Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive

Featured Replies

‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive

 
 

ஓ.பி.எஸ்

ர் கூடித் தேர் இழுக்கத் தயாராகி வருகிறது அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளும். ஆனால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 'உள்ளே வெளியே' ஆட்டத்தினால் இந்த இணைப்பு சாத்தியமல்ல என்ற கருத்து இரு அணிகளின் மூத்த நிர்வாகிகளிடையேயும் எழுந்துள்ளது இப்போது. 

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அதிருப்திக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருடன்  கணிசமான எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் அணிவகுத்தனர். அதிமுக பிளவுபட்டதால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் புகழ்பெற்ற தனது இரட்டை இலைச் சின்னத்தை இழந்தது அக்கட்சி.

இதைத்தொடர்ந்து இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் கைப்பற்றிய வருமான வரித்துறை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள், அரசு அதிகாரியான கீதாலட்சுமி உள்ளிட்ட சிலரது வீடுகளில் ரெய்டு நடத்தி அரசியல் பரபரப்பை கொளுத்திப்போட்டது.

இரு அணிகளும் தீவிரமான மோதல்போக்கினை கையாண்டநிலையில் இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் கமிஷனுடன் பேரம் பேசியதாக தினகரனை வளைத்த டெல்லி போலீஸ், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவனை கைது செய்தது. தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு தொடுத்ததோடு அதுதொடர்பாக கடந்த 3 தினங்களாக தினகரனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
கட்சியில் இந்தப் பதற்றமான சூழலில்  அதிருப்தி அணியினருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதென அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் அணிக்கு சமிக்ஞை தரப்பட்டது. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனைகளுமின்றி பேசத்தயாரான மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ் அணி பின்னர் இந்தப் பேச்சுவார்த்தையில் 'உள்குத்து' ஏதாவது உள்ளதா என எழுந்த சந்தேகத்தினால்

சசிகலா

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை, சசிகலா, தினகரன் ஆகியோரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெறுவது, தேர்தல் கமிஷனில் அவர்கள் அளித்துள்ள பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. 

கடந்த வாரத்தில் இந்த  நிபந்தனைகளை  நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் இறங்கியதாக சொல்லப்பட்டது.  இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்களிடம் தினகரன் “ என்னை கழற்றிவிட்டு உங்களால் கட்சியை நடத்தமுடியாது. அப்படி ஒரு நிலைவந்தால் ஓ.பி.எஸ்ஸைவிட நான் பலமாக கட்சிக்கு எதிர்ப்பு நிலை எடுப்பேன். யோசித்து செய்யுங்கள். நீங்களே சித்தியை முன்னிருத்தினீர்கள். இப்போது நீங்களே அவருக்கு எதிர்ப்பு நிலையை எடுக்கிறீர்கள். கட்சிக்காக ஜெயில் வரை எங்கள் குடும்பம் சென்றுவிட்டது. இப்போது அதிகாரத்தை நீங்கள் சுவைப்பதற்காக இணைப்பு நாடகம் நடத்துகிறீர்களா” என  எகிறியதாக சொல்லப்படுகிறது. 

டி டி வி தினகரன்அப்போது, “மத்திய அரசுக்கு தமிழக அரசின் மீது கோபம் என்றால் இந்நேரம் ஆட்சியை கலைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஆனால் திரும்பத் திரும்ப உங்கள் குடும்பத்தினர் மீதுதான் மொத்த கோபமும் இருப்பதாக அவர்கள் நடவடிக்கையிலிருந்து தெரிகிறது. இந்நேரத்தில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினால்தான் ஒட்டுமொத்தமாக நமக்கு நல்லது. அதற்காக நீங்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும். சூழ்நிலை சாதகமானபின் வேறு மாற்று நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை ஒதுங்கியிருப்பது நல்லது” என அமைச்சர் தங்கமணி, தினகரனிடம் சொன்னாராம். “கட்சியிலிருந்து ஒதுங்கினால் எங்கள் குடும்பத்துக்கு இன்னும் சிக்கலை மத்திய அரசு ஏற்படுத்தும். யோசித்து முடிவெடுங்கள்” என அதற்கு தினகரன் டென்ஷனாக பதிலளித்தார் என்கிறார்கள். 

அதன்பிறகு திரும்ப இதே விஷயத்தை வலியுறுத்தி தினகரனிடம் போனில் பேசிய தம்பிதுரை, “ஆரம்பத்திலிருந்த நிலைமை இப்போது இல்லை. எங்களில் ஒருவர் ஆட்சி மற்றும் கட்சிக்கும் பொறுப்பேற்றால் பிரச்னை கிளம்பும் என்றே கட்சியின் நலன்கருதி உங்கள் சித்தியை தேர்வு செய்தோம். ஜெயலலிதாவுக்கு உள்ளதைப்போல மக்கள் செல்வாக்கினை அவருக்கு உருவாக்க எண்ணினோம். இப்போது அதுவே  பூமராங் போலாகிவிட்டது. உங்கள் சித்தி சிறைக்கும் சென்றுவிட்ட நிலையில் கட்சிக்கு அது நெகடிவ் ஆன விஷயமாகிவிட்டது. அதனால் இந்த முடிவை ஏற்கத்தான் வேண்டும். ஓ.பி.எஸ் வெளியே இருக்கும் வரை பிரச்னை இன்னும் பூதாகரமாகுமே தவிர குறையாது. அது உங்கள் குடும்பத்துக்குத்தான் சங்கடங்களைத்தரும்" என்றாராம்.  ஆனால் கோபத்தில் தினகரன் போனை வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

