Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்!

Featured Replies

எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்!

 
 

தினகரன்

ப்ரல் 10-ம் தேதிக்கு முன்புவரை ஆர்.கே.நகர்த் தொகுதி வேட்பாளராக, மக்களுக்கு அறிமுகமானாலும், 'முதல்வர்' என்றே தினகரனின் நெருங்கிய வட்டாரங்கள் அழைத்து வந்தன. அப்படி அழைப்பவர்களிடம், 'என்னப்பா இன்னும் தேர்தலே நடக்கல, ஜெயிக்கவுமில்லை. அதுக்குள்ளேவா' என சிரித்தபடியே தினகரன் கூறிவந்தாலும், 'ரிசல்ட் என்பது மத்தவங்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரை, நீங்க எப்பவோ முதல்வர் ஆகிட்டீங்க.' என்று உசுப்பேத்தி வைத்திருந்தனர் நெருக்கமான புள்ளிகள். 

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பூக்களைத் தூவி வரவேற்பு, திரும்பிப் பார்த்தால் பொன்னாடை போர்த்திய வாழ்த்துரை, கலைந்த முடியை சரி செய்ய உடனே சீப் எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள், வியர்த்துப் போன முகத்தைத் துடைக்க ஓடோடி வரும் விசுவாசிகள் என தொண்டர்களின் புகழாரங்களுக்கு இடையே கலர் கலராக 'லினன்' சட்டைகளில் ராஜ பவனி வந்தார் தினகரன். ஆனால்,
ஏப்ரல் 18-ம் தேதி.... காட்சிகள் மாறின. கலர் சட்டை, கசங்கிய சட்டையானது. வியர்த்து விறுவிறுக்கும் முகத்தைத் துடைக்க துண்டு எடுத்துக் கொடுக்கும் உதவியாளரைத் தவிர, முன்பு இருந்த விசுவாசிகள் யாரும் இப்போது இல்லை. முகத்திற்கு நேராக துதி பாடியவர்கள் எல்லாம் எங்கே போயினர்...? 

வெற்றித் தொப்பியை எதிர்பார்த்த அவருக்கு 'பெப்பே' தொப்பியை மாட்டிவிட்டு அவர்கள் பறந்து விட, யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது தினகரனின் வீடு.எம்.ஜி.ஆரைப் போல தன்னை 'டி..டி.வி' என்று மூன்றெழுத்தில் அழைப்பதையே விரும்பிய அவர், அதே மூன்றெழுத்துக்களால் வீழ்த்தப்பட்டுள்ளார். ஆம், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்ற மூன்றெழுத்துகளை தங்கள் பெயராகக் கொண்டவர்களால், இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் டி.டி.வி தினகரன். நாளை இந்த தமிழ்நாட்டை ஆளப்போகும் முதல்வர் நான்' என கனவுலகில் மிதந்துவந்த அவரை, இவ்வளவு சீக்கிரத்தில் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை உருவாகும்  என்று கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். 

தினகரன்


பெங்களூரு சென்று திரும்பியவர், அரசியல் மேகங்கள் தனக்கு சாதகமாக இல்லை என்றதும், ஏப்ரல் 19-ம் தேதி மதியம், 'நான் அரசியலில் இருந்து நேற்றே ஒதுங்கி விட்டேன். கட்சியையும், ஆட்சியையும் களங்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற பின், என் ராஜினாமா குறித்து யோசிப்பேன்' என ஒரு ஞானியைப் போல(!) பேசிவிட்டு வீடு சென்றார். 

'இதுவரை எனக்கு ஆதரவு தெரிவித்த கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றிகள்' என ட்வீட் போட்டுவிட்டு வீட்டில் உள்ள தனது சோபாவில் அமைதியாக அமர்ந்து விட்டார். அதிகாரத்தில் இருந்தபோது கூடிய கூட்டம், இப்போது இல்லை. சொற்ப அளவிலேயே தற்போது தினகரனை நேரில் வந்து சந்திக்கின்றனர் அவரின் சில விசுவாசிகள்.

 
 

ஆர்.கே.நகர் பிரசாரத்தின் போது உதவிய பெரியகுளம், தஞ்சை, மன்னார்குடி நட்புகள் சிலவும், புதுவையைச் சேர்ந்த கட்சியினர் சிலரும் நேரில் சந்தித்துப் பேச, அவர்களிடம் "நான் எம்.பி-க்கு நின்றபோது, எனக்காக தேர்தல் வேலைசெய்ய வந்தவர் பன்னீர்செல்வம். நான் பார்த்து அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்தேன். அவர் முதல்வராவதற்கு நான் சிபாரிசு செய்தேன். ஆனா இன்னைக்கு அவர் இந்தப்போடு போடுறாரு. என்னை சார், சார்-ன்னு கூப்பிட்டவரு, இன்னைக்கு பேர் சொல்லி பேசுறாரு. எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக நானும், சசிகலாவும்தான் நியமித்தோம். ஆனா ஏத்திவிட்ட ஏணியையே அவர் எட்டி உதைக்கிறார்" என விரக்தியுடன்  பேசியுள்ளார். தொடர்ந்து, "என்ன பண்றது, வளர்த்த கடா மாருல பாயுது. இதுகூட பரவாயில்ல, நேத்துவரை, அண்ணே நாங்க இருக்கோம், கூடவே இருக்கோம்னு சொன்னவங்ககூட இன்னைக்கு ஆள் அட்ரஸே காணோம். இன்னைக்கு தனியா இருக்கேன். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாருங்க. என் சொந்தங்களே நான் மேல வருவதை விரும்பல. அவங்க  கொடுத்த நெருக்கடி கொஞ்ச, நஞ்சமல்ல. இன்னைக்கு அவங்களும் என்கூட நெருக்கமா இல்லை' என கண் கலங்கினாராம் தினகரன். 

வந்தவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல, 'ஆனாலும் காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். நான் மீண்டு வருவேன்.' என்கிறார் நம்பிக்கையாக. 

எல்லா கனவுகளையும் நிஜங்களாக மாற்றிவிடுவதில்லை காலம்!

http://www.vikatan.com/news/coverstory/87066-from-mgr-to-eps-three-letters-and-aiadmk.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.