Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு

Featured Replies

15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு

 

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம்.

டிடிவி

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மே 15 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டி.டி.வி.தினகரன். 

http://www.vikatan.com/news/politics/88086-delhi-court-orders-15-days-remand-for-ttvdinakaran.html

  • தொடங்கியவர்
gallerye_001307751_1762512.jpg

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, சசிகலா அக்கா மகன் தினகரனை, டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
 

 

Tamil_News_large_1762512_318_219.jpg


தினகரன், கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ள போலீசார், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும், டில்லியில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஹவாலா ஏஜன்ட் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததை, அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
 

அம்பலமானது



அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, சசிகலா அக்கா மகன் தினகரன், 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தது அம்பலமானது.
பெங்களூரைச் சேர்ந்த, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவன், 1.3 கோடி ரூபாயுடன், டில்லியில் பிடிபட்டதன் மூலம், இது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.

நான்கு நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பின், ஏப்., 26ல், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட் அனுமதியுடன், டில்லி போலீசார், அவர்களை காவலில் எடுத்து, ஐந்து நாட்களாக விசாரித்தனர்.

ஆஜர்படுத்தினர்


இதற்கிடையில், தினகரனுக்கு பணத்தை மாற்றுவதற்கு உதவியதாக, டில்லியைச் சேர்ந்த, பிரபல ஹவாலா ஏஜன்ட் நரேஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டான்.இந்நிலையில், தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில், போலீசார் நேற்று, அவர்களை ஆஜர்படுத்தினர்.

வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதால், கூடுதல் தகவல்களை சேகரிக்க, தினகரனை, மேலும் சில நாட்களுக்கு, தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, டில்லி போலீசார் கோரினர்.அதை ஏற்க மறுத்த, சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி, தினகரனை, மே, 15 வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, நேற்று மாலை, தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர், திகார் சிறையில் அடைக்க ப்பட்டனர்.போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு காரணங்களுக்காக, தினகரனை அடுத்த முறை, திகார் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜர்படுத்த, கோர்ட் அனுமதி அளித்தது.
 

கப்பல் மூலம்பணம் கடத்தல்


தினகரன் மீதான வழக்கு விசாரணைகுறித்து, டில்லி போலீஸ் வட்டாரங்கள்

 


கூறியதாவது: தினகரன், 1991 - 98 வரை, இந்தியாவில் இல்லை; வெளிநாட்டு பிரஜையாகவே வாழ்ந்து வந்தார். தற்போதும், அவரது, 'நெட்வொர்க்' முழுவதும் வெளிநாடுகளை மையப்படுத்தியே உள்ளது. மல்லிகார்ஜுனா உதவியுடன் அவர், கடல் மார்க்கமாக, பல கோடி ரூபாயை, கன்டெய்னர்களில் வெளிநாட்டிற்கு கடத்தியதாக, ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹவாலா ஏஜன்ட் மூலம், இடைத்தரகர் சுகேஷ் சந்தருக்கு பணம் தந்ததை, தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள அவரது, ஐந்து வங்கிக் கணக்குகளில் இருந்து, பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

பீதியில் மன்னார்குடி குடும்பம்


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொருவராக சிறைக்கு செல்வதால், அடுத்து என்ன நடக்குமோ என, மன்னார்குடி குடும்பம் பீதியில் உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1762512

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.