Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித அவலங்களுக்குள் நலன் தேடும் உலகநாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித அவலங்களுக்குள் நலன் தேடும் உலகநாடுகள்

இலங்கையில் மனித அவலம் உச்சத்தை எட்டி விட்டதென ஒரு வகையினரும், அதைத் தொடுவதற்கு இன்னமும் பல படிகள் கடக்க வேண்டுமென இன்னுமொரு சாராரும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எம் தாயகத்தில் மட்டுமல்லாது, உலகெங்கனும் உள்ள பல நாடுகளில் இவ்வாறான நிலைமைகளே நீடிக்கின்றன.

அவலங்களைத் தரம் பிரித்து தட்டில் நிறுத்தாலும் அவை இலகுவில் மாற்றமடையப் போவதில்லை.

தினமும் 100 பேர் வரை கொல்லப்படும் ஈராக்கை விட இலங்கையில் நிகழும் தமிழினப் படுகொலைகள் ஒப்பீட்டு அடிப்படையில் குறைவானதென்று அவலத்தை தர நிர்ணயம் செய்ய முடியாது.

வாழ்விடயங்கள் அழிந்து, வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்களின் சிதைக்கப்பட்ட உளவியல் பரிமாணத்தின் ஆழ வடுக்களை, அந்நியப் பார்வை வீசும் ஜனநாயக விமர்சனப் பரம்பரைகளால் உய்த்துரை இயலாது.

அம்மனிதர்களின் அவல வாழ்வுத் தனத்துள் இறங்கி, அக்காற்றினை சுவாசித்தாலே வடுக்களின் வீரியம் புரியும்.

பொதுவாக, ஆய்வென்பது இயங்கியல் வரலாற்றுத் தொடர்ச்சியிலிருந்து சாரமாகப் பெறப்படும் எடுகோள்களாகவும், அனுமானங்களாகவுமே அமைகின்றது.

இதன் முற்போக்கு, பிற்போக்கான பின்புல தரிசனங்கள் அவரவர் வர்க்க நிலை சார்பு கருத்துருவத்தின் பிரிதிபலிப்பாகும்.

பன்னெடுங்காலமாக மனிதர்களுக்கிடையே உருவான முரண்பாடுகள், நாடுகளிடையேயான முரண்பாடாக, அரசுருவாக்கத்துடன் தோற்றம் பெற்றது.

ஆயினும் இற்றைவரை, வர்க்க முரண்பாடு என்கிற பொதுப் பண்பு முரண்பாடே உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் அரசியல் கருத்துருவத்தின் அடி நாதமாக இருக்கிறது.

வர்க்கமென்பது பொருளியல் சார்ந்து பிளவுண்ட இருவகை மனித சமூகத்தின் பிரிவுகளாகும். உற்பத்திக்காக உழைப்பவன் ஒரு வர்க்கமாகவும், உற்பத்தியை தனதுடைமையாக்குவோர் இன்னொரு வர்க்கமாகவும் பிரிந்திருப்பர்.

முதலில் குடும்பம், தனிச் சொத்துப்பாதையில் அரசு என்கிற கட்டுமானம் தோற்றமுற்றது. இந்த அரசுகள், தனிச் சொத்துடைமையை பாதுகாப்பதன் மூலம் அரசின் இறையாண்மையைத் தக்க வைக்கின்றன.

தனி சொத்துரிமை என்கிற ஆணிவேரை முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படையாகக் கொண்டாலும், வர்க்கப் பிரிவுகள் நீடிப்பதனூடாகவே அதன் அடுத்தகட்ட ஏகாபத்தியப் பரிமாணத்தை நோக்கி நகர முடியும்.

உலகில் தற்போது காணப்படும் ஏகாதிபத்திய நாடுகள், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் ‘உலகமயமாதல்’ என்பதை முன்னிலைப்படுத்துகின்றன.

உலகமயமாதலை நோக்கி நகர, தனியுடைமையைப் பாதுகாக்கும் அரச இயந்திரங்கள், பரந்துபட்ட வெகுஜன உழைப்பாளி மக்களை தமது சட்டங்கள் ஊடாக ஒடுக்குவதை, தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டிய அவசியமேற்படுகின்றது.

