Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள

Featured Replies

மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள
 
 
மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள
படுகொ­லை­கள் மற்­றும் கடத்­தல்­க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளைப் பாது­காக்­கும் அர­ணா­கவே வெளி­நா­டு­க­ளி­லுள்ள இலங்­கைத் தூத­ர­கங்­களை முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்த பாய ராஜ­பக்ச  பயன்­ப­டுத்­தி­னார்  என்று  சபை­யில் தெரி­வித்­தார் அய­லு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர. 
 
 நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற இரா­ஜ­தந்­தி­ரச் சிறப்­பு­ரி­மை­கள் சட்­டத்­தின் கீழான கட்­ட­ளையை அங்­கீ­க­ரித்­துக்­கொள்­வ­தற்­கான பிரே­ரணை மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். கோத்­த­பா­ய­வின் புதல்­வர், மகிந்த ராஜ­பக்­ச­வின் பாரி­யார் ஆகி­யோர் தொடர்­பி­லும் அவர் தக­வல்­களை வெளி­யிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 
கடந்­த­ஆட்­சி­யின்­போது  மனித உரி­மை­கள் அப்­பட்­ட­மாக  மீறப்­பட்­டன. கடத்­தல், கொள்ளை, கொலை­க­ளும் தலை­வி­ரித்­தா­டின. இவற்­று­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்­குக் கடந்த ஆட்­சி­யில்  வெளி­நாட்­டுத்  தூத­க­ரங்க­ளில்  வேலை வழங்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இலங்­கை­யி­லுள்ள குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­கும் இல்­ல­மா­கவே தூத­ர­கங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.
 
அதே­வேளை, பிரே­ஸி­லில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­தில் இடம்­பெற்­றுள்ள படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டைய இரு­வ­ருக்கு பிரே­ஸி­லில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்­குப் பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. லசந்­த­வின் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­பட்ட ஒரு­வர் பேர்­ளி­னி­லுள்ள இலங்­கைத் தூத­ர­கத்­தில் பணி­யாற்­றி­யுள்­ளார். 
 
ரஷ்­யா­வின் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட உத யங்க வீரதுங்க ஒன்பது வருடங்களாக அங்கு இருந்தார். அவரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளின் ஊடாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் கொடுக்கல் - வாங்கல் செய்யப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்வதற்காக பன்னாட்டுப் பொலிஸ் ஊடாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு இருக்கிறார் என்று தெரியும். தொடர்ந்தும் அவரால் ஒளிந்திருக்க முடியாது-என்றார். 

http://onlineuthayan.com/news/26043

  • தொடங்கியவர்

மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு –

kamal-gunaratne.jpg

முன்னாள் உயர் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோதபாய ராஜபக்ஸ, கமால் குணரட்னவை பிரேஸிலுக்கான பிரதித் தூதுவராக நியமித்திருந்தார் எனவும் குறித்த காலப்பகுதியில் தூதரகத்தில் பணியாற்றிய நிமால் ரூபசிங்க என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு தூதரக உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக்கு உதவியவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் பிரேஸிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள  வெளிவிவகார அமைச்சர்  என்ன காரணத்தினால் குணரட்ன குறித்த நபரை கொலை செய்தார் என்பதனை குறிப்பிடவில்லை.

எனினும், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன குறித்த பணியாளரை மிகவும் மோசமாக நடத்தியிருந்தார் எனவும்  கமால் குணரட்ன மற்றும் அவரது மனைவியின் ஆடைகளை கழுவுமாறு கொலையுண்ட பணியாளர் பணிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ராஜதந்திர சேவையை சொர்க்கபூமியாக மாற்றியிருந்தது என மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/26060

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள மற்றும் பீரிஸ் போன்றவர்கள் மிகவும் கைதேர்ந்த நுண்ணரசியலறிவுசார்நகர்வுகளைப் பக்குவமாகச்செய்துவருபவர்கள். படுமோசமான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை உருவாக்கி நடைமுறைபடுத்த முனைந்தவாறு, அதுதொடர்பாக எழும் எதிர்ப்பை(சப்பை எதிர்ப்பு) திசைதிருப்பக் கோத்தபாய குழுவின் அரசியலைத் துணைக்கிழுக்கிறார். இதனோடு எதிர்கட்சி படுத்துவிடும்.  தமிழினம் தனக்காக எப்படி தன்னெழுச்சியான நிலமீட்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கிறதோ, அதேபோன்று  தமிழினத்துக்கெதிரான சட்டவரைபுகளுக்கெதிராகவும் போராடும் சக்தியாக மாறவேண்டும். அரசியல்வாதிகள் ஒருபோதும் தமிழரது வலுவைச் சரியாக நெறிப்படுத்தி ஒருசக்தி மையமாக உருவாக்க மாட்டார்கள். தந்தை செல்வாவின்பின்  ஆயுதப்போராட்டகாலம். அதன்பின் எழுந்த மக்கள் எழுச்சியை தமக்கான போட்டியரசிலாகச் சித்தரித்துக் கிடப்பிலே போட்டுவிட்டார்கள். 

தமிழினம் புலத்திலும் தாய்நிலத்திலும் எப்போது சரியாக நகர்கிறதோ அன்றுதான் சரியான திசை தெரியும். அதுவரை இருள்நிலையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.