Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோடி முன் உள்ள கடமைகள்....

Featured Replies

நரேந்திர மோடி முன் உள்ள கடமைகள்....

 

– ரொபட் அன்­டனி

 

  • மலை­யக மக்­களின்  வீட்டுப்பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்கும் அறி­விப்பைச் செய்­ய­வேண்டும் .
  • அர­சியல் தீர்­வுக்­கான அழுத்­தங்­களை  பிர­யோ­கிக்­க­ வேண்டும் . 

 

 

 

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் இரண்­டா­வது தட­வை­யாக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு முக்­கிய விஜ­ய­மொன்றை எதிர் வரும் 12 ஆம் ­தி­கதி மேற்­கொள்­ள­வி­ருக்­கின்றார். வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலை­யக மக்கள் மத்­தியில் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்­தியப் பிர­தமர் மோடியின் இலங்கை விஜ­ய­மா­னது வர­லாற்று ரீதி­யாக மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.    

ஐக்­கி­ய­ நா­டு­களின் வெசாக்­தின நிகழ்வு இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்த நிகழ்வை ஆரம்­பித்­து­ வைப்­ப­தற்­கா­கவே இந்­தியப் பிர­தமர் மோடி இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக உத்தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் மோடியின் விஜ­ய­மா­னது அத­னையும் தாண்டி வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை வர­லாற்று ரீதி­யான முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது.

இலங்கை வரும் இந்­தியப் பிர­தமர் மோடி 12 ஆம்­ தி­கதி ஐக்­கி­ய ­நா­டு­களின் வெசாக்­தின நிகழ்வை ஆரம்­பித்­து­வைக்­க­வி­ருக்­கிறார். தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அரச தரப்­பி­னரை மோடி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். அத்­துடன் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளையும் மோடி சந்­தித்து வர­லாற்று ரீதி­யான மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­வ­கை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வி­ருக்­கின்றார்.

அது­மட்­டு­மன்றி இம்­முறை மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்யும் இந்­தியப் பிர­தமர் மோடி அங்கு வைத்­தி­ய­சாலை கட்­டடம் ஒன்றை திறந்து வைக்­க­வுள்­ள­துடன் மலை­ய­கத்தின் பல்­வேறு தலை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார். அவற்றைத் தவிர வேறு எவ்­வி­த­மான நிகழ்­வு­க­ளிலும் நரேந்­தி­ர­மோடி பங்­கேற்­க­மாட்டார் என்றும் இந்த விஜ­யத்தின் போது இலங்கையுடன் எவ்­வி­த­மான இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்­சாத்­தி­ட­மாட்டார் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் பாரத தேசத்தின் பிர­தமர் மோடியின் இலங்கை விஜ­ய­மா­னது எவ்­வாறு முக்­கி­யத்­து­வ­மாக அமை­யப்­போ­கின்­றது என்­பதை ஆரா­ய­வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டைந்து எட்டு ஆண்­டுகள் கடந்­து­விட்­டுள்ள நிலை­யிலும் இது­வரை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு கிடைக்­காத சூழ­லிலும் நல்­லி­ணக்க முயற்­சிகள் இது­வரை முழு­மை­யாக வெற்­றி­பெ­றாத பின்­ன­ணி­யி­லுமே இந்­தி யப் பிர­தமர் மோடியின் இலங்கை விஜயம் அமை­ய­வுள்­ளது. தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் மீது தமிழ் மக்கள் பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். அதா­வது நீண்­ட­கா­ல­மாக அர­சியல் தீர்­வொன்றை எதிர்­பார்த்து காத்­தி­ருக்கும் தமிழர் தரப்­பினர் தற்­போ­தைய அர­சாங்கம் அதனை பூர்த்தி செய்யும் என்ற நம்­பிக்­கையில் இருந்து வரு­கின்­றனர். ஆனால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்கும் செயற்­பா­டா­னது மிகவும் மந்­த­க­தி­யி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றது.  

