Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்குகிறார் உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

Featured Replies

gallerye_012641205_1760792.jpg

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

புதுடில்லி: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சிக்கியுள்ளார்.

 

Tamil_News_large_176079220170428230233_318_219.jpg

'அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யா விட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விடுவோம்' என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் பீதியில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க., வானது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது.

சசிகலா அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட தினகரன் வாக்காளர் களுக்கு பணத்தை வாரி இறைத்தார். அதனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றியதாக கூறப்பட்ட சுகாதாரத்துறை

அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளிலும், அவருக்கு சொந்த மான குவாரிகளிலும் வருமான வரித்துறை யினர் அதிரடி சோதனை நடத்தினர்; பல ஆவணங்களை கைப்பற்றினர். இதன்பின் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரனையும், டில்லி போலீசார் கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தருணத்தில், ரியல் எஸ்டேட் உரிமை யாளரை மோசடி செய்த புகாரில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது, வழக்கு பதிவு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த எஸ்.வி.எஸ்.குமார் தாக்கல் செய்த மனு விபரம்:

நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகி றேன். சென்னை மயிலாப்பூரில் 2009ல் வீடு ஒன்று வாங்கினேன். வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய அவகாசம் கேட்டார். எட்டு மாதங்களுக்கு மேலாகியும் அவர் வீட்டை காலி செய்யவில்லை. நான் பல முறை வற்புறுத்தியும் பலனில்லை.

அப்போது, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் என்பவர், என்னை அணுகி, தற்போது தமிழக உணவு அமைச்சராக இருக்கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த காமராஜ் தன் உறவினர் என்றும் 15

 

லட்சம் ரூபாய் கொடுத்தால் மயிலாப்பூர் வீட்டை காலி செய்ய வைக்கிறேன் என்றும் கூறினார்.இதையடுத்து, இரண்டு தவணையாக ராமகிருஷ்ணனிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத் தேன் பின் காமராஜும் 'வீட்டை காலி செய்ய வைக்கிறேன்' என உறுதியளித்து 30 லட்சம் ரூபாய் வாங்கினார்.

தமிழக சட்டசபைக்கு 2011ல் நடந்த தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் வெற்றிபெற்று, அமைச்சராக பதவியேற்றார். அதன்பின், அவரையோ வழக்கறிஞர் ராமகிருஷ்ணனையோ தொடர்பு கொள்ள முடியவில்லை.வீட்டை காலி செய்து கொடுக்க காமராஜ் எந்த உதவியும் செய்யாததால், மன்னார்குடி போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது 2015 மார்ச் 10ல் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். மனுவை விசாரித்த ஐகோர்ட், என் புகார் பற்றி விசாரிக்கும்படி போலீசாருக்கு 2015 ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் விசாரிக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குமார் தன் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அமைச்சர் காமராஜ் மீது, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் சி.பி.ஐ.,க்கு வழக்கை மாற்றி விடுவோம்' என, உத்தர விட்டது.

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த, 'ரெய்டை' தொடர்ந்து, தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில் அவரது ஆதரவு அமைச்சரான காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது, அ.தி.மு.க.,வின் சசிகலா அணி யில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டதால் தினகரன் ஆதரவு அமைச்சர்கள் பலர் பீதியில் உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760792

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.