Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் மந்திரி,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்!

Featured Replies

கொடநாடு விவகாரத்தில் முன்னாள் மந்திரி,முக்கியப் பிரமுகர்களும் சிக்குகிறார்கள்!

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது. எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார், பங்களாவில் கொள்ளையும் போயிருந்தது. கொலை-கொள்ளையில் பலர் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயங்களுடன் உயிர்தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் சிக்கினர்.

Kodanad Estate

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கனகராஜின் கூட்டாளி சயன், ஹவாலா மோசடி ஆசாமியும் சாமியாருமான மனோஜ் மற்றும் சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார், ஜிபின் ஜோய், ஜம்சீர் அலி, குட்டி என்ற ஜிஜின், சாமி என்ற மனோஜ் ஆகிய 11 பேர் குற்றவாளிகள் எனத் தெரிந்தது. ஜெயலலிதாவின் டிரைவரான கனகராஜ், போலீஸில் சிக்கும் முன்பே, சேலத்தில் நடந்த கார் விபத்தில் கடந்த 28-ம் தேதி இறந்தார். அதேபோல கனகராஜின் கூட்டாளியான சயனும் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார்.

ஆனாலும், சயன் காப்பாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த வழக்கில், எஞ்சிய மற்ற ஒன்பது பேரை போலீஸார் தங்கள் பாதுகாப்பில் கொண்டுவந்து விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். கேரளாவில் பிடிபட்ட ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் செல்போன் எண்களில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது.

Kodanad Estate

கொடநாடு பங்களாவில் கட்டில், மெத்தை, ஃபர்னீச்சர் போன்றவைகளை அமைக்கும் பணியில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகிய இருவரும் இருந்துள்ளனர். இவர்களை கொடநாடு பங்களாவுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தது, அந்த முன்னாள் அமைச்சர்கள்தான். அப்போது ஏற்பட்ட பழக்கத்தைவைத்து, செல்போனில் அடிக்கடி பேசிவந்தார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொடநாடு பங்களா கொள்ளையை முடித்துவிட்டு காரில் தப்பிக்கும்போது, 'செக்-போஸ்ட்' டில் ஜதீன்ஜாயும்  ஜம்சீர் அலியும் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

 

அப்போதும், முன்னாள் மந்திரியான இருவருக்குப் போனில் பேசி உதவி கேட்டுள்ளனர். முன்னாள் மந்திரிகளும், விடுங்கய்யா... அவங்க தெரிஞ்சவங்கதான்' என்று சொல்லி வழியனுப்பிவைத்துள்ளனர். ஒருவர் பின் ஒருவராக போலீஸில் சிக்கி, பின் தப்பித்துச் சென்ற ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரும் சிக்கிக்கொண்டனர். கொடநாடு கொலை-கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பாக, கார் விபத்தில் சிக்கிய கனகராஜ் மற்றும் சயனின் செல்போன் நம்பர்களில் முக்கியமான அரசியல் புள்ளிகள் சிலர் பேசியுள்ள தகவலை, அடுத்தடுத்த விசாரணையின்போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒருவர், சென்னையைச் சேர்ந்தவர் என்கிறார்கள். கொடநாடு கொலையும், கொள்ளையும் அடுத்தடுத்த திருப்பங்களைக்கொண்ட 'த்ரில்லர்' சினிமாவாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/88452-ex-ministers-involved-in-kodanad-security-guard-murder-case.html

  • தொடங்கியவர்

கோடநாடு எஸ்டேட் விவகாரம்: நீடிக்கும் மர்மங்களுக்கு விடை என்ன? - சசிகலாவிடம் விசாரணை நடத்தக் கோரும் மக்கள்

 

 
 
கோடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளை போனதாகக் கூறப்படும் கடிகாரங்கள் மற்றும் அலங்காரச் சிலை.
கோடநாடு எஸ்டேட்டில் இருந்து கொள்ளை போனதாகக் கூறப்படும் கடிகாரங்கள் மற்றும் அலங்காரச் சிலை.
 
 

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், சசிகலாவிடம் விசாரணை நடத்தப் பட்டால்தான் கொள்ளை போன தங்கம், வைர கற்கள் குறித்து தெரியவரும் என கோடநாடு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட் டில் முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளையர்கள், காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணையில், இது கொள்ளை முயற்சிதான், பொருட்கள் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளையில் 11 பேர் ஈடுபட்டனர். பங்களாவில் இருந்து கடிகாரங்கள் மற்றும் அலங்கார பொருள் கொள்ளை அடிக்கப்பட்டதாக வும், கடிகாரங்களை கேரளாவில் உள்ள ஆற்றில் கொள்ளையர்கள் வீசிவிட்டதாகவும், அலங்கார பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரி விக்கப்பட்டது.

இந்நிலையில், கொள்ளை போன தாகக் கூறப்பட்ட கடிகாரங்கள் மற் றும் அலங்கார பொருளின் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதில், சாதாரண கைக்கடிகாரங்களே இருந்தன. ஆற்றில் வீசப்பட்ட கடிகாரங்கள் அவை தானா?, அவைதான் கொள்ளையடிக்கப்பட்டவையா? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில், பங்களாவில் இருந்து பணம், நகை, ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவின் உயில் ஆகியவை கொள்ளை போனதாக வேறு தகவல்களும் வெளியாகி மக் களை அதிர்ச்சியடையச் செய்தன.

இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, கோவை மண்டல டிஐஜிக்கு அறிக்கை அளித்துள்ளார். கோடநாடு பங்களாவில் இருந்து தங்கம் மற்றும் வைர கற்கள் கொள்ளை போயுள்ளதாகவும், ஆனால் எவ்வ ளவு என்பது தெரியவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடநாடு பங்களாவில் உள்ள பொருட்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசி கலாவுக்கு மட்டுமே தெரியும் என் கின்றனர் எஸ்டேட் தொழிலாளர்கள்.

இதில், ஜெயலலிதா உயிரிழந் துள்ள நிலையில், சசிகலாவிடம் விசாரித்தால் மட்டுமே கொள்ளை போன பொருட்கள் குறித்து தெரிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் முழுவதையும் சசிகலாவின் விசுவாசியான மேலாளர் நடராஜ் கவனித்து வருகிறார். எஸ்டேட்டில் உள்ள பொருட்கள் குறித்து அவரி டம் சசிகலா கூறியிருக்கலாம். எனவே, நடராஜிடம் விசாரணை நடத்தப்பட் டால் கொள்ளை போன பொருட்கள் குறித்து தெளிவு கிடைக்கும்.

ஏற்கெனவே, கடந்த பல மாதங் களுக்கு முன்பு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாகவும், அதை தனது அதிகார பலத்தால் மேலாளர் நடராஜ் மூடி மறைத்து விட்டதாகவும் அப்போதே, கொள்ளை முயற்சி குறித்து விசாரித் திருந்தால், தற்போது நடந்த கொலையை தவிர்த்திருக்க முடியும் என்றும் குமுறுகின்றனர் எஸ்டேட் தொழிலாளர்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/கோடநாடு-எஸ்டேட்-விவகாரம்-நீடிக்கும்-மர்மங்களுக்கு-விடை-என்ன-சசிகலாவிடம்-விசாரணை-நடத்தக்-கோரும்-மக்கள்/article9681223.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

கொடநாடு எஸ்டேட்டில் நடப்பது என்ன?! நேரடி ரிப்போர்ட்!

உண்மையை மறைக்கும் காவல் துறை!, அடுத்தடுத்து வரும் சந்தேகங்கள்! உண்மை எப்போது வெளிவரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.