Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு

Featured Replies

முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு

s01-2-b0f7fa6b1f025073596663fb9c9cfd91f14032a7.jpg

 

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­ வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­பு­களால் ஆத­ரிக்­கப்­பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்­பா­லான பகு­தி­களை முற்­றா­கவே செய­லி­ழக்கச் செய்­தி­ருக்­கி­றது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்ற மிகப்­பெ­ரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்­பா­டாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், இது­போன்ற ஓரி­ரண்டு போராட்­டங்கள் தமிழ்ப் பகு­தி­களில் இடம்­பெற்­றி­ருக்­கின்ற போதிலும், ஒட்­டு­மொத்த தமிழ் அர­சியல் கட்­சிகள், அமைப்­பு­களை ஒரே அணியில் திரள வைத்­தது மாத்­தி­ர­மன்றி, முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் ஆத­ரவைப் பெற்ற போராட்­ட­மா­கவும் இது அமைந்­தி­ருந்­தது.

ஒப்­பீட்­ட­ளவில் இதுதான் அண்­மைய காலத்தில், வடக்கு, கிழக்கில் இடம்­பெற்­றி­ருக்­கின்ற மிகப்­பெ­ரிய அரச எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யாகும்.

இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக வீதி­களில் இர­வு­ப­க­லாக இருந்து, போராட்­டங்­களை நடத்­தியும் அர­சாங்கம் திரும்­பியும் பார்க்­காத நிலையில் விரக்­தியின் உச்­சத் தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் ஏற்­பாடு செய்த போராட்டம் இது.

இது­போ­லவே தமது காணி­களை விடு­விக்கக் கோரி, மாதக்­க­ணக்­காக போராடும் மக்­களின் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­ப­டாமல் இழு­ப­றிப்­ப­டு­கின்­றன.

தமிழ் மக்­களின் ஒவ்­வொரு பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வை வழங்க வேண்­டிய தரப்­பாக இருக்­கின்ற அர­சாங்கம், அதனைத் தட்­டிக்­க­ழித்து வரு­கின்ற சூழலில், தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் அதி­க­ரித்து வரு­கின்ற, ஏமாற்றம், வெறுப்பு, கோபம், ஆற்­றாமை போன்ற உணர்ச்­சி­களின் வெளிப்­பா­டாகத் தான், இந்தப் போராட்டம் இடம்­பெற்­றது.

அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பைத் தெரி­விக்­கின்ற- தமிழ் மக்­களின் ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்­து­கின்ற போராட்­ட­மாக மாத்­தி­ர­மல்­லாது, அர­சாங்­கத்­துக்கு துணை நிற்­கின்ற சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் நீதியைக் கேட்­கின்ற போராட்­ட­மா­கவும் இது அமைந்­தி­ருந்­தது.

அர­சாங்­கத்தைத் தொடர்ச்­சி­யாக விமர்­சித்து வந்­துள்ள, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈபி­ஆர்­எல்எவ் போன்ற கட்­சிகள் இந்தப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு வழங்­கி­யமை முக்­கி­ய­மான விட­யங்­க­ளல்ல.

அர­சாங்­கத்தை அதி­க­ளவில் தொந்­த­ர­வுக்­குட்­ப­டுத்தக் கூடாது என்ற கருத்து நிலையில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்­கி­ர­சஸும் இந்தப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு அளிக்க முன்­வந்­தமை முக்­கி­ய­மான விட­யங்கள்.

முஸ்லிம் கட்­சிகள் இந்தப் போராட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­த­மைக்கு பல்­வேறு வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும், தமிழ் மக்­க­ளுக்­கான அவர்­களின் தார்­மிக ஆத­ர­வாக இதனை எடுத்துக் கொள்­வதே பெருந்­தன்மை.

