Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அடித்துக் கொள்ள வேண்டிய நேரமா இது?!’ - வெளியாகிறதா சசிகலா அறிக்கை?! #VikatanExclusive

Featured Replies

‘அடித்துக் கொள்ள வேண்டிய நேரமா இது?!’ - வெளியாகிறதா சசிகலா அறிக்கை?! #VikatanExclusive

 
 

சசிகலா

‘அணிகள் இணைப்பு' என்ற பெயரில், அ.தி.மு.கவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ' ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அ.தி.மு.க மூன்று துண்டுகளாக சிதறிப் போய்விட்டது. தற்போதுள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு, நாளை அறிக்கை வெளியிட இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் வாங்கிய கையோடு, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. 'சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர இருந்ததால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை' எனக் காரணமும் கூறினார் ஆளுநர். அவரது கூற்றுப்படியே, நான்காண்டு சிறைத் தண்டனையை எதிர் கொண்டார் சசிகலா. பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்லும் நாளில், அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை பதவியில் அமர்த்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழியாக ஆட்சி அதிகாரத்தை நோக்கி முன்னேறினார் தினகரன். தற்போது அவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கை கோர்த்தால், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்' என்பதால் பேச்சுவார்த்தையைத் தொடங்க திட்டமிட்டனர். ஆனால், இரண்டு அணிகளின் தலைவர்களும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. 

‘சசிகலா குடும்பத்தை நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும்; அம்மா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை அமைக்க வேண்டும்' என இரண்டு கோரிக்கைகளை வெளிப்படையாகவே முன்வைத்துப் பேசி வருகிறார் பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி. இதற்குப் பதில் அளித்த பழனிசாமியோ, 'நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்' என்றார். ஆனால், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, உறுதியான பதில் கூறாமல் மௌனம் சாதிக்கிறார் பழனிசாமி. இதைத்தான், 'கபட நாடகம்' எனக் கடுமையாக விமர்சித்தார் பன்னீர்செல்வம். "ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே, மறுபக்கம் அணிகள் இணைப்பை சீர்குலைக்கும் வேலைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்சிக் கலைப்பு, ஆட்சிக் கலைப்பு என அ.தி.மு.கவை பல துண்டுகளாக சிதறடிக்கும் வேலைகள் வெகு சிரத்தையாக அரங்கேறிக் கொண்டு வருகின்றன. அமைச்சர்கள் பலரும், ஏராளமான சொத்துக்களை சேர்த்துவிட்டதால் அவற்றைக் காப்பாற்றுவதற்காகவே மத்திய அரசின் பக்கம் இணக்கமாகச் செல்கின்றனர். இதனால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. 'இதைப் பற்றிய கவலை இரண்டு அணிகளுக்கும் இல்லை' எனக் கருதுகிறார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்ற நாள் முதலாக, கட்சியில் நடக்கும் விவகாரங்களை வழக்கறிஞர் செந்தில் மூலமாக அறிந்து வருகிறார். இணைப்பு என்ற பெயரில் நடக்கும் தகராறுகளை அறிந்து மிகுந்த கவலையோடு இருக்கிறார். இதுகுறித்து நாளை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறார்" என விவரித்த, அ.தி.மு.க அம்மா அணியின் வழக்கறிஞர் ஒருவர், 

 

“இன்று பெங்களூரு செல்ல இருக்கிறார் இளவரசி மகன் விவேக். அறிக்கை வெளியிடுவது தொடர்பாக, அவரிடம் வழக்கறிஞர்கள் தீவிரமாக விவாதித்துள்ளனர். சசிகலா கூறிய கருத்துக்களோடு அறிக்கை தயாராகிவிட்டது. கட்சியினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை பல இடங்களில் வலியுறுத்துகிறார் சசிகலா. அந்த அறிக்கையில், ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் நலிவுற்ற காலகட்டத்தில், மாவட்டம்தோறும் கடுமையாக பிரசாரம் செய்து அம்மா பெற்றுக் கொடுத்த வெற்றி இது. இதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது அடித்துக் கொள்ள வேண்டிய நேரம் கிடையாது. அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை, நமது ஒற்றுமைதான் முறியடிக்கும். அம்மா பெற்றுக் கொடுத்த வெற்றியை நாம் கீழே போட்டு உடைத்துவிடக் கூடாது' என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார். அறிக்கையின் எந்த இடத்திலும், யாரையும் அவர் விமர்சிக்கவில்லை. சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அறிக்கை வெளிவருகிறது" என்றார் விரிவாக.

http://www.vikatan.com/news/tamilnadu/88150-sasikalas-statement-coming-soon-as-ops-eps-fight-gets-bitter.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.