அதன்பின்னரே மீடியாவை அழைத்து தன் கருத்தை பொதுவெளியில் வெளிப்படையாக 'தினகரன் ஒதுங்கியிருக்கவேண்டும்' என்ற ரீதியில் முன்வைத்தாராம் தம்பிதுரை. 
கட்சியில் தனக்கு எதிராக எல்லோரும் ஒரே மனநிலைக்கு வந்துவிட்டதை உணர்ந்தே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “நான் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேனே” என ஆச்சர்ய பதிலளித்தார் தினகரன் என்கிறார்கள்.
 
தினகரனிடம் இருந்து இப்போதைக்கு பிரச்னை கிளம்பாது என்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்தடுத்து காரியங்கள் நடக்கத்துவங்கின. ஜெயலலிதா காலத்திலேயே கட்சியின் அடுத்தகட்டத்தலைவராக மதிக்கப்பட்டவர் ஓ.பி.எஸ். அவர் ஜெயலலிதா, சசிகலா இல்லாத இந்த நேரத்தில் கட்சிக்குள் கால் வைப்பது தங்களது முக்கியத்துவத்தை குறைக்கும் எனக்கருதியே ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்கள் முரணான பேட்டிகளை அளித்ததாக சொல்லப்பட்டது. ஓ.பி.எஸ் மற்ற நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் பின்வாங்கினால் அதற்குப் பதிலாக தனது முதல்வர் பதவியை காவு கேட்பார் என்று முதல்வர் எடப்பாடியும் இந்தப் பேச்சுவார்த்தை வைபவத்தை ரசிக்கவில்லையாம்.

இதுவும் ஓ.பி.எஸ் காதுக்கு எட்டியதால்தான் கே.பி முனுசாமி, “அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். எடப்பாடி சசிகலா குடும்ப முதல்வராக இருக்கிறார்” என தங்களின் கோபத்தை சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார் என்கிறார்கள். அதன்பிறகே  ஜெயக்குமார் தரப்பை அடக்கிவாசிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்டது. 'பேச்சுவார்த்தையின்போது ஜெயலலிதா மரணத்தின் மீதான சி.பி.ஐ விசாரணை தொடர்பான நிபந்தனையை ஓ.பி.எஸ்  அணி திரும்பப்பெற ஒப்புக்கொண்டால் அதற்கு ஈடாக முதல்வர் பதவியைத்தான் அவர்கள் குறிவைப்பார்கள்' என்பதால் அப்படி ஒரு கோரிக்கை முட்டுக்கட்டையிடவே நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத்தயார் என நேற்று ஜெயக்குமாரை பேட்டி கொடுக்கவைத்தனராம் சாதுர்யமாக. 

இதனிடையே இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கென ஓ.பி.எஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், தினகரன் அணி சார்பில் ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் நேற்று மாலை பேச்சுவார்த்தையை துவக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நிகழவில்லை.

வைத்திலிங்கம்

ஆனால் தமிழகமே பரபரப்புடன் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அதிமுக விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றிபெறாது என்பதோடு அதிமுக இணைப்பு என்பது துளியும் சாத்தியமில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஆன காஞ்சி மாவட்ட நிர்வாகி ஒருவர், “இந்த இணைப்பு என்பதே ஒரு சசிகலா தரப்பு நடத்தும் ஒரு நாடகம். ஓ.பி.எஸ் அதிமுகவில் முரண்பட்டபோதே ஒரு டசன் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தந்தது, அப்போதே சசிகலா தரப்புக்கு கிலி கொடுத்தது. இருப்பினும் அதிகார பலத்தால் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என சசி போட்ட கணக்கு பொய்யானது. ஓ.பி.எஸ் அணிக்கு மேலும் மேலும் மக்கள் ஆதரவு பெருகியதோடு முதலுக்கே மோசமாய் கட்சியின் சின்னம், ஆட்சி அதிகாரங்களும் கையை விட்டுப்போய்விடும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இப்போது இணைப்பு என்ற நாடகத்தை கையிலெடுத்துள்ளனர் தினகரன் தரப்பு. 

