Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் ; ஹர்ஷ டி சில்வா

Featured Replies

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்  மூலம் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் ; ஹர்ஷ டி சில்வா

( ஆர்.யசி)

கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்  மூலம் பயங்கரவாத தடுப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற இரண்டு விடயத்தின் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.  

harsha-de-silva.jpg

நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மனித  உரிமைகளை பாதுகாத்தல் என்ற  அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் ஜி.எஸ்.பி  பிளஸ் வரிச்சலுகையை  கிடைக்கவுள்ளமைக்கும் எந்தவித தொடர்புகளும் இல்ல. எனினும் நல்லிணக்கத்தை பலப்படுதுவன் மூலம் ஜி. எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் வழிமுறை மேலும் உறுதிப்படுத்தப்படும். 

 

 

மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாறப்போகின்றது எனவும் சர்வதேச தேவைக்காக வேலைத்திதிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் சிலர் இன்று பேசுகின்றனர். உண்மையில் பயங்கரவாதமானது இலங்கைக்கும் ஏனைய ஒரு சில நாடுகளுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடு அல்ல. இன்று மேற்கத்தேய நாடுகள் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்துள்ளன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளில் எதிர்கொண்ட அனுபவங்கள், எமது மக்கள் அனைவரும் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அவர்களும் உணர ஆரம்பித்துள்ளனர். சர்வதேச தரப்பில் இந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இன்று சர்வதேச நாடுகளுக்கு இலங்கை நல்லதொரு முன்னுதாரண நாடாக மாறியுள்ளன. 

ஒருபுறம் மனித உரிமைகளை பாதுகாக்கும் அதே நிலையில் மறுபுறம் பயங்கரவதத்தை கட்டுப்படுத்தவும் வேண்டும். இரண்டையும் சரியாக கையாண்டால் மாத்திரமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்  மூலம் இந்த சமநிலைத்தன்மை உருவாக்கப்படும். அதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும்.

இலங்கை சர்வதேச தரப்பிடம் கொடுத்த வாக்குறுதிக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமைக்கும்  தொடர்புகள் உள்ளதா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/19525

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.