ஆனாலும், வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்­களின் தலைமை என்று கூறிக் கொள்ளும் பிர­தான முஸ்லிம் கட்­சிகள் ஆத­ர­வ­ளித்தும் கூட, கிழக்கில் பெரும்­பா­லான முஸ்லிம் பகு­தி­களில் போராட்­டத்­துக்கு ஆத­ரவு கிடைக்­க­வில்லை. அது ஒருங்­கி­ணைப்பில் நடந்த தவ­றா­கவும் இருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைச் சார்ந்து நடத்­தப்­பட்ட போராட்­டத்­துக்கு முஸ்லிம் கட்சித் தலை­மைகள் ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தி­ருப்­பது- அதுவும், அர­சாங்­கத்தில் அங்கம் வகித்துக் கொண்டே அதனைச் செய்­தி­ருப்­பது நீண்­ட­கா­லத்­துக்குப் பிந்­திய ஒரு சாத­க­மான மாற்றம் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள்- அர­சியல் தலை­வர்கள் தமக்­கான பிரச்­சி­னை­க­ளுக்­காக ஒன்­று­படத் தொடங்­கி­யுள்­ளார்கள் என்ற புதிய செய்­தியை ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இந்த முழு அடைப்புப் போராட்டம் எடுத்துக் கூறி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, அர­சாங்­கத்­துக்கு அழுத் தம் கொடுத்தால் மஹிந்த ராஜபக் ஷ பல

ம­டைந்து விடுவார் என்ற பயத்தில் இருக் கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்தப் போராட்­டத்தை ஆத­ரித்­தமை முக்­கி­ய­மா­னது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­பியோ விரும்­பா­மலோ இந்தப் போராட்­டத்தை ஆத­ரிக்க வேண்­டிய நிலையில் இருந்­தது.

அதற்குக் காரணம், தமிழ் மக்­களின் மன உணர்­வுகள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராகத் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யி­ருப்­பது தான். 

அதை­விட தமிழ்­மக்­களின் உணர்­வு­களை அர­சாங்­கத்­துக்கு வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மாக இதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­பி­யது.

தமிழ் மக்­களின் உணர்­வு­க­ளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த முடிவு தான் இந்த முழு­அ­டைப்புப் போராட்­டத்­துக்­கான ஆத­ரவு. இங்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை வழி­ந­டத்­தி­யது என்று கூறு­வதை விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அத்­த­கைய முடிவை எடுக்கச் செய்து, அவர்­களை தமிழ் மக்கள் வழி­ந­டத்­தி­னார்கள் என்­பதே உண்மை.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில், கூட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­யதால் தான் தமிழ் மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஏகோ­பித்த ஆத­ரவை வழங்­கி­னார்கள் என்று யாரா­வது நினைத்துக் கொண்டால் அது தவறு.

மஹிந்த ராஜபக் ஷவைத் தமிழ் மக்கள் தீவி­ர­மாக வெறுத்­தார்கள். அவரை எப்­ப­டி­யா­வது தோற்­க­டிக்க வேண்டும் என்று கங்­கணம் கட்­டி­னார்கள். அதற்கு மாற்­றாக, மஹிந்­தவின் முகாமில் இருந்தே வெளி­வந்து அவரை எதிர்த்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க முடிவு செய்­தார்கள்.

