.மு.கழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. 122 எம்.எல்.ஏ-க்கள், 37 எம்.பி-க்கள், சுமார் 50 மாவட்டச் செயலாளர்கள்...என முதல்வர் எடப்பாடி கோஷ்டி பிரமாண்டமாய் நிற்கிறது. இன்னொரு பக்கம்...12 எம்.எல்.ஏ-கள் (ஒ. பன்னீர்செல்வத்தையும் சேர்த்து), 12 எம்.பி-கள், 2 மாவட்டச் செயலாளர்கள்...என ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டி நிற்கிறது. இந்த இரு கோஷ்டியினரும் கைகோத்தால்தான் தேர்தல் கமிஷனின் தரப்பில் இரட்டை இலைச் சின்னமும், பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்கும். இந்த நிலையில், 

கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது, '' ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் சசிகலாவின் குடும்பத்துக்குள் அதிமுக சென்றுவிட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய தர்மயுத்தம் அறப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று  எடப்பாடியார் தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவே எங்கள் முதல் வெற்றி"  என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.டி.வி. தினகரன் தற்போது கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்துவிட்டார். அவருடன் இருந்த ஒன்பது எம்.எல்.ஏ-க்கள், சில மாவட்டச் செயலாளர்கள்... எடப்பாடி கோஷ்டியினருடன் ஐக்கியமாகிவிட்டனர்.  

தினகரன் மீடியாக்களிடம் பேசும்போது, " இன்று (19.4.17) ராயப்பேட்டையில் நடக்கவிருந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன். எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சில நாள்களிலேயே அமைச்சர்கள் என்னை திடீரென நீக்க எதோ ஒரு பயம்தான் காரணமாக உள்ளது. அது என்ன எனத் தெரியவில்லை. யாரோ சிலருக்கு உள்ள பயத்தால் என்னை ஒதுக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை நீக்குவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நன்மை என்றால் நான் விலகி இருக்கவே தயார். போட்டிக் கூட்டம் நடத்தி அவர்களுக்கு சரிக்கு சரியாக பலம் காட்ட நான் விரும்பவில்லை. நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்திருந்தால் கண்டிப்பாக நானும் கலந்துகொண்டிருப்பேன். அவசரகதியில் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். ஆனால் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, அது பொதுச்செயலாளர் சசிகலா எனக்குத் தந்தது. எனவே அவரிடம் ஆலோசனை நடத்தியபிறகு ராஜினாமா பற்றி கூறுவேன். இரு அணியினரும் இணைந்து செயல்படுவது குறித்து எந்த பிரச்னையுமில்லை"  என்று ஜகா வாங்கிவிட்டார். இதை எடப்பாடி கோஷ்டியினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆக, தினகரன் போட்டியில் இருந்து விலகியது எடப்பாடி கோஷ்டியினருக்குத்தான் லாபம். 

பழனிசாமி

தற்போது தனிப்பெரும் கோஷ்டியாக உருவெடுத்துள்ள எடப்பாடியார் கோஷ்டியினர் மெஜாரிட்டி எம்.எல்.ஏ-க்கள் கையில் வைத்திருப்பதால், யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே ஆட்சியை நடத்திச் செல்லலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது." இனி, ஒ. பன்னீர்செல்வம் எதற்கு? எக்காரணம் கொண்டும் அம்மா ஆட்சியை அவர் கவிழ்க்கமாட்டார். சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர். எப்படியும் ஒ.பன்னீர்செவ்வம் கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் இனி அங்கே பவர் வராது என்பது புரிந்துகொண்டு நம் பக்கம் தாவிவிடுவார்கள். அதுவரை பொறுப்போம். பிறகு பார்க்கலாம்" என்று எடப்பாடி கோஷ்டிப் பிரமுகர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கிறார். 

அவரே தொடர்ந்து பேசும்போது, " ஒ.பன்னீர்செல்வம் இன்றைக்கு செல்வாக்கு உள்ள தலைவர். அவருக்கு மீண்டும் நிதி அமைச்சர் பதவி தரத்தயார். அவரிடம் இருக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி தருவோம். மற்றபடி, முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியெல்லாம் எதிர்பார்த்தால்... நடக்காது" என்கிறார். 

இந்த மாதிரி பேச்சு ஒ. பன்னீர்செல்வம் கோஷ்டியினரை டென்ஷன் ஆக்கியுள்ளது. ' நாங்கள் நினைத்தால், இரட்டை இலையை முடக்கி விடுவோம். பொதுச்செயலாளர் பதவி அவசியம் வேண்டும்'  என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பதவிக்கு சசிகலாவின் நெருங்கிய உறவினரும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை தேர்வு செய்து வைத்திருக்கிறார் எடப்பாடியார். 

தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்து வரும் பாஜக பிரமுகர் பேசுகையில் , "மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் தங்கள் வசம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்து வந்தனர். அதன் பேரிலேயே, அவர்களுக்குத் தேவையான உதவிகளை, கட்சி மேலிடம் செய்தது. ஆனால், அது பொய் என பிறகு தெரிய வந்தது. அடுத்து, சசிகலா முதல்வராக ஏதுவாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதையெல்லாம் வைத்து, இதற்கு மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி, நாங்கள் எங்கள் எதிர்கால திட்டத்தை செயல்படுத்த எண்ணுவது, என்பது முட்டாள்தனம். எனவே, இப்போதைக்கு பாஜகவின் சாய்ஸ் எடப்பாடி பழனிசாமி தான். பல விவகாரங்களில் அவர் அனுசரணையாக நடந்து கொண்டு வருகிறார். ஆகையால், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் இருக்கும் பாஜக அனுதாபி பிரமுகர்கள் விரைவில் எடப்பாடி அணிக்குச் செல்வார்கள்" என்றார்.

தினகரன் போட்டியிலிருந்து விலகியதால், இப்போது எடப்பாடியாருக்கும் ஒ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/86939-o-panneerselvam-is-being-sidelined-by-edappadi-palanisamy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.