Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை போதாது’

Featured Replies


‘காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை போதாது’
 
 

article_1492959158-cv.jpg-பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்  
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம் தொடர்பாக இதுவரையில் போதுமான விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை” எனவும் கூறினார்.   

“காணாமல் போனோரின் பிரச்சினை இலகுவாகத் தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகின்றது இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரினார்.   

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், திருகோணமலை விலா விடுதியில் நேற்று (23) நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்படி பேரவையின் பிரதித் தலைவர் ரி.வசந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் தொடர்பாகவும் பேரவைக் கூட்டம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“தமிழ் மக்கள் பேரவை மக்களுடைய இயக்கமாகும். அதனடிப்டையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகின்றது. பல வகைகளிலும் தங்களுடைய பங்களிப்பு பேரவையில் பெருமளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கிருக்கின்றது.  

ஆகவே, இந்த மக்களை எங்களுடைய பேரவையில் இணைத்து ஒத்துழைக்கும் வகையில் சேவைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் நாம் ஆரய்ந்துள்ளோம்.   

மேலும், பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம்” என்றார்.   

“தங்களின் காணாமல் போன உறவுகளை இராணுவத்தினர் முன்னிலையில் உறவினர்கள் கையளித்திருந்தார்கள். அப்படியிருந்தும்; அவர்களை கையேற்றதாக இராணுவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.  

இந்த நிலையில், போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது சம்பந்தமாக போதிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தியதாக தெரியவில்லை. இதன் காரணமாகவே காணாமல் போனவர்களுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். 

- See more at: http://www.tamilmirror.lk/195286/-க-ண-மல-ப-ன-ர-த-டர-ப-ல-வ-ச-ரண-ப-த-த-#sthash.UYv4h6PD.dpuf
  • தொடங்கியவர்

காணாமல்போனோர் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியாது

p12-4c50e8481590342086bf63f5d10aa26175022182.jpg

 

போதுமான விசாரணைகளை அரசாங்கம் நடத்த வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன்
(மூதூர், சேனையூர் நிரு­பர்கள்)

காணாமல் போனோர் தொடர்­பாக அர­சாங்கம் போது­மான விசா­ர­ணை­களை  நடத்­த­வேண்டும். இது­வரை இந்­த­வி­ட யம் தொடர்­பாக போது­மான விசா­ர­ணை­கள் நடத்­தப்பட­வில்லை. இந்த மக்­களின் பிரச்சினை இல­கு­வாக தீர்க்­க  மு­டி­யாத பிரச்சினை­யாக காணப்படு கின்றது. இதற்­கான நட­வ­டிக்­கையை அரசு எடுக்­க­வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் குறிப்­பிட்டார். 

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றினை உருவாக்குவதற் கும் அதற்கான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது குறித்தும் நாம் ஆரா ய்ந்து வருகின்றோம். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில்

எவ்வாறு செயற்படுவது என்பது தொடர் பிலும் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

தமிழ் மக்கள் பேரவையின்  செயற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம் திரு­கோ­ண­மலை விலா­வி­டு­தியில் நேற்றுக் காலை 10.00 மணி­ய­ளவில் பே­ர­வையின் இணைத்தலைவர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்­றது.இந்தக் கூட்டத்தில் முன்­னாள்­ பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன்,கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், பிரதி தலைவர் ரி.வசந்­த­ராஜா உள்­ளிட்ட பேர­வையின் உறுப்­பி­னர்கள் பலரும் கலந்­து­கொண்­டனர். 

இந்த கூட்­டத்தின் இடை­வேளை நேரத்தில் திரு­கோ­ண­மலை ஆளுநர் செய­ல­கத்தின் முன்­பாக 50ஆவது நாளாக தொடந்து நடை­பெற்றுவரும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­ உ­ற­வி­னர்­களின் போராட்டம் மற்றும் பேர­வையின் கூட்­டம்­தொ­டர்­பா­க ஊடகவியலாளர்களின் கேள்­வி­க­ளுக்கு பதிலளிக்கும்போதே வடமாகாண முத­ல­மைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

தமிழ் மக்­கள்­பே­ரவை ஒரு மக்­க­ளு­டைய இயக்­க­மாகும்.அத­ன­டிப்­டையில் மக்கள் மத்­தியில் அது­தொ­டர்­பான எதிர்­பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்­கொண்டு போகின்­றது. பல­வி­தங்­க­ளிலும் தங்­க­ளு­டைய பங்­க­ளிப்பு பேர­வையில் பெரு­ம­ளவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்­க­ளுக்­கி­ருக்­கின்­றது.