அர­சியல் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் அவ்­வப்­போது இடம்­பெற்­றாலும் அது­தொ­டர்­பான கருத்­துக்கள் அவ்­வப்­போது வெளி­யி­டப்­பட்­டாலும் இது­வரை அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யங்கள் பூர்த்தி செய்­யப்­ப­டா­ம­லேயே உள்­ளன. இதனால் எங்கே இந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்­திலும் தமக்­கான அர­சியல் தீர்வு கிடைக்­காமல் போய்­வி­டுமோ என்ற அச்­சத்தில் தமிழ் மக்கள் இருக்­கின்­றனர். ஒரு புறம் கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள், தீர்­வுத்­திட்டம் தொடர்பில் பாரிய அச்­சு­றுத்­தலை விடுப்­ப­தாக காணப்­ப­டு­கின்­றது.

மறு­புறம் அர­சியல் தீர்­வுத்­திட்டம் தொடர்பில் தேசிய அர­சாங்­கத்தில் பங்­கெ­டுக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யிலும் பாரிய முரண்­பா­டுகள் தோற்றம் பெற்று வரு­கின்­றன. அர­சியல் தீர்­வுத்­திட்­டத்­துடன் கூடிய புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து அதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு உட்­ப­டுத்தி நிறை­வேற்­ற­வேண்­டு­மென ஐக்­கிய தேசி­யக்­கட்சி மிகவும் தெட்­டத்­தெ­ளி­வாக கூறி­வ­ரு­கி­றது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை மட்டும் மேற்­கொண்டு அர­சியல் தீர்வை முன்­வைக்க முடியும் என்று தெரி­வித்து வரு­கின்­றது. அது­மட்­டு­மன்றி புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து அதனை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தினால் ஆத­ரவு வழங்­க­மாட்டோம் என்றும் சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்து வரு­கின்­றது.

அது­மட்­டு­மன்றி இரண்டு பிர­தான கட்­சி­களும் சமஷ்­டியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் வடக்கு, கிழக்கை இணைக்க முடி­யாது என்றும் கூறி­வ­ரு­கின்­றன. மறு­பு­றத் தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது மிகவும் ராஜ­தந்­திர ரீதியில் தீர்­வுத்­திட்­ட­மொன்றை பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் காய்­களை நகர்த்­தி­வ­ரு­கி­றது. அதன்­படி பார்க்­கும்­போது தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­க­ளுக்­கிடையில் தீர்­வுத்­திட்டம் தொடர்­பிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்தும் காணப்­படும் இழு­ப­றி­நி­லைமை, கடும்­போக்கு கட்­சி­யாளர்­களின் நகர்­வுகள், போன்­றன தீர்வுத் திட்டம் தொடர்பில் பாரிய சந்­தே­க­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.  

இவ்­வா­றா­ன­தொரு மந்­த­க­தி­யான மற்றும் தீர்க்­க­மான சூழ­லி­லேயே இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இலங்கை விஜயம் அமையவிருக்கின்­றது.  

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­விற்கு விஜயம் செய்­தி­ருந்த போது நல்­லி­ணக்கம் பொரு­ளா­தார விவ­காரம் மற்றும் அர­சியல் தீர்வு போன்ற விட­யங்கள் தொடர்பில் இந்­தியப் பிர­தமர் மோடி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்­பான முக்­கிய விட­யங்கள் குறித்தும் பேசப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி இலங்­கையின் நல்­லி­ணக்கம் தொடர்­பிலும் முக்­கி­ய­மான விட­யங்­களை இந்­தியப் பிர­தமர் மோடி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேட்­ட­றிந்­து­கொண்­ட­துடன் அது­தொ­டர்பில் நீண்­ட ­நேரம் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் இலங்கை வர­வுள்ள இந்­தியப் பிர­தமர் மோடி தமிழ் மக்­களின் தலை­வி­தியை தீர்­மா­னிக்­கின்ற முக்­கி­ய­மான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பிர­தமர் மோடி பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இதன்­போது அர­சியல் தீர்­வுத்­திட்டம் தொடர்­பான தற்­போ­தைய நிலைமை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு, தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்த உள்ள அம்­சங்கள், தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் விட­யங்கள் போன்­றன தொடர் பில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

