Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஒ.பி.எஸ் இடத்தில் இ.பி.எஸ்'- பவர்சென்டரை மாற்றும் டெல்லி லாபி!

Featured Replies

'ஒ.பி.எஸ் இடத்தில் இ.பி.எஸ்'- பவர்சென்டரை மாற்றும் டெல்லி லாபி!

 
 

Eda_400_02197.jpg

“கோழி குருடாக இருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருக்குதானு பாக்கணும்” என்ற காமெடி வரிகள் போல தான் அ.தி.மு.கவின் நிலையும் இப்போது உள்ளது. பன்னீர் இருந்தால் என்ன?, பழனிசாமி இருந்தால் என்ன? நம் கண் அசைவுக்கு சரியான நபராக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு  மத்திய அரசு வந்துவிட்டது  தான் அ.தி.மு.க இணைப்பு தள்ளி போவதற்கு காரணம் என்கிறார்கள். 

தமிழக அரசியலில் காலுான்றுவதற்கு  இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பில்லை என்ற முடிவில் பி.ஜே.பி மேலிடம் உறுதியாக உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையே ஆரம்பித்தில் பி.ஜே.பி விரும்பவில்லை. ஆனால், அது உட்கட்சி விவகாரம் என்பதால் மூக்கை நுழைக்க முடியாமல் போனது. கட்சியில் இருந்து ஆட்சிக்கு சசிகலா தாவ முனைந்த போது, இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தது மத்திய அரசு. தமிழகத்தில் தங்களுக்கு நம்பிக்கையான சில நபர்கள் மூலம் சசிகலா முதல்வராக வருவதற்கு முட்டுக்கட்டை போடும் அஜெண்டாவை கையில் கொடுத்தது. அவர்கள் மூலம்தான் சசிகலாவின் நடவடிக்கையால் பன்னீர் மனம் நொந்து போய் உள்ளார் என்ற தகவல் டெல்லிக்கு சென்றது. அதன் பிறகு, மத்திய அரசு ஆடுபுலி ஆட்டத்தை வேகமாக ஆடி சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியது. 

“விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர் பன்னீர்” என்ற டெல்லிக்கும் சொல்லபட்டதால் பன்னீரை பவர் சென்டராக மாற்ற பி.ஜே.பி முடிவு செய்தது. பன்னீரை தலைமை பதவிக்கு கொண்டுவந்தால் தமிழகத்தில் நாம் நினைத்தை செய்ய முடியும் என்று கணக்கு போட்டது பி.ஜே.பி. இதற்கு இடைஞ்சலாக இருப்பது சசிகலா குடும்பம் என்பதை யூகித்து, முதலில் அந்த குடும்பத்தினரை  கட்சியை விட்டு அப்புறப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியது. சசிகலாவுக்கு சிறை, தினகரனுக்கு பெரா என  அடுத்தடுத்து சிக்கல்களை ஏற்படுத்தினார்கள். தினகரனுக்கு நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி, இனி இந்த நிலை உங்களுக்கு வரலாம் என்று அமைச்சர்களுக்கு அச்சுறத்தல் கொடுத்தார்கள். மத்திய அரசின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கிவைக்கின்றோம் என்று ஒரு வழியாக வழிக்கு வந்தார்கள். இதுவரை மத்திய அரசு கணக்குபடியே எல்லாம் சென்று கொண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு தான் பாதை மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Pan_2_600_02219.jpg

தினகரனை கழற்றிவிட்டதில் மத்திய அரசின் பங்கு எந்த அளவோ, அதே அளவு சசிகலா குடும்பத்திலும் தினகரனுக்கு எதிராக நடந்த உள்குத்து வேலைகளும் காரணம். ஆனால், சசிகலா குடும்பமே கட்சியில் இருக்க வேண்டாம் என்று கொங்கு மண்டல அமைச்சர்கள் முடிவு செய்ததின் பின்னணில் வேறு கதைகளும் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக கௌண்டர் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி உள்ளார். முதல் முறையாக இந்த சமூகத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் பன்னீர் வசம் முதல்வர் பதவிபோய்விடும் என்று  கவலை அந்த சமூகத்தின் முக்கிய பிரமுகர்களிடம் ஏற்பட்டுள்ளது.“பன்னீரும் சசிகலாவை எதிர்கிறார், நாமும் சசிகலாவை வேண்டாம் என்று தான் சொல்கிறோம், மத்திய அரசும் சசிகலா குடும்பம் வேண்டாம் என்தற்காக தான் நெருக்கடி கொடுக்கிறது. மூன்று தரப்புக்கும் அஜெண்டா ஒன்று தான் , அந்த அஜெண்டாவும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் ஏன் பதவியை நாம் விட்டுத் தரவேண்டும்” என்று அவர்கள்  ஆலோசனை செய்துள்ளார்கள்.