 ஆகவே இந்த மக்­களை எங்­க­ளு­டைய பேர­வையில் இணைத்து ஒத்­து­ழைக்கும் வகையில் சேவை­களை முன்­னெ­டுப்­பது எவ்­வாறு? என்­பது பற்றி இன்­றைய கூட்­டத்தில் நாம் ஆரய்ந்து வரு­கின்றோம். இது­தொடர்பில் தொடந்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இந்த மக்­களின் எதிர்­பார்ப்­பின்­படி அவர்­க­ளது பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்­வது தொடர்­பாக பல நடை­முறை சிக்­கல்கள் இருக்­கின்­றன என்­பது பற்றியும் இன்­றைய கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அதன­டிப்­ப­டையில் பேர­வை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஒரு மக்கள் அணி யொன்றை உரு­வாக்­கு­வ­தென்றும் , அது­மட்­டு­மன்றி அதற்­கான கட்­ட­மைப்­பொன்றை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்­ப­து­பற்­றி­யெல்லாம் பேசி­வ­ரு­கின்றோம்.

இந்­தக்­கூட்டம் முற்­றிலும் எமது பேர­வையின் உள்­ளக கூட்­ட­மாகும். இது­வி­ட­ய­மாக முழுமை­யான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வில்லை. கூட்டம் தொடர்ந்து இடம்­பெறுவதுடன் விடயங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

காணாமல்போனோரது உறவினர்களின் போராட்டங்கள் திருகோணமலையைப் போன்று வட­மா­கா­ணத்­திலும் நடை­பெ­று­கின்­றன. பல இடங்­க­ளுக்கு நான் சென்று நிலை­மை­களை ஆரா­ய்ந்­துள்ளேன்.அங்­கும்­இ­து­போன்ற ஆர்­பாட்­டங்கள் செயற்­மு­றைகள் நடை­பெற்று வரு­கின்­றன.

அவர்­க­ளு­டைய பிரச்­சினை இல­கு­வாக தீர்க்­க­மு­டி­யாத பிரச்சி­னை­யா­க­வுள்­ளது. அவர்கள் அவர்­க­ளு­டைய சொந்­த­பந்­தங்கள், உற­வு­களை இரா­ணு­வத்­தினர் முன்­நி­லையில் கைய­ளித்­தி­ருந்­தார்கள். அப்ப­டி­யி­ருந்­தாலும் இரா­ணுவம் தாங்கள் அவர்­க­ளை­கை­யேற்­ற­தாக ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றது.

இந்த நிலை­யிலேயே போது­மான விசா­ர­ணைகள் நடை­பெற வேண்­டிய தேவை இருக்­கின்­றது. அர­சாங்கம் அது சம்­பந்­த­மாக போதிய விசா­ர­ணை­களை நடாத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை. இதன்­கா­ர­ணத்­தி­னால்தான் காணால்­போ­னோர் குறித்து ஆராய்வதற்கான செயலகத்தை உருவாக்கும் சட்­டத்தை கொண்டு வந்­தார்கள். அத­னையும் செயற்­ப­டுத்­த­து­ணி­ய­வில்லை. அதனை இடை நிறுத்தியுள்ளார்கள்.

இப்­பொ­ழுது இரண்டு வருட கால அவ­காசம் ஐ.நா.வில் கிடைத்த பின்னர். அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக கூறி­யுள்­ளார்கள்.ஆனால் இதற்­கி­டையில் இது சம்­பந்­த­மாக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை இதுவ­ரையில் எடுத்­தது என்­பது பற்றி ஆராய வேண்­டி­யுள்­ளது.

நான் இது விட­ய­மாக ஒரு நீண்ட கடிதம் ஜனா­தி­பதி அவர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்ளேன். அது பற்றி அவர் என்­னுடன் பேசு­வ­தாக கூறி­யுள்ளார். விரைவில் ஒரு கூட்டம் நடை­பெறும் திரு­கோ­ண­ம­லையில் போராடும் மக்­க­ளுக்கும் அதே பதி­லைத்தான் நான் சொல்­ல­மு­டியும்.

இந்­தப்­பி­ரச்­சினை­களை தெரி­யாமல் அறி­யாமல் நாம் இல்லை. ஆனால் தீர்ப்­பது சிர­ம­மாக விருக்­கின்­றது. உரியவர்­க­ளுடன் பேசி அவர்கள் அதற்கு ஒத்­து­ழைத்­தால்தான் எங்­களால் இதனை முன்­னெ­டுத்­துச்­செல்­ல­மு­டியும். எங்­கெங்கு எவர் எவர் இருக்­கின்­றார்கள். என்பது பற்றியும் நாம் அறிய வேண்டும். இல்லாது விட்டால் இந்தப்பிரச்சினைகளை எங்களால் முன்னெடுத்துக்கொண்டு போகமுடியாது போய்விடும்.

 அதன்காரணத்தினால் சில இடங்களில் படங்களில் காணாமல்போன சிலர் இருப்பது கண்டு,மக்கள் தெரியப்படுத்தியதன் அடிப்படையில், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளேன். தயவு செய்து இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டால் காணாமல்போனவர்கள் பற்றி தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.

இவை பற்றியெல்லாம் தான், தன்னுடன் பேச ஜனாதிபதி என்னை அழைத்துள்ளார் .விரைவில் அந்தக்கூட்டம் நடைபெறும்.எனவும் குறிப்பிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.