Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive

Featured Replies

‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive

 
 

சசிகலா

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், மா.ஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதே போல், மாநிலங்களவை எம்பி., வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று மாலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. "இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பின் தலைவர்களும் உறுதியாக இருந்தாலும், சிலரது இடையூறுகளால் 'பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடக்குமா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 'அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கியாக வேண்டும்' என மூத்த அமைச்சர்கள் தூக்கிய போர்க்கொடிதான், தினகரனை ஒதுக்கி வைக்கும் அளவுக்குச் சென்றது. 'இந்த நடவடிக்கைகளின் பின்னால் திவாகரன் இருக்கிறார்' என்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. 'அவர் சிறையில் இருந்து வரும் வரையில் கமிட்டியே கட்சியை வழிநடத்த வேண்டும்' என்பதுதான் சசிகலா குடும்பத்தின் விருப்பம். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிசாமி"சசிகலா குடும்பத்துடன் நேரடியாக சண்டையிட்டு, மக்களிடம் நியாயம் கேட்டுச் சென்றார் பன்னீர்செல்வம். அவருடைய முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிளம்பியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களை அவரால் இழுக்க முடியவில்லை. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தையும் நிரூபித்தார் பழனிசாமி. இந்நிலையில், இரண்டு தரப்பும் இணைந்து செயல்படலாம் என்ற முடிவை எட்டிய பிறகு, 'மீண்டும் முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்துக்குத் தர வேண்டும். சசிகலா ஆதரவு முதல்வரான பழனிசாமியை மக்கள் எப்படி ஏற்பார்கள்?' எனக் கொதித்தார் கே.பி.முனுசாமி. இதை ரசிக்காத பழனிசாமி தரப்பினரும் பன்னீர்செல்வம் அணியைக் கிண்டலடித்தார்கள். '122 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களில் பலரும் எடப்பாடியை ஆதரிப்பார்கள்' என வரிந்து கட்டிக் கொண்டு அமைச்சர்கள் கிளம்பினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, வைகைச் செல்வன், தங்க.தமிழ்ச்செல்வன், இன்பதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து, 'என்னுடைய உத்தரவில்லாமல் யாரும் எதையும் பேசக் கூடாது. விவகாரத்தை சுமூகமாக முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். உங்களுடைய பேச்சுக்களால் எதையும் கெடுத்துவிட வேண்டாம்' எனக் கறாராக உத்தரவிட, 'முதல்வர் சொன்னால்தான் பேசுவோம்' எனப் பேட்டி அளித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதையடுத்து, 'அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கியாக வேண்டும். செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். கே.பி.முனுசாமிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னீர்செல்வம் தரப்பினர் முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைத்துள்ள குழு பேசி முடிவெடுக்கும். 'நிதி அமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வாரா?' என்பதும் பேச்சுவார்த்தையின் முடிவில் தெரியவரும்" என்றார் விரிவாக. 

பன்னீர்செல்வம்"கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இரண்டிலும் தலைமைப் பொறுப்பை வழங்க வேண்டும் என்பதுதான் பன்னீர்செல்வத்தின் விருப்பம். இது அவருடைய எண்ணம் மட்டுமே. இதற்கு டெல்லி பா.ஜ.க தலைமை எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. 'உங்கள் உள்கட்சி பிரச்னையை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் யார் பக்கமும் இல்லை' எனக் கூறிவிட்டனர். 'எடப்பாடி பழனிசாமியே முதல்வர் பதவியில் தொடர்வார்' என்பதை தம்பிதுரையும் உறுதியாகக் கூறிவிட்டார். இதனால், எதையும் கேட்டுப் பெற்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள், 'ஆட்சி அதிகாரம் பறிபோகட்டும்' என்ற மனநிலையில் பேசி வருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வம் மௌனமாக இருக்கிறார். ' பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனைகளைப் பற்றி வெளியில் எப்படிச் சொல்வது?' என நிதானமாகவே காய் நகர்த்தி வருகிறார். 'நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம்' என சசிகலா தரப்பு பேசுவதற்குக் காரணமே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ மனு தாக்கல் செய்யும் முடிவில் இருப்பதால்தான். கடந்த வாரத்திலேயே இதற்கான பணிகளை வேகப்படுத்த இருந்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிக்கியதால், இந்த முயற்சி தாமதமாகிவிட்டது. ' இப்படி இருந்தால் என்னதான் செய்வது?' என மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் சசிகலா. தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞர் நாமக்கல் செந்திலிடம் வேதனையைச்  சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் இருந்து ஒதுங்கிவிட்டால், ரிவியூ மனு ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் சிறை வளாகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்" என்றார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசி வருகிறது. பொருளாளர் பதவி பிளஸ் இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்க வேண்டும்; தலைமைக் கழகத்தில் உள்ள சசிகலா, தினகரன் படங்கள் அப்புறப்படுத்தப்படும்; ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

 

'இரண்டு அணிகளும் இணைவதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது' என்றெல்லாம் பேசி வந்த தங்க.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள், தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 'பேச்சுவார்த்தை தொடங்கும் நேரத்தில் இப்படியொரு கூட்டம் தேவைதானா?' என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/87375-sasikala-is-upset-over-aiadmk-developments.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.