“மத்தியஅரசுக்கு பன்னீர் மட்டும் தான் விசுவாசம் காட்டுவாரா, நாமும் விசுவாசத்தைக் காட்டலாம்” என்று புது ரூட் போட்டுள்ளார்கள். இந்த விசுவாச ஒப்பந்தத்தை மோடியிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று யோசித்த போது தான் இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சதாசிவம் சீனில் வந்துள்ளார். பி.ஜே.பி மேல்மட்ட தலைவர்களோடு நல்ல உறவில் சதாசிவம் இருப்பதால்  அவரிடம் இது குறித்து பேசபட்டதாக கூறப்படுகிறது. அவரும் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, “பழனிசாமி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார். பன்னீர் தரப்பினால் எதை நீங்கள் செய்ய நினைக்கின்றீர்களோ, அதை பழனிசாமியே செய்து கொடுப்பார். சசிகலா குடும்பத்தை தள்ளிவைப்பதில் எந்த மாற்றுகருத்தும் இருக்காது” என்று பேசியுள்ளார்.  பி.ஜே.பி தரப்பில் இந்த டீலிங்குக்கு ஒத்துவந்துள்ளாதாக கூறப்படுகிறது. 

தமிழகத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதன் பின்னணி இது தான் என்கிறார்கள். மத்திய அரசு  சிவப்பு விளக்குகளை காரில் பயன்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதும், முதல் ஆளாக தனது காரில் இருந்த சைரனை தானே கழற்றினார் பழனிசாமி. இதன் பின்னணியே உங்கள் கட்டளையை உடனே செய்வேன் என்பதை மத்திய அரசுக்கு சொல்லாமல் சொல்வது தான் என்கிறார்கள் கொங்கு மண்டலத்தினர். டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் வந்த பிறகு தான் பன்னீர் தரப்பிடம் கெடுபிடி காட்ட துவங்கியுள்ளார்கள் அமைச்சர்கள். ஜெயக்குமார் செவ்வாய் கிழமை இரவு காட்டிய பவ்வியம், வியாழன் அன்று இல்லாமல் போனதற்கு காரணம் இதன் பின்னணியில் தான் என்கிறார்கள். இந்த தகவல்கள் பன்னீர் அணிக்கு லேட்டாக தான் கிடைத்துள்ளது. அந்த கடுப்பு தான் முனுசாமியின் பேட்டியில் எதிரொலித்தது என்கிறார்கள்.

இரண்டுஅணிகள் இணைந்தாலும் முதல்வர் பதவியை பன்னீர் கேட்கக் கூடாது என்பது தான் கொங்கு மண்டலத்தின் முக்கிய பிரமுகர்கள் வைத்திருக்கும் மறைமுக டிமாண்ட். இதை பன்னீர் தரப்பினர் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இதனால் இரண்டு அணிகளின் இணைப்பும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், இதை பற்றி எல்லாம் பி.ஜே.பி தரப்பு அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்டுவிக்க நாங்கள் தயார், ஆடுவதற்கு யார் தயார் என்ற நிலையில் தான் பி.ஜே.பி உள்ளது. அதனால் பன்னீருக்கு பதிலாக பழனிசாமி வருவதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.

பன்னீர்  இடத்தில் பழனிசாமியை வைத்து புது ரூட்டில்  பயணம் செய்ய தயாராகிவிட்டது பி.ஜே.பி. 

http://www.vikatan.com/news/tamilnadu/87093-edappadi-palanisami-in-place-of-opanneerselvam--delhi-lobby-changing-the-power-center.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.