தனித்துவமான இரு இனக் குழுமங்கள் வாழும் நாட்டில், தனது அதிகாரப் பொறிமுறையைத் தக்கவைக்க, அவ்வினங்களிடையே பகையுள்ள முரண்பாடுகளை தோற்றுவிக்க அந் நாட்டு அரசு முயற்சிக்கும்.

முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியற்ற, கடனுதவிகளில் தங்கி வாழும் நாடுகளில், அரசியல் அதிகாரத்தினைப் பெற, இன வேறுபாடுகளை பயன்படும் அரசியல் ஆயுதமாக்குவதே கோட்பாடாக அமைகின்றது.

வளர்ச்சியுற்ற ஏகாதிபத்தியங்கள் சுட்டிக் காடும் மனித உரிமைகள் மீறல்கள், இவ்வகையான அரைகுறை ஜனநாயக நாடுகளின் அரசுகளுக்குப் பெரிதாகத் தென்படாது.

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட முறைமைகளின் உப பிரிவான புரட்சிகர வன்முறையைப் பயங்கரவாதமாகச் சித்தரிப்பதை, சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏகாதிபத்தியங்கள் கைக்கொள்கின்றன.

ஏகாபத்திய வாதிகளின் ‘பயங்கரவாத’ கோஷத்தினை, இனங்களை ஒடுக்கும் அரசுகளும் உயர்த்திப் பிடித்து ‘அரச பயங்கரவாதத்தை’ மூடி மறைக்கின்றன.

அரசுகளின் வன்முறைகளை அதன் இறையாண்மைக்குரிய உரித்தாகக் கருதுவதால், அரச பயங்கரவாதம் என்கிற சொல்லாடலை இந்த சர்வதேச நாடுகள் வேண்டுமென்றே தவிர்த்து விடுகின்றன.

சர்வதேசத்தைப் பொறுத்தவரை, இரண்டாம் உலக யுத்தத்தில் ஏற்பட்ட மனித அவலங்களெல்லாம் முடிவுற்ற வரலாற்றின் கனவுக் காட்சியாகும்.

அவலங்களிற்குள் தமது நலன்களை தேடுவதே இன்றைய வரலாறு.

சர்வதேச மத்தியஸ்த்தில் உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தங்களை, போராடும் மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே சர்வதேசத்தின் எழுதப்படாத நியதியும், நிர்ப்பந்தமுமாகிறது.

போராட்டச் சக்தியின் மக்கள் பலத்தைச் சிதைப்பதற்கு, அரசு மேற்கொள்ளும் இராணுவ அடக்குமுறைகளைக் கண்டித்தால் பேச்சுவார்த்தை நீட்சிக்கான வாய்ப்பு நழுவி விடுமென்று இச் சர்வதேசத்திற்குப் புரியும்.

ஆகவே, சர்வதேசம் கூறும் தனிநபர் ஜனநாயகத்திற்குரிய வியாக்கியானம், அரச இறையாண்மைக்குள் கரைந்து விடுகிறது.

அவதியுறும் மக்கள் நலன் பேணும் அரசு சாரா தொண்டுப் பணியாளர்களின் கொலைகளையும், தமது முதலாளித்துவ ஜனநாயக விழுமியத்துள் புதைத்து, ஏகாபத்திய ஜனநாயகமென்ற புதிய உலகக் கோட்பாட்டினை உலகமயமாக்கல் வாதிகள் வகுக்கின்றனர்.

அடிபணிய மறுக்கும் வேற்றுநாடுகள் மீது மேற்குலகம் மேற்கொள்ளும் பொருளாதாரத் தடையும், தனது சொந்த நாட்டு மக்களின் மீது ஸ்ரீ லங்கா அரசு விதிக்கும் தடைகளும், ஒத்த பண்புடைய அதிகார வீச்சிற்குள் அடங்கும்.

