Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வெடிகுண்டு லாரி... அ.தி.மு.க கொடியுடன் கார்! குடவாசலில் என்ன நடந்தது?” #NewsChat

Featured Replies

“வெடிகுண்டு லாரி... அ.தி.மு.க கொடியுடன் கார்! குடவாசலில் என்ன நடந்தது?” #NewsChat

 
 

58 டு 60 வயது... அரசு ஆணை ரெடி?

தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 6,800 டாஸ்மாக் கடைகள் மூலம் வருடத்துக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துவந்தது. அவற்றில் பெரும்பாலானவை மூடப்பட்டு தற்போது 2,600 கடைகள்தான் இயங்குகின்றன. இதுதவிர, இலவசப் பொருட்களுக்கு ஆகும் செலவுகள் தனிக்கதை. இதுஒருபுறமிருக்க... மறுபுறம், தற்போது அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் கணிசமானவர்கள் விரைவில் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளைச் செட்டில் செய்ய அரசிடம் பணம் இல்லை. அதனால், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்த உயர் அதிகாரிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து, அரசு ஆணை தயார் செய்யப்பட்டு முதல்வரின் டேபிளில் இருக்கிறதாம். 

போலீஸில் ஏன் இந்த நிசப்தம்?

ஜார்ஜ்

தமிழக போலீஸில் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள நால்வர், இந்த ஆண்டுடன் ஓய்வுபெறப் போகிறார்கள். தற்போது உளவுப்பிரிவின் டி.ஜி.பி மற்றும் சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி. பதவியில் உள்ள டி.கே.ராஜேந்திரன் அடுத்த மாதத்துடன் ஓய்வுபெறப் போகிறார். ஜூலை மாதத்தில், தற்போது உணவுப் பதுக்கல் துறையில் பணிபுரியும் ராதாகிருஷ்ணன் ஓய்வுபெறுகிறார். வருகிற செப்டம்பர் மாதம் முன்னாள் சென்னைப் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஓய்வுபெறுகிறார். அக்டோபர் மாதம்... டெல்லியில் துணைநிலை ராணுவப் பிரிவின் இயக்குநராகப் பணிபுரியும் அர்ச்சனா ராமசுந்தரம் ஓய்வுபெறுகிறார். இவர்களில், யாருக்காவது மாநில அரசுப் பதவி நீடிப்புத் தரலாம்; இரண்டு ஆண்டுகள்வரை பதவியில் இருக்கும் வகையில் செய்யலாம். ஆனால், மத்திய அரசு அப்படியெல்லாம் யாருக்கும் பதவி நீடிப்பு தரக்கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டதாம். எனவே, ஓய்வுபெற இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ள அதிகாரியைத்தான் சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.ஜி.பி-யாக நியமிக்கவேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்குச் சிபாரிசு செய்துள்ளதாம். தற்போதைய சூழ்நிலையில், மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு, அவர்கள் சொன்ன அட்வைஸை நிச்சியமாகப் பின்பற்றுவார்கள் என்கிறார்கள். 

ஜார்ஜ் வேண்டாம்... கரண்சின்காவே ஓ.கே..!

முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகச் சென்னைப் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இருந்துவந்தார். அதனால், சீனியர் அதிகாரிகள்கூட எதுவும் பேசுவதில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு வந்தது. எதிர்க்கட்சியினரின் புகாரை அடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் ஜார்ஜ். தேர்தல் நின்றுபோய்விட்டது. ஆனால், ஜார்ஜுக்கு மீண்டும் கமிஷனர் பதவி தரப்படவில்லை. அவர் இடத்தில் பதவியில் இருக்கும் கரண்சின்கா, அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னைப் போலீஸில் இருந்து வெளியூர்களுக்கு மாறுதல் செய்யப்பட்ட 881 போலீஸ் அதிகாரிகளை... ஜார்ஜ் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் விடுவிக்கப்படவில்லையாம். வெளியூர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் அதிகாரிகள் மாறுதலில் செல்லமுடியாமல் தவித்தார்களாம். இதனால், போலீஸ் நிர்வாகத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள். கரண்சின்கா பதவியேற்றதும், ஒரே நாளில் 351 பேர்களை விடுவித்தாராம். படிப்படியாக மற்றவர்களையும் விடுவித்தார்களாம். இதேபோல், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைதுசெய்யப்படும்போது, ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஃபைல் தயார் செய்வார்கள். இதற்கு ஆகும் ஸ்டேஷனரி மற்றும் இதர நிர்வாகச் செலவுகளுக்காக  8 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கும். இப்படி, ஜார்ஜ் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் சுமார் 500 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் போலீஸ் தரப்பில் செய்யப்பட்ட செலவு நான்கு கோடி ரூபாய். இந்தப் பணம் சரிவர பட்டுவாடா ஆகவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் புலம்பிவந்தனர். அந்தப் பணத்தையும் உடனடியாக வழங்க கரண்சின்கா நடவடிக்கை எடுத்தாராம். இப்படிப் பல விவகாரங்களில சபாஷ் வாங்கி வருகிறார் கமிஷனர் கரண்சின்கா.  

வெடிகுண்டு லாரி... அ.தி.மு.க கொடியுடன் கார்! 

சசிகலாஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து மர்மச் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போலீஸார் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதோ... இன்னொரு மர்மமுடிச்சு விவகாரம்! கொடநாடு எஸ்டேட்டின் நிர்வாக முக்கியப் பொறுப்பில் இருப்பவரின் ஊர்... திருவாரூர் மாவட்டம் குடவாசலுக்கு அருகில் உள்ள கிராமம். மே 1-ம் தேதி அன்று அங்கு நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கிராமத்து மக்கள் கூறுபோது, ''ஒரு லாரி பிடிபட்டதாம். அதில், ஏராளமான ஆவணங்கள், முக்கியக் குற்றவாளிகள், பணப்புதையல்... இதில் ஏதோ ஒன்று சிக்கியதாக ஊருக்குள் பேச்சு. ஆனால், போலீஸாரோ, வேறு மாதிரி கதை கட்டிவிடுகிறார்கள். இதில், ஏதோ மர்மம் இருக்கிறது'' என்கிறார்கள். 

குடவாசலில் என்ன நடந்தது? 

குடவாசல் அருகில் நேற்று (01-05-17)) மதுபாட்டில்கள் ஏற்றிவந்த லாரியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டுகள் வெடித்தால், மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உருக்குலைந்து போகுமாம். மதுபானங்களை ஏற்றிக்கொண்டு, கோவையில் இருந்து அந்த லாரி வந்ததாம். அதில், ஹாட்பாக்ஸ் ஒன்றில் வெடிகுண்டு, நாட்டு வெடிக்குண்டு பார்சல், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள்... அனைத்தும் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வட சென்னையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரகசிய தகவல் வந்ததாம். அவர் உடனே காரில் விரைந்து வந்து லாரியைச் சோதனை செய்து வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தாராம். உண்மையில், அந்த லாரியில் வெடிகுண்டு இருந்ததா அல்லது வேறு ஏதும் பொருட்கள் இருந்ததா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. வட சென்னையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி, காரில் அ.தி.மு.க கொடி கட்டியபடி ஏன் வந்தார் என்று தெரியவில்லை. முதல்நாள், அவர் வந்த கார் குடவாசலில் ஒரு குறிப்பிட்ட ஆளும் கட்சி பிரமுகரின் வீட்டருகே நின்றிருந்ததாம். தற்போது... போலீஸாரால் அந்த லாரி, வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அடுத்தகட்ட விசாரணைகள் நடப்பதாக சொல்கிறார்கள்.

சசிகலா உறவினரைத் தலைமை ஏற்ற திடீர் போஸ்டர்... டாக்டர் வெங்கடேஷுக்கு ஜே! 

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு... சசிகலா அண்டு கோ-வின் குடும்பத்தினர் பலவித சரிவுகளைச் சந்தித்து வருகின்றனர். சசிகலா, ஜெயலலிதாஇளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன், திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நிலை சரியில்லாமல் முடங்கிவிட்டார். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், திடீர் ஹார்ட் அட்டாகில் இறந்துவிட்டார். இந்த நிலையில், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனும், அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளரும் டாக்டர் வெங்கடேஷ் அமைதிகாத்து வருகிறார். சசிகலா தீவிர அரசியலுக்கு வந்தபோது, தினகரனும் அவரும்தான் உடன் இருந்தனர். சசிகலா எங்கே விசிட் வந்தாலும், வெங்கடேஷ்தான் பைலட் விசிட் அடித்து ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். சசிகலா, சிறைச்சாலைக்குப்போன பிறகு, வெங்கடேஷ் இருந்த இடமே தெரியவில்லை. ஆனால், திடீரென்று அவரது ஆதரவாளர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ஆதரவாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். போஸ்டரில், ஜெயலலிதா, சசிகலா... இருவரும் வெங்கடேஷின் மீது பூ தூவுவதுபோல் வடிவமைத்துள்ளனர். 'ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்த ஒரே தலைவர் நீங்கள்தான்...', 'பாசறை தலைவரே... கழகத்துக்குத் தலைமை ஏற்க வா...' என்கிற வாசகங்கள் அதில் இடம்பெற்றுளளன. இந்தப் போஸட்ரை ஒட்டியவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர். இதற்கிடையில், வெங்கடேஷின் மாமனார் ஊர் பட்டுக்கோட்டை. மாமனாரின் பெயர் பண்ணைவயல் பாஸ்கர். கட்சியில் அம்மா பேரவை முன்னாள் செயலாளராகப் பதவியில் இருந்தவர். அவர் தரப்பிலும் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்ததாம். ஆனால், கடைசி நிமிடத்தில் அது ரத்து ஆனது. 

ஜெயானந்த், விவேக் என்ன செய்யப்போகிறார்கள்?

 

பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள இளவரசியின் (சசிகலாவின் அண்ணி) மகன் விவேக். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த். இருவரும் அ.தி.மு.க-வில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்கள். அன்றுமுதல் இன்றுவரை உறுப்பினர்களாகவே தொடர்கிறார்கள். இடையில், சசிகலாவை விலக்கிவைத்தது, அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள்... என்று ஏக டார்ச்சர் கொடுத்தபோதுகூட... இந்த இருவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. திவாகரன், கட்சியில் உறுப்பினராக இல்லை என்பது வேறு விஷயம். தற்போதைய சூழ்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருந்தால் மட்டுமே கட்சியின் முக்கியப் பதவிகளுக்குப் போட்டியிட முடியும். அந்த வகையில், சசிகலா குடும்பத்தினரில் யாருக்கும் அந்த வாய்ப்பு இல்லை. ஜெயானந்த் மற்றும் விவேக்குக்கும்தான் அந்த வாய்ப்பு உள்ளது. இதை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கும் இந்த இருவரும் அரசியல்ரீதியாக அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் எனபது அ.தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பு.

http://www.vikatan.com/news/tamilnadu/88135-tamil-nadu-today-this-is-what-happening-at-tamil-nadu-newschat.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.