Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை- 3 சூட்கேஸ்களில் இருந்தது என்ன?: சசிகலாவிடம் விசாரிக்க திட்டம்

Featured Replies

கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை- 3 சூட்கேஸ்களில் இருந்தது என்ன?: சசிகலாவிடம் விசாரிக்க திட்டம்

கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா அறையில் 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்தது. அதில் என்ன இருந்தது தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை- 3 சூட்கேஸ்களில் இருந்தது என்ன?: சசிகலாவிடம் விசாரிக்க திட்டம்
 

கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24-ந் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.இதை தடுத்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கி விட்டு கும்பல் தப்பி ஓடியது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு 3 சூட்கேஸ்களும் திறந்து கிடந்தன. அதில் என் னென்ன இருந்தது? கொள்ளையடிக்கப்பட்டது எவை- எவை? என்பதை முதலில் போலீசார் தெரிவிக்க வில்லை. காவலாளியின் செல்போன்கள் மட்டும் திருட்டு போனதாக போலீசார் கூறினர். ஆனால் திறந்து கிடந்த சூட்கேஸ்களில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கட்சி ஆவணங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாயின. இதை போலீசார் மறுத்தனர்.

தற்போது இவ்வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்த பின்னர் தான் கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாகவும், அவை மீட்கப்பட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பங்களா அறைக்குள் ரூ.200 கோடி பணம் இருப்பதாக கருதியே கொள்ளை கும்பல் வந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் பணம் எதுவும் இல்லாததால் கைக்கடிகாரத்தையும், கண்ணாடி அலங்கார பொருளையும் மட்டும் திருடி சென்றதாக கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

201705011623547018_house._L_styvpf.gif

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்ததும், அவரது கூட்டாளியான சயன் விபத்தில் சிக்கி படுகாய மடைந்ததும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

காவலாளி கொலை வழக்கையும், இந்த விபத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனது என்ன? என்பதை வெளிப் படையாக கூற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

201705011623547018_enquiry%20._L_styvpf.

ஜெயலலிதாவின் அறையில் இருந்த சூட்கேஸ்களில் என்ன இருந்தது? என்பது சசிகலாவுக்கு மட்டும் தெரியும். எனவே இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தால் மட்டும் உண்மை தெரியும். ஆனால் மாநில போலீசார் இதில் நேர்மையாக நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிபடுத்த வில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/01162352/1082940/kodanad-estate-robbery-What-was-there-in-3-suitcases.vpf

  • தொடங்கியவர்
கோடநாடு கொலையாளி ரகசிய வாக்குமூலம்
பீதியில் உறைந்த அ.தி.மு.க., புள்ளிகள்
 
 
 

கோடநாடு கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மாஜிஸ் திரேட்டிடம் அளித்துள்ள, 'ரகசிய வாக்குமூலம்' முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இதனால், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்புடைய, அ.தி.மு.க., புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 

 

Tamil_News_large_1762516_318_219.jpg


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், ஏப்., 23 நள்ளிரவு, மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்; பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சேலத்தைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் நடந்த கார் விபத்தில், படுகாயமடைந்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரிடம், கோடநாடு கொலை தொடர்பாக, கோவை, ஜே.எம்., 5 மாஜிஸ்திரேட் செல்வகுமார் ஏற்கனவே ரகசிய வாக்குமூலம் பெற்று, பதிவு செய்துள்ளார்.
 

வாக்குமூலம் பதிவு


* கார் விபத்தில், மனைவி மற்றும் குழந்தையை பறிகொடுத்த சயான், கோடநாடு கொலை தொடர்பாக, முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், கோவைக்கு அழைத்து வரப்படும் முன், பாலக்காடு அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை பெற்ற போதும், அங்கு, கேரள போலீஸ் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தான் யார் என்பது பற்றியும், கோடநாடு கொலை தொடர்பாகவும், மன்னார்குடி குடும்பத்துக்கு மிக நெருக்கமான, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மர ஆலை அதிபர் குறித்தும், விலாவரியாக சயான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மர ஆலை அதிபர், வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என தெரிகிறது. மர ஆலை அதிபர் சிக்கினால், தங்களின் தொடர்பும் அம்பலமாகி, வழக்கில் சிக்கி விடுவோமோ என, அ.தி.மு.க., புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

 

* ஜெ., கடிகாரங்கள் மீட்பா?


கோடநாடு வழக்கில், பிடிபட்ட குற்றவாளிகளிடம், 'ஷோகேஸில்' வைக்கப்படும் அலங்கார பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும், எஸ்டேட் பங்களாவில், ஜெ., - சசி அறைகளில் திருடப்பட்ட, ஐந்து கைக்கடிகாரங்களை, கேரளா ஆற்றில் கொள்ளையர்கள் வீசி விட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளையரிடம் இருந்து, ஜெ., பயன்படுத்திய கைக்கடிகாரங்கள் மற்றும் அலங்கார பொருட்கள், போலீசாரால் மீட்கப்பட்டு விட்டதாக, நேற்று முன்தினம், சமூக ஊடகங்களில் படம் வெளியானது.
போலீசார் உடனடியாக மறுக்காத நிலையில், 'தினமலர்' தவிர்த்து, ஒரு சில ஊடகங்களிலும் வெளியானது. இந்த படத்தை வெளியிட்டது யார், நோக்கம் என்ன என்பதும் மர்மமாக உள்ளது.
 

