Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி போராட்டம் தற்காலிக வாபஸ் : விவசாயிகள் தமிழகம் வந்தடைந்தனர்!

Featured Replies

டெல்லி போராட்டம் தற்காலிக வாபஸ் : விவசாயிகள் தமிழகம் வந்தடைந்தனர்!

 
 

டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாகப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், இன்று காலை சென்னை வந்தடைந்தனர். 

TN Farmers

ஜந்தர் மந்தரில், மார்ச் மாதம் 14-ம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அந்தச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

TN Farmers
 


எலிக் கறி, பாம்புக் கறி உண்ணும் போராட்டம் தொடங்கி, நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர்.  இந்த நிலையில்... கடந்த ஞாயிற்றுகிழமை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
 

TN Farmers
 

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “நதிகளை இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார் அய்யாக்கண்ணு. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தின்மூலம் ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்துவேன். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிசெய்வோம்”, என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்ற விவசாயிகள், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக  அறிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் இன்று காலை 7.10 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

படங்கள்:வி.ஶ்ரீனிவாசலு

http://www.vikatan.com/news/india/87470-tn-farmers-reached-chennai-after-41-days-of-protest.html

  • தொடங்கியவர்

'மிரட்டப்பட்டாரா அய்யாகண்ணு?' போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பின்னணி என்ன?

 
 

விவசாயிகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர் ,ஒவ்வொரு நாளும் விதவிதமான முறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தனர். எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் எனப் பல்வேறு விதங்களில் விவசாயிகள் தங்களது அவல நிலைமையை எடுத்துரைத்துப் போராடினர்.  

உச்சகட்டமாக பிரதமர் அலுவலகம் எதிரே கடந்த 10-ம் தேதி திடீரென நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். நிர்வாணப் போராட்டம் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து, "நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல...மத்திய அரசின் செயல்பாடு" என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாகக் கடந்த 22 -ம் தேதி சனிக்கிழமை மனிதனுடைய சிறுநீரைக் குடித்து  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சூழலில் டெல்லி சென்ற தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக  விவசாயிகள் அறிவித்துள்ளனர். 41 நாட்களாக உயிரோட்டமாகப் போய் கொண்டிருந்த போராட்டத்தை திடீரென விவசாயிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது அனைத்து தரப்பிலும் கேள்வியை எழுப்பியுள்ளது 

அய்யாகண்ணு

 

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எங்களைச் சந்தித்துப் பேசினார். எங்கள்  தரப்பில்  வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பிரதமரிடம் எடுத்துக்கூறி தீர்வு காண உதவுவதாக முதல்வர் உறுதி அளித்தார். இது தவிர, தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை  கூட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்புக்கு  அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ‘ஜி .கே வாசன் , நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ்  ,இயக்குநர் பாண்டிய ராஜ் உள்ளிட்டோர் எங்களைச் சந்தித்துப்பேசினர் ."நீங்கள் படுகிற துயரத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த கவலை அளிக்கிறது.எனவே போராட்டத்தை முடித்துக் கொண்டு தமிழக திரும்புங்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்து பிரச்னையைத் தீர்க்க  நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கூறினார்கள்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு போராட்டத்தைத்  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் மே 25 -தேதிக்கு பிறகு மீண்டும் போராட்டத்தைத்  தீவிரப்படுத்த உள்ளோம் " என்றார் . 

"போராட்டத்தைத்  திரும்ப பெறும்படி ஏதேனும் அழுத்தம் இருந்ததா?" 

"நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது அதிர்ச்சி அடைந்த போலீசார் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக போலீசார் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். ‘யாராவது ஒருவனைக் கழுத்து அறுத்துக்கொண்டு வந்து இங்கே போட்டு விடுவோம்.ஒழுங்காகக் கலைந்து செல்லுங்கள்’ என்று மிரட்டினார்கள். ‘302-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உங்களை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு மற்றவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்’ என்று மிரட்டினார்கள். இப்படி பலவகையிலும் மிரட்டல் விடுத்துப் பார்த்தார்கள்.நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை.தற்போது தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம்.மத்திய அரசு   எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்" என்றார்    

 விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து செய்தி சேகரித்து வழங்கிய டெல்லி செய்தியாளர்கள் சிலரிடம் பேசிய போது ,"போராட்டத்தை திரும்ப பெறும்படி தொடர்ந்து அழுத்தம் இருந்தது.அதன் காரணமாக கூட போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கலாம் "என்று தெரிவித்தனர். 

http://www.vikatan.com/news/coverstory/87438-this-is-why-tn-farmers-temporarily-called-off-delhi-protest.html

  • தொடங்கியவர்

நிர்வாணப் போராட்டத்துக்கு யார் காரணம்?.. அய்யாக்கண்ணு சாடல்!

 

பிரதமர் மோடி எங்களை சந்திக்க மறுத்ததால்தான் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

Farmers protest
 

டெல்லி ஜந்தர்மந்தரில் மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.  காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் ஏப்ரல் 10ம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீரென ஆடைகளை கலைத்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி போலீஸ் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து காவலில் வைத்தனர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ள அய்யாக்கண்ணு, நிர்வாணப் போராட்டத்துக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய  விவசாயிகள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். எழும்பூர் ரயில்நிலையம் அருகே தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அய்யாக்கண்ணு,”பல்வேறு கட்சித் தலைவர்கள் எங்களை சந்தித்து கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம். பசுவை பாதுகாப்பேன் என்பவர்கள் பசுவை வளர்க்கும் விவசாயிகளை ஒழிக்கிறார்களே அவர்களது நாடகத்தை வெளிபடுத்துவோம். பிரதமரை நரேந்திர மோடியை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை அளிக்க நினைத்தோம் ஆனால்,மோடி எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் தான் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி டெல்லியில் நாங்கள் மிரட்டப்பட்டோம்”, என்றார்!

http://www.vikatan.com/news/tamilnadu/87497-ayyakannu-reveals-reason-behind-tn-farmers-naked-protest.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.