தமிழ் மக்­களின் அந்த முடிவை முன் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவர்­களின் பின்னால் சென்­றதே தவிர, தமிழ் மக்கள் கூட்­ட­மைப்பின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்­ல­வில்லை. தமிழ் மக்கள் அவ்­வாறு கண்ணை மூடிக் கொண்டு செல்­ப­வர்­க­ளாக இருந்தால், 2010 பாரா­ளு­மன்றத் தேர்­தலில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சரத் பொன்­சே­காவை பெரி­ய­ளவில் ஆத­ரித்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு அவர்கள் செய்­ய­வில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களால் முழு அடைப்புப் போராட்­டத்­துக்கு தமிழ் மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என்­பதை கூட்­ட­மைப்பு அறிந்­தி­ருந்­தது. அதை­விட, தாமும் தமிழ் மக்­க­ளுடன் தான் நிற்­கிறோம் என்று காட்ட வேண்­டிய தேவையும் கூட்­ட­மைப்­புக்கு இருந்­தது. அது­போ­லவே, அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை வெளி­யிட வேண்­டிய சூழ­லையும் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­கி­றது என்ற பேச்­சுக்கு இட­மில்லை. ஏனென்றால், தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் அவர்கள். தமிழ் மக்­களின் உணர்­வு­களை அறிந்து செயற்­பட வேண்­டி­யதும், அர­சியல் செய்­வதும் தான் அவர்­களின் வேலை­யாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை இப்­போ­தைய அர­சாங்­கத்தைக் கொண்டு தீர்க்­கலாம் என்று கூட்­ட­மைப்புத் தலைமை நம்­பி­யது. இப்­போதும் நம்­பு­கி­றது. ஆனால் அந்த நம்­பிக்கை தமிழ் மக்­க­ளிடம் குறைந்து விட்­டது.

இத்­த­கைய நிலையில், தமிழ் மக்­களின் உணர்­வு­களை பிர­தி­ப­லிக்க வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இருக்­கி­றது. சில சந்­தர்ப்­பங்­களில் அவ்­வாறு நடந்து கொள்­ளா­வி­டினும், அண்­மைய சில வாரங்­களில் கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் கருத்­துக்­களில் அத்­த­கைய நிலையை உணர முடி­கி­றது.

அர­சாங்­கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்பும் வீண­டிக்­கப்­பட்டு விட்­டதோ என்ற ஏமாற்­றத்­தையும் அவர்கள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தமிழ் மக்­க­ளிடம் இருந்து தாம் அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்டு விடக் கூடாது என்­ப­தற்­காக மாத்­தி­ர­மன்றி, அவ்­வாறு தமிழ் மக்­க­ளிடம் இருந்து கூட்­ட­மைப்பை அந்­நி­யப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­களில் இருந்து தற்­காத்துக் கொள்­ளவும் அவர்­க­ளுக்கு இந்த மாற்றம் அவ­சியம் தேவைப்­ப­டு­கி­றது.

கிளி­நொச்­சியில் கடந்த வியா­ழக்­கி­ழமை நடந்த போராட்­டத்தில் பங்­கேற்றுப் பேசிய கூட்­ட­மைப்பின் வட மாகா­ண­சபை உறுப்­பினர் ஒருவர் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது நாங்கள் நம்­பிக்கை வைத்­தது முட்­டாள்த்­தனம் என்று கூறி­யி­ருந்தார்.

அது­போல, வடக்கு மாகா­ண­ச­பையில் முத­ல­மைச்சர் அன்­றைய தினம் நிகழ்த்­திய உரையில் இந்த முழு அடைப்பு போராட்­டத்தின் தார்­மிக நியா­யங்­களை அர­சாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோரி­யி­ருந்தார்.

தமிழ் மக்­களின் கோரிக்­கைகள், அபிலாசைகள், உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதானது, அவர்களை உணர்வு ரீதியாக கிளர்தெழச் செய்யும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய உணர்வுக் கொதிப்புகளின் விளைவுகளை நாடு ஏற்கனவே அனுபவித்திருக்கிறது.

அமைதியான, முறையில் ஜனநாயக ரீதியாக தீர்வு காணக்கூடிய சூழல் வாய்த்திருந்தும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ, அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுக்கத் தவறினாலோ, தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை பெறுவதற்காக வீதியில் இறங்குவார்கள் என்பதற்கான ஒரு சமிக்ஞை தான் இந்த முழு அடைப்பு போராட்டம்.

இந்த உண்மையை அரசாங்கமும், சர்வதேச சமூகமும் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறினால், அதன் விளைவுகளுக்கு தமிழ் மக்கள் பொறுப்பாளிகளாகி விட முடியாது.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.