Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஆதரவு

Featured Replies

வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் முழு ஆதரவையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்திற்கான ஆதரவு தெரிவித்து சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணாமல் போன உற்றார் மற்றும் உறவினர்களிற்கும், தொடர்ச்சியாக அவர்கள் படும் இன்னல்களுக்கும், அரசு வெளியிடும் நொண்டிச்சாட்டுகளையும், மழுப்பலான அறிக்கைகளையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டின் கடைசி யுத்த கட்டத்திலும், அதன் பின்னரும், இடம்பெற்ற உண்மைகளை அரசு வெளிவிடும் என்று பல வருடங்களாக பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் போராடியவண்ணம் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக அரசு மற்றும் இராணுவம் இந்த மக்களிடம் காட்டும் அலட்சியப் போக்கினை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? அவர்கள் உயிருடன் இருந்தால் எந்த இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நடந்தது?

யார் அவர்களைக் கொன்றது? எப்படி? கொலை செய்த பின் அவர்கள் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்கள்? போன்ற அவர்களுடைய வலி நிறைந்த கேள்விகளுக்கான பொறுப்புடைய பதில்கள் தேவை.

அல்லது அவர்களினுடைய காணாமல் போன மற்றும் கடத்திச் செல்லப்பட்ட உறவுகள் உயிருடன் இருக்கிறார்கள் எனின், அவர்களை மீண்டும் அவர்களினுடைய குடும்பத்தினருடன் உடனடியாக சேர்க்கவும்.

அதே நேரம் எல்லா அரசியல் கைதிகளை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டிக்கொள்ளுகின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காணாமல் போனவர்களின் வாழ்க்கை நிலையையும், உண்மையை தவிர வேறு வேண்டாம் என்ற இந்த மக்களின் நிலைப்பாட்டினையும்;, விடாமுயற்சியையும் கண்டு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் தலை வணங்குகின்றது.

வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் கடந்த பல தசாப்தங்களாக யுத்தத்தினால் பாதிப்படைந்து அதிர்ச்சியடைந்தவர்களை ஆற்றவும் கோரிக்கை விடுக்கின்றது.

அவர்கள் இப்பொழுது உண்மையான, எளிமையான, நீதியான வாழ்க்கை ஒன்றை இலங்கைக்குடிமக்களாக வாழ்வதையே கோருகின்றனர்.

உண்மையான தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு உண்மையை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு ஒரு வழியில்லை எனவும் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/143883?ref=view-latest

நாளை வட பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது

வட மாகாணத்தில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி நாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்திற்கான பேரூந்து சேவைகள் இடம்பெறாது என வடக்கு மாகாண இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரியும் நாளைய தினம் வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதை தவிர்க்கவுள்ளனர்.

எனவே வட மாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதுடன், தென் பகுதியில் இருந்து வரும் பேரூந்துகளும் வவுனியாவுடன் மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகளுக்கு இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்காக வருந்துவதுடன் எமது மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளமையை கருத்தில் கொண்டு இந் நடைமுறையை கைக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/transport/01/143846

ஹர்த்தால் போராட்டத்திற்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கமும் ஆதரவு

வட,கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் விடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க மட்டக்களப்பு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து இன்று துண்டுப்பிரசுரம் ஒன்றையும் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விநியோகித்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மட்டக்களப்பு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக நாளை வியாழக்கிழமை வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/143882?ref=view-latest

நாங்களும் கடையடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கிறோம்: வர்த்தக சங்கம்

வவுனியா வர்த்தக சங்கம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் ஆதரவினை வழங்குவது தொடர்பாக இன்று (25) இரவு கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போதே முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் கடந்த சில மாதங்களாக நடத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை.

அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை தொடர்போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு வடமராட்சி கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியறியும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/143772?ref=recommended2

  • தொடங்கியவர்

கடையடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் அதரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை(27) நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதாக கிளிநொச்சி மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை கிளிநொச்சி மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும்,

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கிவரும் முப்பது கிளை நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி கரடிபோக்கில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைச் செயலகம் என்பன முற்றாக மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல்போன உறவுகளின் அழைப்பிற்கமைய, சங்க தீர்மானத்தின்படி இந்த அறிவிப்பை தாம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/143813?ref=recommended1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.