Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.!

Featured Replies

இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.!

 
 

பன்னீர்செல்வம்

.தி.மு.க இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இப்போது அந்த அணி ஈடுபட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த மூன்று நாள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அந்த விஷயம்தான் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இரு அணிகளும் சொன்னாலும் முக்கியத் தலைவர்கள் சிலர் மனப்பூர்வமாக இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் ரகசிய பேச்சுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளிப்படையாக இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. ''கட்சியில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை முழுமையாக நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்" என்ற கோரிக்கைகளைத்தான் அந்த அணி முன்வைத்துள்ளது. ஆனால், வேறுகோரிக்கைகள் பற்றி வெளிப்படையாக ஓ.பன்னீர்செல்வம் சொல்லாவிட்டாலும்... மேலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ''ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர்; மதுசூதனன் - அவைத்தலைவர்; செம்மலை, மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் என்றும், அதுபோக, துணைப் பொதுச்செயலாளர் பதவி இரண்டு உருவாக்கி, அதில் ஒவ்வோர் அணியிலிருந்தும் தலா ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும்'' என்றும் அந்த அணி சொல்லியிருக்கிறது.

edappaasi palanisamy

எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் சொல்வது என்னவென்றால், ''122 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு அ.தி.மு.க அம்மா அணியிடம்தான் முதல்வர், பொதுச்செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் பதவிகள் இருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் பதவி கொடுத்துவிடலாம். செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று பேசி இருக்கிறார்கள். வைத்திலிங்கத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இந்த அஜென்டாக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லை. அதனால்தான் சேலத்தில் பேட்டி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மேட்டுர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான செம்மலை, ''பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அக்கறை இல்லை. தேர்தலைச் சந்திக்க நாங்கள் ரெடி' என்று அதிரடியாகச் சொல்லி இருக்கிறார்.

இரு அணியினரின் ரகசிய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஓ.பி.எஸ் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார். ''சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டால் உடனடியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிடலாம்'' என்று அவர் சொல்லியுள்ளார். இணைப்பு விவகாரம் இழுபறியாக நீடிப்பதால், தனது அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ். தனது அணியின் ஆதரவாளர்களைச் சந்திக்க வெளிமாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணத் திட்டம் தொடங்கி இருக்கிறது. மே 3-ம் தேதி தூத்துக்குடியில் கட்சி நிர்வாகியின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு வருமாறு ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ளார்கள். அங்கு வர ஓ.கே சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அந்தத் திருமண நிகழ்ச்சி முடிந்த கையோடு தூத்துக்குடி மாவட்டத் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முதல்கட்டமாக, 16 நாள்கள் சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87867-hurdles-in-merging-the-factions-panneerselvam-plans-for-political-tour.html

  • தொடங்கியவர்

இரு அணிகளிடையே மறைமுகப் பேச்சுவார்த்தை - பொன்னையன் பகீர் தகவல்!

 
 

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீனஸ் இல்லத்தில், மாஃபா. பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொன்னையன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை, இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும் நடைபெற்றது.

Ponnaiyan


ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பொன்னையன் செய்தியாளர்களிடம், “ஏதோ ஒரு மாவட்டத்தில் இரு அணிகளும் இணைவது குறித்துக் கூறிய கருத்தை, ஒட்டுமொத்த கருத்தாகக் கூறிவிட முடியாது. செம்மலை கூறியது, சேலம் மாவட்டத்தின் நிலை மட்டும்தான்.

இரு அணிகளுக்கும் இடையே  மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுச் செயலாளர்குறித்து நாங்கள் எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை. எங்கள் அணியினர் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாகுறித்தும், அதை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதுகுறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு அணிகளும் இணைவதில், இயற்கையாகவே கால தாமதம் உண்டாகிவருகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். அதற்கான இணக்கமான சூழல் வரும். சசிகலா நீக்கம் குறித்து எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87927-to-factions-had-indirect-talk-says-ponnaiyan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.