அத்­துடன் தமிழ் மக்கள் எவ்­வா­றான அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை எதிர்­பார்க்­கின்­றனர் என்­பது தொடர்­பான விட­யத்தை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ட­மி­ருந்து இந்­தியப் பிர­தமர் மோடி உள்­வாங்­க­வுள்ளார். இந்த சூழலில் இலங்­கை­வரும் நரேந்­திர மோடிக்கு மிகப்­பா­ரி­ய­தொரு பொறுப்பும் கட­மையும் இருக்­கின்­றது என்­பதை இங்கு சுட்­டிக்­காட்­ட­ வேண்­டி­யுள்­ளது. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­வுத்­திட்டம் தொடர்­பான நிலைப்­பாட்டை அறிந்­து­கொள்­ள­வுள்ள இந்­தியப் பிர­தமர் மோடி அதனை அர­சாங்கத் தரப்­பிடம் எடுத்­துக்­கூ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

 தமிழ் மக்கள் என்ன எதிர்­பார்க்­கின்­றனர். அவர்­களின் அர­சியல் தேவை என்ன அவர்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் என்ன என்­பவை தொடர்­பாக அர­சாங்கத் தரப்­பிற்கு எடுத்­துக்­கூ­ற­வேண்­டிய முக்­கிய கடமை இந்­தியப் பிர­தமர் மோடிக்கு இருக்கின்­றது. தற்­போ­தைய நிலை­மையில் தீர்­வுத்­திட்டம் தொடர்பில் தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்கிய தேசி­யக்­கட்­சியும், ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் முரண்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

தீர்­வுத்­திட்டம் தொடர்­பான இந்த இரண்டு கட்­சி­க­ளி­னதும் முரண்­பாட்டை களைந்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தற்­கான அழுத்­தத்தை அர­சாங்­கத்­திற்கு பிர­யோ­கிக்க வேண்­டி­யது இந்­தியப் பிர­தமர் மோடியின் இந்த இலங்கை விஜ­யத்தின் முக்­கிய கட­மை­யாக இருக்­க­வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

குறிப்­பாக தீர்­வுத்­திட்ட விட­யத்தில் அர­சாங்கம் தொடர்ந்தும் இழுத்­த­டிப்­புக்­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது. அர­சியல் தீர்­வுத்­திட்டம் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தைகள் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் இடம்­பெற்­ற­தாக கூறப்­பட்­டாலும் அவை தொடர்­பான எந்­த­வி­த­மான வெளி­யீ­டு­களும் இல்­லாமல் இருக்­கின்­றன. எனவே மந்­த­க­தியில் இருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்ட விட­யத்தில் ஒரு விரை­வுத்­தன்­மையை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை இந்­தியப் பிர­தமர் மோடிக்கு இருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை இன்று வரு­கி­றது நாளை வரு­கி­றது என காலத்தை கடத்தி வரு­வ­தி­லேயே அனைத்துத் தரப்­பி­னரும் செயற் பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை காண முடி­கின்­றது. பல்­வேறு விமர்­சன ரீதி­யான அர­சியல் சூழல்­க­ளுக்கு மத்­தி­யிலும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பா­னது இரா­ஜ­தந்­திர முறையில் காய்­களை நகர்த்தி வரு­கி­றது.   

எவ்­வாறு பார்க்­கின்­போதும் தீர்­வுத்­திட்ட செயற்­பா­டா­னது தொடர்ந்தும் மந்­த­க­தி­யிலும் இழுத்­த­டிப்பு பின்­ன­ணி­யி­லு மேயே காணப்­ப­டு­கின்­றது. எனவே இந்த விட­யத்தில் முழு­மை­யான அழுத்­தத்தை பிர­யோ­கித்து தமிழ் மக்­க­ளுக்­கான வர­லாற்று கட­மையை நிறை­வேற்­ற­வேண் டிய தேவை இந்­தியப் பிர­தமர் மோடிக்கு காணப்­ப­டு­கின்­றது.  