இதில் 3 முக்கிய விஷயங்களுக்காக இதை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர். ஒன்று இரு அணிகளும் இணைவதன்மூலம் சட்டப்படி இரட்டை இலையை திரும்பப்பெறுவது. இரண்டாவது, அதிமுகவுக்குள் திரும்ப கொண்டுவருவதன்மூலம் ஓ.பி.எஸ் சுக்கு மக்கள் மத்தியில் இருக்கும்செல்வாக்கை நீர்த்துப்போகச்செய்வது, 3 வது, கட்சிக்கு திரும்பியபின் ஓ.பி.எஸ் அணி யின் தலைவர்களுக்கு பதவி பொறுப்புகள் வழங்கி அவர்களை தங்களின் ஆதரவாளர்களாக மாற்றுவது இதுதான் தினகரனின் திட்டம். அதன்முதற்படிதான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக தனது அணியைத் தொடர்புகொண்ட ஒரு முன்னாள் அமைச்சரிடம் தனது முந்தைய குற்றச்சாட்டுகளில் முக்கியமானதான ஜெயலலிதாவின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை கேட்கும் கோரிக்கை மற்றும் சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விலக்கிவைப்பது என்ற இரு  நிபந்தனைகைளில் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்குவதில்லை என உறுதியாக தெரிவித்தார் ஓ.பி.எஸ். 

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன் தினகரன் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் போனில் பேசினார். அப்போது, “இந்த இரண்டு நிபந்தனைகளில் சசிகலா தரப்பினரை விலக்கிவைப்பதற்கான நடவடிக்கைகள் முற்றிலும் முடிந்துவிட்டது. நீதிவிசாரணை விஸயத்தை மட்டும் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்... இனி எக்காலத்திலும் சசிகலா தரப்பு கட்சிக்குள் வரமாட்டார்கள்” என்றாராம். ஆனால், மக்கள் மத்தியில் தனக்கு எழுந்த எழுச்சிக்கு நீதிவிசாரணை விஷயமும் முக்கியமானது எனக்கருதிய ஓ.பி.எஸ், அதில் பின்வாங்கினால் மக்கள் ஆதரவை இழக்கநேரிடும் என்பதால் கறாராக மறுத்துவிட்டார். 

அதேசமயம் தினகரன் அணி தங்களை முட்டாளாக்குகிறதோ என சோதித்துப்பார்ப்பதற்காக தன்னிடம் பேசிய அமைச்சரிடம் 'சசிகலா அணி கட்சியிலிருந்து விலகுவதற்கு ஆதாரமாக அவர்கள் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்யவேண்டும். அதை தலைமைக்கழகத்தின்மூலம் உரிய முறையில் அறிவிப்பாக வெளியிடவேண்டும். அது வழக்கம்போல் ஜெயலலிதாவின் அறிக்கையைப்போன்று சட்டப்படியானதாக இருக்கவேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

கேட்டுச்சொல்வதாக சொல்லி சில மணிநேரங்கள் கழித்து லைனில் வந்த அமைச்சர், 'அண்ணே அது முடியாதுண்ணே...பாவம், அது அவங்களை அவமானப்படுத்தறதுமாதிரி ஆகிடும். நாமதானே அவங்களை பொறுப்பை ஏத்துக்க சொல்லி வற்புறுத்தி அழைச்சி வந்தோம். அதனால் அவங்களா விலகிடுவாங்க' என்று சொன்னாராம்.  இது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு ஐயத்தை தந்திருக்கிறது. அதேசமயம் தினகரன் தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்த கையோடு, தேர்தல் கமிஷனில் இரட்டை இலையைப் பெறுவதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியலை இன்னொரு பக்கம் சேகரித்துவருகிறது. இந்த விஷயங்கள்மூலம்தான் திட்டமிட்டு தினகரன் அணி நாடகம் நடத்துவதை ஓ.பி.எஸ் அணி உணர்ந்தது.  அதனால் நாம் போய் சேர்வதைவிட இன்னும் மக்கள் மத்தியில் எழுச்சியுடன் பணியாற்றி அங்கிருப்பவர்களை இங்கே வரவழைக்கலாம்' என்ற மனநிலையில் ஓ.பி.எஸ் இருக்கிறார்.

ஆனால் பேச்சுவார்த்தையை நாமே மறுத்ததாக இருக்கவேண்டாம். இன்னும் உறுதியாக நம் நிபந்தனைகளை முன்வைப்போம் என்ற எண்ணத்தில் உள்ளனர். 

உண்மையில் எடப்பாடியை முதல்வராகவே தொடரச்செய்வது வைத்திலிங்கத்தை பொதுச்செயலாளராக்குவது இதுதான் தினகரனின் மாஸ்டர் பிளான். இதை முடிவுசெய்துவிட்டு ஓ.பி.எஸ் அணியை கரைப்பதற்காக இந்த முயற்சிகளை எடுத்துவருகிறது. இதற்கு நாங்கள் பலியாகமாட்டோம்” என்றார்.

அரசியல் செய்வதில், கருணாநிதி ஜெயலலிதாவை மிஞ்சிவிடுவார்கள் போல இருக்கிறது அதிமுகவின் இரு அணித்தலைவர்களும்!

http://www.vikatan.com/news/tamilnadu/87436-aiadmk-faction-and-plan-of-dinakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.