தம்மால் வரையறுக்கப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் அரச பயங்கரவாதத்தால் மனிதர்கள் கூட்டமாய்க் கொல்லப்படுவதும், வாழுமிடத் தெரிவு மறுக்கப்படுவதும், தொடர்கதையாகிப் போவதை இச் சர்வதேசம் மௌன அங்கீகாரத்தினூடாக வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் எவ்வகையான சர்வதேச அங்கீகாரம் தமது விடுதலைக்கு தேவையென்பதைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.

ஆகவே, சர்வதேசத்தின் உள்ளார்ந்த நலன் பற்றிய புரிதலுடன் அவை முன்வைக்கும் போலி ஜனநாயகப் ப+ச்சுக்களையும், மனித உரிமைக் காவலரென்ற முகமூடியையும் கண்டு ஆசுவாசப்படாமல், விடுதலையென்பது இனத்தின் தனித்துவ சுயம் சார்ந்ததென்பதை மக்கள் உணர வேண்டும்.

ஜனநாயகப் பொய் முகங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் இரத்தக் கறை படிந்த ஏகாதிபத்திய கோரக் கரங்களின் வரலாற்றினை இக்கால கட்டத்தில் மறுபடியும் நினைவ+ட்டல் வேண்டும்.

எதிர்கொள்ளும் அவலங்களை முறியடிக்கும் ஆத்மபலம். அதே மக்கள் கூட்டத்திற்கே உண்டு.

இயற்கைக்கும் மனிதருக்குமிடையேயான போராட்டம் நிலையானது. முனித கூட்டத்தினரிடையே உருவாக்கப்படும் முரண்பாடுகளும், சமரசமற்ற போக்கும், பேசியும் தீர்க்கப்படலாம். இல்லையேல் யுத்தம் மூலமாகவும் புதிய வடிவமொன்றைப் பெறலாம்.

முரண்பாட்டின் கனதியிலும், வரலாற்றை முன்னகர்த்தும் முற்போக்குக் கூறுகளின் ஒத்திசைவிலும், தெரிவு செய்யப்படும் முறைமை தீர்மானிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகள், வன்முறை போராட்ட வடிவத்தை உள்வாங்கியடி நகரும் போக்கினை மேற்கொள்ளுமென்பதை ஸ்ரீ லங்காவின் அரசியல் வரலாறு சுட்டி நிற்கிறது.

வீட்டு வாசலிற்கு வந்த பிக்குமார் கூட்டத்தின் முன்பாக, பண்டா-செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தெறித்தார் சொலமன் பண்டாரநாயக்கா.

சர்வதேச மத்தியஸ்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை கிழித்தெறிய, உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர் இன்றைய பிக்குகள்.

மனிதர்களின் ஆத்மீக விடுதலைக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மதமானது மதப் பிரிவொன்றின் வழி நடத்துனர்களால் இன்னொரு மக்கள் சமூகக் குழுமத்தின் மீது வன்மம் கொண்டுள்ளது.

அதிகார வர்க்கத்தை ஆசீர்வதிக்கும் மதத் துறவிகள், அதிகாரப் போட்டியில் நேரடியாகத் தன்மை இணைக்கும் பொழுது இனமுரண் நிலைத் தளங்கள் விரிவடைந்து துருவநிலைக் கோட்பாட்டை எட்டுகிறது.

ஒத்துப் போதலிற்குரிய இசைவுத் தளங்களின் சிதைவுகளைச் சீராக்கும் வழிமுறைகளை மேற் கொள்ளும் சர்வதேசம், நடைமுறைச் சாத்தியமற்ற முன்னெடுப்புக்களை வலிந்து உட்புகுத்த முயல்கிறது.

யுத்த முனைப்பில் முகிழ்வுற்றிருக்கும், இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள பேரினவாத எழுச்சி அரசியல் வடிவம், சர்வதேசத்தின் நலன்சார் அழுத்தங்களை கவனத்தில் கொள்ளாது. தீர்வொன்றை விரும்பாத அரசின் மீது திணிக்கப்படும் தீர்வுகளும் செயலுருப் பெறாது.

http://www.sooriyan.com/index.php?option=c...002&Itemid=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.