இலங்­கையின் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தி­யா வின் வகி­பா­கத்தை யாரும் மறுக்­கவும் முடி­யாது. நிரா­க­ரிக்­கவும் முடி­யாது. எனவே இந்த தீர்வு விட­யத்தில் இந்­தியா இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்­க­ வேண்டும். யுத்­தத்தை முடிப்­ப­தற்கு இந்­தியா முழு­மை­யான உத­வி­களை வழங்­கி­ய­ தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ பகி­ரங்­க­மா­கவே கூறி­வ­ரு­கிறார்.   இந்­நி­லையில் யுத்­தத்தை முடிப்­ப­தற்கு உத­விய இந்­தியா அந்த யுத்­தத்­திற்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் உரிய அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க நட­வ­டி க்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்­த­வ­கையில் அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தியப் பிர­தமர் மோடியின் இலங்கை விஜ­ய­மா­னது ஒரு வர­லாற்று திருப்பு முனை­யாக அமை­யு­மென அனை­வரும் எதிர்­பார்க்­கின்­றனர்.   

இதே­வேளை வடக்கு, கிழக்கு மக்­களின் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் மட்டும் இந்­தி­யாவின் வகி­பா­கத்­தினை வரை­ய­றுத்­து­விட முடி­யாது. காரணம் மலை­யகம் உட்­பட நாட்டில் வாழ்­கின்ற இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து இந்­தியப் பிர­தமர் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இம்­முறை இலங்கை விஜ­யத்தின் போது இந்­தியப் பிர­தமர் மலை­ய­கத்­திற்கும் விஜயம் செய்து அங்கு பல்­வேறு அர­சியல் தரப்­பி­ன­ரையும் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

குறிப்­பாக மலை­ய­கத்தில் இம்­முறை வைத்­தி­ய­சாலை கட்­டடம் ஒன்­றையும் இந்­தியப் பிர­தமர் திறந்­து­வைக்­க­வுள்ளார். அந்­தவ­கையில் மலை­யக மக்கள் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவும் இந்­தியப் பிர­தமர் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக மலை­யக மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் வீட்­டுப்­பி ரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சினை, கல்­விப்­பி­ரச்­சினை என பாரிய பின்­தங்­கிய நிலையில் வாழ்ந்து வரு­கின்­றனர்.  

மிக முக்­கி­ய­மாக மலை­யக மக்­களின் வீட்டுப் பிரச்­சி­னை­யா­னது தலை­வி­ரித்­தா­டு­கி­றது. புதிய அர­சாங்­கத்தில் மலை­யக அர­சியல் பிர­தி­நி­திகள் மலை­யக மக்­களின் வீட்டுப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். எனினும் மலை­யக மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் 1இலட்­சத்து 80 ஆயிரம் பாது­காப்­பான வீடுகள் தேவைப்­ப­டு­வதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த விடயம் குறித்து இந்­தியா அதிக அக்­கறை செலுத்தவேண்டும். வடக்கு, கிழக்கில் இந்தியா பெற்றுக்கொடுத்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மலையகம் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் மலையகத்திற்கு தற்போது காணப்ப டுகின்ற வீட்டுத் தேவையுடன் ஒப்பிடுகையில் இந்த 4 ஆயிரம் வீடுகள் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்.   

எனவே அரசாங்கம் வடக்கு, கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததைப்போன்று மலை யகத்திலும் அதிகளவான வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு ஒரு அடித்தளத்தை இம்முறை இந்தியப் பிரதமர் தனது இலங்கை விஜயத்தின் போது இடவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

இம்முறை இலங்கை விஜயத்தின் போது மலையகத்தில் நிகழ்வு ஒன்றில் உரையாற்றவுள்ள பிரதமர் மோடி மலையக மக்களுக்கான வீட்டுத்திட்ட உதவிகள் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தி யப் பிரதமர் இந்தக் கடமையை மறந்து விடக்கூடாது.  அந்தவகையில் பார்க்கும்போது இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயமானது மிகவும் வரலாற்று முக்கியமானது என்பதை அனை வரும் புரிந்துகொள்ளவேண்டும். அதி லும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மலையக மக்கள் விடயத்தில் இந்தியப் பிரதமருக்கு பாரிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் அவர் மறந்து விடக்கூடாது. அந்த பொறுப்புகளையும் கடமைகளையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயங்களில் இந்தியப் பிரதமர் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர் பார்க்கின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-06#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.