Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி ஜெ.,பங்களாவிலிருந்து கடத்தியதாக சந்தேகம்!

Featured Replies

கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி
ஜெ.,பங்களாவிலிருந்து கடத்தியதாக சந்தேகம்!
 
 
 

மர்மங்கள் நிறைந்த கோடநாடு கொலையில், தோண்டத் தோண்ட புது, புது தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

 

Tamil_News_large_1763615_318_219.jpg

கடந்தாண்டு, தமிழக சட்டசபை தேர்தலின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த சந்தேகம், போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
 

அம்பலம்


திருப்பூர் அருகே, 2016, மே 13ல், வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளில், 570 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்துக்கு பாதுகாப்பாக காரில் வந்த நபர்கள், 'இந்த பணம் கோவை, எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் இருந்து, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், எஸ்.பி.ஐ.,க்கு செல்கிறது' என்றனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.

திருப்பூர் போலீசாரின் விசாரணையில், மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என்பது அம்பலமானது. மேலும், பணம் பிடிபட்டு, 36 மணி நேரம் வரை அதிகாரப்பூர்வ கடிதம், கோவை, எஸ்.பி.ஐ.,

சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப் படவில்லை; இதனால், சந்தேகம் வலுத்தது.

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பணத்தின் உரிமை யாளரை, காப்பாற்ற, மத்திய அரசு முயற்சிப்பதாக, தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதை யடுத்து, நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை, 570 கோடி ரூபாயை, அதிரடியாக தமது கட்டுப்பாட் டில்எடுத்து, கோவை, எஸ்.பி.ஐ., யின் பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டது.
 

சி.பி.ஐ.,க்கு மாற்றம்


அதன்பின், மர்மம் நிறைந்த இவ்வழக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, சி.பி.ஐ.,க்கு மாற்றப் பட்டது. திருப்பூருக்கு வந்த, சி.பி.ஐ., அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்த, 570 கோடி ரூபாய் பறிமுதல் தொடர்பானஆவணங்களை பெற்றுச் சென்றனர். கோவை, எஸ்.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது.

ஆனால், அதன் பின், சி.பி.ஐ., தரப்பில் எந்த தகவல் களும் வெளியிடப்படவில்லை. மிகப்பெரிய பொருளாதார குற்ற வழக்கில் யாரும் கைது செய்யப்படவும் இல்லை.கன்டெய்னர் லாரிகளில் கடத்தப்பட்ட, 570 கோடி ரூபாய் யாருடையது, எந்த நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலி என்றால்அவற்றின் உரிமை யாளர்கள் யார்; சட்ட விரோதமாக கடத்தப்பட்ட, 570 கோடி ரூபாய் தங்களுடையது தான் என கடிதம் வழங்கு மாறு, எஸ்.பி.ஐ., அதிகாரிகளை துாண்டியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி களுக்கு இதுவரை பதில் இல்லை.
 

அதிர்ச்சி:

இந்நிலையில்தான்,தற்போது கோத்தகிரி,

 

கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைச் சம்பவம், 570 கோடி ரூபாய் விவகாரத்தை மீண்டும் கிளறி யுள்ளது. எஸ்டேட் காவலாளி கொலையில் கைதான முக்கிய நபர்கள், ஜெ., பங்களாவில், 200 கோடி ரூபாய்க்கும் அதிக மான தொகை மறைத்து வைக்கப்பட்டிருக் கலாம் எனக்கருதி, அதைக் கொள்ளையடிக்க முயன்றதாக வாக்கு மூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர்கள், ஜெ., பங்களாவைப் பற்றி நன்கறிந்தவர்கள். இதனால், திருப்பூரில் கடந்தாண்டில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் கோடநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்குமோ, என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு வலுத்துள்ளது.

கன்டெய்னரில் சிக்கிய, '570 கோடி' ரூபாய் வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ., தனது விசாரணையை தீவிரப்படுத்தினால், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள் ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1763615

  • தொடங்கியவர்

கப்பல், கன்டெய்னர் கரன்சி, 'மெசேஜ்' கள்! அலறும் கார்டன் அணி

 

அடுத்தடுத்த ரெய்டு,விசாரணைகளால் அ.தி.மு.க-வின் (சசிகலா அணி) 'தொப்பி' ஏரியாவில் திகில் பரவத் தொடங்கியுள்ளது. நம்மிடம் பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், 'உறுதிப்படுத்தப்படாத என்றளவில், தினமும் ஒரு தகவல் வந்தால்கூட பரவாயில்லை... மணிக்கு ஒரு தகவலாக வருவதுதான் எங்களைப் பாடாய்ப்படுத்துகிறது. இரண்டு நாட்களாக அப்படி ஒரு தகவல் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

ADMK Amma

'சென்னைக் கடல் எல்லையில் பெரிய கப்பல் ஒன்று பழுதாகி நிற்கிறதாம். ஏதோ, சர்வீஸ் வேலை நடக்கிறதாம். அந்தக் கப்பலில், புது 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக்கொண்ட கன்டெய்னர்களை வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்களாம். அந்தப் பணம் யாருடையது என்றும் தெரியுமாம். அதை மட்டும் நாங்களாகவே கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் மொத்தமாகக் காலி' என்று அந்த மெசேஜில் போட்டிருக்கிறது. அதுவும் எங்கள் அணி ஆட்களின் செல்போனுக்கு மட்டுமே அந்தத் தகவலை அனுப்பிவைத்திருக்கிறார்கள்'.

யாருக்கும் அந்தத் தகவலை ஃபார்வேர்டு கூட பண்ண முடியவில்லை, நாங்களே கையில் வைத்துப்பார்த்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை. நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டிருக்கிறது' என்கிறார். கப்பல், கன்டெய்னர் கரன்சி போன்றவை மட்டுமல்ல, இதே ஸ்டைலில் பல தகவல்களை அனுப்பி பீதியைக் கிளப்புவதாக, இவரைப் போலவே பலர் கதறுகின்றனர். அவிங்க ஆட்டத்துல இது புது ரகமால்ல இருக்கு!

http://www.vikatan.com/news/tamilnadu/88445-admk-amma-party-fears.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.