Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2ஜி வழக்கு: இறுதிவாதத்தை நிறைவு செய்தார் ஆ.ராசா- ஜூலையில் தீர்ப்பு?

Featured Replies

2ஜி வழக்கு: இறுதிவாதத்தை நிறைவு செய்தார் ஆ.ராசா- ஜூலையில் தீர்ப்பு?

 
 

raja_speech_12124.jpg

எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு இறுதி நிலைக்கு வந்திருக்கிறது. 2007-ல் ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்கப்பட்டது. இதில், பெருமளவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வழக்கு விசாரணையைத் தொடங்கியது. இதையடுத்து, 2010 நவம்பரில் ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க, சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஓ.பி.ஷைனி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி, தயாளுஅம்மாள் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இவர்கள் மீது மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், இரண்டை சி.பி.ஐ-யும், ஒன்றை அமலாக்கப்பிரிவும் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் மீது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இருதரப்பு சாட்சியமும் முடிந்த நிலையில், இறுதி வாதம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், ஆ.ராசா நேரில் ஆஜராகி தன்னுடைய தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைத்தார். கடந்த 19-ம் தேதி நடந்த விசாரணையின்போது, ஆ.ராசா தன்னுடைய இறுதிவாதத்தை முடிவு செய்தார். வழக்கு விசாரணையை, ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஷைனி, "அரசு மற்றும் குற்றம்சாட்டவர்கள் தரப்பு தங்கள் இறுதிவாதத்தை ஏப்ரல் 26-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஆ.ராசா தன்னுடைய வாதத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, இன்று ஆ.ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்ளிட்டோரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்றோ அல்லது நாளையோ, அரசு தரப்பில் இறுதிவாதம் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலுடன், தொலைத்தொடர்பு லைசென்ஸ் பெறும் நோக்கத்திலேயே ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை அளித்திருக்கிறது என்று அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த வழக்கும் நடந்து வருகிறது. கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் வந்தது தொடர்பான வழக்கின் வாதத்தையும் 26-ம் தேதிக்குள் (நாளை) நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார். நாளை இறுதி வாதம் முடிவடைந்தால், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில், சி.பி.ஐ தரப்பு வலுவான ஆதாரங்களை தாக்கல் செய்வதில், தொடர்ந்து குளறுபடிகளை செய்துவந்திருக்கிறது. அரசு தரப்பில், மீண்டும் மீண்டும் புதிய சாட்சிகள் சேர்க்கப்பட்டன. ஒரு கட்டத்தில் இனி இப்படி செய்யக்கூடாது என்று நீதிபதி உத்தரவிடும் அளவுக்கு சி.பி.ஐ தரப்பு சென்றது. வாதத்திலும் வலு இல்லை. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற மேக்சிஸ் - ஏர்செல் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த வழக்கைப்போல 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் போக்கும் சென்றுவிடுமோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

http://www.vikatan.com/news/india/87485-raja-completes-his-final-argument-in-2g-case.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.