Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..!

Featured Replies

கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..!

 

srilanka

கடல் எல்லையை குறிக்கும் விதத்தில் பெயர் பலகையினை திறந்துள்ளது இலங்கை. இந்தியாவின் எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை கடல்நீர் பெருக்கத்தை பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்கவும், இலங்கையில் இருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும் நமது எல்லை பகுதியான 5-ம் மணல் திட்டில் 'இந்தியா' என்ற பெயர் பலகையினை இந்திய கடற்படையினர் ஏற்கனவே வைத்துள்ளனர்.

india


இந்நிலையில் தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரில் இருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டு கொடியுடன் 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர் பலகையினை வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லைத் தாண்டுவதாக குற்றம்சாட்டி, அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், கொடூரமாக தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், இந்த பெயர் பலகை எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/india/88560-this-board-indicates-maritime-boundary-of-srilanka.html

  • கருத்துக்கள உறவுகள்

srilanka

மேலே படத்தில்உள்ளது என்ன சாதி சிங்கம் என்று தெரியவில்லை ஏன் அதுக்கு இப்படி வாத்து போல் பின்பக்கம் பெருத்து போய் உள்ளது ?

உண்மையான சிங்கத்தை அந்த படத்துக்கு உரியவர்கள் இன்னும் பார்க்கவில்லை போல் உள்ளது .

lion க்கான பட முடிவுlion க்கான பட முடிவு

 

நான் நினைக்கிறன் அலியாக இருக்கலாம் அந்த சொறிலங்கா படத்தில் உள்ளது .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

தனுஷ்கோடி அருகே இலங்கை எல்லை பலகை? - இலங்கை மீன்வளத் துறையினர் மறுப்பு

 

 
board_3161853f.jpg
 
 
 

தனுஷ்கோடிக்கு அருகே உள்ள 8-வது மணல் தீடையில் இலங்கை அரசு எந்தவித பெயர் பலகையையும் நிறுவவில்லை என அந்நாட்டு மீன்வளத் துறையினர் மறுத்துள்ளனர்.

ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்குச் சொந்தமானவை. இதில் 6-வது மணல் தீடை சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக தோண்டியபோது முற்றிலும் மூழ்கி விட்டது.

இந் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நந்தகுமார் இருந்தபோது அவரது உத்தரவின்பேரில், தனுஷ்கோடி தலைமன்னார் இடையேயான 5 வது மணல்மேட்டுப் பகுதியில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் விதமாக ‘இந்தியா’ என்று எழுதப்பட்ட தகவல் பலகை 2014-ம் ஆண்டு ஜுலை மாதம் மாவட்ட நிர்வாகம் மூலம் நிறுவப்பட்டது.

மேலும் 5 வது மணல் தீடை கடல் பகுதியை தமிழக மீனவர்கள் கடந்து சென்று மீன் பிடிக்கக் கூடாது, இப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் மர்மப் படகுகள் எதுவும் ஊடுருவினால் மீனவர்கள் உடனடியாக இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடலோரக் காவல் படையினர் கேட்டுக்கொண்டனர்.

இந் நிலையில், இலங்கைக்குச் சொந்தமான 8-வது மணல் தீடையில் இலங்கை அரசு சார்பாக எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து விடாமல் இருக்க இந்த பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சிகளில் நேற்று செய்திகள் வெளியாயின.

இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக தொலைக்காட்சிகளில் வெளியான இலங்கை பெயர் பலகை யாழ்ப்பாணம் அருகே பருத்தித் துறையில் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் 8-ம் மணல் தீடையில் எந்த பெயர் பலகையும் நிறுவப்படவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ள நிலையில், திட்டமிட்டே இந்திய தொலைக்காட்சிகள் இத்தகைய பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. மேலும் இலங்கைக்குச் சொந்தமான பகுதியில் பெயர் பலகைகள் நிறுவ இந்தியாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/தனுஷ்கோடி-அருகே-இலங்கை-எல்லை-பலகை-இலங்கை-மீன்வளத்-துறையினர்-மறுப்பு/article9684845.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.