ஜெ.,க்குரியது அல்ல


வெளியான படம் குறித்து, தடய அறிவியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடநாடு ஜெ., பங்களாவில், களவு போய் மீட்கப்பட்டதாக கூறப்படும் கைக்கடிகாரங்களில், ஜெ., உருவ படம் இடம்பெற்றுள்ளது. இது மாதிரியான கடிகாரத்தை, அவர் ஒருபோதும் அணிந்தது கிடையாது. ஜெ., அணிந்த கைக்கடிகாரங்கள், அதிக விலை கொண்ட, சர்வதேச தரம் வாய்ந்தவை.
'கடந்த, 1991ல், ஜெ., வீட்டில், 90 கைக்கடிகாரங்கள், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையால் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில், ஒரு கைக்கடிகாரத்தின் விலையே, 15.9 லட்சம் ரூபாய்; பிற கடிகாரங்கள், இரண்டு முதல், ஆறு லட்சம் ரூபாய் விலை கொண்டவை. சமூக ஊடகங்களில் வெளியான படத்திலுள்ள கைக்கடிகாரங்கள், 'லோக்கல்' தயாரிப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

ஊடகங்களில் வெளியான கைக்கடிகாரங்களுடன் கூடிய போட்டோ குறித்து, நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பாவிடம் கேட்டபோது, ''அந்த போட்டோ எங்களால் வெளியிடப்பட்டதல்ல,'' என்றார்.
கோடநாடு கொலை வழக்கு, ஆரம்பம் முதலே குழப்பமும், மர்மங்களும் நிறைந்ததாகவே போய் கொண்டிருக்கிறது என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
 

'இவரா செய்தார்...?' ஊழியர்கள் அதிர்ச்சி


சயான், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது உயிருக்குஆபத்து இருப்பதால், சிகிச்சை பெறும் வார்டு முன், போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். உறவினர், நண்பர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இந்நிலையில், சயானை சந்திக்க மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய, பேக்கரி ஊழியர்கள் இருவர் கூறியதாவது:

 

இவ்வளவு பெரிய வழக்கில், சயான் சிக்கியுள்ளது அதிர்ச்சி தருகிறது. மிக சாதுவாக, அமைதியாக காணப்படும் இவர், கொலைகார கும்பலுடன் எப்படி கூட்டு சேர்ந்தார் என்றே தெரியவில்லை. இவர், இந்த காரியத்தை செய்திருப்பாரா என்பது சந்தேகம் தான். வேறு யாராவது, இவரை தவறான வழிக்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கேரளா போலீஸ் மறுப்பு


கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக, திருச்சூரைச் சேர்ந்த நால்வர், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கேரளா வயநாடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, ஜிபின் ஜோய், 30; ஜம்சீர் அலி, 25, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
இவர்களை விசாரணைக்காக, ஊட்டிக்கு அழைத்து வர, தமிழக தனிப்படை போலீசார் மலப்புரம் விரைந்தனர். ஆனால், தாமதமாக வந்ததாக கூறி, கேரள போலீசார் ஒப்படைக்க மறுத்து விட்டனர். இதனால், கோர்ட் மூலமாக, தமிழகம் அழைத்து வர, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
 

யாருடைய பைக்?


ஜெ.,யின் கார் டிரைவர் கனகராஜ், 36, மரணம் தொடர்பாக, சேலம் மாவட்டம், ஆத்துார் போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.அதில், 'ஆத்துார், சக்தி நகரில் உள்ள சித்தி சரசு வீட்டுக்கு, 'இண்டிகா' வெள்ளை நிற காரில், கனகராஜ் வந்தார். அங்கு, காரை நிறுத்திவிட்டு, சரசு மகன் ரமேஷின் நண்பருடைய, பதிவு எண் இல்லாத, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்த போது, 'போர்டு - பிகோ' கார் டிரைவர் அஜாக்கிரதையாக வந்து, பைக் மீது மோதி, கனகராஜ் உயிரிழந்தார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், பைக்கிற்கு பதிவு எண் இல்லை; பைக் உரிமையாளர் யார் என குறிப்பிடப்படவில்லை. மேலும், காரில் வந்த கனகராஜ், உறவினரின் நண்பர் பைக்கில் தனியாக சென்றது ஏன் என்பது உட்பட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால், கனகராஜ் இறப்பில் மர்ம முடிச்சுகள் தொடர்கின்றன.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1762516

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.