Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது

Featured Replies

தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது
 
 
 

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான்.

 

Tamil_News_large_176078920170429000638_318_219.jpg

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி பவனில், இருவரிடமும் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். பின், இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
 

ஒப்புக்கொண்டார் :


இந்த ஆவணங்களை காட்டி, போலீசார் தினகரனிடம் விசாரித்தனர். அப்போது, தன் நண்பர் மல்லிகார்ஜுனா மூலம் பழக்கமான, ஹவாலா கும்பல் வாயிலாக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர, பல கோடி ரூபாய் கைமாற்றியதை ஒப்புக்கொண்டார்.அதில், 10 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் மட்டுமே,

போலீசாருக்கு கிடைத்துள்ளன. இந்த பணமும், சென்னையில் இருந்து கொச்சி வழியாக, ஹவாலா கும்பல் உதவியுடன், டில்லி ஓட்டலில் தங்கி இருந்த, சுகேஷ் சந்தரிடம் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஆனால், சுகேஷ் சந்தரிடம் இருந்து, 1.30 கோடி ரூபாய் மட்டுமே கைப்பற்றப் பட்டுள்ளது. மீத முள்ள, 8.70 கோடி ரூபாய், தேர்தல் கமிஷனில் உள்ள அதிகாரிகளுக்கு தரப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், தினகரனின் மனைவி அனுராதாவிடம், 'ஹவாலா பணம், வீட்டில் இருந்து தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுபற்றி உங்களுக்கு தெரியுமா' என, போலீசார் கேட்டு உள்ளனர். அதற்கு அவர், 'வீட்டிற்கு கட்சியினர் பலர் வருவர். பணம் விவகாரம் எனக்கு தெரியாது' என, கூறி உள்ளார். ஆனால், தினகரன், தன் மனைவிக்கு எல்லாம் தெரியும் என கூறி இருப்பதால், அனுராதாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

காட்டி கொடுத்தார் :


இதற்கிடையில், நேற்று ராஜாஜி பவனில், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவிடம், போலீசார் தனித் தனியாக விசாரித்தனர். அப்போது, இந்த பண விவ காரத்தில் தொடர்புடைய முக்கியபுள்ளிகள் பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.

அதன்படி, ஆதம் பாக்கம், நீலமங்கை நகரில் வசித்து வரும், உறவினர் மோகனரங்கம்; பாரி முனை, நாராயண முதலி தெருவைச் சேர்ந்த, நரேந்திரகுமார்; திருவொற்றியூர் அடுத்த, சுந்தர சோழபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த, வழக்கறிஞர் கோபிநாத்; பெரம்பூர், மதுரைசாமித் தெருவைச் சேர்ந்த, பிலிப்ஸ் டேனியல்; கொளப் பாக்கத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியும் சிக்கினர்.

இந்த ஹவாலா பண விவகாரத்தில், இவர்களும் ஈடுபட்டு இருப்பதாக, தினகரன் மற்றும் மல்லிகார் ஜுனா ஆகியோர், போலீசாரிடம் தெரிவித்ததாக

 

கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்களது வீடுகளில், உதவிகமிஷனர், சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், மோகனரங்கம், பிலிப்ஸ் டேனியில் உள்ளிட்ட மூன்று பேருக்கு, டில்லி போலீசார், சம்மன் அனுப்பி உள்ளனர்.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா வுக்கு உடந்தையாக இருந்தோரின் பட்டியல் நீளுகிறது.

இதனால், இன்றும் சோதனை தொடரும் என, டில்லி போலீசார் கூறுகின்ற னர்.நாளை, இருவரையும், பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கஇருப்பதாகவும், டில்லி போலீசார் தெரிவித்தனர்.
 

சிக்கினான்


இந்த நிலையில், தினகரனுக்கு பணத்தை மாற்றிக் கொடுப்பதற்கு உதவிய,டில்லியைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர் நரேஷ், டில்லி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப் பட்டான். தினகரனுக்கு பணத்தை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக, டில்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760789

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.